search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவியிடம் சில்மிஷம்"

    • ஆசிரியர் வேலவன் மீதான புகார் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.
    • மாணவியிடம் சில்மிஷம் செய்தது தொடர்பாக பள்ளி ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வை எழுதி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் தேர்வுக்காக 116 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடக்கிறது.

    தேர்வினை கண்காணிக்க தேர்வு மையத்திற்கு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தக்கலை அருகே உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் கண்காணிப்பாளராக அருமனை அருகே உள்ள அரசு உதவி பெறும் ஒரு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் வேலவன் நியமிக்கப்பட்டு இருந்தார்.

    அவர் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை தொட்டு பேசி சில்மிஷம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஆசிரியர் வேலவன் கைது செய்யப்பட்டார். ஆசிரியர் வேலவன் மீதான புகார் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து ஆசிரியர் வேலவன் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். மாணவியிடம் சில்மிஷம் செய்தது தொடர்பாக பள்ளி ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கூலித்தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

    அன்னூர்,

    கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் 13 வயது பள்ளி மாணவி.

    இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி(வயது26).கூலித்தொழிலாளி. இவர் சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்தார். இதனை பார்த்த வெள்ளியங்கிரி சிறுமியின் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியான சிறுமி சத்தம் போட்டார். இதையடுத்து வெள்ளியங்கிரி அங்கிருந்து தப்பியோடினார்.

    இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் சம்பவம் குறித்து அன்னூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வெள்ளியங்கிரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெள்ளியங்கிரியை கைது செய்தனர்.பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர்.

    • பள்ளி மாணவியிடம் சில்மிஷம்: தட்டிக்கேட்டவர்களுக்கு கத்திக்குத்து விழுந்தது.
    • கந்தன்,சாமிபிள்ளை மகன் பாண்டியராஜன், கருப்பசாமி, ராஜபாண்டி மகன் ராஜலிங்கம் ஆகியோரை தேடிவருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சம்மந்தபுரத்தைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவியிடம் இதே பகுதியைச் சேர்ந்த கந்தன் அவதூறாக பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

    இது உறவினர்களுக்கு தெரியவரவே,அதை கந்தனிடம் நல்லதம்பி (29), சோமையாபுரம் சாந்தகுமார் (31) ஆகியோர் மாணவியிடம் பேசவேண்டாம் என கேட்டுக்கொண்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில் 4 பேர் சூழ்ந்து கொண்டு இருவரையும் தாக்கினர்.

    இதில் நல்லதம்பிக்கு கத்திக்குத்து விழுந்தது.இதனை தடுக்கச் சென்ற சாந்தகுமாருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து 4 பேரும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பினர். காயமடைந்த நல்லதம்பி, சாந்தகுமார் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

    இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் கந்தன்,சாமிபிள்ளை மகன் பாண்டியராஜன், கருப்பசாமி, ராஜபாண்டி மகன் ராஜலிங்கம் ஆகியோரை தேடிவருகின்றனர்.

    ×