search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகள் ரூ.10.43 லட்சத்துக்கு விற்பனை
    X

    தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகள் ரூ.10.43 லட்சத்துக்கு விற்பனை

    • வெங்கமேடு மின்னணு தேசிய வேளாண் சந்தையில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகள் விற்பனை
    • வெங்கமேட்டில் செயல்பட்டு வரும்மின்னனு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு சென்றும் விற்பனை

    பரமத்தி வேலூர்,

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், சுள்ளிப் பாளையம், சோளசிராமணி, ஜமீன் இளம்பள்ளி குரும்பலமகாதேவி, கொத்தமங்கலம் ,திடுமல், சிறுநல்லி கோவில் ,தி.கவுண்டம்பாளையம், கபிலர்மலை, வடகரையாத்தூர், ஆனங்கூர் ,மோகனூர், பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிர் செய்துள்ளனர். தேங்காய் முதிர்ச்சி அடைந்ததும் கூலி ஆட்கள் மூலம் தேங்காயை பறித்து மட்டைகளை அகற்றிவிட்டு முழு தேங்காயாகவும், தேங்காய் பருப்புகளாகவும் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர் .அதேபோல் பரமத்தி வேலூர் அருகே வெங்கமேட்டில் செயல்பட்டு வரும்மின்னனு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு சென்றும் விற்பனை செய்து வருகின்றனர்.

    வெங்கமேட்டில் உள்ள மின்னனு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் போனது. நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 474 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.24.69 -க்கும், குறைந்தபட்சமாக ரூ22.06 - க்கும், சராசரியாக ரூ.23.30-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 1 லட்சத்து 69 ஆயிரத்து 82- க்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    மேலும் ஏலத்திற்கு 10 ஆயிரத்து 248 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ 75.89- க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ 53.33- க்கும், சராசரி விலையாக ரூ 68.88- க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ 8 லட்சத்து 74 ஆயிரத்து 288- க்கு ஏலம் நடைபெற்றது. தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகள் ரூ.10 லட்சத்து 43 ஆயிரத்து 370 க்கு விற்பனையானது.

    Next Story
    ×