search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பன்றிகள்"

    • அதிகளவில் வாழை, தென்னை, கம்பு, சோளம் மற்றும் காய்கறிகள் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
    • சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இறப்பின் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    அன்னூர் அருகே குப்பனூர் ஊராட்சிக்குட்பட்ட ஆத்திக்குட்டை, வாக்கானாகொம்பு, புலியூர், ஒட்டகமண்டலம், ஆலாங்கொட்டை, அழகியபாளையம், சொலவம்பாளையம், அக்கறைசெங்கப்பள்ளி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

    இப்பகுதிகளில் அதிகளவில் வாழை, தென்னை, கம்பு, சோளம் மற்றும் காய்கறிகள் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த பகுதியில் காட்டுப்பன்றிகளின் தொல்லை அதிகளவு உள்ளது. காட்டு பன்றிகள் அவ்வப்போது விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில், வாக்கனாங்கொம்பு கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து என்பவர் தனது தோட்டத்தில் வாழைகளை பயிரிட்டிருந்தார்.

    நேற்று இரவு இந்த தோட்டத்திற்குள் காட்டு பன்றிகள் கூட்டமாக நுழைந்தன. பின்னர் அவை, அங்கிருந்த வாழைகளை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியது.

    இதேபோல், அங்குள்ள துளசிராஜ் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து, அங்கு பயிரிடப்பட்டிருந்த 200 வாழைகள் என மொத்தமாக 1000த்திற்கும் மேற்பட்ட வாழைகளை காட்டு பன்றிகள் சேதப்படுத்திவிட்டு சென்றன.

    இதையடுத்து சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இறப்பின் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • சாலைகளில் குறுக்கே ஓடும் பன்றிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
    • இடையூறாக உள்ள பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.

    சீர்காழி:

    சீர்காழி நகரில் பல்வேறு பகுதிகளில் பன்றிகள் அதிகளவு சுற்றி திரிந்து வந்தது.

    இதனால் பெரும் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டத்தோடு, சாலைகளில் குறுக்கே ஓடும் பன்றிகளால் போக்குவரத்துபாதிப்பு, விபத்தும் ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து இடையூறாக உள்ள பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்திட பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கலெக்டரின் அறிவுறுத்தலின்படி, நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், ஆணையர் ஹேமலதா ஆகியோர் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் டேவிட் பாஸ்கரராஜ் முன்னிலையில் பரப்புரையாளர்கள் அலெக்ஸ்பாண்டியன் உள்ளிட்டோர் நகரில் சுற்றிதிரிந்த 80 பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தினர்.

    • அதிகளவு பன்றிகள் சுற்றிதிரிவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
    • 74 பன்றிகள் பிடிக்கப்பட்டு வாகனத்தில் ஏற்றி சென்று அப்புறப்படுத்தப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24வார்டுகளில் அனேக வார்டுகளில் பன்றிகள் அதிகளவு சுற்றிதிரிவதால் போக்குவரத்து இடையூறும், சுகாதாரசீர்கேடும் ஏற்பட்டது.

    பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்திட மக்கள் விடுத்த கோரிக்கையின்படி மாவட்ட கலெக்டர் மகாபாரதி அறிவுறுத்தலின்படி, நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரிந்த பன்றிகளை பிடிக்க நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், ஆணையர் ஹேமலதா மேற்பார்வையில், மது ரையை சேர்ந்த நிறுவனம் மூலம் 74பன்றிகள் வரை பிடிக்கப்பட்டு வாகன த்தில் ஏற்றி சென்று அப்புறப்ப டுத்தப்பட்டது.

    அப்போது இளநிலை உதவியாளர் பாபு, பரப்புரையாளர்கள் அலெக்ஸ்பாண்டியன், நித்தியானந்தம், தமிழ்மணி உடனிருந்தனர்.

    • சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பன்றிகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றிதிரிந்து வந்தது.
    • பல்வேறு இடங்களில் சுற்றிதிரிந்த சுமார் 65 பன்றிகள் ஒரே நாளில் பிடிக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட தென்பாதி, பழைய பேருந்து நிலையம், ஊழியக்காரன்தோப்பு, ஆர்.வி.எஸ்.நகர்,திருவள்ளுவர்நகர்,திட்டைசாலை, மாரிமுத்துநகர் உள்ளிட்ட பல்வேறு வார்டுகளில் நகர் பகுதிகளில் பன்றிகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றிதிரிந்து வந்தது.

    கூட்டம்,கூட்டமாக சுற்றிவந்ததால் அப்பகுதியில் கொசுதொல்லையும்,சுகாதாரசீர்கேடும் ஏற்பட்டுவந்தது.

    மேலும் விவசாய நிலங்களில் உட்புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

    இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து ஆட்சியர் உத்தரவின்படி நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர்மன்ற தலைவர் துர்காரா ஜசேகரன் அறிவுறுத்த லின்படி, சீர்காழி போலீஸார் பாதுகாப்புடன் நகரில் பல்வேறு இடங்களில் சுற்றிதிரிந்த சுமார் 65 பன்றிகள் திருமங்கலத்தை சேர்ந்த ராமசந்திரன் மற்றும் அவரது ஊழியர்களால் ஒரே நாளில் பிடிக்கப்பட்டது. பிடிக்கப்பட்ட பன்றிகள் வாகனங்களில் வலையுடன் ஏற்றி சென்று அப்புறப்ப டுத்தப்பட்டது.

    அப்போது சுகாதார ஆய்வாளர் டேவிட் பாஸ்கரன், இளநிலை உதவியாளர் பாபு, அலெக்ஸ் ஆகியோர் உடன்இருந்தனர்.

    சீர்காழி நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பன்றிகளை அப்புறப்ப டுத்த உத்தரவிட்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகா பாரதி , சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, இதற்கு ஒத்துழைப்பு நல்கிய சீர்காழி டி.எஸ்.பி. லாமெக் மற்றும் சீர்காழி காவல் ஆய்வாளர், சீர்காழி வட்டாச்சியர், சீர்காழி நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோருக்கு சீர்காழி நகர பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கழுமலையார் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கோவி.நடராஜன் தெரிவித்தார்.

    • 15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவையொட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டது.
    • 100-க்கும் மேற்பட்ட பன்றிகளுக்கு மாலை மரியாதை செய்து மேளதாளங்கள் முழங்க கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்‌.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே கரியாக்கவுண்டனூர் கிராமத்தில் பழமையான அண்ணன்மார் பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்தது.

    இந்தாண்டு இந்த கோவில் திருவிழா கடந்த 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவையொட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டது.

    விழாவின் முக்கிய நிகழ்வான பன்றி குத்துதல் நிகழ்வு நேற்று நடைபெற்றது. கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்ட பன்றிகளுக்கு மாலை மரியாதை செய்து மேளதாளங்கள் முழங்க கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

    பன்றி ஊர்வலத்தை கொம்பன் ஊர்வலம் என அழைக்கும் கிராம மக்கள், இப்பன்றிகளை கோவிலில் பலியிட்டு, கடவுள்களுக்கு படைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக கூறுகின்றனர்.

    மேலும் தங்கள் வேண்டுதல் நிறைவேற ஆடு மற்றும் பன்றிகள் கோவிலுக்கு தானமாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், தொழில் வளம் பெறுக விவசாயம் செழிக்க கிராம மக்கள் ஒற்றுமையுடன் இருக்க இந்த திருவிழா நடத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.

    சாலையில் மாலை மரியாதையுடன் பன்றிகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் வினோத நிகழ்ச்சியை அன்னூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

    • ஓடைப்பகுதியில் பல ஆண்டுகளாக அனுமதியின்றி நூற்றுக்கணக்கான பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
    • அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்களை பன்றிக் கூட்டங்கள் அச்சுறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டத்தில் நகராட்சிக்கு இணையான மக்கள் தொகை கொண்டது ஆலங்குளம். மேற்கு பகுதியில் தாசில்தார் அலுவலகம் தொடங்கி அதனையொட்டி, கிழக்கு வரிசையில் சார்பதிவாளர் அலுவலகம், அஞ்சல் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், டி.எஸ்.பி. அலுவலகம், அனைத்து மகளிர் காவல் நிலையம், அரசு மருத்துவமனை, அரசுக் கருவூலம், பீடித் தொழிலாளர் நல மருத்துவமனை பஸ் நிலையம் என சுமார் 500 மீட்டர் தொலைவுக்குள் 15-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

    இந்த அலுவகங்களை யொட்டியும், அருகிலும் ஓடை செல்கிறது. மழைநீர் ஓடையாக இருந்து இது தற்போது கழிவு நீரோடையாக மாறிவிட்டது.

    இந்நிலையில் இந்த ஓடைப்பகுதியில் பல ஆண்டுகளாக அனுமதியின்றி நூற்றுக்கணக்கான பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இவை பெரும்பாலும் அனைத்து அலுவக வளாகத்திலேயே சுற்றித் திரிகிறது.

    குறிப்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், டி.எஸ்.பி. அலுவலகம் எதிரே பழைய வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடம் மற்றும் கால்நடை மருந்தக வளாகம் ஆகியவற்றில் சுற்றித்திரிவதால் இப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. முக்கிய பணிக்காக அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்களை இப்பன்றிக் கூட்டங்கள் அச்சுறுத்துவதாக புகார் கூறுகின்றன.

    இது தொடர்பாக அப்பகுதியினர் கூறும்போது, பன்றிகளை அப்புறப்படுத்தி அவற்றை வளர்ப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குப் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் பன்றிகள் வளர்ப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதனால் ஆலங்குளத்தின் மேற்குப்பகுதி துர்நாற்றத்து டனேயே காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மாணவ- மாணவிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • வனத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    வடவள்ளி,

    கோவை மருதமலை சாலையில் பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளது. இது மேற்கு மலைத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. இதனால் அங்கு வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுவது வாடிக்கையாகயுள்ளது.

    இந்த நிலையில் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவ மாணவிகள் படித்து கொண்டு இருந்தனர். அப்போது காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்தன. இதனை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து அந்த பகுதியில் வசிப்பவர்கள் கூறுகையில், மருதமலை பகுதியில் காட்டு பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. பகல் நேரங்களில் குட்டிகளுடன் கூட்டமாக சுற்றி திரிகிறது. பல்கலைக்கழக வளாகத்திலும் உலா வருகிறது. இது வாகன ஓட்டிகள், மாணவ மாணவியரிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சாலையில் ெசல்லும் காட்டுப்பன்றிகள் வாகனங்களை முட்டி விபத்து ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே வனத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து மருதமலை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    பல்கலைக்கழக வளாகத்திலும் அடிக்கடி ரோந்து சென்று காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பன்றிகள் தொல்லை பற்றி இ.இ.நகர் பகுதி மக்கள் செங்கல்பட்டு கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.
    • மாநகராட்சி பகுதிக்குட்பட்ட இடங்களில் பன்றிகள் வளர்க்க கூடாது என்று தடை உள்ளது.

    சென்னை பல்லாவரத்தில் இங்கிலீஷ் எலக்ட்ரானிக் நகர் உள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள் அந்த நகரில் உள்ளன.

    இங்கிலீஸ் எலக்ட்ரானிக் கம்பெனி என்ற தொழில் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் மனைகள் வாங்கி அங்கு வீடு கட்டி குடியேறினார்கள். இதனால் அந்த பகுதி இங்கிலீஸ் எலக்ட்ரானிக் நகர் என்று பெயர் பெற்றது.

    அந்த நகரின் ஒரு பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. அங்கு அடர்ந்த புதர்களும் உள்ளன. இதை பயன்படுத்தி அங்கு சிலர் பன்றிகளை வளர்த்து வருகிறார்கள். நூற்றுக்கணக்கான பன்றிகள் அங்கு உள்ளன.

    அந்த பன்றிகளால் கடும் இடையூறு ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் பல மாதங்களாக புகார் சொல்லி வருகிறார்கள். பன்றிகள் தொல்லையால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த பகுதி மக்கள் சொல்கிறார்கள்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு பன்றிகள் தொல்லை பற்றி இ.இ.நகர் பகுதி மக்கள் செங்கல்பட்டு கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பன்றிகள் அங்கு இருந்து அகற்றப்பட்டன.

    ஆனால் கடந்த சில மாதங்களாக மீண்டும் அங்கு பன்றிகள் வந்து விட்டன. கடந்த ஜனவரி மாதம் நிறைய பன்றிகள் உயிரிழந்து துர்நாற்றம் வீசியதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.

    மாநகராட்சி பகுதிக்குட்பட்ட இடங்களில் பன்றிகள் வளர்க்க கூடாது என்று தடை உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பன்றிகளை அகற்ற வேண்டும் என்று இ.இ.நகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விவசாயிகள், தங்களது விளை நிலங்களில் பன்றிகள் அதிக அளவு புகுந்து விளை நிலங்களை பாழ்படுத்தி வருவதால், அவற்றை பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
    • மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த மாதம் வேளாண்குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் பேசிய பல்வேறு  என கூறினர்.அதன்பேரில், காரைக் கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், காரைக் கால் நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க உத்தர விட்டார். அதன் பேரில், காரைக்கால் நகராட்சி சார்பில், பன்றி பிடிப்ப வர்கள் வரவழைக்கப்பட்டு, காரைக்கால் கீழகாசாகுடி, தலத்தெரு, அம்மன் கோ வில்பத்து, கருளாச்சேரி, அக்கரை வட்டம், ஓடுதுறை, நேருநகர், தருமபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கடந்த 2 நாட்களாக 130 பன்றிகள் பிடிகப்பட்டு அப்புறப்ப டுத்தப்பட்டது. இது குறித்து, கலெக்டர் குலோத்துங்கன் கூறுகை யில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடை யூறாக உள்ள பன்றிகள் தற்போது நகராட்சி சார்பில் கபிடிக்கபட்டு வருகிறது. இப்பணி இனி ஒவ்வொரு மாதமும் இருமுறை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

    • பன்றிகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் அளித்தனர்.
    • 20-க்கும் மேற்பட்ட பன்றிகளை பிடித்து லாரியில் ஏற்றினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சிக்கு உட்பட்ட வாழ்மங்கலம் மெயின்ரோடு, மாதாகோவில் தெரு, திரௌபதி அம்மன் கோவில் தெரு, புதுப்பட்டினம், மடத்தெரு, தோப்புத் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையிலும் ஏராளமான பன்றிகள் சுற்றித் திரிந்தன.பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் அளித்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வாழ்மங்கலம் மெயின்ரோடு, மாதாகோவில் தெரு, திரௌபதி அம்மன் கோவில் தெரு, புதுப்பட்டினம், மடத்தெரு, தோப்புத் தெரு உள்ளிட்ட இடங்களில் முதல் கட்டமாக ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி பக்கிரிசாமி தலைமையில் தனியார் பன்றி பிடிப்போர் ஒருங்கிணைந்து அகரக்கொந்தகை ஊராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த 20-க்கும் மேற்பட்ட பன்றிகளை உயிரோடு பிடித்து லாரியில் ஏற்றினர்.

    இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், திட்டச்சேரி சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் டென்னிசன், நற்குணம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயபால் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • சீர்காழி பகுதிகளில் பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இரவு நேரங்களில் பன்றிகள் கூட்டமாக வந்து சம்பா நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில சீர்காழி, தென்பாதி, சட்டநாதபுரம், விளந்திட சமுத்திரம், திட்டை, செம்மங்குடி உள்ளிட்ட பகுதிகளில பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளன.

    இரவு நேரங்களில் பன்றிகள் கூட்டமாக வந்து சம்பா நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கோவி. நடராஜன் கூறுகையில், எனது வயலில் இரவு நேரங்களில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து சேதப்படுத்தி வருகிறது.

    இதனால் இந்த ஆண்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நெற்பயிர்களை தாக்கும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நெல் வயல்களில் பன்றிகள் கூட்டம் புகுந்து நாசம் செய்து விடுகிறது.
    • பெரிய அளவில் மகசூல் இழப்பும் நட்டமும் ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி திருவையாறு சாலையில் மகாராஜபுரம் கிராமம் அமைந்துள்ளது.

    காவிரி - கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த கிராமத்தில் காவிரி ஆற்றுநீரை கொண்டு விவசாயம் நடைபெற்று வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் நல்ல நிலையில் உள்ளதால் ஆழ்துளை கிணறுகள் மூலமும் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

    தற்போது இந்த கிராமத்தில் உள்ள வயல்களில் நெல் பயிர் கதிர் விட்டு நல்ல நிலையில் உள்ளது.

    இந்நிலையில் நெல் வயல்களில் பன்றிகள் கூட்டம் புகுந்து நாசம் செய்து விடுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி கணேசன் கூறுகையில் நான் 12 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் ஆத்தூர் கிச்சடி ,தூயமல்லி, வெள்ளைப் பொன்னி ஆகிய நெல்ரகங்களை விவசாயம் செய்து உள்ளார்.

    தற்போது நெல் பயிர் நல்ல முறையில் வளர்ந்து கதிர் விட்டு இன்னும் 10 அல்லது 12 நாட்களில் அறுவடை செய்யப்படும் நிலையில் இருந்தது.

    இது போன்றசூழ்நிலையில் வயல்களில் இரவு நேரங்களில் திடீரென்று பன்றிகள்கூட்டமாக புகுந்து நாசம் செய்து விடுகிறது. இதனால் பயிர்கள் கடும் சேதம் அடைந்து உள்ளது.

    பன்றிகள் அங்குமிங்கு வயலில் ஓடுவதால் பயிர்கள் சேரோடு சேராக அமிழ்ந்து போய் அறுவடை இயந்திரத்தின் மூலம் அறுவடை செய்ய இயலாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

    இதனால் பெரிய அளவில் மகசூல் இழப்பும் நட்டமும் ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது என்றார்.

    எனவே பாதிக்கப்பட்ட அப்பகுதி வயல்களை விவசாய அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிக்கு உரிய இழப்பீடு தொகை கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும், பன்றிகள் கூட்டம் வயலில் இறங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளுகம், அப்பகுதி சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×