search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rice"

    • வெளியூர்களில் உள்ள கேரள மாநிலத்தினர் தங்களது ஊருக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
    • மாநிலம் முழுவதும் மொத்தம் 29.5 லட்சம் மாணவர்கள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டுக்காண ஓணம் பண்டிகை நேற்று தொடங்கியது. ஜாதி, மதம், மொழி, இன பாகுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகையாக ஓணம் பண்டிகை உள்ளது. வருகிற 29-ந்தேதி திருவோணம் பண்டிகை வருகிறது. அன்றைய தினம் மன்னர் மகாபலியை வரவேற்கும் விதமாக வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு, விருந்து படைத்து, புத்தாடை உடுத்தி மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள்.

    இதற்காக வெளியூர்களில் உள்ள கேரள மாநிலத்தினர் தங்களது ஊருக்கு வரத் தொடங்கியுள்ளனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

    மாநில அரசால் நடத்தப்படும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் மூலம் பயன்றுபெறும் மாணவர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 29.5 லட்சம் மாணவர்கள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கான அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் துறை, அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கும் எனவும், வருகிற 24-ந்தேதிக்குள் மாணவர்களுக்கு அரிசி வழங்கும் பணியை முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.

    ஓணம் பண்டிகைக்காக கேரள மாநிலத்தில் பள்ளி கள் வருகிற 25-ந்தேதி மூடப்பட்டு, செப்டம்பர் 4-ந்தேதி மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மோட்டார் சைக்கிளில் 5 மூட்டை ரேசன் அரிசி மூட்டைகளை கடத்தி சென்றனர்.
    • ரேசன் அரிசி மூட்டைகள் நுகர்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட த்தின் பல்வேறு இடங்களில் உள்ள ரேசன் கடைகளில் நுகர்வோருக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக வழங்கப்பட்ட அரிசி மற்றும் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக வழங்கப்படும் சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வெளிச்சந்தைக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது.

    இதையடுத்து பறக்கும் படை தனி தாசில்தார் ஜெனிட்டா மேரி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

    தொடர்ந்து, நல்லத்துக்குடி ரேசன் கடையில் உள்ள அரிசி கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக அவருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து அங்கு விரைந்தார்.

    பின்னர், கடையின் அருகில் 2 நபர்கள் தனித்தனி மோட்டார் சைக்கிளில் 5 மூட்டை ரேசன் அரிசி மூட்டைகளை கடத்தி சென்றது கண்டறியப்பட்டது.

    விசாரணையில் அந்த அரிசி மூட்டைகள் நல்லத்துக்குடி ரேசன் கடையில் இருந்து வாங்கி சென்றது என்பது உறுதியானது.

    இதையடுத்து ரேசன் அரிசி மூட்டைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை தனி தாசில்தார் ஜெனிட்டாமேரி பறிமுதல் செய்து அவற்றை நுகர்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார்.

    இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

    மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆடி முதல் வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
    • அம்மனை வேண்டிக்கொண்டு உரலில் இடிக்கப்பட்ட மாவை குழந்தை இல்லாத பெண் பக்தர்கள் சாப்பிட்டனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் 19-ம் ஆண்டு ஆடிமாத திருவிழா நேற்று நடைபெற்றது.

    ஆடி முதல் வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பின்னர் அம்மன் வீதியுலா, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

    இதையடுத்து, சு.பொலக்குணம் கிராமத்தில் வசிக்கும் பக்தரின் மார்பு மீது உரல் வைத்து அரிசி, மஞ்சள் ஆகியவை கொட்டப்பட்டு உலக்கையால் மாவு இடிக்கப்பட்டது.

    உரலில் இடிக்கப்பட்ட மாவை உண்ணுபவர்களுக்கு திருமணம் கைகூடும், குழந்தை பேறு உண்டாகும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.

    இதனால், அம்மனை வேண்டிக்கொண்டு உரலில் இடிக்கப்பட்ட மாவை குழந்தை இல்லாத பெண் பக்தர்கள் சாப்பிட்டனர்.

    இதைத்தொடர்ந்து, கோவிலில் அம்மன் ஊஞ்சல் தாலாட்டும், ஆன்மிக சொற்பொழிவு மற்றும் நாடகமும் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

    • முகாமில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கலாம்.
    • விண்ணப்பிக்க செல்லும் போது தேவையான ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. முகாமில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கலாம். மேலும் குடும்ப அட்டையில் செல்போன் எண் பதிவு செய்தல், மாற்றம் செய்யலாம். இவற்றுக்கு தேவையான ஆதார் கார்டு மற்றும் குடியிருப்பு முகவரிக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் பிறப்பு-இறப்பு சான்றிதழில் தேவையானவற்றை கொண்டு செல்ல வேண்டும்.

    இதுதவிர ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் அளிக்கலாம். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்தும் புகார் அளிக்கலாம்.

    பொது வினியோக திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களுக்கு 9342471314 என்ற நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக பொது வினியோக திட்ட கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

    • நாமக்கல் மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
    • 1,500 கிலோ ரேசன் அரிசி மற்றும் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    நாமக்கல்:

    தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரஞ்சித்குமார் மற்றும் பன்னீர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,500 கிலோ ரேசன் அரிசி மற்றும் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பான வழக்கு நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் மீது தீர்ப்பளிக்கப்பட்டது.

    அந்த தீர்ப்பில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 500 அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

    • வரம் பருப்பு, பாசிப் பருப்பு விலை திடீரென உயர்ந்துள்ளது.
    • கடலை எண்ணெய் லிட்டர் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    காங்கயம் :

    சமையலில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவை முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றின் விலை வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.துவரம் பருப்பு, பாசிப் பருப்பு விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி திருப்பூர், உடுமலையில் துவரம் பருப்பு கிலோ மொத்த விலை 120 ரூபாய், சில்லறை விலை 140 ரூபாய்க்கு விற்றது. தற்போது மொத்த விலை 140 ரூபாய், சில்லறை விலை 160 ரூபாயாக உயர்ந்துள்ளது.பாசிப்பருப்பு 100 ரூபாயில் இருந்து 120 ரூபாயாக உயர்ந்துள்ளது. உளுந்து கிலோவுக்கு 20 ரூபாய் உயர்ந்து 130 ரூபாயில் இருந்து 150 ரூபாயாகியுள்ளது.

    சீரகம் விலை இதுவரை இல்லாத வகையில் கிலோவுக்கு 200 ரூபாய் கூடி கிலோ 600 ரூபாய்க்கு விற்கிறது. மிளகு, 150 ரூபாய் விலை உயர்ந்து கிலோ 800 ரூபாய்க்கு விற்கிறது.கர்நாடக பொன்னி கிலோ 55 ரூபாயில் இருந்து 60, ராஜபோகம் பொன்னி கிலோ 58ல் இருந்து 64, இட்லி அரிசி 40ல் இருந்து 45 ரூபாயாகியுள்ளது.அரிசி பருப்பு விலை உயர்ந்து பொதுமக்களுக்கு கவலை அளித்தாலும், எண்ணெய் விலை சற்று குறைந்து ஆறுதல் அளித்துள்ளது.

    கடலை எண்ணெய் லிட்டர் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த மாதம் லிட்டர் 150 முதல் 130 ரூபாய் வரை விற்பனையானது. இம்மாதம் லிட்டருக்கு 40 முதல் 60 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. திருப்பூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை பொருளாளர் சாமி கூறுகையில், நடப்பு மாதத்தில் அரிசி விலை கிலோவுக்கு 5ரூபாய் வரையும், பருப்பு, உளுந்து விலை கிலோவுக்கு 15 முதல் 20 ரூபாய் உயர்ந்துள்ளது. அதே நேரம் கடலை எண்ணெய் விலை சற்று குறைந்துள்ளது. வெளி மாநில வரத்து குறைந்து வருவதால் விலை உயர்ந்துள்ளது. சீரகம் இதுவரை இல்லாத விலை உயர்வை தற்போது எட்டியுள்ளது என்றார். காங்கயம் பகுதியில் 450- க்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர் களங்கள் உள்ளன. மேலும் 150-க்கும் மேற்பட்ட தேங்காய் எண்ணெய் ஆலைகளும் செயல்பட்டு வருகிறது. இங்கு பீகார், ஒடிசா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும், தமிழகத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் வேலை செய்து வருகின்றனர். இந்த களங்களுக்கு பிற மாவட்டங்கள் மற்றும் கர்நாடக, கேரளாவிலிருந்தும் தேங்காய் கொண்டுவரப்பட்டு மட்டை உரித்து, உடைத்து உலர வைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. உலர்களங்களில் உலர்த்தப்படும் பருப்பு தனியார் தேங்காய் எண்ணெய் நிறுவனங்களுக்கும், காங்கயம் பகுதியில் உள்ள கிரஷிங் யூனிட்டுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

    காங்கயம் கிரஷிங் யூனிட்டுகளில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய்யானது டேங்கர் லாரிகள், டின்களில் அடைக்கப்பட்டு வட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் டின்கள், பாட்டில்கள், பவுச்களில் அடைக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் கடைகள் மூலம் விற்பனைக்கும் அனுப்பப்படுகிறது. இந்தநிலையில் கொப்பரை தேங்காயின் விலை அதிகரிக்கவில்லை. குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 கிலோ தேங்காய் பருப்பு ரூ.85 முதல் ரூ.86 வரை விற்பனையானது. அதன் பின்னர் தேங்காய் பருப்பு விலை சற்றே குறையத் தொடங்கியது. கடந்த மார்ச் மாதத்தில் 1 கிலோ தேங்காய் பருப்பு ரூ.81 வரை விற்பனையானது. பின்னர் தொடர்ந்து கொப்பரை தேங்காயின் விலை ஏறாமல் குறைந்து கொண்டே வந்தது. தற்போது 1 கிலோ தேங்காய் பருப்பு ரூ.74 ஆக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1,720 ஆக இருந்த 15 கிலோ கொண்ட எண்ணெய் டின் தற்போது ரூ.1,580 ஆக உள்ளது. இதனால் தோப்புகளில் தேங்காய்களுக்கும் உரிய விலை கிடைப்பதில்லை.

    இதுகுறித்து காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.எஸ்.என்.தனபால் கூறியதாவது:- சோயா எண்ணெய், பாமாயில் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் விலை குறைந்ததால், தேங்காய் எண்ணெய்யின் விற்பனை குறைவானது. இதன் காரணமாக கொப்பரை தேங்காய் விலை சரிந்துள்ளது. மேலும் தேங்காய் எண்ணெய்யை அதிக அளவில் உபயோகிக்கும் கேரளாவில் தற்போது தேங்காய் எண்ணெய் ஆலைகள் ஆங்காங்கே உருவாக்கி செயல்பட்டு வருகிறது. இதுவே தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு தேங்காய் எண்ணெய் விற்பனை குறைவானதற்கு ஒரு காரணமாகும்.

    தேங்காய் எண்ணெய்யின் பயன்பாடு அதிகரித்தால் மட்டுமே கொப்பரை தேங்காய் விலை உயரும். அந்த வகையில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யை வினியோகம் செய்தால் தேங்காய் எண்ணெய்யின் பயன்பாடு அதிகரிக்கும். கொப்பரை தேங்காயின் விலையும் குறையாது. தோப்புகளில் தேங்காய்களுக்கும் உரிய விலை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. இப்பகுதிகளில் விளையும் தக்காளி, உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து ஏல முறையில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.கடந்த சில மாதமாக உரிய விலை கிடைக்காதது, பருவம் தவறி பெய்த மழை, நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால் தக்காளி பயிர்கள் பாதித்தது. நடவு செய்த பெரும்பாலான விவசாயிகள் தக்காளி செடிகளை அழித்தனர். இந்நிலையில் தற்போது வரத்து குறைவு காரணமாக மீண்டும் தக்காளி விலை உயர்ந்து காணப்படுகிறது. உடுமலை சந்தையில் 14 கிலோ கொண்ட பெட்டி 375 ரூபாய் வரை விற்பனையானது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    உடுமலை சந்தைக்கு ஒரு லட்சம் பெட்டிகள் வரை வரத்து காணப்படும் நிலையில் கடந்த சில மாதமாக விலை இல்லாதது உள்ளிட்ட காரணங்களினால் அழிக்கப்பட்டது.மழை பொழிவும் குறைந்ததால் சாகுபடி பரப்பும் பெருமளவு குறைந்தது. இதனால் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து தற்போது 6 ஆயிரம் பெட்டிகள் என்ற அளவில் உள்ளது. இதனால் விலை உயர்ந்து காணப்படுகிறது.

    இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    பருப்பு தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் சாகுபடியை அதிகரிக்க வேளாண் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    நாடு முழுவதும் துவரை, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளின் விளைச்சல் குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.சர்வதேச சிறுதானிய ஆண்டை ஒட்டி, அவற்றின் சாகுபடிக்கு பல்வேறு மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன. இதுவே பருப்பு சாகுபடி குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது. எனவே குறுவை பருவத்தில் நெல்லுக்கு மாற்றாக பருப்பு வகைகள் சாகுபடியை அதிகரிக்க வேளாண் துறை திட்டமிட்டுள்ளது.இதற்காக குறுவை பருவத்தில் மாற்று பயிர் சாகுபடிக்கான சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் பருப்பு வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 1,740 ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளது.

    இதற்கான பயனாளிகள் தேர்வில் வேளாண் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர். சென்னை, கன்னியாகுமரி, கரூர், பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு இத்திட்ட மானியம் கிடைக்கும்.இதற்காக உழவன் செயலி வாயிலாக முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. சம்பா பருவ நெல் சாகுபடி பருவத்திலும் பருப்பு வகைகள் சாகுபடியை அதிகரிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

    • 350 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள், 2 ஆயிரம் கிலோ குருணை அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டது.
    • கோழி பண்ணை தீவனத்திற்காக மினி லாரியில் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் மதுக்கூர் பகுதியில் மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு செல்வதாக உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் மதுக்கூர் முக்கூட்டு சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மினி லாரியை வழி மறித்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் 350 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் , 2000 கிலோ குருணை அரிசி மூட்டைகள் என மொத்தம் 2.3 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து மினி லாரியை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி (வயது 24 ) என்பதும், பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசிகளை வாங்கி அதனை பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள மீன் மற்றும் கோழிப் பண்ணை தீவனத்திற்காக மினி லாரியில் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து ரேஷன் அரிசி கடத்தி வந்த திருமூர்த்தியை கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

    • மளிகை பொருட்களின் விலை 8 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.
    • கடந்த மாதம் ரூ.130 வரை விற்பனையான பாமாயில் படிப்படியாக குறைந்து தற்போது ரூ.85 ஆக குறைந்திருக்கிறது.

    சென்னை:

    அரசுக்கு 'பட்ஜெட்' எப்படி முக்கியமோ, அதுபோல குடும்பங்களில் இல்லத்தரசிகள் மாதாந்திர வீட்டு 'பட்ஜெட்'டும் மிகவும் முக்கியமானது. 'பட்ஜெட்'டில் எப்போதுமே முதலிடம் என்றால், அது மளிகை பொருட்களுக்கு தான் இருக்கும். மளிகை பொருட்கள் வாங்கி சமையலறையில் இருப்பு வைத்தாலே, இல்லத்தரசிகளுக்கு பாதி நிம்மதி கிடைத்துவிடும்.

    அவ்வப்போது மளிகை பொருட்களின் மீதான விலையேற்றம் ஏற்படும் போதெல்லாம் 'பட்ஜெட்'டில் துண்டு விழும். அப்போது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியே மேலோங்கும். இதனால் சமையலில் பயன்படுத்தும் பொருட்களின் அளவும் குறைய தொடங்கும்.

    அப்படி ஒரு நிலை தான் தற்போது ஏற்பட்டிருக்கிறது. அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்திருக்கிறது. இதுகுறித்து சென்னை கோயம்பேடு உணவு தானிய மொத்த சந்தை வியாபாரி பி.பாண்டியராஜன் கூறியதாவது:-

    பொதுவாக தமிழகத்தில் விளைச்சல் இருந்தாலும் ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற அண்டை மற்றும் வெளிமாநிலங்களின் வரத்து தான் இங்கு மளிகை பொருட்களின் விலையை தீர்மானிப்பதில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிலையில் அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பதின் எதிரொலியாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மளிகை பொருட்களின் விலை 8 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.

    உதாரணமாக பருப்பு வகைகள் விலை ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்திருக்கிறது. துவரம் பருப்பு விலை (கிலோவில்) ரூ.118-ல் இருந்து ரூ.160 ஆக அதிகரித்துள்ளது. சீரகத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்திருக்கிறது. கடந்த மாதம் ரூ.365-க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.540-க்கு விற்பனை ஆகிறது. மிளகு விலை ரூ.50 உயர்ந்துள்ளது.

    அரிசியை பொறுத்தவரை 26 கிலோ கொண்ட ஒரு சிப்பம் சாதா பொன்னி அரிசி விலை ரூ.900-ல் இருந்து ரூ.1,050 ஆக விலை அதிகரித்துள்ளது. மீடியம் பொன்னி ரூ.1,250-ல் இருந்து ரூ.1,500 ஆக அதிகரிக்கிறது. பச்சரிசி விலை ரூ.1,500 ஆக அதிகரித்திருக்கிறது. பாசுமதி அரிசி (30 கிலோ கொண்ட சிப்பம்) ரூ.3,100-ல் இருந்து ரூ.3,400 ஆக உயர்ந்துள்ளது.

    அதேவேளை பாமாயில் விலை குறைந்துள்ளது. கடந்த மாதம் ரூ.130 வரை விற்பனையான பாமாயில் படிப்படியாக குறைந்து தற்போது ரூ.85 ஆக குறைந்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை கோயம்பேடு மார்க்கெட் உணவு தானிய அங்காடியில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை நிலவரம் வருமாறு:- (கிலோவில்/ மொத்த விலையில்)

    துவரம் பருப்பு- ரூ.160, சிறுபருப்பு- ரூ.110, உளுந்தம் பருப்பு- ரூ.120, உருட்டு கடலை- ரூ.65 முதல் ரூ.70 வரை, கடலை பருப்பு- ரூ.75, மிளகாய் தூள்- ரூ.430, தனியா தூள்- ரூ.224, மஞ்சள் தூள்- ரூ.156, சீரகம்- ரூ.540, சோம்பு- ரூ.290, கடுகு- ரூ.80, மிளகு- ரூ.540, வெந்தயம்- ரூ.80, ஆட்டா (10 கிலோ) - ரூ.490, மைதா (10 கிலோ) - ரூ.430, சர்க்கரை (50 கிலோ மூட்டை) - ரூ.2,050, வெல்லம்- ரூ.58, புளி- ரூ.90, பூண்டு (சாதா) - ரூ.110, பூண்டு (முதல் ரகம்) - 150, முந்திரி- ரூ.890, திராட்சை- ரூ.250, பாமாயில்- ரூ.85, சன் பிளவர்- ரூ.112, நல்ல எண்ணெய்- ரூ.270, தேங்காய் எண்ணெய்- ரூ.180, டால்டா- ரூ.102, ஏலக்காய்- ரூ.1,700, நீட்டு மிளகாய்- ரூ.315, தனியா- ரூ.120, பச்சை பட்டாணி- ரூ.78, வெள்ளை பட்டாணி- ரூ.68, கருப்பு சென்னா- ரூ.69, சாதா பொன்னி (26 கிலோ மூட்டை) - ரூ.1,050, மீடியம் பொன்னி - ரூ.1,200, முதல் ரக பொன்னி- ரூ.1,500, பச்சரிசி- ரூ.1,500, பாசுமதி அரிசி- ரூ.3,400, பிரியாணி அரிசி- ரூ.2,600, இட்லி அரிசி- ரூ.900.

    போக்குவரத்து, வண்டி-ஆட்கள் கூலி போன்ற காரணங்களால் வெளிசந்தையில் மளிகை பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.

    • ஆலங்குடி அருகே லோடு வேனில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது
    • ஒருவர் கைது, டிரைவர் தப்பி ஓட்டம்

    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே லோடு வேனில் ரேஷன் அரிசி கடத்திய வரை குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்து ரேஷன் அரிசி மற்றும் அதனை கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர். புதுகோட்டை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார், மாந்தங்குடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த வண்டியில் 1 டன் ரேசன் அரிசி கடத்தப்படுவது தெரிய வந்தது. லோடு வாகனத்தில், வந்த அதன் உரிமையாளர் செம்பட்டிவிடுதியை சேர்ந்த தொப்புளான் மகன் ரெகுநாதன் என்பவர் அரிசியை கடத்தி செல்வது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ரெகுநாதனை கைது செய்த, புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலிசார், அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் தப்பியோடிய லோடு வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

    • 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • கார் உரிமையாளர் மேல்நிலைபட்டி சுப்பையா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் வடக்கு நல்லிபட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விபத்துக்குள்ளான காரை சோதனை செய்த போது சுமார் 1000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த காரை ஓட்டி வந்தது புதுக்கோட்டை அசோக் நகரை சேர்ந்த அக்பர் அலி மகன் சேக் தாவூத் (வயது 24) என்பதும், ரேஷன் அரிசியை கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து டிரைவர் சேக்தாவூத்தை கைது செய்து, 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். கார் உரிமையாளர் மேல்நிலைபட்டி சுப்பையா என்பவரையும் தேடி வருகின்றனர்.

    • நில ஒருங்கிணைப்பு மசோதாவை திரும்ப பெற வேண்டும்.
    • செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை நிறுத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    நில ஒருங்கிணைப்பு மசோ தாவை திரும்ப பெற வேண்டும், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை நிறுத்த வேண்டும், பருவம் தவறி பெய்த மழையால் பாதித்த நிலக்கடலை, உளுந்து, பயறு, எள் பயிர்க ளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார்.

    இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், மாவட்ட நிர்வாகக்குழு நாராயணன், ஒன்றிய துணை செயலாளர் பாலகுரு, பொருளாளா் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • பொது மக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா, எடை சரியான முறையில் வைத்து வழங்கப்படுகிறதா கேட்டறிந்தனர்.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றியம் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி நாதல்படுகை மற்றும் முதலைமேடுதிட்டு ஆகிய கிராமங்களில் ரூ16 கோடி மதிப்பீட்டில் 2 பேரிடர் மீட்பு மையங்கள் அமைய இருக்கும் இடத்தினை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் ஊரக உள்ளாட்சி துறை சார்பாக கொள்ளிடம் மற்றும் குத்தாலம் ஆகிய இரண்டு ஒன்றிய குழு தலைவர்களுக்கு தலா ரூ 12.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய வாகனங்கள் வழங்குவதற்கான சாவிகளை வழங்கி வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன்,கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் பெற்றுக்கொண்டனர்.

    கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அனுமந்தபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ரேஷன் கடைக்கு சென்ற பொது மக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா, எடை சரியான முறையில் வைத்து வழங்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, சட்டபேரவை உறுப்பினர்கள் எம்.பன்னீர்செல்வம், நிவேதா.முருகன்,சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா,வட்டாட்சியர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் மஞ்சுளா,ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், துணைத் தலைவர் பானுசேகர்,அரசு அதிகாரிகள், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×