search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reserve Bank"

    சென்னை ரெயில் கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், ஏற்கனவே காஷ்மீரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை தீர்த்துக் கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. #SalemTrainRobbery #TrainRobbery #Demonetisation
    சென்னை:

    சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ஓடும் ரெயிலில் மேற்கூரையில் துளை போட்டு ரூ.5.78 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் துப்பு துலக்கி மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மோஹர் சிங், ருசி பார்தி, மகேஷ் பார்தி, காவியா, பில்டியா ஆகிய 5 கொள்ளையர்களை கைது செய்தனர்.

    இவர்கள் அனைவரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் காவல் முடிந்ததும் அனைவரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    போலீஸ் விசாரணையில் ரெயில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அதிபயங்கரமான கொள்ளையர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கொள்ளை சம்பவங்களில் குடும்பத்தினரோடு ஈடுபடுவதை இக்கும்பல் வழக்கமாக வைத்துள்ளது.

    ரெயில் கொள்ளையில் முக்கிய குற்றவாளியான மோஹர் சிங்கின் குடும்பத்தினர், கடந்த 2006-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொடூரமாக கொலை செய்தவர்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மோஹர் சிங்கின் உறவினரான கிரண் 2012-ம் ஆண்டு போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இன்னொரு உறவினரான சங்காராமுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    ரெயில் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான கும்பல் தலைவன் மோஹர் சிங்கின் தந்தையின் சகோதரருக்கு பிறந்தவன் தான் கிரண். போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு கிரண் இரையான பின்னரே மோஹர் சிங், கொள்ளை கூட்டத்துக்கு தலைவனாகி உள்ளான்.

    தனது குற்றச்செயல்கள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த மோஹர்சிங், கடந்த 2015-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் 2 பேரை சுட்டுக் கொன்றான். இந்த கொலை வழக்கில் மோஹர் சிங்கின் மனைவி பன்வாரா, சகோதரர்கள் மற்றும் சகோதரி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து போலீஸ் பிடி இறுகியதால் மோஹர் சிங்கும் அவனது கூட்டாளிகளும் தென் இந்தியாவுக்கு தப்பி வந்தனர். ஆந்திரா, கர்நாடகாவில் வியாபாரிகள் போல் தங்கி இருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த ஆண்டு மோஹர் சிங் தனது கூட்டாளிகளுடன் தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். விழுப்புரம், திண்டிவனம், விருத்தாசலம், சேலம், அரக்கோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் ரெயில் நிலையங்களை ஒட்டி உள்ள பகுதிகளில் இக்கொள்ளை கும்பல் தங்கியது. அப்போது தான் சேலம் செல்லும் ரெயிலில் பணம் எடுத்து செல்லப்படுவது இவர்களுக்கு தெரிய வந்தது.

    கோப்புப்படம்

    சென்னை ரெயிலில் பணம் எடுத்து செல்லப்படுவதை முன் கூட்டியே தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் அதில் பயணம் செய்து ஒத்திகை பார்த்தனர்.

    கொள்ளை கும்பல் தலைவன் மோஹர் சிங் மற்றும் கூட்டாளிகள் காலியா ருசி, பில்டியா ஆகியோர் அயோத்தியா பட்டினம் மற்றும் விருத்தாசலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயிலில் பயணம் செய்து நோட்டமிட்டனர்.

    சின்ன சேலம்- விருத்தாசலம் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 45 நிமிடங்கள் ரெயில் நிற்காமல் செல்வதை தெரிந்து கொண்டு அந்த நேரத்தில் கொள்ளையடிக்க திட்டம் போட்டனர்.

    இதன்படி சின்ன சேலம் ரெயில் நிலையத்தில் வைத்து 4 பேரும் பணம் இருந்த பெட்டியில் ஏறி கூரையை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் மரப் பெட்டியை உடைத்து 6 லுங்கிகளில் கொள்ளையடித்த பணத்தை மூட்டை கட்டி மேலே ஏறினார்கள்.

    பின்னர் வயலூர் மேம்பாலம் அருகே இந்த மூட்டைகளை வீசினர். அங்கு ஏற்கனவே காத்திருந்த மோஹர் சிங்கியின் கூட்டாளிகள் பணமூட்டைகளை பத்திரமாக எடுத்து கொண்டு தப்பினர். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய கொள்ளையர்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டனர். அனைவரும் சொந்த ஊருக்கு சென்று பணத்தை பங்கு போட்டனர். சினிமாவை மிஞ்சும் வகையில் திட்டம்போட்டு வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். #SalemTrainRobbery #TrainRobbery #Demonetisation
    ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் ரெயிலில் கொள்ளையடித்த ரூ.2 கோடியை எரித்ததாக கைதான கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். #SalemTrainRobbery #TrainRobbery #Demonetisation
    சென்னை:

    சேலத்தில் இருந்து சென்னை வந்த எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி ரூ.5 கோடியே 78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

    இவை அனைத்தும் பழைய மற்றும் கிழிந்த நோட்டுகள். சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் இருந்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ரெயில் வரும் வழியில் மேற்கூரையில் துளையிட்டு அந்தப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்குப்பின் துப்பு துலங்கிய இந்த கொள்ளை தொடர்பாக மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த மோகர்சிங், கிருஷ்ணா, மகேஷ்பாரதி மோகன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

    இவர்களில் 5 பேரை போலீசார் நேற்று விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூர், அயோத்தியாபட்டிணம், வாழப்பாடி, சேலம் ஜங்‌ஷன், செவ்வாய்ப்பேட்டை ரெயில்வே குட்ஷெட் ஆகிய இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது கொள்ளையர்கள் எப்படி கொள்ளையடித்தோம் என்பதை நடித்து காட்டினார்கள். அவற்றை போலீசார் வீடியோ எடுத்தனர்.

    இந்த கொள்ளையில் மொத்தம் 16 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். தற்போது 7 பேர் பிடிபட்டுள்ளனர். மேலும் 9 பேரை தேடிவருகிறார்கள். 16 பேரும் பல்வேறு குழுக்களாக தமிழகம் வந்து 4 மாதம் தங்கி திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    சின்ன சேலத்தில் இருந்து விருத்தாசலம் வரை ரெயில் தண்டவாளத்தில் பாலம் அமைக்கும் பணி நடப்பதால் அந்த இடத்தில் ரெயில் மெதுவாக செல்லும் இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அந்த இடத்தில் ரெயில் சென்றபோது கட்டர் மூலம் துளையிட்டு பணத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளது தெரிய வந்தது. 4 பேர் மட்டும் ரெயிலின் மேல் கூரையில் ஏறி துவாரம் போட்டுள்ளனர்.


    கொள்ளையடிக்கப்பட்ட 5.78 கோடியை கொள்ளையர்கள் அனைவரும் சரிசமமாக பங்குபோட்டு உல்லாசமாக செலவு செய்தனர். சொந்த ஊரில் நிலம் மற்றும் சொத்துக்களையும் வாங்கியுள்ளனர். மீதம் உள்ள ரூ.2 கோடியை வங்கியில் டெபாசிட் செய்ய முடியாததாலும் செலவழிக்க முடியாமலும் பதுக்கி வைத்து இருந்தனர்.

    இந்தநிலையில் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததால் கொள்ளையர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவற்றை கிழித்து போட்டு யாருக்கும் தெரியாமல் தீவைத்து எரித்து விட்டதாக போலீசில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

    7 கொள்ளையர்களின் 13 நாள் போலீஸ் காவல் நாளையுடன் முடிவடைவதால் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். #SalemTrainRobbery #TrainRobbery
    இந்தியா முழுக்க மோடிக்கு எதிராக அலைகள் வீசி வருகிறது என்பதுதான் உண்மை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko #Modi
    கம்பைநல்லூர்:

    தருமபுரி மாவட்டம் அரூரில் திருமண விழாவிற்கு வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிரூபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய அரசியலில் ஒரு மிக முக்கியமான கால கட்டத்தை சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். பல்வேறு மொழிகள், தேசிய இனங்கள், கலாச்சாரங்கள் கொண்டிருக்கக்கூடிய இந்திய நாட்டில் ஒரே கட்சியின் ஆட்சி ஒரே மொழி, ஒரே மதம் என்கிற ஜனநாயகத்தை அழிக்கின்ற முயற்சியில் நரேந்திர மோடி அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்துத்துவா சக்திகள் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இயங்கி கொண்டிருக்கிறது.

    சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை உருவாகியிருக்கிறது. மீண்டும் ராமர் கோவில் பிரச்சனையை ஏற்படுத்தி பெரும் மோதலை உருவாக்கி, உத்தரபிரதேச தேர்தலில் தோல்வியை இடைப்பட்ட காலத்திலே சந்தித்தது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொகுதியிலேயே தோல்வி, துணை முதலமைச்சர் தொகுதியில் தோல்வி என்று அந்த கட்சி தோல்வியை சந்தித்தது. நபர் ஒருவருக்கு 15 லட்ச ரூபாய் கொடுப்பதாக பொய்யான தேர்தல் வாக்குறுதியை கூறி அன்றைக்கு தேர்தல் நேரத்தில் வாக்குறுதி தந்தாரோ அதே போல இப்போதும் இந்தத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கூறி வெற்றி பெற மோடி நினைக்கிறார் அது நடக்காது.

    கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும், 2 பாராளுமன்ற தொகுதியிலும் பாரதிய ஜனதா தோற்றது. எடியூரப்பா கடந்த தேர்தலில் மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இப்போது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரது மகன் வெற்றி பெற்றுள்ளார்.


    எனவே இந்தியா முழுக்க மோடிக்கு எதிராக அலைகள் வீசி வருகிறது என்பதுதான் உண்மை. நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மட்டுமல்ல பாரதிய ஜனதா கட்சி ஆட்சி மீண்டும் வரக்கூடாது என சந்திரபாபு நாயுடு, சரத்பவார் ஆகியோர் முயற்சி எடுத்து வருகிறார்கள். இந்த முயற்சி வெற்றி பெற வேண்டுமென்று நாங்கள் விரும்புகின்றோம்.

    தமிழகத்தில் கட்டுக்கடங்காத ஊழல் மிகப்பெரிய அளவில் இருக்கிறது, அனைத்து துறைகளிலும் ஊழல், அமைச்சர் மீது குற்றச்சாட்டு, சிபிஐ விசாரணை, முதலமைச்சரே குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார் என்பது தமிழ்நாட்டில் நிர்வாகம் சீர்குலைந்து இருக்கிறது என்பதற்கு உதாரணமாகும்.

    மைத்திரிபால சிறிசேனா, ரணில் விக்ரமசிங், மகேந்திர ராஜபக்சே ஆகியோர் படுகொலைகாரர்கள். சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள். மகேந்திர ராஜபக்சே மீண்டும் அதிகாரத்துக்கு வரக்கூடிய சூழல் என்பது கவலை அளித்துள்ளது.

    தமிழகத்தின் உரிமைகளை அளிக்கக்கூடிய இந்த நேரத்தில் வரக்கூடிய பாராளுமன்றத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

    தமிழகத்தில் அ.தி.மு.க. அரசுக்கு எதிரான வெறுப்புணர்வு, மத்திய அரசுக்கு எதிரான கோப உணர்ச்சி வேகமாக ஏற்பட்டு வருகிறது.

    டீசல் விலையில் அஞ்சு பைசா, பத்து பைசா என குறைத்து மக்களை ஏமாற்ற முடியாது. இது ஒட்டகத்தின் மேலே உள்ள பாரத்தை நீக்குவது போல ஆகும். ஒரு துரும்பை தூக்கி கண்ணுக்கு முன் காட்டி கீழே போடுவது போல நரேந்திர மோடி ஈடுபட்டு வருகிறார். ரிசர்வ் வங்கி ஆளுநர் வரும் 10-ந் தேதி ராஜினாமா செய்யப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது அனைத்து துறைகளிலும் ஆக்டோபஸ் கரங்களை போல வளைத்து தன் கைகளில் வைத்து ஆட்டி படைக்க நினைக்கும் நரேந்திர மோடி அரசு முயற்சிக்கிறது என்பதற்கு சரியான உதாரணம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MDMK #Vaiko #Modi
    ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுக்க 8 டன் தங்கத்தை விலைக்கு வாங்கி இருப்பு வைத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. #RBI #RupeeAllTimeLow

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71 ஆக உள்ளது.

    இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு ‘கிடு கிடு’ வென உயர்ந்து வருகிறது. தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. அதைதொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது.

    எனவே பணமதிப்பு வீழ்ச்சியை தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி 2017-2018 நடப்பு ஆண்டில் 8.46 டன் தங்கத்தை விலைக்கு வாங்கி இருப்பு வைத்துள்ளது.

     


    ரிசர்வ் வங்கி இது குறித்து சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், ஜூன் 30-ந் தேதி நிலவரப்படி 566.23 டன் தங்கம் இருப்பு உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இதே கால கட்டத்தில் 557.77 டன் தங்கம் மட்டுமே இருப்பில் இருந்தது.

    9 ஆண்டுகளுக்கு பிறகு ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் போது சர்வதேச நிதி ஆணையத்திடம் இருந்து 200 டன் தங்கத்தை விலைக்கு வாங்கியது. #RBI #Gold

    பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகும் ரூ.500, ரூ.2,000 கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து இருப்பதை ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தி உள்ளது. #Demonitisation #RBI
    புதுடெல்லி:

    கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. பின்னர் அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த 2,000, 500, 200, 50, 10 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.

    ஆனால் இந்த புதிய ரூபாய் நோட்டுகளும் கள்ளத்தனமாக தயாரித்து புழக்கத்தில் விடுவது தெரியவந்தது. இத்தகைய கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து இருப்பதை ரிசர்வ் வங்கியும் உறுதி செய்துள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 3 ஆண்டுகளில் அதிகாரிகளிடம் சிக்கிய கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை பற்றியும் கூறப்பட்டு உள்ளது.

    இதில் கடந்த 2016-17-ம் ஆண்டில் வெறும் 199 புதிய 500 ரூபாய் கள்ளநோட்டுகள் சிக்கிய நிலையில், 2017-18-ம் ஆண்டில் 9,892 நோட்டுகள் சிக்கி இருக்கின்றன. 2,000 ரூபாய் நோட்டுகளை பெறுத்தவரை 2016-17-ல் சிக்கிய கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 638 ஆக இருந்த நிலையில், கடந்த 2017-18-ல் 17,929 நோட்டுகள் பிடிபட்டுள்ளன.

    இதைப்போல 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 35 சதவீதமும், 50 ரூபாய் கள்ள நோட்டுகள் 154 சதவீதமும் அதிகரித்து இருப்பதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. #Demonitisation #RBI #ReserveBank
    புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சிடும் பணி 2016-ம் ஆண்டு இறுதியில் தொடங்கி கடந்த ஜூன் மாதம் வரை நடைபெற்றது. இதற்கு மத்திய அரசு ரூ.12,877 கோடி செலவு செய்துள்ளது. #CentralGovt #Demonetisation
    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டபோது 15.41 லட்சம் கோடி ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன.

    அந்த ரூபாய் நோட்டுக்களில் கணிசமான அளவுக்கு அதாவது சுமார் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு கருப்புப் பணமாக இருக்கும் என்று மத்திய அரசு நினைத்தது.

    ஆனால் செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களில் ரூ.15.31 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுக்கள் வங்கிகளுக்கு திரும்பி வந்து விட்டன. அந்த வகையில் ரூ.10,720 கோடிதான் வராத பணம் என்று தெரிய வந்தது.

    இதற்கிடையே பழை ரூபாய் நோட்டுக்களுக்கு பதில் மத்திய அரசு புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை அறிமுகம் செய்தது. அந்த ரூபாய் நோட்டுக்கள் நவீன பாதுகாப்பு வசதியுடன் பல்வேறு வண்ணங்களில் அச்சிட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.

    புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் இரவு பகலாக அச்சடித்து வெளியிடப்பட்டன. சில மாதங்கள் கழித்து புதிய 50, 10 ரூபாய் நோட்டுக்களும் அறிமுகம் செய்யப்பட்டு, அச்சடித்து வெளியிடப்பட்டன.


    புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சிடும் பணி 2016-ம் ஆண்டு இறுதியில் தொடங்கி கடந்த ஜூன் மாதம் வரை நடைபெற்றது. புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க மத்திய அரசு ரூ.12,877 கோடி செலவு செய்துள்ளது.

    இதையடுத்து பணம் மதிப்பு இழப்பு நடவடிக்கையால் மத்திய அரசுக்கு மிகக் கடுமையான இழப்பு ஏற்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. வங்கிக்கு வராத பணத்தை விட புதிய நோட்டுக்கள் அச்சடிக்க கூடுதலாக சுமார் ரூ.2 ஆயிரம் கோடி செலவாகியுள்ளது.

    இந்த 2 ஆயிரம் கோடி ரூபாய் தேவை இல்லாத இழப்பாக கருதப்படுகிறது. பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் புதிய நோட்டு அச்சடித்த செலவு கூட தேறவில்லை என்று நிபுணர்கள் குறை கூறியுள்ளனர். #CentralGovt #Demonetisation
    வெறும் 13 ஆயிரம் கோடியை ஒழிப்பதற்காகவா இந்த பணமதிப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். #PChidamabaram #Demonetisation
    புதுடெல்லி:

    இந்திய ரிசர்வ் வங்கி பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி முடிந்துள்ளதாக அறிவித்துள்ளது. விநியோகிக்கப்பட்ட ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளில் ரூ.15 லட்சத்து 41 கோடி ரூபாயில், ரூ.15, 310,73  கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் ரூ.10,720 கோடி பணம் வரவில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  ‘வெறும் 13 ஆயிரம் கோடியை ஒழிக்கவா நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரையும் இழந்து, பல நிறுவனங்களையும் மூட மத்திய அரசு பண மதிப்பிழப்பை அறிவித்தது? இந்த 13 ஆயிரம் கோடி பணமும் கூட நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளில் இருக்கலாம். சிறிது பணம் தொலைந்தோ, அழிக்கப்பட்டோ இருக்கலாம்.


    பணமதிப்பு நீக்கத்தினால் இந்திய பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீதத்தை இழந்துள்ளது. இதனால் மட்டும் ரூ.2.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார். #PChidamabaram #Demonetisation
    ரிசர்வ் வங்கி விரைவில் லாவண்டர் வண்ணத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. #RBI #NewCurrency
    புதுடெல்லி:

    மத்திய அரசு கடந்த 2016-ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியது. இதையடுத்து, பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அவற்றை மக்களிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெற்றுக் கொண்டது.

    இதைத்தொடர்ந்து, புதிய 2000, 500 ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், 200, 50 மற்றும் 10 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வெளியானது.

    இந்நிலையில், ரிசர்வ் வங்கி விரைவில் லாவண்டர் வண்ணத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இதற்கான மாதிரியை இன்று வெளியிட்டுள்ளது.

    இந்த 100 ரூபாய் நோட்டுகள் லாவண்டர் வண்ணத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இதன் ஒருபுறம், பாரம்பரியம் மிக்க குஜராத் மாநிலத்தின் பதான் நகரில் உள்ள மகாராணியின் படிக்கிணறு அச்சிடப்பட்டு உள்ளது. இந்த கிணறு யுனெஸ்கோ பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படும். தற்போதுள்ள 100 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. #RBI #NewCurrency
    ஜன்தன் உள்ளிட்ட அடிப்படை வங்கி கணக்குகளில் இருந்து 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் அந்த வங்கி கணக்கு முடக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. #RBI #JanDhanaccounts

    புதுடெல்லி:
     
    எஸ்.பி.ஐ. வங்கி கணக்கின் குறைந்தபட்ச இருப்பு தொகை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதனால் பலரும் சிரமத்துக்கு ஆளாகினர். இதைத்தொடர்ந்து அடிப்படை கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வங்கி கணக்குகளுக்கு குறைந்தபட்ச தொகை தேவையில்லை என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. 

    இந்நிலையில் தற்போது இந்த அடிப்படை வங்கி கணக்குகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
     
    ஜன்தன் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வங்கி கணக்குகளில் இருந்து 4 முறைக்கு மேல் எந்த வடிவில் பணம் எடுத்தாலும் அந்த கணக்கு அம்மாதம் முடியும் வரை முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சில வங்கிகள், அந்த கணக்குகளை சாதாரண வங்கி கணக்காக மாற்றி, அதற்கான அபராத தொகையையும் வசூலிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #RBI #JanDhanaccounts
    கடந்த நிதியாண்டில் மட்டும் 21 அரசு வங்கிகளில் வங்கி மோசடி மூலம் ரூ.25 ஆயிரத்து 775 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதை ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. #RBI #ReserveBank #BankFraud
    போபால்:

    மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த சந்திரசேகர் கவுட் என்பவர் கடந்த 2017-18-ம் ஆண்டில் அரசு வங்கிகளுக்கு வங்கி மோசடி மூலம் ஏற்பட்ட இழப்பு குறித்து தெரிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    அவரின் மனுவுக்குப் பதில் அளித்த ரிசர்வ் வங்கி, எந்தெந்த வங்கியில் என்னவிதமான மோசடிகள் நடந்துள்ளன என்பது குறித்து தெரிவிக்காமல், ஒவ்வொரு வங்கிக்கும் ஏற்பட்ட இழப்பு குறித்த விவரத்தை மட்டும் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை ரிசர்வ் வங்கி கடந்த 15-ம் தேதி சந்திரசேகர் கவுட்டுக்கு அளித்துள்ளது.

    அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    ''கடந்த 2017-18ம் நிதியாண்டில், அதாவது கடந்த மார்ச் 31-ம் தேதிவரையில், 21 அரசு வங்கிகளுக்கு மோசடி மூலம் ஒரு ஆண்டில் ரூ.25 ஆயிரத்து 775 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.6 ஆயிரத்து 461.13 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி ஆகியோரின் மோசடி குறித்து இதில் குறிப்பிடவில்லை.


    ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு ரூ.2 ஆயிரத்து 390.75கோடியும், பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.2 ஆயிரத்து 224.86 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு ரூ.ஆயிரத்து 928.25 கோடியும், அலகாபாத் வங்கிக்கு ரூ.ஆயிரத்து 520.37 கோடியும், ஆந்திரா வங்கிக்கு ரூ. ஆயிரத்து 303.30 கோடியும், யூசிஓ வங்கிக்கு ரூ.ஆயிரத்து 224.64 கோடியும் மோசடியால் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ஐடிபிஐ வங்கிக்கு மோசடி மூலம் ரூ.ஆயிரத்து 116.53 கோடியும், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ. ஆயிரத்து 95.84 கோடியும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ. ஆயிரத்து 84.50 கோடியும், பேங்க் ஆப் மகாராஷ்டிராவுக்கு ரூ.ஆயிரத்து 29.23 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.ஆயிரத்து 15. 79 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இது தவிர கார்பரேஷன் வங்கிக்கு ரூ.970.89 கோடியும், யூனைடெட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.880.53 கோடியும், ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கிக்கு ரூ.650.28 கோடியும், சின்டிகேட் வங்கிக்கு ரூ.455.05 கோடியும் மோசடியால் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    மோசடி காரணமாக கனரா வங்கிக்கு ரூ.190.77 கோடியும், சிந்த் வங்கிக்கு ரூ.90.01 கோடியும், தீனா வங்கிக்கு ரூ.89.25 கோடியும், விஜயா வங்கிக்கு ரூ.28.58 கோடியும், இந்தியன் வங்கிக்கு ரூ.24.23 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஒருவர் ஒரு லட்சம் கடன் வாங்கித் திருப்பிக் கட்டாமல் சென்றால் கூட அதைக்கூட மோசடி கணக்கில் எடுத்துக்கொண்டு ரிசர்வ் வங்கி பட்டியலிட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு வங்கியிலும் எத்தனை மோசடிகள் நடந்துள்ளன, எந்த வங்கியில் அதிகபட்சமாக மோசடிகள் நடந்துள்ளன என்பது குறித்து ரிசர்வ் வங்கி குறிப்பிடவில்லை.''

    இவ்வாறு சந்திரசேகர் தெரிவித்தார். #RBI #ReserveBank #BankFraud
    திருவாரூர் வங்கியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு 500 ரூபாய் கள்ள நோட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவாரூர்:

    சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் செல்வராஜ், திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    திருவாரூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி கிளையில் இருந்து கடந்த 15-ந் தேதிக்கு முன்பாக சென்னை இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பணத்தில், 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 10 எண்ணிக்கையில் இருந்தது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கள்ள நோட்டுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் பேரில் திருவாரூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், திருவாரூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி கிளையில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட பணத்தில், கள்ள நோட்டுகள் சென்று இருப்பது உண்மை என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து நாகப்பட்டினம் குற்ற வழக்கு தொடர்புதுறை உதவி இயக்குனரிடம் இருந்து கள்ள நோட்டு சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யலாம் என கருத்துரு பெறப்பட்டது. இதனை தொடர்ந்து திருவாரூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராசு, கள்ள நோட்டு சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்தார். கள்ள நோட்டுகள் அந்த வங்கிக்கு எவ்வாறு வந்தது? யாருடைய கணக்கில் இருந்து செலுத்தப்பட்டது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
    2017-18ம் நிதியாண்டில் அதிக அளவில் தனிநபர் கடன்கள் வாங்கியதில் தென் மாநிலங்கள் முன்னணியில் இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RBI
    மும்பை:

    2017-18ம் நிதியாண்டில் அதிக அளவில் தனிநபர் கடன்கள் வாங்கியதில் தென் மாநிலங்கள் முன்னணியில் இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தென் இந்தியாவை பொறுத்த வரையில் அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக கர்நாடகா உள்ளது. இந்த மாநிலத்தில் ரூ.1.6 லட்சம் கோடிக்கு தனிநபர் கடன் வாங்கப்பட்டுள்ளது.

    ரூ.1.5 லட்சம் கோடி கடன் வாங்கி தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. கேரளா ரூ.91,000 கோடியும், தெலுங்கானா ரூ.90,200 கோடியும், ஆந்திரா ரூ.72,100 கோடியும் கடன் வாங்கியுள்ளன.

    தென் மாநிலங்கள் வாங்கிய மொத்த கடன் ரூ.5.7 லட்சம் கோடியாகும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017-18 நிதியாண்டில் தென்னிந்தியாவின் தனிப்பட்ட கடன் மதிப்பு 37 சதவீத உயர்வைக் கண்டுள்ளது. வட மாநிலங்களின் தனிப்பட்ட கடன் மதிப்பு 21 சதவீதம் ஆகும். மேற்கு மாநிலங்களின் கடன் மதிப்பு 14 சதவீதமாக உயர்வைக் கண்டுள்ளது.

    தனியார் கடன் நிறுவனங்களில் குறிப்பாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் ஊடுருவல் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் வேகமாக அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. #RBI #ReserveBank
    ×