search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரதியார் பல்கலைக்கழகத்தில் காட்டு பன்றிகள் அட்டகாசம்
    X

    பாரதியார் பல்கலைக்கழகத்தில் காட்டு பன்றிகள் அட்டகாசம்

    • மாணவ- மாணவிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • வனத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    வடவள்ளி,

    கோவை மருதமலை சாலையில் பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளது. இது மேற்கு மலைத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. இதனால் அங்கு வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுவது வாடிக்கையாகயுள்ளது.

    இந்த நிலையில் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவ மாணவிகள் படித்து கொண்டு இருந்தனர். அப்போது காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்தன. இதனை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து அந்த பகுதியில் வசிப்பவர்கள் கூறுகையில், மருதமலை பகுதியில் காட்டு பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. பகல் நேரங்களில் குட்டிகளுடன் கூட்டமாக சுற்றி திரிகிறது. பல்கலைக்கழக வளாகத்திலும் உலா வருகிறது. இது வாகன ஓட்டிகள், மாணவ மாணவியரிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சாலையில் ெசல்லும் காட்டுப்பன்றிகள் வாகனங்களை முட்டி விபத்து ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே வனத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து மருதமலை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    பல்கலைக்கழக வளாகத்திலும் அடிக்கடி ரோந்து சென்று காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×