search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chilmisham to school girl"

    • கூலித்தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

    அன்னூர்,

    கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் 13 வயது பள்ளி மாணவி.

    இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி(வயது26).கூலித்தொழிலாளி. இவர் சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்தார். இதனை பார்த்த வெள்ளியங்கிரி சிறுமியின் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியான சிறுமி சத்தம் போட்டார். இதையடுத்து வெள்ளியங்கிரி அங்கிருந்து தப்பியோடினார்.

    இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் சம்பவம் குறித்து அன்னூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வெள்ளியங்கிரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெள்ளியங்கிரியை கைது செய்தனர்.பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர்.

    ×