என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடையநல்லூர் அருகே குளத்தில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை
- நேற்று வீட்டில் இருந்த மாணவியை திடீரென காணவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
- பண்பொழி ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள பெரியகுளத்தில் கற்பகவள்ளி பிணமாக மிதந்தார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூரை அடுத்த பண்பொழியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி காளியம்மாள்.
இவர்களுக்கு கற்பகவள்ளி(வயது 17) என்ற மகள் உள்ளார். இவர் பண்பொழி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று வீட்டில் இருந்த கற்பகவள்ளியை திடீரென காணவில்லை. உடனே அவரது பெற்றோர் தங்களது உறவினர் மற்றும் கற்பகவள்ளியின் தோழிகள் வீட்டில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் பண்பொழி ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள பெரியகுளத்தில் கற்பகவள்ளி பிணமாக மிதந்தார். தகவல் அறிந்த அச்சன்புதூர் போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கற்பகவள்ளி கடந்த சில நாட்களாக பள்ளிக்கு சரிவர செல்லாமல் இருந்து வந்ததாகவும், அதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் யாரிடமும் பேசாமல் இருந்துவந்த கற்பகவள்ளி திடீரென குளத்தில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்