என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » sayyeshaa
நீங்கள் தேடியது "Sayyeshaa"
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யாவுக்கும், வளர்ந்து வரும் நடிகையான சாயிஷாவுக்கு வருகிற மார்ச் 10-ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Arya #Sayyeshaa #AryaMarriage
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஆர்யா. 2005-ல் வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். ஆர்யாவுக்கு 38 வயது ஆகிறது.
கடந்த வருடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அவருக்கு மணப்பெண் தேடல் நடந்தது. இதில் 16 பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் ஒருவரை மணப்பெண்ணாக ஆர்யா தேர்வு செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில், அது நடக்கவில்லை. அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்தார். பெற்றோரும் தீவிரமாக மணப்பெண் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவியது. சாயிஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இதனை இருவரும் மறுக்கவில்லை.
இந்த நிலையில் ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கும் வருகிற மார்ச் மாதம் 10-ந் தேதி திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐதராபாத்தில் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்துக்கான ஏற்பாடுகளில் இருவரும் ஈடுபட்டு உள்ளனர். #Arya #Sayyeshaa #AryaMarriage
விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படத்தின் ஒரு புரமோஷன் பாடலுக்காக காமெடி நடிகர் யோகி பாபுவுடன் நடிகை சாயிஷா நடனமாடுகிறார். #WatchMan #YogiBabu #Sayyeshaa
நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் இடம்பெற்ற கல்யாண வயசு பாடலுக்கு யோகி பாபுவுடன் நயன்தாராவும் நடித்தார். இந்த பாடலை வைத்து ஒரு விளம்பர வீடியோ தயாரித்து வெளியிட அந்த வீடியோ பெரிய வரவேற்பு பெற்றது.
இதேபோல் யோகி பாபு நடிக்க ஒரு விளம்பர பாடல் உருவாகிறது. விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாட்ச்மேன். இந்த படத்துக்கான விளம்பர பாடல் ஒன்று படமாக்கப்படுகிறது. இதில் விஜய் இயக்கிய வனமகன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான சாயிஷாவுடன் இணைந்து யோகி பாபு ஆடுகிறார்.
ராப் வகை பாடலான இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். சம்யுக்தா ஹெக்டே இந்த படத்தின் கதாநாயகி. சாயிஷா அடுத்து சூர்யாவுடன் காப்பான் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தவிர வேறு படம் அவர் கையில் இல்லாததால் விளம்பர பாடலுக்கு ஆடும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார். #WatchMan #YogiBabu #Sayyeshaa
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன், நாயகியாக வலம் வரும் ஆர்யா - சாயிஷா இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும், வெளிநாட்டில் காதலை வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. #Arya #Sayyeshaa
தமிழில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார் ஆர்யா. 2005-ல் `அறிந்தும் அறியாமலும்' படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராசப்பட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல படங்களில் நடித்துள்ளார்.
ஆர்யாவுக்கு தற்போது 38 வயது ஆகிறது. கடந்த வருடம் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அவருக்கு மணப்பெண் தேடல் நடந்தது. இதில் 16 பெண்கள் பங்கேற்றனர். இறுதி போட்டிக்கு 3 பெண்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவரை மணப்பெண்ணாக தேர்வு செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில், யாரையும் திருமணம் செய்யாமல் விலகி விட்டார். ஒருவரை மணந்தால் மற்ற இருபெண்கள் மனது புண்படும் என்று காரணம் சொன்னார். அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்தார்.
இந்த நிலையில், ஆர்யாவுக்கும் - நடிகை சாயிஷாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது. சாயிஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கின்றனர்.
ஆர்யா - சாயிஷா இருவரும் தற்போது சூர்யாவுடன் காப்பான் படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடப்பதால், இருவரும் அங்கு காதலை வளர்த்ததாகவும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தகவல் பரவி உள்ளது. ஆர்யாவோ, சாயிஷா தரப்போ இதனை உறுதிப்படுத்தவில்லை. #Arya #Sayyeshaa
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சூர்யா 37’ படத்தின் தலைப்பிற்காக இயக்குனர் கே.வி.ஆனந்த் ரசிகர்களிடம் வாக்கு கேட்டிருக்கிறார். #Suriya37 #Suriya
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யாவின் 37-வது படத்தில் மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி என பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சூர்யாவிற்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஒரு மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் சிரக் ஜனியும் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.
Merry Christmas !🎄Select the title for Tamil #Suriya37@Suriya_offl@Mohanlal@arya_offl@Jharrisjayaraj@LycaProductions
— anand k v (@anavenkat) December 25, 2018
இந்நிலையில், இப்படத்திற்கு தலைப்பு தேடி வருகிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். மீட்பான், காப்பான், உயிர்கா என மூன்று தலைப்புகளை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, ரசிகர்களிடையே வாக்கு கேட்டிருக்கிறார். இதில் ‘உயிர்கா’ என்ற தலைப்பிற்கே அதிக வாக்குகள் கிடைத்து வருகிறது. எனவே ‘உயிர்கா’ என்ற தலைப்பே படத்திற்கு வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Suriya37
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உச்ச நட்சத்திரம் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. #ThaniOruvan2 #Mammootty
தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும் கடந்த வாரம் அறிவித்தனர். இந்தப் படத்திலும் ஜெயம் ரவி எஸ்.பியாக நடிக்க உள்ளார். தடயவியல் துறை நிபுணராக நயன்தாரா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சாயிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தனி ஒருவன் திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரமே அரவிந்த்சாமியின் சித்தார்த் அபிமன்யுதான். இரண்டாம் பாகம் எனும்போது, முதல் படத்திலிருந்த மாஸ் வில்லன் இன்னும் பிரமிப்பூட்டும் வகையில் இருக்க வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். இப்போது இரண்டாம் பாகத்தில் சித்தார்த் அபிமன்யுவுக்கு நிகரான ஒரு வில்லனை உருவாக்க வேண்டும் என்ற சவால் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. #ThaniOruvan2 #JayamRavi #Mammootty
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நயன்தாரா, சாயிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. #ThaniOruvan2 #JayamRavi
2015-ஆம் ஆண்டு வெளியாகிய தனி ஒருவன் திரைப்படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு தனி ஒருவன் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும் கடந்த வாரம் அறிவித்தனர்.
இந்தப் படத்திலும் ஜெயம் ரவி எஸ்பியாக நடிக்க உள்ளார். தடயவியல் துறை நிபுணராக நயன்தாரா நடிக்கிறார்.
வனமகன் படத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடிபோட்ட சாயிஷாவும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. வனமகன் படத்தில் தான் சாயிஷா தமிழில் அறிமுகமானார்.
தனி ஒருவன் திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரமே அரவிந்த்சாமியின் சித்தார்த் அபிமன்யுதான். இரண்டாம் பாகம் எனும்போது, முதல் படத்திலிருந்த மாஸ் வில்லன் இன்னும் பிரமிப்பூட்டும் வகையில் இருக்க வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.
ஆனால், சித்தார்த் அபிமன்யு என்ற வில்லன் சுட்டுக் கொல்லப்பட்டது போலக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இப்போது இரண்டாம் பாகத்தில் சித்தார்த் அபிமன்யுவுக்கு நிகரான ஒரு வில்லனை உருவாக்க வேண்டும் என்ற சவால் ஏற்பட்டுள்ளது. அனேகமாக ஜெயம் ரவியே ஹீரோ, வில்லன் என்று 2 வேடங்களில் நடிக்கலாம் என்று கூறுகிறார்கள். #ThaniOruvan2 #JayamRavi #Nayanthara #Sayyeshaa
கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களை தொடர்ந்து, எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவாக இருக்கும் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ படத்தில் நடிக்க இருக்கிறார் சாயிஷா. #Sayyeshaa
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. இந்தப் படத்தின் தொடர்ச்சியாக ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்ற படத்தை உருவாக்க திட்டமிட்டார். சில காரணங்களால் அந்தப் படத்தை எடுக்க முடியாமல் போனது.
இந்நிலையில் அந்தப் படத்தை தற்போது அனிமேஷனில் உருவாக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கின. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருடன் இரண்டாவது ஹீரோயினாக சாயிஷா நடிக்கிறார். அதற்கு அவரிடம் ஒப்புதல் வாங்கப்பட்டு அவரது உருவத்தை கிராபிக்ஸ் செய்து படத்தில் நடிக்கவைத்துள்ளனர்.
சாயிஷா நடிப்பில் தற்போது ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் ‘ஜுங்கா’, ‘கஜினிகாந்த்’ உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக இருக்கிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் ஜாதி பிரச்சனையை பேசும் படமாக உருவாகி இருக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. #KadaikuttySingam #Karthi
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம்` கடைக்குட்டி சிங்கம்'. பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக சாயிஷா நடித்திருக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், 5 அக்காக்களாக மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, ஸ்ரீமன், சௌந்தரராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படம் விவசாயம் மற்றும் சொந்த பந்தங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படமாக உருவாகி இருக்கிறது. டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியானது. இந்த டிரைலரை படத்தின் தயாரிப்பாளரும், கார்த்தியின் அண்ணனும், நடிகருமான சூர்யா வெளியிட்டார்.
இந்த டிரைலரில், விவசாயத்தைப் பற்றியும், பிரிந்து கிடக்கும் குடும்பத்தை சேர்த்து வைப்பது பற்றியும் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதில் கார்த்தி பேசும், ‘ஜாதி வைத்து கட்சி நடத்துகிறவன், ஜாதியை வைத்து வியாபாரம் பண்றவன். ஜாதி ஒழியணும் என்று சொல்லி அதை வளர்த்து விடுறவன்’ என்று கோபமாக பேசுகிறார். ஆகையால் ஜாதி பிரச்சனையை பேசும் படமாக உருவாகி இருக்கும் என்று எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #KadaikuttySingam #Karthi #Sayyeshaa
கடைக்குட்டி டிரைலர்...
சூர்யா நடிப்பில் உருவான `தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம்பெற்ற சொடக்கு பாடலுக்கு நடிகை சாயிஷா நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Sayyeshaa #Sodakku
சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கலுக்கு ரிலீசான படம் `தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தில் அனிருத் இசையில் உருவான `சொடக்கு' பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. யூடியூப்பிலும் அதிகளவில் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது.
இந்த நிலையில், சொடக்கு பாடலுக்கு தான் நடனமாடும் வீடியோவை சாயிஷா அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சாயிஷா தற்போது கார்த்தி ஜோடியாக கடைக்குட்டி சிங்கம், விஜய் சேதுபதி ஜோடியாக ஜுங்கா, ஆர்யா ஜோடியாக கஜினிகாந்த் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதில் கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜுங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜுன் 11-ஆம் தேதி நடைபெறுகிற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக இந்த ஆண்டு சாயிஷாவுக்கு கொண்டாட்டமாக வருடமாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
சூர்யா - கே.வி.ஆனந்த் இணையும் புதிய படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க சாயிஷாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Sayyeshaa #Sodakku #Suriya
சாயிஷாவின் நடனத்தை பார்க்க: https://twitter.com/sayyeshaa/status/1005319531974332416
சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. #KadaikuttySingam #Karthi #KKS
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் படம்` கடைக்குட்டி சிங்கம்'. பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக முதிர்ந்த தோற்றத்தில் நடிகர் சத்யராஜ் நடித்திருக்கிறார். சூரி, ஸ்ரீமன், பானுபிரியா, மவுனிகா உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் டீசரை ஜூன் 3ம் தேதி இரவு 7 மணி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பு பெற்ற நிலையில், டீசரை அதிக எதிர்ப்பார்ப்போடு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். #KadaikuttySingam #Karthi
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X