search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்க பத்திரம்"

    • கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் முழுமையாக செயலிழந்து இருந்தது.
    • வருவாயை அந்தந்த கோவில்களின் திருப்பணிக்கும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தி வருகின்றோம்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆணையர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி ராஜு, க.ரவிச்சந்திர பாபு மற்றும் ஆர்.மாலா ஆகி யோர் முன்னிலையில் 8 கோவில்ளுக்கு காணிக்கை யாக வரப்பெற்ற 130 கிலோ 393 கிராம் எடையுள்ள பல மாற்று பொன் இனங்களை மும்பையில் உள்ள ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொதுமேலாளர் ரவி ரஞ்ஜனிடம் ஒப்படைத்தார்.

    பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கலைஞரின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பயன்பாட்டிற்கு இயலாத பொன்னினங்களை உருக்கி வங்கியில் முதலீடு செய்து அதன்மூலம் பெறப்படுகின்ற வட்டி தொகையை அந்தந்த கோவிலுக்கு அடிப்படை தேவைகள் மற்றும் திருப்பணிகளுக்கு செலவிடப்பட்டு வந்தது.

    கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் முழுமையாக செயலிழந்து இருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பல கோவில்களில் நூற்றுக்கணக்கான கிலோ கிராம் எடையுள்ள பலமாற்று பொன்னினங்கள் பயன்படுத்த இயலாமல் கிடப்பதை முதலமைச்சரின் கவனத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை கொண்டு சென்றவுடன், கலைஞர் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த உத்தர விட்டதற்கிணங்க ஏற்கனவே பெரியபாளையம், இருக்கன்குடி, திருவேற்காடு, மாங்காடு, திருச்செந்தூர் ஆகிய 5 கோவிலில் இருந்து பலமாற்று பொன்னினங்கள் மும்பையில் இருக்கின்ற மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கப்பட்டு 344 கிலோ 334 கிராம் எடை கொண்ட சுத்தத் தங்கம் கிடைக்கப் பெற்றவுடன் அதனை தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததில் வட்டியாக ஆண்டிற்கு ரூ.4.31 கோடி தற்போது கிடைக்கின்றது. இந்த வருவாயை அந்தந்த கோவில்களின் திருப்பணிக்கும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தி வருகின்றோம்.

    மேலும், இந்து சமய அற நிலையத்துறை வரலாற்றில் எந்த ஆட்சியிலும் மேற் கொள்ளப்படாத வகையில் திருத்தேர்களை செப்பனிடுதல், புதிய திருத்தேர்கள் உருவாக்குதல், திருக்குளங்களை புனரமைத்தல், பசுமடங்களை மேம்படுத்துதல் போன்ற அரும்பெரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்து கோவில்களை வைத்து அரசியல் செய்யலாம் என்பவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கின்றது.

    திருவொற்றியூர் கோவிலில் புளியோதரை கெட்டுப்போன விவகாரம் எங்கள் கவனத்திற்கு வந்தவுடன் சம்பந்தப்பட்ட அலுவலரை உடனடியாக விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறோம். தவறு இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அந்த பிரசாத கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, நல்ல தரமான உணவு தயாரிக்கும் புதிய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். சிறு குறைகள் இருந்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் இது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உடனடியாக துறையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டவுடன் அதன் மீது நடவடிக்கை எடுக்கின்ற பணியை இந்து சமய அறநிலைத்துறை பார பட்சமின்றி மேற்கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை நடைபெறுகிறது.
    • இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மதுரை

    மதுரையில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் நாளை 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தங்க பத்திரம் விற்பனை நடைபெறுகிறது. இது குறித்து மதுரை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கல்யாண வரதராஜன் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் கிராம் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரத்து 923 விற்பனை செய்யப்படுகிறது. தனி நபர் ஒரு நிதியாண்டில் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். தங்கமானது பத்திர வடிவில் இருப்பதால் இது பாதுகாப்பான முதலீடு மட்டுமின்றி இம்முதலீட்டிற்கு கூடுதலாக ஒரு ஆண்டிற்கு 2.5% வட்டியும் கிடைக்கிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    • காரைக்குடி தபால் நிலையத்தில் தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை தொடங்கியது.
    • பணத்திற்கு முழு உத்தர வாதம் வழங்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    காரைக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அஞ்சல்துறை சார்பில் அனைத்து அஞ்சலக அலுவலகங்க ளிலும் தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை செய்யப் பட்டு வருகிறது. இதேபோல் காரைக்குடி அஞ்சலகம் அலுவலகத்தில் நேற்று முதல் தொடங்கி வருகிற 23-ந்தேதி வரை 5 நாட்கள் தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு இந்த தங்க பத்திரத்தின் விலை ஜூன் மாதத்தில் ரூ.5091-ம், ஆகஸ்டு மாதத்தில் ரூ.5197-ம், டிசம்பர் மாதத்தில் ரூ.5409-ம், இந்தாண்டு மார்ச் மாதம் ரூ.5611-ம் விற்பனை செய்யப்பட்டுள் ளது.

    இந்த தங்க பத்திரத்தின் சிறப்பு அம்சங்களாக ஒரு கிராம், ரூ.5926-ம், இதற்கு வட்டி விகிதம் 2.5 சதவீதமும், குறைந்தது 1 கிராம் முதல் 4 ஆயிரம் கிராம் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதன் முதிர்வு காலமாக 8 ஆண்டுகளாகவும், முன் முதிர்வு காலமாக 5 வருடங்களுக்கு பின்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் திட்டமாக உள்ளதால் பணத்திற்கு முழு உத்தர வாதம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த தங்க சேமிப்பு பத்திரத்தை பெறுவதற்கு வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை, ஆதார் எண் ஆகியவை அடையாள சான்றாக ஏற்கப்படும். மேலும் வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. கோடு நேரில் கொண்டு வரவேண்டும். இதுதவிர வாரிசு நியம னத்திற்கு வாரிசுதாரர்களின் வயது, வங்கி கணக்கு எண், அடையாள சான்று ஆகியவை வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரையில் அனைத்து தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் விற்பனை செய்யப்படுகிறது.
    • எனவே பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மதுரை 

    மதுரை அஞ்சல் கோட்ட நடுநிலை கண்காணிப்பாளர் ஜவகர்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் கிராம் 1-க்கு ரூ.5,926-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் விற்பனை தொடங்கியுள்ளது. தனி நபர் நிதியாண்டில் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை தங்கத்திற்கு முதலீடு செய்யலாம். இந்த தங்கமானது பத்திர வடிவில் இருந்தால் அது பாதுகாப்பான முதலீடு மட்டுமின்றி ஆண்டு ஒன்றுக்கு 2.5 சதவீதம் வட்டியும் கூடுதலாக கிடைக்கும். எனவே பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×