search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "relief"

    • அருப்புகோட்டை சண்முகவேல் குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்க வேண்டும்.
    • நிவாரணமாக ரூ.1 கோடி வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பணிச்சுமையால் மரணம் அடைந்த மதுரை உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல்) அலுவலக உதவியாளர் அருப்புகோட்டை சண்முகவேல் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். நிவாரணமாக ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    இதில் வடக்கு வட்ட செயலாளர் ஜெய்ராஜ், மாநில செயலாளர் கோதண்டபாணி, முன்னாள் மாநில தலைவர்பன்னீர்செல்வம், முன்னாள் மாநில தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சூறைக்காற்றுடன் திடீர் மழைபெய்ததால் அந்தப் பகுதியில் இருந்த ஏராளமான முந்திரிமரங்கள்சாய்ந்து விழுந்தன.
    • மாவட்ட நிர்வாகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் .

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ,காடாம்பு லியூர், பாவைகுளம்,சிறுதொண்டமாதேவி, சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் திடீர் மழைபெய்தது.இதனால் அந்தப் பகுதியில் இருந்த ஏராளமான முந்திரிமரங்கள்சாய்ந்துவிழுந்தன. 100 ஏக்கருக்கு மேற்பட்ட மா, பலா, வாழை மரங்கள் சாய்ந்தது. இதன் காரணமாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பாதிப்படைந்த இடங்களை மாவட்ட நிர்வாகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் கடலூர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கைமனுவில்கோரியுள்ளார்.

    • உளுந்தூர்பேட்டை அருகே உள்ளஎறஞ்சி காலனியில் அமராவதி கூரை வீடு உயர்மின்னழுத்தத்தின் காரணமாக முற்றிலுமாக எரிந்துவிட்டது
    • எடைக்கல் போலீஸ் நிலையம் சார்பில் நிவாரணம் (அரிசி, காய்கறிகள், பாத்திரம், துணி மற்றும் படுக்கை விரிப்புகள்) வழங்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளஎறஞ்சி காலனியில் அமராவதி கூரை வீடு உயர்மின்னழுத்தத்தின் காரணமாக முற்றிலுமாக எரிந்துவிட்டது . இது குறித்து தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அமராவதி குடும்பத்தினரை வரவழைத்து எடைக்கல் போலீஸ் நிலையம் சார்பில் நிவாரணம் (அரிசி, காய்கறிகள், பாத்திரம், துணி மற்றும் படுக்கை விரிப்புகள்) வழங்கப்பட்டது.

    • வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பயிர்சேத கணக்கெடுப்பு மேற்கொண்டனர்.
    • நிவாரண உதவியை தொடர்புடைய விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க அறிவுறுத்தல்

    சென்னை:

    தமிழ்நாட்டில் நடப்பாண்டு 2023 ஜனவரி கடைசி வாரத்திலும், பிப்ரவரி முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக 112 கோடியே 72 இலட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    நடப்பாண்டு ஜனவரி கடைசி வாரத்திலும் பிப்ரவரி முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்டு 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள நெற்பயிருக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக எக்டேருக்கு ரூ.20 ஆயிரமும், நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக எக்டேருக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என முதலமைச்சர் 6-2-2023 அன்று அறிவித்தார்.

    அவரது அறிவுரையின்படி அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய 9 மாவட்டங்களில் வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பயிர்சேத கணக்கெடுப்பு மேற்கொண்டனர்.

    இதில் 93,874 எக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இதர பயிர்கள் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் சேதமடைந்துள்ளதெனக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. பருவம் தவறிய கனமழையால் பாதிப்பிற்குள்ளான விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, 1,33,907 விவசாயிகள் பயனடையும் வகையில், 93,874 எக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்களுக்கு, உயர்த்தப்பட்ட நிவாரணமாக மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில நிதியிலிருந்து 112 கோடியே 72 இலட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

    இந்த நிவாரண உதவியை தொடர்புடைய விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு முதலமைச்சர் அறிவுரையும் வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, பாதிப்பிற்குள்ளான விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.
    • ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரமாக நிவாரண தொகையை உயர்த்தி வழங்க கோரி போராட்டம் நடைபெற்றது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த மாத தொடக்கத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.

    மழை சேத பாதிப்புக்கு அரசு நிவாரணம் அறிவித்தது.

    இந்த நிலையில் சம்பா, தாளடி நெல் பயிர்கள் இழப்பீட்டிற்கு முழு காப்பீட்டு திட்ட இழப்பீடு மற்றும் மாநில அரசு நிதியும் சேர்த்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரமாக நிவாரண தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தஞ்சை அருகே உள்ள அம்மாபேட்டை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ராஜாராமன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

    போராட்டத்தின் போது நிவாரண தொகையை உயர்த்தி வழங்ககோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து வேளாண் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உங்கள் கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு செல்லப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதனை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பருவம் தவறி பெய்த மழையால் சம்பா சாகுபடி பாதிக்கபட்டுள்ளது.
    • அரசு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராஜ பவுலின் தலைமையில் நடந்தது.

    கூட்டத்துக்கு வந்த விவசாயிகள், பருவம் தவறி பெய்த மழையால் சம்பா சாகுபடி பாதிக்கபட்டுள்ளது.

    இதனை முறையாக கணக்கெடுத்து கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

    மேலும், தாசில்தார் அலுவலகம் முன்பு மழையால் பாதிக்கப்பட்ட முளைத்த நெற்பயிர்களுடன் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் பாதிக்கப்பட்ட வயல்களை முறையாக கணக்கெடுக்க கோரியும், உரிய நிவாரண தொகை வழங்க கோரியும் முழக்கமிட்டனர்.

    பின்பு தாசில்தார் ஜெயசீலன் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை அரசுக்கு தெரிவிப்பதாக உறுதி அளித்த பின் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பேசிய விவசாயிகள் பலர், வேதாரண்யம் பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான நெற்பயிர்கள் முற்றிலும் சாய்ந்து முளைத்துவிட்டது.

    எனவே, அரசு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    • பரமத்திவேலூர் அருகே உள்ள இருக்கூர், செஞ்சு டையாம்பாளையம், ரங்கநாதபுரம், வெள்ளா ளபாளையம் மற்றும் சுண்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் ஆடுகள், கன்றுகள், மயில்கள் மற்றும் நாய்களை சிறுத்தைப் புலி தாக்கி கொன்றது.
    • வனத்துறை யினர் சார்பில் கால்நடை களின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதன்படி, ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரம், கன்றுகளுக்கு ரூ.5 ஆயிரத்தை நாமக்கல் மாவட்ட வன சரக அலுவலர் வழங்கினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள இருக்கூர், செஞ்சு டையாம்பாளையம், ரங்கநாதபுரம், வெள்ளா ளபாளையம் மற்றும் சுண்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் ஆடுகள், கன்றுகள், மயில்கள் மற்றும் நாய்களை சிறுத்தைப் புலி தாக்கி கொன்றது.

    இந்த சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற வனவர்கள், மோப்ப நாய், ட்ரோன் கேமரா, கூண்டுகள், மயக்க மருந்து செலுத்தும் கால்நடை மருத்துவர்களை வரவழைத்து இரவு, பகலாக தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால் இதுவரை சிறுத்தை புலியை கண்டு பிடிக்க முடியாத நிலையில், தற்போது சிறுத்தைப்புலி வந்து செல்லும் வழித்தடம் கண்டறியப்பட்டு 15-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்கள், 3 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சிறுத்தை புலி தாக்கி பலியான கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தி ருந்தனர். இதையடுத்து, வனத்துறை யினர் சார்பில் கால்நடை களின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதன்படி, ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரம், கன்றுகளுக்கு ரூ.5 ஆயிரத்தை நாமக்கல் மாவட்ட வன சரக அலுவலர் பிரவின்குமார் வழங்கினார்.

    • கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணம் போதுமானது அல்ல.
    • ஈரப்பதம் நிரந்தரமாக 22 சதவீதம் என மத்திய அரசு அறிவிக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

    தஞ்சாவூா்:

    தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தஞ்சாவூர் ஒன்றிய மாநாடு இன்று நடைபெற்றது. ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ஜான் பீட்டர் தலைமை வகித்தார்.

    மாநாட்டினை தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரமோகன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். வேலை அறிக்கையை ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் முன்வைத்தார்.

    இந்த மாநாட்டில், தற்போது பெய்த பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணம் போதுமானது அல்ல. எனவே ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும்.

    நெல் கொள்முதலில் ஈரப்பதம் நிரந்தரமாக 22 சதவீதம் என மத்திய அரசு அறிவிக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, விவசாய சங்க தேசிய குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், மாநில குழு உறுப்பினர் பாஸ்கர் , இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேவையா, மாநகர செயலாளர் பிரபாகரன் , ஒன்றிய செயலாளர் ஜார்ஜ்துரை, இந்திய தேசிய மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் விவசாய சங்க ஒன்றிய பொருளாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.

    • கபிஸ்தலம் சுற்று பகுதிகளில் 800 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.
    • மஞ்சள் நோய் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு கரும்புகள் வளர்ச்சி குன்றி உள்ளது.

    கபிஸ்தலம்:

    பாபநாசம் தாலுகாவில் சேர்ந்த விவசாயிகள், தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறிப்பிட்டுள்ளதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் சுற்று பகுதி களான வடசருக்கை, வீரமாங்குடி, தேவன்குடி, சோமேஸ்வரபுரம், மணலூர், கணபதி அக்ரகாரம் உள்ளிட்ட சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 800 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.

    இந்த கரும்பு பயிர்களில் ஒரு விதமான மஞ்சள் நோய் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு கரும்புகள் வளர்ச்சி குன்றி ஒரு அடியிலேயே எட்டு கணுக்களும் உள்ளது.

    கரும்பின் தோகையை பிரிக்கும் போது உள்ளே எரும்பு, பூச்சி போன்றவை உள்ளது. வளர்ச்சி இல்லாததால் கரும்பு கொள்ளையை வயலிலேயே அழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் லட்சக்கணக்கில் செலவு செய்து சாகுபடி செய்த விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

    எனவே மத்திய மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    • நெல் கொள்முதல் ஈரப்பதம் 22 சதவீதம் வரை கொள்முதல் செய்திட வேண்டும்.
    • உளுந்து பயிருக்கு போதுமான நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருத்துறைப்பூண்டி ஒன்றிய நகர குழுக்களின் சார்பில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுபயிர்க்காப்பீட்டுடன் முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதியும் சேர்த்து ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம்வழங்கிட வேண்டும், நெல் கொள்முதல் ஈரப்பதம் 22 சதம் வரை கொள்முதல் செய்திட வேண்டும். உளுந்து பயிருக்கு போதுமான நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார்.

    விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர்ஜோசப் முன்னிலை வகித்தார்.கோரிக்கைகளை விளக்கி விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளரும் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்சந்திரராமன், ஒன்றிய செயலாளர்ஜவகர் , விவசாய சங்க ஒன்றிய செயலாளர்ஜெயபால், ஒன்றிய தலைவர்பாலு, நகர செயலாளர் டி.பி.சுந்தர், நகர தலைவர் பி.எம்.பக்கிரிசாமி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வி ராஜா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்சுஜாதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருமருகல் பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் தொடர் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், ஒன்றிய தலைவர் மாசிலாமணி, ஒன்றிய துணைத் தலைவர் தியாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருமருகல் ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டு அறுவ டைக்கு தயாராக இருந்த சம்பா தாளடி பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், கனமழையால் பாதிக்கப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ள நெற்பயிர்களுக்கு பயிர் காப்பீடு தொகையினை பாகுபாடின்றி 100 சதவீதம் வழங்க வேண்டும்.

    மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பச்சை பயிறுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், பச்சை பயிறு, உளுந்துக்கான காப்பீட்டுத் தொகையை குறைக்காமல் சென்ற ஆண்டுக்கான தொகையினையும் காப்பீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷ ங்கள் எழுப்பப்பட்டது.

    முடிவில் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

    • விவசாயிகளுக்கு வழங்குவது போல் விவசாய தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
    • அரசுக்கு விவசாய தொழிலாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ள பகுதியாகும். குறிப்பாக அபிராமம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கிரா மங்களில் பல ஆயிரம் ஏக்கர் இருந்த போதிலும் குறிப்பிட்ட நஞ்சை நிலங்களில் மட்டும் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

    விளைச்சல் இல்லாமல் பயிர்கள் கருகிப்போவது அல்லது புயல், வெள்ள காலங்களில் மழையால் பயிர்கள் அழுகியும், தண்ணீரில் மூழ்கி பயிர்கள் சேதமடைவது தொடர்கதையாகி வருகிறது.

    அபிராமத்தை சுற்றிலும் பெரிய அளவில் வேறு எந்த தொழிலும், தொழிற்சாலையும் இல்லை. இந்த பகுதியில் போதிய மழை இல்லாமல் கடும் வறட்சியால் பல ஆண்டுகளாக விவ சாயமும் பாதிக்கப்பட்டு வருகிறது. அபிராமம் பகுதி முழுவதும் விவசாயத்தை மட்டும் நம்பி 50 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் பேர் உள்ளனர்.

    விவசாய தொழிலாளர்கள் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உள்ளனர்.இவர்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த உபதொழில்களில் மட்டுமே தினக்கூலிகளாக ஈடுபட்டு வருகிறார்கள். குறைந்தது மாதத்திற்க்கு 25 நாட்களாவது வேலை இருந்தால் மட்டுமே அதில் கிடைக்கும் வருமானம் மூலம் குடும்பத்திற்கான செலவினங்களை செய்ய முடியும்.

    ஆனால் விவசாய தொழிலில் ஆண்டுதோறும் தொடர்ந்து பல மாதங்களாக வேலை இல்லாமல் இருப்பதால் விவசாய தொழிலாளர்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இதனால் வறட்சி மற்றும் கூடுதல் மழையால் பயிர் பாதிப்பிற்குள்ளாகும் நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும்போது விவசாய கூலி தொழிலாளர் குடும்பத்திற்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று விவசாய தொழிலாளர் சங்கங்கள் கோரிக்கை விடுக்கின்றன.

    இதுபற்றி விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    கடந்த சில ஆண்டு களாக விவசாயம் பாதிப்புக்குள்ளாகும் நிலை தொடர்கதையாகி விட்டது. ஆண்டுதோறும் ஒரே மாதிரியான மகசூல் விவசாயத்தில் கிடைப்பதில்லை. இதனால் அனுபவம் வாய்ந்த விவசாயிகள் வேலையின்றி கிடைத்த வேலையை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    அந்த வேலையும் நிரந்தரம் இல்லாமல் வெளி மாவட்டகளில் கூலி வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. விவசாய தொழி லாளர்களுக்கு கூலி நிர்ணயம் செய்யப்பட வேண்டும். விவசாயிகளுக்கு மழை, வெள்ளம். வறட்சி காலங்களில் இழப்பீட்டுக்கு நிவாரணம் வழங்குவதுபோல் விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் இனிவரும் காலங்களில் நிவாரணம் வழங்க தமிழக அரசும், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×