search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "renovation"

    • சேத்தியாத்தோப்பு அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் சாலை சீர் செய்யப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் கூளாப் பாடி ஊராட்சி தென்பாதி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பள்ளிக்கூட சாலை குண்டும் குழியுமாக, மழைக்காலங்களில் சேரும் சகயுதிகமாக உள்ளது. இந்த வழியாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இந்த சாலை கடந்த 2009 ஆண்டுகளில் போடப்பட்டது. இது குறித்து கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் சாலை சீர் செய்யப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். இது குறித்து கிராம மக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • திருப்பூரின் மிக முக்கிய ஜூவல்லரிகளின் தேர்வுகளில் முதலாவதாக தங்கமயில் ஜூவல்லரி மாறி இருக்கிறது.
    • தங்க மாங்கல்யம் எனும் தனித்துவமான திருமண நகை கலெக்ஷன்களையும் அறிமுகப்படுத்தியது.

    திருப்பூர் :

    தங்கமயில் ஜூவல்லரி கடந்த 30 ஆண்டுகளாக தங்க நகை விற்பனையில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை பதித்துள்ளது. ஆடை உலகம் திருப்பூர் விரும்பும் ஆபரண உலகமாக திகழும் தங்கமயில் ஜூவல்லரி மிகச்சிறந்த நகைகளை மிகக்குறைந்த சேதாரத்தில் வழங்கி வருகிறது.

    ஆகையால் திருப்பூரின் மிக முக்கிய ஜூவல்லரிகளின் தேர்வுகளில் முதலாவதாக தங்கமயில் ஜூவல்லரி மாறி இருக்கிறது. தற்போது திருப்பூர் தங்கமயில் ஜூவல்லரி முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட தங்கமயில் ஜுவல்லரி திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    விழாவிற்கு தங்கமயில் ஜுவல்லரி நிர்வாக இயக்குனர் பலராம கோவிந்த தாஸ், இணை நிர்வாக இயக்குனர்கள் பா.ரமேஷ், என்.பி.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை தொழில் அதிபர் பாண்டீஸ்வரன் ரத்தினம்மாள் திறந்து வைத்தார். தொழிலதிபர்கள் ரமணி ரமேஷ், சோபியா பரமேஸ்வரன், திவ்யா ரமேஷ், ரஜினிகாந்த், கிராம நிர்வாக அதிகாரி சித்ரா விஜயராஜ் ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்தனர்.

    திறப்பு விழாவின் மிக முக்கிய அம்சமாக தங்கமயில் ஜூவல்லரி ஷோரூம் தனது பிரத்தியேக பிரைடல் ஸ்டோரை அறிமுகப்படுத்தி அதில் தங்க மாங்கல்யம் எனும் தனித்துவமான திருமண நகை கலெக்ஷன்களையும் அறிமுகப்படுத்தியது.

    • ஜூலை 17ஆம் தேதி அன்று மிகப்பெரிய ஒரு வன்முறையாக மாறியது.
    • பள்ளியில் பயின்ற 2000 -க்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13-ந் தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவி ஜூலை 17ஆம் தேதி அன்று மிகப்பெரிய ஒரு வன்முறையாக மாறியது. இதில் பள்ளி வளாகங்கள் முழுவதும் சேதமடைந்தது 50க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களும், காவல்துறை வாகனங்களும், தீயில் கருகி சாம்பலாகி போனது. பள்ளியில் உள்ள அலுவலகம் வகுப்பறைகள் அனைத்தும் சூறையாடப்பட்டு சேதம் அடைந்தது. பிறகு போராட்டக்காரர்களை விரட்டி அடித்து பள்ளி வளாகம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது. பின்னர் இந்த வழக்கு சி பி சி ஐ டி மாற்றப்பட்டது.

    பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியவர்களை தனிப்படை அமைத்து 350 -க்கும் மேற்பட்டவர்களை இதுவரை கைது செய்துள்ளனர். இந்த கலவரத்தால் பள்ளியில் பயின்ற 2000 -க்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது மாணவர்களின் பெற்றோர் தரப்பில் பள்ளியை சீரமைத்து மீண்டும் திறக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. பின்னர் பத்து நாட்களுக்குள் சக்தி மெட்ரிக் பள்ளியை சீரமைத்து திறப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன் பிறகு மாவட்ட நிர்வாகம் சார்பில் தனிப்பிரிவு அதிகாரியை நியமனம் செய்து அவர் தலைமையில் பள்ளியை 45 நாட்களுக்குள் சீர் அமைக்க உத்தரவிட்டது. இந்நிலையில் 68 நாட்களுக்குப் பிறகு பள்ளி சீரமைக்கப்படும் பணி தொடங்கப்பட்டது. இன்று காலை 6 மணி முதலே சீரமைக்கும் பணி தொடங்கியது பள்ளி கட்டிடங்கள், சேதம் அடைந்த பேருந்துகள், சேதமடைந்த மரங்கள், பள்ளியில் உள்ள சேதமடைந்த பொருள்கள், என அனைத்தையும் அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இதில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • தேவதானம் கோவில் குளத்தை சீரமைக்கும் பணியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • தெப்பத்தை சீரமைத்து தெப்பத் திருவிழா நடத்த வேண்டும் என்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. 4 வருடங்களாக தொடர்முயற்சி மேற்கொண்டார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதியில் உள்ள தேவதானம் சொக்கநாதன்புத்தூர் முகவூர் போன்ற பல்வேறு கிராமமக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்த பெரியகோவில் தெப்பத்தை சீரமைத்து தெப்பத் திருவிழா நடத்த வேண்டும் என்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. 4 வருடங்களாக தொடர்முயற்சி மேற்கொண்டார்.

    இதையடுத்து தெப்பத்தை சீரமைக்க ரூ. 3.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.கோவில் குளத்தை சீரமைக்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதில் தனுஷ் குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. தனுஷ்கோடி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, கவுன்சிலர் ஏசம்மாள் அரிராம்சேட் மற்றும் மிசா நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அந்த குடும்பத்தில் உள்ள சிறுவன் ஒருவன் பூங்கா கழிவறை வெளியே சிறுநீர் கழித்து விட்டான்.
    • இதனை தட்டி கேட்ட அவரது பெற்றோரையும் திட்டியதால் பூங்காவில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே ராஜப்பா பூங்கா அமைந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்கா சீரமைக்கப்பட்டது. இந்த பூங்காவுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வர்.

    இந்த பூங்காவில் ஒப்பந்த ஊழியராக தஞ்சை சிவாஜி நகரை சேர்ந்த கந்தசாமி (வயது 40) என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் தஞ்சை மாவட்ட ஊர்க் காவல்படையிலும் பணிபுரிகிறார். இந்த நிலையில் நாஞ்சிக்கோட்டை ரோடு மின்வாரிய காலனியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பூங்காவுக்கு வந்திருந்தனர்.

    அப்போது அந்த குடும்பத்தில் உள்ள 10 வயது சிறுவன் ஒருவன் பூங்கா கழிவறை வெளியே சிறுநீர் கழித்து விட்டான். இதனால் ஆத்திரமடைந்த கந்தசாமி அந்த சிறுவனை தாக்கி உள்ளார். இதனை தட்டி கேட்ட அவரது பெற்றோரையும் திட்டினார்.

    இதனால் பூங்காவில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. ‌ இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து அந்த சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கந்தசாமியை கைது செய்தனர்.

    • ரூ.1.15 கோடியில் சமத்துவபுரங்களை சீரமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சி, சிறுகூடல்பட்டி ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப்பணிகள், சாலைப்பணிகள், நூலகப் பராமரிப்பு, பள்ளி பராமரிப்பு, பொது விநியோகக் கட்டிடம் பராமரிப்பு, நுழைவுவாயில் பராமரிப்பு, பொரியார் சிலை பராமரிப்பு, தெருவிளக்கு பராமரிப்புப் பணிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரங்களை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் உத்தரவின்படி, பழைய சமத்துவபுரங்களில் உள்ள வீடுகளில் பழுது பார்த்தல், குடிநீர் விநியோகம் செய்தல், தெருவிளக்குகள் பராமரிப்பு, விளையாட்டு மைதானம், பூங்கா பராமரிப்பு, தந்தை பெரியார் சிலை பராமரிப்பு, சமுதாயக்கூடம், நூலகம், அங்கன்வாடி, நுழைவுவாயில், பொது விநியோகக் கட்டிடம் மற்றும் பள்ளி கழிப்பிட வசதி போன்ற பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அரசனூரில் உள்ள சமத்துவபுரம் ரூ.85.22 லட்சம் மதிப்பீட்டிலும், அமராவதிபுதூரில் உள்ள சமத்துவபுரம் ரூ.1.01 கோடி மதிப்பீட்டிலும், புளிச்சிகுளத்தில் உள்ள சமத்துவபுரம் ரூ.1.29 கோடி மதிப்பீட்டிலும், பையூரில் உள்ள சமத்துவபுரம் ரூ.1.42 கோடி மதிப்பீட்டிலும், சிறுகூடல்பட்டியில் உள்ள சமத்துவபுரம் ரூ.1.15 கோடி மதிப்பீட்டிலும், விஜயபுரத்தில் உள்ள சமத்துவபுரம் ரூ.1.32 கோடி மதிப்பீட்டிலும் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சமத்துவபுரத்தில் உள்ள பூங்காக்களை பராமாரித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், இல்லந்தோறும் உள்ள கழிப்பறைகளை சீர்செய்து தொடர்ந்து பயன்படுத்திடவும், தெருவிளக்கு மற்றும் குடிநீர் விநியோகத்தினை சீரான முறையில் மேற்கொள்ளவும், நூலகங்களை பராமாரித்து அங்கு வசிக்கின்ற பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாகதிருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாளர்களின் பணிப்பதிவேடுகள், துறை அலுவலர்கள் பணிகள் தொடர்பாக கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், தென்னரசு, உதவிப்பொறியாளர்கள் அன்புச்செல்வன், சுப்பிரமணி, வீரப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ‘மாலை மலர்’ செய்தி எதிரொலியால் பெயர்ந்துபோன ஸ்ரீரங்கம் பிரதான பேருந்து நிறுத்தம் பகுதி சீரமைக்கப்பட்டது.
    • பணிகள் தொடங்கியுள்ளன

    திருச்சி:

    உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிமாநில பக்தர்கள் வந்து செலும் நிலையில், அங்குள்ள பிரதான பஸ் நிறுத்த பகுதி சுகாதார சீர்கேடுகள் மிகுந்து காணப்பட்டது.

    இது உள்ளூர் மற்றும் வெளியூர் நபர்களையும், குறிப்பாக கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களையும் முகம் சுழிக்க வைத்தது. இந்த பேருந்து நிறுத்தத்தின் தரை பகுதி மிகுந்த உடைந்து பெயர்ந்து போய் கிடந்தது. இதன் பின்புறம் செல்லும் திறந்தவெளி சாக்கடையால் துர்நாற்றம் வீசியது. இதனால் அங்கு அதக அளவில் ஈக்கள், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.

    மேலும் மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலப்பதால் பொதுமக்களும், பக்தர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் ஸ்ரீரங்கம் பிரதான பேருந்து நிறுத்தத்தை உடனடியாக சீரமைத்து தரவேண்டும் என்றும், ஸ்ரீரங்கம் நகர பேருந்துகள் நிறுத்துமிடத்தை நிரந்தரமாக்கவேண்டும், பஸ் நிலையம் அமைக்க வேண்டும், ராகவேந்திரா வளைவு எதிரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தை அகற்றி அதில் பேருந்து நிறுத்தத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வந்தன.

    இதுதொடர்பாக மாலை மலர் நாளிதழில் கடந்த 7-ந்தேதி பெயர்ந்து கிடந்த பேருந்து நிறுத்தம் குறித்த செய்தி வெளியானது. அதன் பேரில் நடவடிக்கை எடுக்கும் வகையில் கைமேல் பலனாக மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    உடனடியாக அங்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன் பேரில் பணிகள் தொடங்கியுள்ளன. ஜல்லி கற்கள், சிமெண்டு கலவை கொட்டப்பட்டு பெயர்ந்து போன தரை செம்மைப்படுத்தப்படுகிறது. இதற்கு ஸ்ரீரங்கம் பகுதி மக்கள், சுற்றுலா பயணிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்து வரவேற்றுள்ளனர்.

    • தூத்துக்குடியில் சீரமைக்கப்பட்ட முத்துநகர் கடற்கரை பூங்கா திறப்பு விழா நடைபெற்றது.
    • விழாவில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் முத்துநகர் கடற்கரை பூங்கா மேம்படுத்தும் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று மாலை திறப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேயர் ஜெகன் பெரியசாமி வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டு பேசினார். அவர் பேசும்போது, உலக சுற்றுச்சூழல் தினத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள் கடலில் காலை நனைக்க விரும்புவார்கள் அந்த விருப்பம் இங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, இந்தப் பூங்கா முழுமையாக சீரமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை சுகாதாரமாக பயன்படுத்த மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இங்கே அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய மேடையில் இளைஞர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் தங்களுடைய திறமைகளை வெளிக ்கொண்டுவர பயன் படுத்திக்கொள்ளலாம். அரசியல், சாதி, மத, நிகழ்ச்சிகள் தவிர அனைத்து வகையான நிகழ்ச்சிகளும் இங்கே நடத்திக் கொள்ளலாம் என்று பேசினார்.

    நிகழ்ச்சியில் மேயர் ஜெகன்பெரியசாமி பேசியதாவது:-

    தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு திட்டப் பணிகள் விரைவாக நிறைவு படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த பூங்கா மிக விரைவாக செயல்படுத்தப்பட்டுள்ளது, நாங்கள் பொறுப்பு ஏற்ற 90 நாளில் திட்டத்தை நிறைவுபடுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளோம்.

    இதற்காக கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், கமிஷனர் சாருஸ்ரீ மற்றும் அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பு வழங்கினர். மக்கள் தூத்துக்குடி மாநகரையும் இந்த கடற்கரை பூங்காவையும் தூய்மையாக வைத்துக்கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் துணைமேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் கலைச்செல்வி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், பாலகுருசாமி, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மாநகரப் பகுதி தி.மு.க. செயலாளர்கள், காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சண்முகம், நகரமைப்புக்குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், அதிகாரிகள் மேயரின் உதவியாளர்கள் மற்றும் டாக்டர் சோமசுந் தரி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


    பூண்டி ஏரி ரூ.258 கோடி மதிப்பீட்டில் தூர் வாரப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததையடுத்து பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். #PondiLake
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதன் உயரம் 35 அடி.

    3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். 760 சதுர மைல் நீர்வரத்து பரப்பளவு கொண்ட ஏரியில் 16 மதகுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    ஒவ்வொன்றும் 40 அடி அகலம், 15 அடி நீளம் கொண்ட இரும்பு ‌ஷட்டர்கள் மூலம் அதிகபட்சமாக வினாடிக்கு 1.20 லட்சம் கனஅடி தண்ணீரை வெளியேற்ற முடியும்.

    ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு லிங்க் கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படும்.

    மேலும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் மூலம் தண்ணீர் அனுப்பப்படுவது வழக்கம்.

    பூண்டி ஏரி சுமார் 40 வருடங்களாக தூர் வாரப்படாததால் தான் மழைக் காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து வைக்க முடியாமல் வீணாக வெளியேறி விடும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.

    கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த பேய் மழையால் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. இதனால் ஏரியில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

    இப்படி 30 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.05 டி.எம்.சி.

    மேலும் பூண்டி ஏரியில் தண்ணீர் தேங்கி நின்றால் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு தங்கு தடையின்றி நிலத்தடி நீர் கிடைக்கும். ஏரியை தூர் வாராததால் மழை காலங்களில் கிடைக்கும் தண்ணீர் வீணாக கடலில் கலந்து வந்தது.

    இதனை தவிர்க்க பூண்டி ஏரியை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் ரூ. 258 கோடி மதிப்பீட்டில் பூண்டி ஏரி தூர் வாரப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் நேற்று அறிவித்தார்.

    இதையடுத்து பூண்டி ஏரி பகுதியில் ஏராளமான விவசாயிகள் திரண்டனர். அவர்கள் பூண்டி ஒன்றிய அதிமுக செயலாளர் கந்தசாமி தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    அப்போது அந்த வழியாக சென்ற பஸ்சில் இருந்த பயணிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் எத்திராஜ், பொதுக் குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய துணைச் செயலாளர் சம்பத், இணைச் செயலாளர் கோவிந்தராஜன், இளைஞர் அணிச் செயலாளர் சீனிவாசன், கிளைச் செயலாளர் ராஜசேகர், பூண்டி விஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர் புல்லரம்பாக்கம், தலையஞ்சேரி, ஈக்காடு, தண்ணீர்குளம், சிறுகடல் வரை பாய்ந்து செல்கிறது. அங்குள்ள மதகு வழியாக புழல் அல்லது செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது.

    இந்நிலையில் இனைப்பு கால்வாய் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. இந்த கால்வாய்க்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கண்டலேறு அணையிலிருந்து தற்போது தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்தால் பூண்டி ஏரியிலிருந்து இணைப்பு கால்வாயில் தண்ணீர் திறந்துவிட உள்ளனர். இந்த தண்ணீர் தங்கு தடையின்றி புழல் அல்லது செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு சென்றடைய ஏதுவாக கால்வாய் சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. #PondiLake

    கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு சீரமைத்தல் பணிகளுக்கு அரசின் நிதி உதவி வழங்கப்படும் என புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிறிஸ்தவ தேவாலயங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016- 17-ம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ தேவாலயங்களை இந்த திட்டங்களின் கீழ் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்வதற்கு அந்த தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்திருக்க வேண்டும், தேவாலயமும் பதிவு செய்திருக்க வேண்டும்.

    தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருக்கக் கூடாது. சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும். விண்ணப்ப படிவத்தை அனைத்து உரிய ஆவணங்களுடன் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கு வருகிற 25&ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பபடிவம் மற்றும் சான்றிதழ்  WWW.bcmbcmw@tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டு உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். மேலும் 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலான தேவாலயங்களுக்கு ரூ.1 லட்சமும், 15 முதல் 20 ஆண்டுகள் வரையிலான தேவாலயங்களுக்கு ரூ.2 லட்சமும், 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தேவாலயங்களுக்கு ரூ.3 லட்சமும் சீரமைத்தல் பணிகளுக்கு அரசின் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. கலெக்டர் தலைமையிலான குழு சார்பில் விண்ணப்பங்கள் அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து அங்கு ஆய்வு மேற்கொள்ளப்படும்.
    எனவே தகுதியான கிறிஸ்தவ தேவாலயங்கள் உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    சிறுபாக்கம் அருகே பழமை வாய்ந்த கோவிலை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிறுபாக்கம்:

    சிறுபாக்கம் அருகே உள்ளது பொயனப்பாடி கிராமம். இங்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த ஆண்டவர் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. சேலம், நாமக்கல், பெரம்பலூர், சென்னை, திருச்செங்கோடு, திருச்சி, அரியலூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் இக்கோவிலுக்கு அடிக்கடி வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.

    அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக கோவிலின் மேற்கூரைகள், சுவர்கள், தரைதளத்தில் விரிசல் ஏற்பட்டும், கான்கிரீட் பெயர்ந்து விழுந்தும் சேதமடைந்து காணப்படுகிறது.

    இதனால் கோவிலை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தனர். இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோவில் வளாகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் கோவிலை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்கக் கோரி கோ‌ஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். #tamilnews
    திருச்சி முக்கொம்பில் கொள்ளிடம் பாலத்தில் உடைந்த பகுதியில் இன்று மாலை முதல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் இந்த பணிகள் ஒருவார காலத்திற்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Mukkombu
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பில் கொள்ளிடம் பாலம் இடிந்து விழுந்த பகுதியை கலெக்டர் ராசாமணி இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சி முக்கொம்பில் காவிரி, கொள்ளிடம் பிரியும் பகுதியில் கொள்ளிடத்தில் உள்ள 6 முதல் 13 வரையிலான தூண்கள் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அணையின் 9 மதகு சட்டர்கள் பழுது ஏற்பட்டுள்ளது. முக்கொம்பை பொறுத்த வரை காவிரியில் 41 மதகுகளும், கொள்ளிடத்தில் இரு பிரிவாக 45 ‌ஷட்டர்களும் உள்ளன. அவற்றில் 10 ‌ஷட்டர்கள் உறுதியாக உள்ளது. மற்ற சட்டர்களின் ஸ்திர தன்மை பொதுப்பணித்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட உள்ளது.

    நேற்று இரவு நிலவரப்படி காவிரியில் 32 ஆயிரம் கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் 8 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. மாயனூரில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதன்படி இன்று காலை நிலவரப்படி காவிரியில் 50 ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் 23 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. மதியத்திற்கு பிறகு முக்கொம்பிற்கு வரும் நீரின் அளவு குறைய வாய்ப்புள்ளது.

    கொள்ளிடம் அணை உடைந்துள்ளதால் வெள்ள பாதிப்புகள், விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படாது. திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான நீர் காவிரி வழியாக தொடர்ந்து திறந்து விடப்படுகிறது. இதனால் விவசாயத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

    கொள்ளிடத்தை பொறுத்தவரை ஆற்றில் கூடுதலாக வரும் உபரி நீர் மட்டுமே திறந்து விட பயன்படுத்தப்படும். தற்போது அணை இடிந்ததை தொடர்ந்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் கொள்ளிடம் பாலத்தின் ஸ்திரதன்மை குறித்து ஆய்வு செய்யப்படும்.

    உடைந்த பகுதியில் இன்று மாலை முதல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் ஒருவார காலத்திற்குள் முடிக்கப்படும். இதற்காக ராட்சத எந்திரங்கள், தொழில்நுட்ப குழுவினர்கள் வரவழைக்கப்படுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #Mukkombu
    ×