search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rice crops"

    • முத்தரசபுரத்தில் ஊரைச் சேர்ந்த விஜயகுமார் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார்.
    • அடக்கம் செய்வதற்கு சாலை இல்லாமல் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நெல் வயல்களின் வழியாக வளர்த்த நெற்பயிர்களின் நடுவில் தூக்கி சென்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருக்குவளை அருகே உள்ள முத்தரசபுரத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த விஜயகுமார் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார்.

    அவரை அடக்கம் செய்வதற்கு சாலை இல்லாமல் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சேறும், சகதியுமான நெல் வயல்களின் வழியாக விவசாயிகள் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த நெற்பயிர்களின் நடுவில் தூக்கி சென்றனர்.

    மேலும் பல ஆண்டுகளாக இந்த துயரத்தை சந்தித்து வருவதாக வேதனையுடன் கூறும் அப்பகுதி மக்கள் கிராமத்தில் யாராவது உயிரிழந்தால் ஒவ்வொரு முறையும் வயலில் தூக்கி சென்று பாடுபட்டு வளர்த்த நெற்பயிர்கள் நாசமாவதாக வேதனையோடு கூறியுள்ளனர்.

    மேலும், மழைகாலங்களில் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை தூக்கி செல்லும் நிலை ஏற்படுவதாகவும், நிரந்தர சுடுகாடு கட்டிடம் கூட இல்லாமலும் கீற்று கொட்ட கைகள் அவ்வப்போது அமைத்து சடலங்களை எரி ஊட்டுவதாகவும், பல நேரங்களில் மழையினால் நனைந்து சடலங்கள் பாதியிலேயே எரிந்து நின்று விடுவவும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    கிராம மக்கள் பல ஆண்டுகளாக புகார் மனு கொடுத்தும் நாகை மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய பொதுமக்கள், விரைவில் சுடுகாட்டிற்கு சாலை அமைத்து தர வேண்டும் என்றும் தமிழக அரசு இதில் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்தரபுரம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அனைத்து இடங்களிலும் அமோகமாக நெல் விளைச்சல் ஏற்பட்டு உள்ளது.
    • கனமழை காரணத்–தினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே வடகால், பின்னவாசல், ஓடாச்சேரி, கீழகூத்தங்குடி, வேப்பத்தாங்குடி ஆகிய பகுதிகளில் மழை நீரால் சூழ்ந்துள்ள விவசாய நெற்பயிர்களை திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கே.கலைவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் பூண்டி.கே.கலைவாணன் எம்எல்ஏ தெரிவித்ததாவது, இந்த ஆண்டு முன்பாகவே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தினால் காவிரி படுகை அனைத்து இடங்களிலும் அமோகமாக நெல் விளைச்சல் ஏற்பட்டு உள்ளது.

    எதிர்பாராத விதமாக கடும்மழை பெய்த காரணத்தினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மிகுந்த சேதமடைந்துள்ளது. இருபது நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்களும் சேதமடைந்துள்ளது.

    சேதமடைந்த நெற்பயிர்களை மாவட்ட வருவாய் நிர்வாகம் மற்றும் வேளாண்மைத்துறை மூலம் கணக்கெடுக்கம் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் தமிழக முதல்-அமைச்சரிடம் அறிக்கை சமர்பிக்கப்படும்.

    இதற்கான நிவாரணம் பாதிக்கப்பட்ட விவசாயகளுக்கு வழங்கங்கிட தமிழக முதலவர் உரிய நடவடிக்கை எடுப்பார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இவ்வாய்வில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை, வேளாண்மை த்துறை உதவி இயக்குநர் ஹேமா ஹெப்சிமா நிர்மலா, தாசில்தார் நக்கீரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருணாகரன், திருவாரூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் துரை தியாகராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தனர்.

    • சீர்காழி பகுதிகளில் பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இரவு நேரங்களில் பன்றிகள் கூட்டமாக வந்து சம்பா நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில சீர்காழி, தென்பாதி, சட்டநாதபுரம், விளந்திட சமுத்திரம், திட்டை, செம்மங்குடி உள்ளிட்ட பகுதிகளில பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளன.

    இரவு நேரங்களில் பன்றிகள் கூட்டமாக வந்து சம்பா நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கோவி. நடராஜன் கூறுகையில், எனது வயலில் இரவு நேரங்களில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து சேதப்படுத்தி வருகிறது.

    இதனால் இந்த ஆண்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நெற்பயிர்களை தாக்கும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆற்றங்கரையை ஒட்டி உள்ள நெல் வயல்களில் மேய்ந்து சேதத்தை ஏற்படுத்துகிறது.
    • வயல் ஓரங்களில் சேற்றை நோண்டி, நெல் செடிகளில் உள்ள வேர்களை தின்று விடுகின்றன.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே வண்டாம்பாளை ஊராட்சியில் திருப்பள்ளி முக்கூடல் கிராமத்தில் பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது.

    இந்த கிராமத்தின் வழியே பாய்ந்து ஓடும் வெட்டாறு கரைகளில் உள்ள படுகை ஓரங்களில் ஏராளமான பன்றிகள் முகாமிட்டுள்ளன.

    நகரங்களில் பன்றி வளர்ப்பதற்கான ஏதுவான சூழல் இல்லாததால் நகரங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் பன்றி வளர்ப்பவர்கள், தங்களது பன்றிகளை கொண்டு வந்து விட்டுவிடுகின்றனர்.

    இப்பன்றிகள் ஆற்றங்கரையை ஒட்டி உள்ள நெல் வயல்களில் மேய்ந்து சேதத்தை ஏற்படுத்துகிறது.

    பன்றிகளுக்கு உணவான கோரை புல் கிழங்குகள் கிடைக்காததால், வயல்வெளிகளில் நுழைந்து நெல் செடிகளில் உள்ள வேர்களை தின்று சேதப்படுத்துகின்றன.

    இதனால் வண்டாம்பாளை, திருப்பள்ளி முக்கூடல், விளாகம் ஆகிய கிராமங்களில் உள்ள நெல் வயல்கள் சேதமாகியுள்ளது.

    வயல் ஓரங்களில் சேற்றை நோண்டி, நெல் செடிகளில் உள்ள வேர்களை தின்று விடுகின்றன.

    இதனால் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் வீணாகிறது.

    உடனடியாக இந்த பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாண்டஸ் புயலின் மையப் பகுதியான கண் பகுதி மாமல்லபுரத்தின் அருகே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
    • 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெல் பயிரிட்டனர்.

    விழுப்புரம்:

    வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலின் மையப் பகுதியான கண் பகுதி மாமல்லபுரத்தின் அருகே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இப்புயல் கரையைக் கடக்கும் பொழுது மணிக்கு 65 முதல் 75 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்றும், சில இடங்களில் 85 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. மேலும், 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி உள்ளது.

    இப்பகுதிகளில் இன்று காலை முதலே பலத்த காற்றுடன் கடல் சீற்றமாக உள்ளது. இந்த வருடம் முழுவதும் பரவாலாக மழை பொழிவதால் மரக்காணம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் கிணற்றுப் பாசனத்தை நம்பியுள்ள மரக்காணம் பகுதி விவசாயிகள் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெல் பயிரிட்டனர். நெற்பயிர்கள் அனைத்தும் கதிர் வந்த நிலையில் மரக்காணம் பகுதியில் இன்று காலை முதல் முதல் 30 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கதிர்வந்த நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் சோகத்தில் முழ்கினர்.

    • எலிகளின் எண்ணிக்கையை குறைக்க அறுவடைக்கு பின் எலிகளின் வளைகளை கண்டறிந்து வெட்டி அழிக்கலாம்.
    • தேங்காய் மட்டை தண்ணீரில் மூழ்கி களிமண் கரைசலில் விழுந்து இறந்துவிடும்.

    நீடாமங்கலம்:

    குடவாசல் பகுதியில் சம்பா, தாளடி நெற்பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து குடவாசல் வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுவாக எங்கெ ல்லாம் ஆட்டுக்கிடை போடுகிறோமோ அந்த வயல்களில் எலி தொல்லைகள் இருக்காது.

    மேலும் நெல் வயல்களில் ஒரு ஏக்கரில் 10 இடங்களில் டி வடிவ குச்சிகளை நட்டால் அதில் இரவு நேரங்களில் ஆந்தைகள் அமர்ந்து வயலில் சேதப்படுத்தும் எலிகளைப் பிடித்து தின்றுவிடும்.

    இதேபோன்று காய்ந்த தென்னை மட்டைகளை வயல்களில் தலைகீழாக சொருகி வைத்தாலும், அதில் ஆந்தைகள் அமர்ந்து பூச்சிகள் மற்றும் எலிகளை பிடிக்கும்.எலிகளின் எண்ணிக்கையை குறைக்க அறுவடைக்குப் பின்பு எலிகளின் வளைகளை கண்டறிந்து வெட்டி அழிக்கலாம்.

    ஒரு பெரிய வட்ட வடிவில் மண் பானையை வயலில் தரை மட்டத்தில் புதைத்து, அதில் களிமண் கரைசலை பாதிஅளவு நிரப்பி, அதன்மேல் தேங்காய் மட்டையில் நெல் பொரிகளை தேங்காய் எண்ணெய் கலந்து வைத்தால் எலிகள் அதனை சாப்பிடும் போது தேங்காய் மட்டை தண்ணீரில் மூழ்கி களிமண் கரைசலில் விழுந்து இறந்துவிடும்.

    அல்லது வேர்கடலை பொடி, வறுத்த எள்ளு பொடி, வெல்லம், நெய் இவற்றுடன் சிமெண்ட் ½ கிலோ கலந்து கொதிக்க வைத்து, பிசுபிசுப்பான தன்மையுடன் இருக்கும் போது உருண்டையாக உருட்டி வரப்புகள் மற்றும் எலி வளைகள் அருகே வைத்தால் வாசனையாக உள்ள உருண்டையை சாப்பிட்டு அதில் உள்ள சிமெண்டு இறுகும் போது எலிகள் தானாக இறந்து விடும்.

    இதேபோன்று கருவாட்டு பொடியுடன் சம அளவு சிமெண்டு கலந்து உருண்டையாக உருட்டி எலி நடமாட்டம் உள்ள இடங்களில் வைத்தாலும் அதனை சாப்பிட்டு எலி இறந்து விடும்.

    மேற்கண்ட வழிமுறைகளை விவசாயிகள் கையாண்டால், நெற் பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை அழித்து அதிக மகசூல் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெற்பயிர்களை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்குகின்றன.
    • குருத்து பூச்சி தாக்குதலால் 60 சதவீதம் வரை மகசூல் இழப்பு.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்துள்ளனர்.

    இந்த நெற்பயிர்கள் வளர்ந்து தூர்கட்டும் பருவத்திலும், சில பகுதிகளில் இளம் பயிராகவும் உள்ளது.

    தற்போது சம்பா,தாளடி நெல் பயிர்களை குருத்துப்பூச்சி, இலை சுருட்டு பூச்சி மற்றும் தோகை பூச்சி அதிக அளவில் தாக்கி வருகிறது.

    மேலும் நெற்பயிர்களை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்குகின்றன. இதனால் மகசூல் பாதிக்கப்படும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

    அவற்றுள் குருத்துப் பூச்சியின் தாக்குதல் மட்டும் 60 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

    எனவே உரிய பாதுகாப்பு முறையினை பின்பற்றி குருத்துப் பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்தவில்லை என்றால் அதிக மகசூல் ஏற்படும் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    எனவே உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.

    • நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா சாகுபடி செய்து உள்ளனர்.
    • வேளாண் இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் திருமருகல், சீயாத்தமங்கை, எரவாஞ்சேரி, கோட்டூர், வடகரை, ஏனங்குடி, நரிமணம், குத்தாலம், அம்பல், போலகம், வாழ்குடி உள்ளிட்ட 39 ஊராட்சிகளிலும்

    கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சியத்த மங்கை கோவில் சியாத மங்கை தென்படாகை வருவாய் கிராமம் பகுதிகளில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா இளம் நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அழுகி துர்நாற்றம் விசுவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை செலவு செய்து சம்பா சாகுபடி செய்துள்ளோம் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசியது.

    எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் உரிய கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு விதை மற்றும் உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.

    • 36 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
    • வயல் வெளிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் மாவட்டத்தில் தாழ்வான இடங்களில் உள்ள நெல் வயல்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தாளடி நெற்பயிர் சாகுபடியும், 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து மாவட்ட வேளாண் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சேர்த்து திருவாரூரில் 25 ஏக்கர், திருத்துறைப்பூண்டியில் 1020 ஏக்கர், முத்துப்பேட்டையில் 712 ஏக்கர், மன்னார்குடியில் 350 ஏக்கர், நன்னிலத்தில் 1085 ஏக்கர், நீடாமங்கலத்தில் 5 ஏக்கர், குடவாசலில் 725 ஏக்கர், வலங்கைமானில் 675 ஏக்கர் என மொத்தம் 4747 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது.

    அதில் 36 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 568 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வயல் வெளிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை வேளாண்மை துறை அதிகாரிகளுடன் சேர்ந்து கலெக்டர் ஆய்வு.
    • தண்ணீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை வேளாண்மை துறை அதிகாரிகளுடன் சேர்ந்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

    அப்போது தண்ணீர் வடிய வைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதி அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தஞ்சையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 177 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    தஞ்சை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. மாவட்டம் முழுவதும் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி உள்ளன.

    தண்ணீர் வடிய வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பருவமழையில் விவசாயிகள் பாதிக்காத வகையில் அனைத்து நடவடிக்கையும் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • குலை நோய், அம்மை எனும் ஊதுபத்தி நோய் அறிகுறி அதிகளவில் காணப்படுகிறது.
    • நடவு செய்யப்பட்ட நெற்பயிரில் தான் ஆணை கொம்பன் புழு தாக்குதல் அதிகம்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளான திட்டச்சேரி, திருமருகல், திருக்கண்ணபுரம், கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் ஏ.டி.டி., கோ - 45, கோ - 51, பி.பி.டி., (ஆந்திரா பொன்னி) நெல் சாகுபடி செய்தனர்.

    அதில் பெரும்பாலான நிலங்களில் நெற்பயிர்களில் ஆணை கொம்பன் நோய், இலை சுருட்டு புழு, குலை நோய், அம்மை எனும் ஊதுபத்தி நோய் அறிகுறி அதிகளவில் காணப்படுகிறது.

    இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது:-

    கடந்த சில ஆண்டுக்கு முன்னர் நெற்பயிர்களில் கதிர் வரும் சமயத்தில் ஆணை கொம்பன் நோய் பரவியது.

    இதனால், பயிர்களில் கதிர் வராமல், நெல் உற்பத்தி குறைந்து விட்டது. நடப்பாண்டு சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களில், இந்நோய் அறிகுறி காணப்படுகிறது.

    அதை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும்.

    நடவு செய்யப்பட்ட நெற்பயிரில் தான் ஆணை கொம்பன் புழு தாக்குதல் அதிகமாக உள்ளதால் இதனால் மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

    • மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கர் நிலப்பரப்புக்கு அதிகமாக குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
    • திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் அடிக்கடி மழை பெய்து வருகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குறுவை நெல் சாகுபடி நிறைவடைந்து அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மாவட்டத்தில் 1லட்சம் ஏக்கர் நிலப்பரப்புக்கு அதிகமாக குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

    இதில் பெரும்பாலான நெல் வயல்களில் அறுவடை நடைபெற்றுள்ளன.

    மீதமுள்ள நெல் வயல்களிலும் அறுவடை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் அடிக்கடி மழை பெய்து வருகிறது.

    இதனால் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன.

    தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்வதால் அறுவடை பணிகளையும் தொடர முடியாத நிலை உள்ளது.

    இதனால் வயலில் சாய்ந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதால் விவசாயிகள் ஆர்வத்துடன் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    உரத்தட்டுப்பாடு, பூச்சி தாக்குதல் உள்ளிட்ட இடர்பாடுகளையும் தாண்டி சாகுபடி பணிகளை முடித்து அறுவடை செய்யும் நிலையில் மழை பாதிப்புக்கு ஆளாகி இருப்பது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

    விரைந்து அறுவடை பணிகளை மேற்கொள்ளும் வகையில் கூடுதல் அறுவடை எந்திரங்களை வரவழைத்து உதவிட வேண்டுமென விவசாயிகள் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ×