search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RN Ravi"

    • 10 மசோதாக்களையும் முதலில் அனுப்பிய போதே கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கலாமே?
    • மறு நிறைவேற்றம் செய்து அனுப்பி வைத்த மசோதாவை கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்ப முடியுமா?

    தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினார்.

    தமிழக அரசு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி அந்த 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு வழங்கியது.

    இந்தநிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அதற்கு முன்னதாக 10 மசோதாக்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக ஆளுநர் தரப்பில் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் விசாரணையின்போது ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார் என மத்திய அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி தெரிவித்தார்.

    அதற்கு தமிழக அரசு சார்பில் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்ப முடியாது. பஞ்சாப் மாநில ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது என வாதங்கள் முன்னெடுத்து வைக்கப்பட்டது. மேலும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத பட்சத்திலும், பண மசோதாவாக இல்லாத பட்சத்திலும் அவற்றை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும். இல்லையென்றால் அரசமைப்பு சாசன சட்டம் கேலி கூத்தாகிவிடும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி "10 மசோதாக்களையும் முதலில் அனுப்பிய போதே கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கலாமே?" என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும் "இந்த பிரச்சினையில் கவர்னர் ரவி தரப்பில் குழப்பம் இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதி, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு மறுநிறைவேற்றம் செய்து அனுப்பிய பிறகு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது ஏன்? மறு நிறைவேற்றம் செய்து அனுப்பி வைத்த மசோதாவை கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்ப முடியுமா?


     



    நீதிபதிகள் அரசமைப்பு சாசனம் 200-வது பிரிவின்படி ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லையெனில் திருப்பி அனுப்ப வேண்டும். அல்லது குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். இந்த மூன்று வாய்ப்புதான் ஆளுநருக்கு உள்ளது. மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல், சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை முடக்கி வைக்க முடியாது.

    தமிழக முதல்வரை ஆளுநர் அழைத்து இதுகுறித்து பேசி தீர்வு காணலாம். பல விஷயங்கள் குறித்து ஆளுநர், முதல்வர் இடையே பேசி தீர்வு காண முடியும். இதை ஆளுநர் செய்தால் பாராட்டுக்குரியதாக இருக்கும். இல்லாவிட்டால் நாங்களே உத்தரவிட நேரிடும்" என்றார்.

    அதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    • உலக மீனவர் தினத்தை 1998-ம் ஆண்டு ஐ.நா. சபை அங்கீகரித்தது. அந்த வகையில் இந்த ஆண்டு 25-வது வெள்ளி விழாவாக கொண்டாடப்படுகிறது.
    • கவர்னர் ஆர்.என்.ரவியை மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி புத்தகம் வழங்கி வரவேற்றார்.

    தூத்துக்குடி:

    மீனவர்களின் உழைப்பையும், தியாகத்தையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந்தேதி உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    உலக மீனவர் தினத்தை 1998-ம் ஆண்டு ஐ.நா. சபை அங்கீகரித்தது. அந்த வகையில் இந்த ஆண்டு 25-வது வெள்ளி விழாவாக கொண்டாடப்படுகிறது.

    இதனை முன்னிட்டு தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு, கடல்சார் மக்கள் நல சங்கமம் சார்பில் தூத்துக்குடி ஸ்நோ ஹாலில் மீனவர் தின விழா நடபெற்றது.

    இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வந்தார்.

    அவரை மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி புத்தகம் வழங்கி வரவேற்றார். தொடர்ந்து அவர் அங்கிருந்து மீனவர் தின விழா நடைபெறும் இடத்திற்கு புறப்பட்டு சென்றார்.

    விழாவில் கலந்து கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி மீனவ சமுதாய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களையும், மீனவ சமுதாய தலைவர்களின் சேவைகளையும் பாராட்டி விருது வழங்கினார்.

    தொடர்ந்து நாட்டுப்படகு மீனவர்களுடன் கலந்துரையாடினார். இதனை முடித்து கொண்டு பிற்பகல் பீச் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் விசைப்படகு மீனவர்களுடன் கலந்துரையாடினார். இன்று மாலை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தூத்துக்குடியில் இருந்து மீண்டும் சென்னை புறப்பட்டு செல்கிறார். 

    • சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு.
    • நாளைமறுநாள் சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற இருக்கிறது.

    தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக சட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் மீது நீண்ட நாட்களாக ஆளுநர் ஆர்.என். ரவி நடவடிக்கை எடுக்காமல் இருந்தார்.

    இதுபோன்று பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆளுநர்கள் ஒப்புதல் வழங்காமல் உள்ளனர். பஞ்சாப் மாநிலம் முதன்முதலாக உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தது. பின்னர் தமிழக அரசும் வழக்கு தொடர்ந்துள்ளது.

    பஞசாப் மாநிலம் தொடர்ந்த வழக்கில் ஆளுநர்களுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    வருகிற சனிக்கிழமை சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆளுநர் 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை தலைமை செயலகத்திற்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு திருப்பி அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது.

    ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள்:-

    1 சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

    2 தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா

    3 தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

    4 தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

    5 தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் திருத்த மசோதா

    6 தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

    7. தமிழ் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

    8. தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

    9. அண்ணா பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

    10. அத்துடன் தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாட்டிற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
    • இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அரசு உத்தரவுகளை நிறைவேற்றுவதில் தாமதம் செய்வதாகவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவதால் அரசு பணிகள் முடங்கி உள்ளதாகவும் தமிழக அரசு குற்றம் சாட்டி வந்தது.

    கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 30-ம் தேதி தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு மனுவில், 'தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அரசு உத்தரவுகளை நிறைவேற்றுவதில் தாமதம் செய்கிறார், மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுகிறார். இதனால் அரசு பணிகள் முடங்கி உள்ளன. மேலும் அரசியல் சாசனம் வழங்கி உள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்.

    எனவே மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி உள்ளிட்டோர் ஆஜராகி வாதாடினார்கள். அவர்கள் தங்கள் வாதத்தின் போது கூறியதாவது:

    தமிழக அரசின் செயல்பாடுகளை கவர்னர் ஆர்.என்.ரவி முடக்குகிறார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்கிறார். கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்பில் கூட அவர் கையெழுத்திடவில்லை. பணி நியமனம் தொடங்கி எந்த ஒரு கோப்புகளுக்கும் அனுமதி கொடுக்க கவர்னர் மறுப்பு தெரிவிக்கிறார். 2020-ம் ஆண்டு முதல் பல மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. இதனால் தமிழக அரசின் உரிமை மட்டுமல்ல, தனி நபரின் உரிமையும் பறிக்கப்படுகிறது. அரசின் முக்கிய பணியிடங்களை முடக்குவதற்கான மசோதாக்களை கூட கவர்னர் கண்டு கொள்ளவில்லை.

    தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை கவர்னர்களால் ஏற்படும் பிரச்சினையை சொல்லும் வகையில் வழக்கை தொடர்ந்து உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் வாதாடினார்கள்.

    அவர்களிடம் நீதிபதி, 'தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கை மிகவும் முக்கியமானதாக பார்க்கிறோம். கவர்னருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கை தீபாவளி விடுமுறைக்கு பிறகு விசாரிக்கலாமா' என்று கேட்டனர்.

    பின்னர் இந்த வழக்கில் எதிர் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். கவர்னரின் செயலாளர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். அதன்பின் இந்த வழக்கு விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் அன்று மத்திய அரசு வக்கீல்கள் ஆஜராக உத்தரவிட்டனர்.

    • நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பார்கள், அவர்களே ஆளுநராக இருந்த ஆர்.என். ரவியை அனுப்பி விட்டார்கள்
    • அப்போது உப்பு போட்டு சாப்பிடும் தமிழர்களாகிய நாம் என்ன செய்வோம்- ஆர்.எஸ். பாரதி

    திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தனது எக்ஸ் பக்கத்தில் "நாகாலாந்து மக்களை நான் இழுவுப்படுத்தியதாக ஆளுநர் ஆர்.என. ரவி கூறுவது முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி. நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பது அவர்களின் கலாச்சாரம் என்பதனை கவுகாத்தி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உறுதி செய்துள்ளது" என ஆளுநர் ஆர்.ரவியின் கண்டனத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.

    முன்னதாக,

    திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி, கருணாநிதி நூற்றாண்டு விழா கூட்டம் ஒன்றில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை கடுமையாக விமர்சித்து பேசினார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு அரசை வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பதாகவும், தமிழ்நாடு அரசு அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

    நாகாலாந்திலே ஆளுநர் ஆர்.என். ரவிக்கு நடந்தது என்ன தெரியுமா? ஊரை விட்டே விரட்டியடித்தனர். தப்பா நினைத்துக் கொள்ளக்கூடாது, ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன். நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பார்கள், அவர்களே அங்கு ஆளுநராக இருந்த ஆர்.என். ரவியை அனுப்பிவிட்டார்கள், அப்போது உப்பு போட்டு சாப்பிடும் தமிழர்களாகிய நாம் என்ன செய்வோம் என ஆர்.எஸ்.பாரதி ஆவேசமாக பேசியிருந்தார்.

    ஆர்.எஸ். பாரதியின் பேச்சுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் "நாகாலாந்து மக்களை பகிரங்கமாக இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது" என தெவரித்திருந்தார்.

    மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி. கூறியதாக தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட பதிவில், "நாகா இன மக்கள் துணிச்சல் மிக்கவர்கள், நேர்மையானவர்கள். கண்ணியமானவர்கள். அவர்களை திமுக-வின் ஆர்.எஸ். பாரதி நாய்க்கறி உண்பவர்கள் என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என ஆர்.எஸ். பாரதியை வலியுறுத்துகிறேன்" எனக்குறிப்பிடப்பட்டிருந்தது.

    தற்போது அதற்கு ஆர்.எஸ். பாரதி விளக்கம் அளித்துள்ளார்.

    திமுக அரசு- தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஆளுநர், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது, திமுக-வின் கொள்கையை விமர்சிப்பது போன்ற செயல்களால் தற்போது நீதிமன்றத்தில் திமுக அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலைக்கு சென்றுள்ளது.

    • தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்து வருகிறார்.
    • மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பு ஏற்றார்.

    அவர் பதவி ஏற்றது முதல் தமிழக அரசுக்கும், அவருக்கும் இடையே இணக்கமான சூழல் ஏற்படவில்லை. இதனால் மோதல் போக்கு நடந்து வருகிறது.

    இந்நிலையில் தமிழக அரசு அனுப்பும் கோப்புகளில் உடனுக்குடன் கவர்னர் கையெழுத்து போடுவதில்லை. ஒவ்வொரு கோப்பு மீதும் பல்வேறு விளக்கங்களைப் பெற்று அதில் திருப்தி அடைந்தால்தான் கவர்னர் கையெழுத்து போடுகிறார். மற்ற கோப்புகளை நிலுவையில் வைத்து அதை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விடுகிறார்.

    அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், நான் ஒரு மசோதாவை நிறுத்தி வைத்து இருக்கிறேன் என்று சொன்னால் அது நிராகரிக்கப்பட்டதாகத் தான் அர்த்தம் என்று சொல்லி இருந்தார்.

    தற்போது 25 சட்ட மசோதாக்களுக்கு அவர் கையெழுத்திடாமல் உள்ளார்.

    ஏற்கனவே நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது அதற்கு கவர்னர் முதலில் ஒப்புதல் அளிக்காமல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டார். அதன்பிறகு 2-வது முறையாக சட்டசபையில் அந்த மசோதாவை நிறைவேற்றி அனுப்பிய பிறகுதான் வேறுவழியின்றி அந்த மசோதாவில் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.

    இதேபோல், மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பான மசோதா, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை உருவாக்குவது தொடர்பான மசோதா, மதுரை, கோவை, திருப்பூர், ஓசூர் நகர வளர்ச்சி குழுமங்கள் உருவாக்குவது தொடர்பான தமிழ்நாடு நகர ஊரமைப்பு திட்ட மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் கவர்னரின் கை யெழுத்துக்காக நிலுவையில் உள்ளது.

    இதுமட்டுமின்றி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா, தமிழக சட்டசபையில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினரை தேர்வு செய்வதை நிறுத்தி வைப்பதற்கான மசோதா, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி உறுப்பினரை தேர்வு செய்வதை தடுக்கும் சட்டத்தை திருத்துதல், தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் சட்டம் ஆகியவையும் நிலுவையில் உள்ளது.

    இந்த சட்ட மசோதா உள்பட 25 சட்ட மசோதாக்களுக்கு அதிகமான கோப்புகள் மீது கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் வைத்துள்ளார்.

    இதுகுறித்து தமிழக அரசு போதிய விளக்கம் அளித்தும், நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் அதன்மீது முடிவெடுத்து கையெழுத்திடாமல் கவர்னர் உள்ளதால் தமிழக அரசு அவர் மீது அதிருப்தி அடைந்துள்ளது.

    இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாட் டிற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

    அதில், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

    சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரசியலமைப்பின் 200-வது பிரிவின்கீழ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை கவர்னர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். கவர்னர்களுக்கு என்று குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க வேண்டும் என்று உத்தரவிடுமாறு தமிழக அரசு இந்த மனுவில் வலியுறுத்தி உள்ளது.

    இந்த வழக்கு அனேகமாக சுப்ரீம் கோர்ட்டில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதல் பெற தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது.
    • தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கக் கடிதம் அனுப்பப்பட்டது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையத்தின் தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். அவருக்கு பின், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் முனியநாதன் பொறுப்பு தலைவராக செயல்பட்டு வருகிறார். தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படாததால், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு, தேர்வு முடிவுகள் உள்ளிட்டவைகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஓய்வுபெற்ற காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவையும், உறுப்பினர்களாக தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்து, அதற்கான பரிந்துரை கடிதத்தை ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதல் பெறுவதற்காக தமிழ்நாடு அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பி வைத்தது.

    இதற்கு பதில் அளித்த ஆளுநர் மாளிகை, டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட்டதா? தலைவர் தேர்வு எந்த முறையில் நடைபெற்றது, உறுப்பினர்கள் தேர்வில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் என்ன? என்பது போன்ற விளக்கங்கள் கேட்டு, தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கக் கடிதம் அனுப்பப்பட்டது.

    இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டதை ஆளுநர் ஆர்.என். ரவி நிராகரித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், வேறு ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    • இரண்டு நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுள்ளார்
    • மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல்

    தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆளுநர் டெல்லி சென்ற விமானத்திலும் திமுக எம்.பி. கனிமொழியும் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சனாதன தர்மம் உலகிற்கு தேவையானது.
    • சனாதன தர்மத்தின் அடிப்படை கூறுகள் தமிழகம் முழுவதும் உள்ளது.

    சென்னை அண்ணா நகரில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற சனாதன உத்சவ் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துக் கொண்டார்.

    அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    சனாதன தர்மத்தின் மிகவும் முக்கியமான பகுதியாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான இடங்கள், சனாதன தர்மத்தின் சான்றுகளாக உள்ளது.

    சனாதனத்தில் ஏற்றத்தாழ்வு கிடையாது. சனாதனம் தமிழகத்தில் வளம்பெற்று இருந்தது. சனாதன தர்மத்தின் அடிப்படை கூறுகள் தமிழகம் முழுவதும் உள்ளது.

    சனாதன தர்மம் உலகிற்கு தேவையானது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • அனுமதியின்றி தன்னிச்சையாக அரசிதழில் தேடுதல் குழு அமைக்கப்பட்டதாக ஆளுநர் குற்றச்சாட்டு.
    • தேடுதல் குழுவை நியமிக்க உயர் கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு அதிகாரம் இல்லை.

    சென்னை பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேர்வுக் குழுவை அமைக்க தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து இருந்தது. மேலும் இந்த உத்தரவு கடந்த 13-ம் தேதி தமிழ் நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். மேலும் தனது அனுமதியின்றி தன்னிச்சையாக அரசிதழில் தேடுதல் குழு அமைக்கப்பட்டதாக ஆளுநர் குற்றம்சாட்டி உள்ளார்.

    உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தனி தேடுதல் குழு அமைத்து இருக்கிறது. சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை நியமிக்க உயர் கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு அதிகாரம் இல்லை. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழை திரும்ப பெற வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தி இருக்கிறார்.

    • சாத்தூர் அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்திற்கு சென்று பாண்டியன் தீப்பெட்டி கம்பெனி தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.
    • விருதுநகர் சென்று பெருந்தலைவர் காமராஜர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்துகிறார்.

    சென்னை:

    கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    சென்னையில் இருந்து நாளை மறுநாள் (28-ந் தேதி) காலை 10 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் கவர்னர் அங்கிருந்து கார் மூலம் குற்றாலம் செல்கிறார்.

    அங்கு விவசாயிகள் மற்றும் விவசாய தொழில் முனைவோர்களுடன் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடுகிறார்.

    அதன் பிறகு ஆழ்வார் குறிச்சிக்கு சென்று பாரம்பரிய பானை தயாரிக்கும் தொழிலாளர்களை சந்தித்து பேசுகிறார். மாலையில் சிவசைவம் அவ்வை ஆசிரமத்துக்கு சென்று ஆசிரம குழந்தைகள் மற்றும் பணியாளர்களை சந்திக்கிறார்.

    சிவ சைவபதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். 29-ந் தேதி கோவிந்தப்பேரி சென்று நெல்கட்டும் செவல் கிராமம் செல்கிறார். பூலித்தேவர் அரண்மனையை பார்வையிடுகிறார். அதைத் தொடர்ந்து ஒண்டி வீரன் நினைவிடம் சென்று மரியாதை செலுத்துகிறார்.

    பின்னர் ராஜபாளையத்தில் உள்ள விஸ்வகர்மா சங்கத்தை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் சாத்தூர் அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்திற்கு சென்று பாண்டியன் தீப்பெட்டி கம்பெனி தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.

    அதன் பிறகு விருதுநகர் சென்று பெருந்தலைவர் காமராஜர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் 29-ந் தேதி இரவு மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

    • மாநிலத்தில் உள்ள 75 ரெயில் நிலையங்களை உலகதரத்திற்கு நவீனமயமாக்கும் பணியிலும் ஈடுபட்டு உள்ளது.
    • ஏற்கனவே ரூ.35,580 கோடிக்கு பணிகள் நடந்து வருகின்றன.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    இந்திய ரெயில்வே தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு ரூ. 6,080 கோடியை சாதனை அளவாக ஒதுக்கியுள்ளது. மேலும், மாநிலத்தில் உள்ள 75 ரெயில் நிலையங்களை உலக தரத்திற்கு நவீனமயமாக்கும் பணியிலும் ஈடுபட்டு உள்ளது. ஏற்கனவே ரூ.35,580 கோடிக்கு பணிகள் நடந்து வருகின்றன.

    தமிழ்நாட்டு மக்கள், பாரத பிரதமர் நரேந்திர மோடி தங்கள் மீது கொண்டுள்ள அன்புக்காகவும் திருநெல்வேலி-மதுரை-சென்னை மற்றும் சென்னை விஜயவாடா இடையே இரண்டு வந்தே பாரத் ரெயில் சேவைகளை மாநிலத்துக்கு வழங்கியதற்காகவும் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர்.

    ×