என் மலர்
நீங்கள் தேடியது "England Cricket team"
- டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.
- ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒன்றரை மாதம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வியை கண்டது. அதற்கு அடுத்த சர்வதேச தொடராக ஜூன் மாதம் 4-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை டி20 உலக கோப்பை நடைபெற இருக்கிறது.
இந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் காலிறுதி ஆட்டத்துக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.
இந்நிலையில் இங்கிலாந்து டி20 அணிக்கு ஆலோசகர் பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமோ அல்லது பொல்லார்ட் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இவரால் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 முறை டி20 உலக கோப்பையை கைப்பற்றியது. பொல்லார்ட் டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று கருதப்படுகிறார் என்பதில் சந்தேகமில்லை. வீரராக கலக்கி வந்த இவர் பயிற்சியிலும் தற்போது கலக்கி வருகிறார். ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார்.
- கருணையற்ற விதத்தில் அடித்து ஆட விரும்புகிறோம்.
- சில சமயங்களில் 280 முதல் 300 ரன்கள் வரை ஒரே நாளில் எடுப்போம்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்துள்ளது. முதல் 2 போட்டியிலும் இங்கிலாந்து அணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
பிரண்டன் மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் கூட்டணியில் இங்கிலாந்து அணியின் பேஸ்பால் அணுகுமுறை மற்ற அணிகளுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 416 ரன்கள் குவித்து அசத்தியது. மேலும் டெஸ்ட் வரலாற்றில் 4.2 ஒவர்களில் 50 கடந்து வரலாற்று சாதனை படைத்தது.
இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் 500 முதல் 600 ரன்கள் வரை எங்களால் அடிக்க முடியும் என இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஒல்லி போப் தெரிவித்துள்ளார்.
உண்மையில், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி, 2022 டிசம்பரில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் தொடக்க நாளில் 506 ரன்கள் குவித்தது.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சில சமயங்களில் 280 முதல் 300 ரன்கள் வரை ஒரே நாளில் எடுப்போம். அது சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடுவதன் விளைவது. ஆனால், ஒரே நாளில் 500 முதல் 600 ரன்களை எடுக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
உண்மையில் அதிமான ரன்கள் அடிக்க ஆவலாக இருக்கிறது. பசி என்றே சொல்லாம். தற்போது அதிகமான பசி இருக்கிறது. ஒரு பேட்டிங் அணியாக கருணையற்ற விதத்தில் அடித்து ஆட விரும்புகிறோம். ஆனாலும் இந்த ஆட்டத்தை நாங்கள் எப்படி ஆடுவோமோ அதே போல்தான் ஆடுகிறோம். ஏனெனில், இது எங்கள் தேசிய விளையாட்டு. கருணையற்ற விதத்தில் ஆடுவது டெஸ்ட் கிரிக்கெட்டின் ஓர் அங்கமாகும்.
இப்படி ஆடு என்று போதிக்கப்பட்டுள்ளீர்களா என்று என்னிடம் கேட்டனர். ஆனால், அப்படியெல்லாம் இல்லை. இது எங்கள் இயல்பான ஆட்டம்தான். இப்படித்தான் கிரிக்கெட்டை யோசிக்கிறோம்.
இவ்வாறு போப் கூறினார்.
- நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீசும் போது பென் ஸ்டோக்ஸ் காயமடைந்தார்.
- ஸ்டோக்ஸின் காயம் தீவிரமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் அணி சமீபத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. இத்தொடரின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இதனையடுத்து இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இத்தொடர்களுக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வரியம் அறிவித்தது.
இதில் பெரிதும் எதிர்பார்ப்பட்ட நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. முன்னதாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவேன் என பென் ஸ்டோக்ஸ் உறுதியளித்திருந்த நிலையில், இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் அவரது பெயர் இடம் பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை வழங்கியது.
இந்நிலையில் பென் ஸ்டோக்ஸை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்யாததற்கான காரணம் வெளியாகியுள்ளது.
அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீசும் போது காயமடைந்த பென் ஸ்டோக்ஸ், களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதையடுத்து அவருக்கு ஸ்கேன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அந்த சோதனையின் முடிவில் ஸ்டோக்ஸின் காயம் தீவிரமடைந்துள்ளதாகவும், அவர் காயத்தில் இருந்து குணமடையை குறைந்தது 3 மாதங்கள் ஆகும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பென் ஸ்டோக்ஸ் தனது இடது காலில் ஏற்பட்ட தொடை காயம் காரணமாக இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் விளையாடவில்லை. அதன்பின் கம்பேக் கொடுத்த பென் ஸ்டோக்ஸ் தற்போது மீண்டும் காயத்தை சந்தித்துள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியிலும் இடம்பிடிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
- சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19-ம் தேதி துவங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
- இந்தத் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19-ம் தேதி துவங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி விளையாட கூடாது என 160-க்கும் அதிகமான இங்கிலாந்து அரசியல்வாதிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் உரிமைகள் மீதான தலிபான் ஆட்சியின் தாக்குதலுக்கு எதிராக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும், பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்றும் அரசியல்வாதிகள் விரும்புகிறார்கள்.
2021-ம் ஆண்டில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து விளையாட்டில் பெண்கள் பங்கேற்பது தடைசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை 4-1 என வீழ்த்தியதன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து அணி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 4 போட்டிகளில் தோல்வியடைந்தாலும் இந்தியா முதல் இடத்தில் நீடிக்கிறது.
4-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து 5-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. இந்தியாவிற்கு எதிரான தொடர் தொடங்குவதற்கு முன் இங்கிலாந்து 97 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருந்தது. தற்போது 8 புள்ளிகள் அதிகம் பெற்று 105 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து 102 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

1-4 என படுதோல்வியடைந்ததால் இந்தியா 10 புள்ளிகளை இழந்து 115 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. 109 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
இங்கிலாந்து அணி 1990-ம் ஆண்டிற்குப் பிறகு தற்போதுதான் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்லும் என்று இங்கிலாந்து மக்கள் நம்புகிறார்கள். இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெறுகிறது. ஒருவேளை இங்கிலாந்து வெற்றி பெற்றால் ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாட பொது வங்கி விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இங்கிலாந்து அரசு இணையத்தளத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். இதனால் இங்கிலாந்து நாடாளுமன்றம் இதுகுறித்து விவாதம் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #HarryKane #RussiaWorldCup2018 #WorldCup2018
அதேவேளையில் துர்காம் அணிக்காக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 68 பந்தில் 90 ரன்கள் அடித்து அசத்தினார். இதன்காரணமாக இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார்.
ஆனால், ஆடும் லெவனில் அவருக்கு இடம் கொடுக்கப்படுமா? என்பது குறித்து கேப்டன் மோர்கன் உறுதியான தகவலை வெளிப்படுத்தவில்லை. இதுகுறித்து மோர்கன் கூறுகையில் ‘‘அடுத்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இணைகிறார். அவர் ஒரு சிறந்த வீரர். அவர் அணியில் இடம்பெறுவாரா? என்பது குறித்து முடிவு எடுப்பது கடினமானது.

கடந்த காலங்களில் இதுபோன்ற முடிவுகளை எடுத்துள்ளோம். வலுவான ஆடும் லெவன் அணிக்கு எது தேவையோ, அதற்கான முடிவை நாங்கள் எடுப்போம்’’ என்றார். இதனால் பென் ஸ்டோக்ஸ் இந்தியாவிற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் விளையாடுவாரா? என்பதில் சந்தேகமே?
லண்டன்:
விராட்கோலி தலைமையிலானா இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
முதலில் 20 ஓவர் போட்டி தொடர் நடக்கிறது. இதன் முதல் ஆட்டம் வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டி தொடர் 12-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி முடிகிறது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்காக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இயன் மார்கன் தலைமையில் 14 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
தசைப்பிடிப்பு காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் விளையாடாத ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது காயம் அடைந்த ஆல்-ரவுண்டர் கிறிஸ்லோக்ஸ் தேர்வு செய்யப்படவில்லை.
14 பேர் கொண்ட இங்கிலாந்து அணி வருமாறு:-
இயன் மார்கன் (கேப்டன்), மொய்ன்அலி, பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் படயர் ஜேக்பால், அலெக்ஸ் ஹொல்ஸ், புளுங்கட், ஆதில் ரஷித், ஜோரூட், ஜேசன் ராய், டேவிட் விஸ்லி, மார்ருவுட், டாம்குர்ரன். #INDvsENG
அதேவேளையில் கிரிக்கெட்டில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 205 ரன்னில் சுருண்டது.

பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. 114 ரன்களுக்குள் எட்டு விக்கெட்டுக்களை இழந்த இங்கிலாந்து, ஜோஸ் பட்லரின் அபார சதத்தால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நேற்று பார்முலா 1 பந்தயத்தில் கனடா கிராண்ட் ப்ரிக்ஸ் நடைபெற்றது. இதில் மெர்சிடெஸ் பென்ஸ் அணியின் லெவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். இவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். கனடா கிராண்ட் ப்ரிக்ஸை வென்றதுடன் ஒட்டுமொத்தமாக இதுவரை நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இதன்மூலம் கால்பந்து, கிரிக்கெட, கார் பந்தயம் என இங்கிலாந்திற்கு நேற்று பொன்னான நாளாக அமைந்தது.







