search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school girl"

    • பள்ளி மாணவி ஒருவரை தினமும் பின்தொடர்ந்து ஆசை வார்த்தைகள் கூறி காதல் வலையில் வீழ்த்தி உள்ளார்.
    • புகாரின் பேரில் போலீசார் மாணவியை மீட்டனர்.

    திருப்பூர் :

    சேலம் கெங்கவள்ளி செந்தாரப்பட்டியை சேர்ந்த, கார்த்திக்,(25) டிரைவர். இவர் திருப்பூர்,பெருமாநல்லுார் அருகே கருக்கன்காட்டு ப்புதூரில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் அந்த பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை தினமும் பின்தொடர்ந்து ஆசை வார்த்தைகள் கூறி காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். சம்பவத்தன்று பள்ளி மாணவியை திருமண ஆசை காட்டி, கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் அவிநாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் மாணவியை மீட்டனர்.பின்னர் கார்த்திக்கை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கடைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் அதேபகுதியில் அரசு பள்ளியில் 12 வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பத்தன்று கடைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    மாணவியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால்

    மாணவியின் தாயார் உமராபாத் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமண ஆசையில் யாராவது கடத்தி சென்றார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கல்வி பயிலும் வகையில் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.
    • நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.

    காங்கயம்:

    காங்கயம், காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருபவா் சி.அருள்ஜோதி. குடும்பத்தைவிட்டு தந்தை பிரிந்து சென்ற நிலையில் உடல் நலிவுற்ற தாயுடன் வசித்து வருகிறாா். வறுமை காரணமாக இவரால் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன், மாணவி தொடா்ந்து கல்வி பயிலும் வகையில் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.

    காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சாந்தி அமலோா், நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர். 

    • மாறான்குளத்தை சேர்ந்த மதன் பள்ளி சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
    • காட்டுப்பகுதிக்கு வேலைக்கு சென்றவர்கள் மயங்கி கிடந்த சிறுமி மீட்டனர்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பழவூர் அடுத்த மாறான்குளத்தை சேர்ந்தவர் மதன் (வயது 20). கூலித் தொழிலாளி. மதன் பள்ளி சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    தாக்குதல்

    சம்பவத்தன்று சிறுமியை மதன் அந்தப்பகுதியில் உள்ள காட்டுக்குள் அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கும், மதனுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் சிறுமி கொண்டு வந்த பையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து சிறுமி முகத்தில் தாக்கியும், அடித்து உதைத்தாகவும் கூறப்படுகிறது.

    இதனால் அந்த சிறுமி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர் என்ன செய்வதென்று தெரியாத மதன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். காட்டுப்பகுதிக்கு வேலைக்கு சென்றவர்கள் அந்த சிறுமி மயங்கி கிடப்பதை கண்டு அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    இதுகுறித்து பழவூர் இன்ஸ்பெக்டர் அஜிகுமார் வழக்குப்பதிவு செய்து மதனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார். 

    • செங்கோட்டை தெற்கு மேடு கிராமம் ஆர்.சி. சர்ச் தெருவை சேர்ந்த ராஜ்குமார் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்
    • மாணவியின் பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    தென்காசி:

    செங்கோட்டை அருகே உள்ள தெற்கு மேடு கிராமம் ஆர்.சி. சர்ச் தெருவை சேர்ந்தவர் பிச்சையா. இவரது மகன் ராஜ்குமார் (வயது 28). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் 7-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவரது பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வேல்கனி(பொறுப்பு) ராஜ்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • திருப்பூரை சேர்ந்த, 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
    • பனியன் தொழிலாளியான ரியாஸ் அகமது என்பவர் ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூரை சேர்ந்த, 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். மாநகராட்சி பள்ளியில்,பிளஸ் 2 படித்து வருகிறார். இவரிடம் முதலிபாளையத்தை சேர்ந்த பனியன் தொழிலாளியானரியாஸ் அகமது(வயது 23) என்பவர் ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார்.

    இந்த நிலையில் சிறுமி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது ரியாஸ் அகமது, சிறுமியை மேட்டுப்பாளையத்துக்குஅழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது. சிறுமியை மீட்ட போலீசார்,ரியாஸ் அகமதுவை 'போக்சோ' வழக்கில் கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில், சிறையில் அடைத்தனர்.

    • பள்ளி முதல்வர் ஸ்ரீ குமாரி மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
    • பிளாட்டோஸ் அகாடமி பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவி கே.எஸ்.ஆபியா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார்.

    வீரபாண்டி:

    இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் மினிஸ்டர் ஆப் யூத் அபேர்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் மெம்பர் ஆப் இண்டர்நேஷனல் ஒலிம்பிக் கமிட்டி சார்பில் பிட் இந்தியா நடத்திய 7-வது தேசிய விளையாட்டு போட்டி ஜெய்ப்பூர், மிதான்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெற்றது. இதில் வில்வித்தை போட்டியில் தமிழ்நாடு அணிக்காக திருப்பூரிலிருந்து ஜே.எஸ்.ஏ. வில்வித்தை அகாடமியில் பயிற்சி பெற்ற பிளாட்டோஸ் அகாடமி பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவி கே.எஸ்.ஆபியா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவிக்கும், பயிற்சியாளர் வெங்கடேசுக்கும் பிளாட்டோஸ் பள்ளி தாளாளர் ஹரிகிருஷ்ணன், அறங்காவலர் கிறிஸ்டில்டா லோபஸ், பள்ளி முதல்வர் ஸ்ரீ குமாரி மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • 9ம் வகுப்பு படித்து வந்தார்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜாப்பேட்டை அருகே திருத்தணி தெற்கு வீதியில் வசித்து வருபவர் கன்னியப்பன். அதே பகுதியில் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மகள் வரலட்சுமி (வயது 14) வாலாஜாபேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று நீண்ட நேரம் தூங்கியதால் வரலட்சுமி பள்ளிக்கு விடுமுறை எடுத்ததாக கூறப்படுகிறது.இதனால் கோபம் அடைந்த பெற்றோர் வரலட்சுமியை திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மணமுடைந்த வரலட்சுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட பெற்றோர் உடனடியாக வாலாஜா பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வரலட்சுமி இறந்தது தெரியவந்தது.

    மேலும் சம்பவ இடத்துக்கு வந்த வாலாஜாபேட்டை போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பள்ளி மாணவியிடம் சில்மிஷம்: தட்டிக்கேட்டவர்களுக்கு கத்திக்குத்து விழுந்தது.
    • கந்தன்,சாமிபிள்ளை மகன் பாண்டியராஜன், கருப்பசாமி, ராஜபாண்டி மகன் ராஜலிங்கம் ஆகியோரை தேடிவருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சம்மந்தபுரத்தைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவியிடம் இதே பகுதியைச் சேர்ந்த கந்தன் அவதூறாக பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

    இது உறவினர்களுக்கு தெரியவரவே,அதை கந்தனிடம் நல்லதம்பி (29), சோமையாபுரம் சாந்தகுமார் (31) ஆகியோர் மாணவியிடம் பேசவேண்டாம் என கேட்டுக்கொண்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில் 4 பேர் சூழ்ந்து கொண்டு இருவரையும் தாக்கினர்.

    இதில் நல்லதம்பிக்கு கத்திக்குத்து விழுந்தது.இதனை தடுக்கச் சென்ற சாந்தகுமாருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து 4 பேரும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பினர். காயமடைந்த நல்லதம்பி, சாந்தகுமார் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

    இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் கந்தன்,சாமிபிள்ளை மகன் பாண்டியராஜன், கருப்பசாமி, ராஜபாண்டி மகன் ராஜலிங்கம் ஆகியோரை தேடிவருகின்றனர்.

    • திருநாவலூர் அருகே பள்ளிக்குச் சென்ற மாணவி மாயமானார்.
    • சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆசை தம்பி வழக்கு பதிவு செய்து காணாமல் போன மனைவியை தேடி வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருவண்ணாமலை அருகே குண்ணத்தூர் பகுதியை சேர்ந்த முருகன் அலமேலு இவர்களின் மகள். இவர் அதே பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்- 2 படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மாணவியை முருகன் மற்றும் அலமேலு பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் ஆனால் இங்கு தெரியும் கிடைக்கவில்லை இது குறித்து திருநாவலூர் போலீசில் தாய் அலமேலு புகார் செய்தார். புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆசை தம்பி வழக்கு பதிவு செய்து காணாமல் போன மனைவியை தேடி வருகிறார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சரண்ராஜ் (22) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • நேற்று வீட்டில் இருந்த மாணவியை திடீரென காணவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
    • பண்பொழி ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள பெரியகுளத்தில் கற்பகவள்ளி பிணமாக மிதந்தார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூரை அடுத்த பண்பொழியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி காளியம்மாள்.

    இவர்களுக்கு கற்பகவள்ளி(வயது 17) என்ற மகள் உள்ளார். இவர் பண்பொழி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று வீட்டில் இருந்த கற்பகவள்ளியை திடீரென காணவில்லை. உடனே அவரது பெற்றோர் தங்களது உறவினர் மற்றும் கற்பகவள்ளியின் தோழிகள் வீட்டில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் பண்பொழி ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள பெரியகுளத்தில் கற்பகவள்ளி பிணமாக மிதந்தார். தகவல் அறிந்த அச்சன்புதூர் போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கற்பகவள்ளி கடந்த சில நாட்களாக பள்ளிக்கு சரிவர செல்லாமல் இருந்து வந்ததாகவும், அதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் யாரிடமும் பேசாமல் இருந்துவந்த கற்பகவள்ளி திடீரென குளத்தில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

    இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பிளஸ் -2 மாணவி திடீரென மாயமானார்.
    • போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் க.புதுப்பட்டி இந்திராகாலனியை சேர்ந்த நடராஜன் மகள் சவுந்தர்யா(17).

    பிளஸ் -2 படித்துவிட்டு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தைஉத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    ×