search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "counterfeit notes"

    • நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கள்ள நோட்டு மாற்றுபவர்களின் நடமாட்டத்தை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
    • அதில், கட்டுகட்டாக ரூ.7 லட்சம் ரொக்கம் இருந்தது. அந்த ரூபாய் நோட்டுகள் உள்பக்கமாக கருப்பு கலர் பேப்பர் வைத்து ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டத்தில் சிலர் கள்ள நோட்டினை புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக கள்ள நோட்டு மாற்றுபவர்களின் நடமாட்டத்தை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

    செல்போனில் பேச்சு

    இந்நிலையில் கொல்லிமலை சோளக்காட்டை சேர்ந்தவர் செல்லத்துரை ( வயது 45). இவரும் கொல்லிமலை எல்லக்கிராய்பட்டியைச் சேர்ந்த சதாசிவம் (42), புத்தூர்பட்டியைச் சேர்ந்த சிலம்பரசன் (36) ஆகிய 3 பேரும், சேந்தமங்கலம் பயணியர் மாளிகை அருகே காரில் வந்துள்ளனர். வெகுநேரமாக அங்கு நின்றபடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தனர்.

    கட்டு கட்டாக..

    இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியில் இருந்தவர்கள் சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்கள் வந்த காரை சோதனை செய்தனர். அதில், கட்டுகட்டாக ரூ.7 லட்சம் ரொக்கம் இருந்தது. அந்த ரூபாய் நோட்டுகள் உள்பக்கமாக கருப்பு கலர் பேப்பர் வைத்து ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இரட்டிப்பு பணம் மோசடி

    அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ரூ.7 லட்சம் மதிப்பிலான இந்த கள்ள நோட்டுகளை, இரட்டிப்பு பணம் தருவதாக சொல்லி மோசடி செய்து, மாற்றுவதற்காக காத்திருந்ததாக தெரிவித்தனர். ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம் தருவதாக பல இடங்களில் இதுபோன்ற மோசடியில் இவர்கள் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

    பறிமுதல்

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், ரூ.7 லட்சம் கள்ள நோட்டுகள் மற்றும் அவர்கள் வந்த கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இவர்கள் யாருக்காக இந்த பணத்தை கொண்டு வந்தார்கள்? இதற்கு முன் இவர்கள் மீது கள்ள நோட்டு மாற்றியது தொடர்பாக ஏதேனும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இரண்டு 100 ரூபாய், ஒரு 200 ரூபாய் என 400 ரூபாய்க்கு கள்ள நோட்டு இருப்பது தெரியவர அதிர்ச்சியடைந்தார்.
    • சந்தையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பல் ஊடுருவி உள்ளனரா? என்ற சந்தேகம் வியாபாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    அவிநாசி : 

    அவிநாசி கைக்காட்டிபுதூர் ராஜன்நகரில் உள்ள வாரச் சந்தை புதன்கிழமை தோறும் கூடுகிறது. 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சந்தையில் கூடி காய்கறி, மளிகைப் பொருட்கள், பழங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களை விற்கின்றனர்.

    அவ்வகையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில், அவிநாசி காந்திபுரம் பகுதியை சேர்ந்த ஒரு பெண் காய்கறி வியாபாரம் செய்தார். இரவில் தான் வியாபாரம் களைகட்டும் என்ற நிலையில் வியாபாரம் முடித்து இரவு 11 மணிக்கு வீடு திரும்பியுள்ளார்.

    அங்கு வியாபாரம் மூலம் கிடைத்த பணத்தை கணக்கிடும் போது அதில் இரண்டு 100 ரூபாய், ஒரு 200 ரூபாய் என 400 ரூபாய்க்கு கள்ள நோட்டு இருப்பது தெரியவர அதிர்ச்சியடைந்தார்.

    இத்தகவல் வியாபாரிகள் மத்தியில் பரவவே இதுபோன்று பல்வேறு இடங்களில் உள்ள சந்தையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பல் ஊடுருவி உள்ளனரா? என்ற சந்தேகம் வியாபாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    எனவே இதுபோன்ற செயலில் ஈடுபடும் கும்பல் யாரென்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகும் ரூ.500, ரூ.2,000 கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து இருப்பதை ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தி உள்ளது. #Demonitisation #RBI
    புதுடெல்லி:

    கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. பின்னர் அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த 2,000, 500, 200, 50, 10 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.

    ஆனால் இந்த புதிய ரூபாய் நோட்டுகளும் கள்ளத்தனமாக தயாரித்து புழக்கத்தில் விடுவது தெரியவந்தது. இத்தகைய கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து இருப்பதை ரிசர்வ் வங்கியும் உறுதி செய்துள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 3 ஆண்டுகளில் அதிகாரிகளிடம் சிக்கிய கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை பற்றியும் கூறப்பட்டு உள்ளது.

    இதில் கடந்த 2016-17-ம் ஆண்டில் வெறும் 199 புதிய 500 ரூபாய் கள்ளநோட்டுகள் சிக்கிய நிலையில், 2017-18-ம் ஆண்டில் 9,892 நோட்டுகள் சிக்கி இருக்கின்றன. 2,000 ரூபாய் நோட்டுகளை பெறுத்தவரை 2016-17-ல் சிக்கிய கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 638 ஆக இருந்த நிலையில், கடந்த 2017-18-ல் 17,929 நோட்டுகள் பிடிபட்டுள்ளன.

    இதைப்போல 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 35 சதவீதமும், 50 ரூபாய் கள்ள நோட்டுகள் 154 சதவீதமும் அதிகரித்து இருப்பதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. #Demonitisation #RBI #ReserveBank
    ×