search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sam Curran"

    டிரென்ட் பிரிட்ஜ்-யில் நாளை நடைபெறும் இந்தியாவிற்கு எதிரான 3-வது டெஸ்டிற்கான இங்கிலாந்து ஆடும் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நாளை தொடங்குகிறது. இதில் ஆல்ரவுண்டர்களான பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரான் ஆகியோரில் இருவருக்குதான் இடம் என்பதால் யார் யார் ஆடம் லெவன் அணியில் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது.

    பெரும்பாலான முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் மூன்று பேருடன் களம் இறங்க வேண்டும் என்ற வலியுறுத்தினார்கள். இந்நிலையில் நாளைய டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் இடம்பெறும் 11 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.



    இதில் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் அறிமுகமாகி ஆட்ட நாயகன் விருது பெற்ற சாம் குர்ரான் நீக்கப்பட்டு பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

    நாளை இந்தியாவிற்கு எதிராக விளையாடும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. அலஸ்டைர் குக், 2. ஜென்னிங்ஸ், 3. ஜோ ரூட், 4. போப், 5. ஜோஸ் பட்லர், 6. பேர் ஸ்டோவ், 7. பென் ஸ்டோக்ஸ், 8. கிறிஸ் வோக்ஸ், 9 அடில் ரஷித், 10. ஜேம்ஸ் ஆண்டர்சன், 11. ஸ்டூவர்ட் பிராட்.
    3-வது டெஸ்டில் கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரான் ஆகியோரை நீக்காமல், போப்பிற்குப் பதில் பென் ஸ்டோக்ஸை சேர்க்க வேண்டும் என நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆல் ரவுண்டர்களான சாம் குர்ரான், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். சாம் குர்ரான் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக கிறிஸ் வோக்ஸ் இடம்பிடித்திருந்தார். இவர் சதம் அடித்து இந்திய அணியை இன்னிங்ஸ் தோல்வியடைச் செய்தார். அத்துடன் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.



    நாளை டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெறும் டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்துள்ளார். இதனால் ஆடும் லெவனில் பென் ஸ்டோக்ஸ், சாம் குர்ரான், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரில் இருவருக்குத்தான் இடம் கொடுக்க முடியும். மூன்று பேரையும் சேர்க்க வேண்டுமென்றால் முன்னணி பேட்ஸ்மேன் அல்லது சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் ஆகியோரில் ஒருவரை நீக்க வேண்டும்.

    இந்நிலையில் கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரான் ஆகியோரை நீக்கக்கூடாது. பென் ஸ்டோக்ஸிற்கு ஆடும் லெவனில் இடம் கொடுத்தால் பேட்ஸ்மேன் போப்பை நீக்க வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேனும், கேப்டனும் ஆன நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர்கள் சிறப்பாக விளையாடியதால் இந்தியா முதல் இரண்டு டெஸ்டிலும் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.

    முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 287 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் விராட் கோலியின் சதத்தால் 274 ரன்கள் குவித்தது. அறிமுக வீரரான சாம் குர்ரான் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி இந்தியாவின் ரன்குவிப்பிற்கு தடைபோட்டார்.

    அந்த அணி 2-வது இன்னிங்சில் ஒரு கட்டத்தில் 87 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் வந்த ஆல்ரவுண்டரும், அறிமுக வீரரும் ஆன சாம் குர்ரான் அபாரமாக விளையாடி 65 பந்தில் 63 ரன்கள் விளாசினார். இதனால் இங்கிலாந்து 180 ரன்கள் சேர்த்தது. முதல் இன்னிங்சில் 13 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் இந்தியாவிற்கு 194 வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இந்தியா 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    விராட் கோலி அரைசதம் அடித்திருந்த நிலையில் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் கோலி விக்கெட்டை சாய்த்தார். அத்துடன் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். குர்ரான் ரகானே விக்கெட்டை வீழ்த்தினார். இரு ஆல்ரவுண்டரால் இந்தியாவின் வெற்றி பறிபோனது. அறிமுக போட்டியிலேயே 20 வயது இளைஞரான சாம் குர்ரான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.



    2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்னில் படுதோல்வியடைந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 107 ரன்னில் சுருண்டது. ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினாலும், கிறிஸ் வோக்ஸ் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. ஒரு கட்டத்தில் 131 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அதன்பின் விக்கெட் கீப்பர் உடன் இணைந்த கிறிஸ் வோக்ஸ் அவுட்டாகாமல் 137 ரன்கள் விளாசினார். இதனால் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 2-வது இன்னிங்சில் இந்தியா 130 ரன்னில் சுருண்டது. கிறிஸ் வோக்ஸ் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். அத்துடன் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.



    முதல் இன்னிங்சில் கிறிஸ் வோக்ஸ சொற்ப ரன்களில் ஆட்டமிழந்திருந்தால் போட்டியின் முடிவு வேறுமாதிரி இருந்திருக்கும். இரண்டு போட்டிகளிலும் ஆல்ரவுண்டர்களான சாம் குர்ரான், பென் ஸ்டோகஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இந்தியாவிடம் இருந்து வெற்றியை பறித்துவிட்டனர்.
    இசாந்த் ஷர்மா 5 விக்கெட் அள்ளியதால் 180 ரன்னில் சுருண்ட இங்கிலாந்து, இந்தியாவின் வெற்றிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ரன்களில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, விராட் கோலியின் அபார சதத்தால் 274 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. 13 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜென்னிங்ஸ் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து தாவித் மலன் ஜென்னிங்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார். ஜென்னிங்ஸ் 8 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் வெளியேறினார். முதல் மூன்று விக்கெட்டுக்களையும் அஸ்வின் சாய்க்க இங்கிலாந்து 39 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

    அதன்பின் இஷாந்த் ஷர்மா பந்து வீசினார். இவரது பந்து வீச்சில் அனல் பறந்தது. தாவித் மலனை 20 ரன்னில் வெளியேற்றினார். மதிய உணவு இடைவேளைக்கு சற்றுமுன் பேர்ஸ்டோவை 28 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸை 6 ரன்னிலும் ஒரே ஓவரில் வெளியேற்றினார். அப்போது இங்கிலாந்து 30.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் 3-வது நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது பட்லர் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. பட்லர் உடன் சாம் குர்ரான் ஜோடி சேர்ந்தார். முதல் பந்தில் சாம் குர்ரான் ஒரு எடுத்தார். அடுத்த பந்தில் பட்லர் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.



    இங்கிலாந்து 87 ரன்களுக்குள் 7 விக்கெட்டை இழந்து திணறியது. இதனால் 100 ரன்னுக்குள் ஆல்அவுட் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சாம் குர்ரான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் நேர்த்தியாக இந்திய பந்து வீச்சை எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தார். இஷாந்த் சர்மா பந்தில் இமாலய சிக்சர் விளாசி 54 பந்தில் அரைசதம் அடித்தார்.



    இவரது ஆட்டத்தில் இங்கிலாந்து ஸ்கோர் 200 ரன்னை நோக்கிச் சென்றது. அந்த வேளையில் இஷாந்த் சர்மா பந்தில் பிராட் ஆட்டமிழந்தார். பிராட்டை வீழ்த்தி ஐந்து விக்கெட்டை பதிவு செய்தார் இஷாந்த் ஷர்மா. அடுத்த ஓவரில் குர்ரான் 65 பந்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து 180 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    முதல் இன்னிங்சில் 13 ரன்கள் அதிகம் பெற்றிருந்ததால், ஒட்டுமொத்தமாக இந்தியாவை விட 193 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

    2-வது இன்னிங்சில் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியா 2-வது நாள் தேனீர் இடைவேளை வரை 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 53 நாட்அவுட். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் மேலும் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது. அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், முகமது ஷமி 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் நல்ல தொடக்கம் கொடுத்தனர். இந்தியா 11.1 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. 14-வது ஓவரை சாம் குர்ரான் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 4-வது பந்தில் முரளி விஜய் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் 6-வது பந்தில் க்ளீன் போல்டானார்.

    இந்த அதிர்ச்சியில் இருந்து இந்திய ரசிகர்கள் மீள்வதற்குள் சாம் குர்ரான் வீசிய 16-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் தவான் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 8 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது. 20 வயதே ஆன சாம் குர்ரான் மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தி இந்தியாவிற்கு அதிர்ச்சியூட்டினார்.

    பின்னர் 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் மதிய உணவு இடைவேளை முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 21 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 9 ரன்னுடனும், ரகானே 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ரகானே 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் பென் ஸ்டோக்ஸ் கைப்பற்றி இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்தார்.

    6-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 2-வது நாள் தேனீர் இடைவேளைக்கு சற்றுமுன் ஹர்திக் பாண்டியா 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். விராட் கோலி - ஹர்திக் பாண்டியா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தது.

    ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தாலும் விராட் கோலி மறுமுனையில் அரைசதம் அடித்தார். 7-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். தேனீர் இடைவேளை வரை இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 53 ரன்னுடனும், அஸ்வின் 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் மேலும் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது. அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், முகமது ஷமி 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்தியா 11.1 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. 14-வது ஓவரை சாம் குர்ரான் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 4-வது பந்தில் முரளி விஜய் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் 6-வது பந்தில் க்ளீன் போல்டானார்.



    இந்த அதிர்ச்சியில் இருந்து இந்திய ரசிகர்கள் மீள்வதற்குள் சாம் குர்ரான் வீசிய 16-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் தவான் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 8 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது. 20 வயதே ஆன சாம் குர்ரான் மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தி இந்தியாவிற்கு அதிர்ச்சியூட்டினார. பின்னர் 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார்.



    இந்த ஜோடி 2-வது நாள் மதிய உணவு இடைவேளை முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 21 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 9 ரன்னுடனும், ரகானே 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    விராட் கோலியுடன் இணைந்து விளையாடியிருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும் என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இந்திய சீனியர் அணி கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது கிடையாது. தற்போது இந்திய அணி இங்கிலாந்து சென்று ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக, கவுன்ட்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாட முடிவு செய்தார்.

    ஆனால் கடைசி நேரத்தில் காயம் காரணமாக சர்ரே அணியில் இருந்து விலகினார். இந்த அணியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சாம் குர்ரான் இடம் பிடித்திருந்தார். இவர் விராட் கோலியுடன் இணைந்து விளையாட ஆர்வமாக இருந்தார். ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.

    தற்போது இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் சாம் குர்ரான் இதுகுறித்து கூறுகையில் ‘‘விராட் கோலி என்னுடைய அணியின் சக வீரராக வர இருந்ததை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மற்ற அணி பந்து வீச்சாளர்களை பார்த்து சிரிக்கலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

    இங்கிலாந்து மண்ணில் விராட் கோலிக்கு எந்தவொரு எதிரணி பந்து வீச்சாளர்களும் பந்து வீச விரும்புவார்கள். இங்கிலாந்து ஆடுகளம் அவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். தற்போது எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்த முயற்சி செய்வேன்.



    ஒவ்வொரு வீரர்களும் விராட் கோலி போன்ற மிகப்பெரிய வீரர்களுக்கு எதிராக விளையாட விரும்புவார்கள். ஏனென்றால் அவர்களுக்குள் தங்களை பரிசோதனை செய்ய வாய்ப்ப கிடைக்கும். விராட் கோலி சர்ரே அணிக்கு விளையாடவில்லை என்றதும் சக வீரர்களுக்கு கஷ்டமாக இருந்தது.

    ஏனென்றால், விராட் கோலி வந்தால் அதிகமான ரசிகர்கள் வருவார்கள். அவருடைய பயிற்சியில் இருந்து கற்றுக் கொள்ளலாம் என்ற நினைப்பு வீணானது’’ என்றார்.
    46 நாட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட்டை பின்னுக்குத் தள்ளினார் சாம் குர்ரான். #ENGvAUS
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியில் சாம் குர்ரான் அறிமுகமானார். ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய பின்னர், இங்கிலாந்து அணியில் அறிமுகமாகிய இவருக்கு, 20 வயது 21 நாட்களே ஆகும்.

    இதன்மூலம் இளம் வயதிலேயே இங்கிலாந்து ஒருநாள் அணியில் இடம்பிடித்த 2-வது வீரர் என்ற பெருமையை ஸ்டூவர்ட் பிராட்டிடம் இருந்து தட்டிப்பறித்துள்ளார். பிராட் 20 வருடம் 67 நாட்களில் இந்த சாதனையைப் படைத்திருந்தார். 46 நாள் வித்தியாசத்தில் சாம் குர்ரான் 2-வது இடத்தில் உள்ளார்.



    பென் ஹோலியாக் 19 வயது 195 நாட்களில், மிக இள வயதில் அறிமுகமானவர் என்ற பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். பென் ஸ்டோக்ஸ் 20 வயது 82 நாட்களுடன் 4-வது இடத்திலும், ஆண்டர்சன் 20 வயது 138 நாட்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
    மொயீன் அலியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா 35 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 205 ரன்னில் சுருண்டது. #ENGvAUS
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆரோன் பிஞ்ச், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.



    இந்த ஜோடி 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் குவித்தது. இந்த ஜோடியை மொயீன் அலி பிரித்தார். 7-வது ஓவரை மொயீன் அலி வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ஆரோன் பிஞ்ச் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் க்ளீன் போல்டானார். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் 5-வது பந்தில் டக்அவுட் ஆனார்.



    அதன்பின் வந்த ஷேன் மார்ஷ் 8 ரன்னி்ல் மொயீன் அலி பந்தில் ஸ்டம்பிங் ஆகி வெளியேற, ஆஸ்திரேலியா தடம்புரள ஆரம்பித்தது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் தன் பங்கிற்கு 56 ரன்கள் சேர்த்தார். கேரி 44 ரன்களும், ஆர்கி ஷார்ட் அவுட்டாகாமல் 47 ரன்களும் சேர்க்க ஆஸ்திரேலியா 34.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 205 ரன்னில் சுருண்டது.
    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. #ENGvAUS
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று 4-0 என முன்னிலையில் இருக்கிறது. முதல் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 38 ரன்கள் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் 242 ரன்கள் வித்தியாசத்திலும், 4-வது போடடியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியிலும் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தால் ஒயிட்வாஷ் ஆகும். ஒயிட்வாஷை தடுக்கும் நோக்கத்தில் ஆஸ்திரேலியாவும், ஒயிட்வாஷ் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கிலாந்தும் களம் இறங்குவதால் இன்றைய ஆட்டம் பரபரப்பானதாக காணப்படும்.



    ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஆரோன் பிஞ்ச், 2. டிராவிஸ் ஹெட், 3. ஷேன் மார்ஷ், 4. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 5. டி'ஆர்கி ஷார்ட், 6. அலெக்ஸ் கேரி, 7. டிம் பெய்ன், 8. அஷ்டோன் அகர், 9.  கேன் ரிச்சர்ட்சன், 10. நாதன் லயன், 11. பில்லி ஸ்டேன்லேக்.

    இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஜேசன் ராய், 2. பேர்ஸ்டோவ், 3. ஹேல்ஸ், 4. ஜோ ரூட், 5. மோர்கன், 6. பட்லர், 7. மொயீன் அலி, 8. சாம் குர்ரான், 9. லியாம் பிளங்கெட், 10 அடில் ரஷித், 11. ஜேக் பால். சாம் குர்ரானுக்கு இது முதல் ஒருநாள் போட்டியாகும்.
    பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அந்த அணியில் சாம் குர்ரான் சேர்க்கப்பட்டுள்ளார். #ENGvPAK #SamCurran #BenStokes #HamstringInjury

    லண்டன்:

    இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி அபாரமாக வெற்றி பெற்றது. 

    இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை (ஜூன் 1-ம் தேதி) நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இங்கிலாந்து வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்சின் தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. 



    இந்த தசைப்பிடிப்பின் தாக்கம் சற்று தீவிரமாக உள்ள நிலையில், பென் ஸ்டோக்சுக்கு பதிலாக, சர்ரே அணியின் ஆல்ரவுண்டர் சாம் குர்ரான் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் ஸ்டோக்ஸ் அணியில் இருந்து விலகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம் குர்ரான், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டாம் குர்ரானின் சகோதரர் ஆவார். #ENGvPAK #SamCurran #BenStokes #HamstringInjury
    ×