search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sale"

    • வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்றது.
    • ரூ.3 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்ற கொப்பரை டெண்டரில் 92 மூட்டைகள் வரத்து வந்தது. முதல் தரம் கிலோ ரூ 71 முதல் ரூ 76 வரையிலும் 2-ம் தரம் கிலோ ரூ 55 முதல் ரூ.69 வரையிலும் விலை போனது. ரூ.3 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வெங்கமேடு மின்னணு தேசிய வேளாண் சந்தையில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகள் விற்பனை
    • வெங்கமேட்டில் செயல்பட்டு வரும்மின்னனு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு சென்றும் விற்பனை

     பரமத்தி வேலூர், 

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், சுள்ளிப் பாளையம், சோளசிராமணி, ஜமீன் இளம்பள்ளி குரும்பலமகாதேவி, கொத்தமங்கலம் ,திடுமல், சிறுநல்லி கோவில் ,தி.கவுண்டம்பாளையம், கபிலர்மலை, வடகரையாத்தூர், ஆனங்கூர் ,மோகனூர், பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிர் செய்துள்ளனர். தேங்காய் முதிர்ச்சி அடைந்ததும் கூலி ஆட்கள் மூலம் தேங்காயை பறித்து மட்டைகளை அகற்றிவிட்டு முழு தேங்காயாகவும், தேங்காய் பருப்புகளாகவும் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர் .அதேபோல் பரமத்தி வேலூர் அருகே வெங்கமேட்டில் செயல்பட்டு வரும்மின்னனு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு சென்றும் விற்பனை செய்து வருகின்றனர்.

    வெங்கமேட்டில் உள்ள மின்னனு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் போனது. நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 474 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.24.69 -க்கும், குறைந்தபட்சமாக ரூ22.06 - க்கும், சராசரியாக ரூ.23.30-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 1 லட்சத்து 69 ஆயிரத்து 82- க்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    மேலும் ஏலத்திற்கு 10 ஆயிரத்து 248 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ 75.89- க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ 53.33- க்கும், சராசரி விலையாக ரூ 68.88- க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ 8 லட்சத்து 74 ஆயிரத்து 288- க்கு ஏலம் நடைபெற்றது. தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகள் ரூ.10 லட்சத்து 43 ஆயிரத்து 370 க்கு விற்பனையானது.

    • இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.2.60 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • 30 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 88 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது.

    கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

    இந்த சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள்

    மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள் போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2023 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை இன்று காலை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்து பார்வையிட்டார்.

    தஞ்சாவூர் வைரம் விற்பனை நிலையத்தில் கடந்த தீபாவளியில் ரூ.1.18 கோடி இலக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.2.60 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், "கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12 -வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் அம்சவேணி , மேலாளர் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (கூடுதல் பொறுப்பு) அய்யப்பன், அரசு அலுவலர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலார்கள் ஸ்ரீதர் , சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கருங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற போது ஏலத்தில் விவசாயிகள் விற்பனைக்காக சுமார் 150 மூட்டை தேங்காய் பருப்பு.
    • இந்த பொது ஏலத்தில் முதல் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.7,431 முதல் ரூ.7,639 வரை விற்பனையானது.

    எடப்பாடி:

    கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் உள்ள கருங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற போது ஏலத்தில் விவசாயிகள் விற்பனைக்காக சுமார் 150 மூட்டை தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இந்த பொது ஏலத்தில் முதல் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.7,431 முதல் ரூ.7,639 வரை விற்பனையானது. 2-ம் ரக தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.5,889 முதல் ரூ.7,325 வரை விலைபோனது. இதன் மூலம் ரூ. 2 லட்சத்து 72 ஆயிரத்து 626-க்கு தேங்காய் பருப்புகள் ஏலம் போனது. 

    • ஓட்டலில் உணவு சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி பலியாகி உள்ளார்.
    • உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் பரமத்தி சாலையில் ஒரு தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஓட்டலில் உணவு சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை பலியாகி உள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் நேற்று முன் தினம் உணவகத்தில் சாப்பிட்ட கர்ப்பிணி, குழந்தைகள் உட்பட 44 பேருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.

    இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து ஓட்டலில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழிக்க கலெக்டர் உமா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

    இதனை தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் துரித உணவு வகைகளான ஷவர்மா, கிரில் சிக்கன் ஆகியவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனை ஆட்சியர் உமா, மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.

    • பொதுவாக முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும்.
    • பூக்களின் தேவை அதிகம் என்பதால் அவற்றின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை விளார் சாலையில் பூச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஓசூர், நிலக்கோட்டை, மதுரை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் பூக்கள் விற்பனைக்காக லாரிகளில் கொண்டு வரப்படும்.

    இதேப்போல் இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும்.

    பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்வர்.

    வியாபாரிகள் மொத்தமா கவும் பூக்கள் வாங்கி செல்வர்.

    பொதுவாக முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும். மேலும் வரத்து குறைவு, விளைச்சல் பாதிப்பு இருந்தாலும் விலை அதிகரிக்கும்.

    அந்த வகையில் இன்று ஆவணி மாத கடைசி முகூர்த்த நாள் என்பதாலும், நாளை விநாயகர் சதுர்த்தி என்பதாலும் பூக்களின் தேவை அதிகம் என்பதால் அவற்றின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

    அந்த வகையில் நேற்று மல்லிகை கிலோ ரூ.700-க்கு விற்பனையாகின.

    ஆனால் இன்று கிலோ ரூ.1250-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    1100, முல்லை கிலோ ரூ.1000, ஆப்பிள் ரோஸ் ரூ .250, சம்பங்கி ரூ.250க்கும் விற்பனை செய்யப்பட்டன.

    இவற்றின் விலையும் நேற்றைய விட அதிகமாகும்.

    இருந்தாலும் பொதுமக்கள் பூக்களை வாங்கி சென்றனர்.

    இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, இன்று ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள். மேலும் நாளை விநாயகர் சதுர்த்தி. இதனால் பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகம் இருந்தது.

    இதனால் அவற்றின் விலையும் அதிகரித்துள்ளன. இருந்தாலும் பூக்களின் வரத்தும் அதிகமாக உள்ளது என்றனர்.

    • சாலைபுதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ரூ.8.35 லட்சத்திற்கு விற்பனையானது
    • 110 குவிண்டால் நிலக்கடலை விற்று தீர்ந்தது

    வேலாயுதம்பாளையம்,  

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், க.பரமத்திஒன்றியம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இந்த வாரம் நடந்த ஏலத்தில்நிலக்கடலை காய் 110.45குவிண்டால் எடை கொண்ட 370-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.70-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.53-க்கும், சராசரி விலையாக ரூ.82.16-க்கும் என ரூ 8 லட்சத்து 35ஆயிரத்து 317-க்கு விற்பனையானது.

    • தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை நடைபெறுகிறது.
    • இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மதுரை

    மதுரையில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் நாளை 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தங்க பத்திரம் விற்பனை நடைபெறுகிறது. இது குறித்து மதுரை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கல்யாண வரதராஜன் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் கிராம் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரத்து 923 விற்பனை செய்யப்படுகிறது. தனி நபர் ஒரு நிதியாண்டில் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். தங்கமானது பத்திர வடிவில் இருப்பதால் இது பாதுகாப்பான முதலீடு மட்டுமின்றி இம்முதலீட்டிற்கு கூடுதலாக ஒரு ஆண்டிற்கு 2.5% வட்டியும் கிடைக்கிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    • வாரம் தோறும் தேங்காய் பருப்பு விற்பனைக்கான பொது ஏலம் நடைபெற்று வருகிறது.
    • பொது ஏலத்தின் வாயிலாக சுமார் 250 மூட்டை தேங்காய் பருப்புகள், ரூபாய் 8 லட்சத்து 51 ஆயிரத்து 660 க்கு விற்பனையானது.

    சேலம்:

    கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாரம் தோறும் தேங்காய் பருப்பு விற்பனைக்கான பொது ஏலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தின் வாயிலாக சுமார் 250 மூட்டை தேங்காய் பருப்புகள், ரூபாய் 8 லட்சத்து 51 ஆயிரத்து 660 க்கு விற்பனையானது. இதில் ஒரு குவிண்டால் தேங்காய் பருப்பு குறைந்தபட்சம் ரூ.7525 முதல் அதிகபட்சமாக ரூ.7828 வரை விற்பனையானது. தற்போது இப்பகுதியில் தொடர் மழைப்பொழிவு இருந்து வரும் நிலையில், தேங்காய் பருப்புகளுக்கு கூடுதல் விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • 6 அரை அடி வரையிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
    • நீர் நிலைகளில் கரைக்கும் போது எளிதில் கரைந்து விடும்.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினம் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபடுவது வழக்கம்.

    இது தவிர அனைத்து விநாயகர் கோவில்கள், சன்னதிகளில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெறும்.

    விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் 13 நாட்களே இருப்பதால் விநாயகர் சிலைகளின் விற்பனையும் மும்முரம் அடைந்துள்ளன.

    அதன்படி தஞ்சை வெண்ணாற்றங்கரை ஆனந்த வல்லியம்மன் கோவில் தெருவில் நரசிம்மா ஹேண்டி கிராப்ட் மூலம் பல வண்ணங்களில் பல வகைகளில் காகித கூழால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    அரை அடி முதல் 6 அரை அடி வரையிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

    அனைத்து விநாயகர் சிலைகளும் எந்தவித ரசாயனமும் இல்லாமல் இயற்கையான முறையில் பல விதங்களில் வர்ணம் பூசப்பட்டுள்ளது.

    தஞ்சை மட்டுமல்லாது அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் ஆர்வத்துடன் விநாயகர் சிலைகளை வாங்கி சென்ற வண்ணம் உள்ளனர்.இதுகுறித்து நரசிம்மா ஹேண்டி கிராப்ட் பூங்குழலி சண்முகம் கூறும் போது:-

    காஞ்சிபுரத்தில் இருந்து பலவித வண்ணங்களில் எந்தவித ரசாயன கலப்பும் இல்லாமல் காகித கூழால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி விற்பனை செய்து வருகிறோம்.

    ரூ.10 முதல் ரூ.20 ஆயிரம் வரையிலான விநாயகர் சிலைகள் உள்ளது. லாரிகள் மூலம் அனைத்து சிலைகளும் கொண்டுவரப்படுகிறது.

    லாரி வாடகை, மூலப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிலைகளின் விலை சற்று உயர்ந்துள்ளது.

    இருந்தாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் விநாயகர் சிலைகளை வாங்கி செல்கின்றனர். எங்களிடம் உள்ள சிலைகள் அனைத்தும் காகித கூழால் தயாரிக்கப்பட்டது.

    இதனால் நீர் நிலைகளில் கரைக்கும் போது எளிதில் கரைந்து விடும். சிம்ம விநாயகர், அன்னபட்சி விநாயகர், மயில்வாகன விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் விநாயகர் சிலைகள் உள்ளன. விற்பனையும் மும்முரமாக நடந்து வருகிறது என்றார்.

    • ஆவணி ஞாயிறு ஏராளமான பக்தர்கள் விரதம் இருப்பார்கள் என்பதால் விற்பனை மந்தமாக உள்ளது.
    • கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாஙகுப்பம், நம்பியார் நகர், விழுந்தமாவடி, காமேஸ்வரம் புஷ்பவனம் ,கோடியக்கரை, உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களில் 500 க்கும் மேற்பட்ட விசை ப்படகுகளில் மீனவர்க ள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நாகை துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான விசை படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீன்வர்கள் இன்று அதிகாலை 3 மணிக்கு கரை திரும்பினர். மீன்களை வாங்குவதற்கு மீன்பிரியர்கள், மீன் வியாபாரிகள் அதிகா லையிலேயே ஆயிரக்க ணக்கானோர் நாகை துறைமுகத்தில் திரண்டனர். ஒரு சில விசை படகுகளில் அதிக அளவில் கனவா மீன்களும் ஏற்றுமதிக்காக இறால் நண்டுகள் என கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்களின் வரத்து அதிகமாக இருந்தாலும் கூட, ஆவணி மாதங்களில் கோவில் திருவிழாக்கள் என்பதாலும், மேலும் ஆவணி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் ஏராளமான பெண்கள் விரதம் இருப்பார்கள் என்பதாலும் விற்பனை மந்தமாக இருப்பதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    வஞ்சரம் 1 கிலோ ரூ 550-600, வௌவால் 1 கிலோ ரூ1000-1050, பாறை 1 கிலோ ரூ 350-400, சீலா 1 கிலோ ரூ300-350, விள மீன் 1 கிலோ ரூ 250-300, சங்கரா 1 கிலோ ரூ 200-250, நெத்திலி 1 கிலோ ரூ 100-120க்கு விற்பனை யானது. கடந்த வாரத்தை ஒப்பிடும்போது இந்த வாரம் விலை சற்று குறைந்து ள்ளதால் மீன் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் தற்பொழுது வேளாங்க ண்ணி ஆண்டு திருவிழா நடைபெற்று வருவதால் அங்கு வந்துள்ள பக்தர்களும், மீன் வாங்க அக்கரைப்பேட்டையில் உள்ள மீன் பிடித்து துறைமுகத்திற்கு வந்துள்ளதால் மீன்பிடி துறைமுகம் மக்கள் கூட்டத்தால் கலைகட்டி உள்ளது. கேரளாவில் தடைக்காலம் முடிந்ததால் உள்ளூர் வியாபாரிகளே தற்பொழுது அதிக அளவில் கூடியுள்ளனர்.வழக்கமாக 6.30 மணிக்கு எல்லாம் ஞாயிற்றுக்கிழமை ஏலம் முடியும் நிலையில் இன்று 9 மணி வரை நீடித்தது என மீனவர்கள் தெரிவித்து ள்ளனர். ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது மீனவர்கள் 4 லட்சம் முதல் 5 லட்ச ரூபாய் வரை செலவு செய்து கடலுக்கு மீன் பிடிக்க செல்வதாகவும் ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் விற்பனை இல்லை எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.

    • கெட்வெல் ஆஞ்சநேயர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை களைகட்டியுள்ளது.
    • இந்த ஆண்டும் நாளை மறுநாள் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி நாளை பூக்கள் விலை அதிகரிக்கும்.

    நெல்லை:

    கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்த நாளில் கேரளாவில் பெண்கள் தங்களது வீடு முன்பு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்வார்கள். இதற்காக தமிழகத்தில் குமரி மாவட்டம் தோவாளை, நெல்லை சந்திப்பு, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலர் சந்தைகளில் இருந்து அதிகளவு பூக்கள் கேரளாவிற்கு ஏற்றுமதியாகும்.

    இந்நிலையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை தமிழகத்தில் கல்லூரிகளில் படிக்கும் கேரளா மாணவ-மாணவிகள், தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் என பலதரப்பட்டவர்களும் கொண்டாடுவார்கள்.

    இதனையொட்டி நெல்லை சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை களைகட்டியுள்ளது. இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை ரூ.500 வரை விற்பனையானது.

    அதே விலையிலேயே பிச்சிப்பூ விற்பனையானது. அதேநேரத்தில் பூக்களை வாங்கி கொண்டு தெருக்களில் சென்று விற்கும் வியாபாரிகள் ரூ.600 வரை விற்றனர்.

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இன்று காலை ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.800-க்கு விற்பனையானது. பிச்சிப்பூ ரூ.600-க்கு விலை போனது. இதேபோல் சம்பங்கி மற்றும் ரோஜா பூக்கள் கிலோ தலா ரூ.200-க்கு விற்பனையானது.

    இதுகுறித்து நெல்லை சந்திப்பு பூக்கடை உரிமையாளர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையின்போது பூக்கள் விலை அதிகரிக்கும். இந்த ஆண்டும் நாளை மறுநாள் பண்டிகை கொண்டாடப்படுவதை யொட்டி நாளை பூக்கள் விலை அதிகரிக்கும்.

    கடந்த 2 நாட்களாக சுபமுகூர்த்த தினம் என்பதால் மல்லிகை மற்றும் பிச்சி பூக்கள் விலை ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனையான நிலையில், இன்று ரூ.500 வரை விற்பனையாகி உள்ளது. நாளை அதன் விலை மேலும் அதிகரிக்கும் என்றார்.

    ×