என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "relatives"
நெல்லை:
நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவி பட்டினத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதில், கணேசன் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணேசனை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். கணேசனை ஜாமீனில் எடுக்க அவருடைய உறவினர்கள் முயற்சி செய்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவில் சிறையில் இருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கைதி சாவில் ஏதேனும் மர்மம் உள்ளதா? என்று நெல்லை உதவி கலெக்டர் மைதிலி விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இறந்த கைதி கணேசனின் உடலை வாங்க மறுத்து அவருடைய உறவினர்கள் பாளை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து கணேசனின் உறவினர்கள், அவரது உடலை பெற்று சென்றனர். ஆனாலும் அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தெசவிளக்கு பள்ளிக் கொண்டான்பாறை பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 26). இவர் கைத்தறி நெசவு தொழில் செய்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வி(20). இவர் வனவாசி பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரபு வேலை செய்யும் பகுதி வழியாக தினமும் கல்லூரி பேருந்து செல்வது வழக்கம். கலைச்செல்வி கடந்த இரண்டு வருடங்களாக பிரபுவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் பிரபுவின் செல்போன் என்னுக்கு கலைச்செல்வி யார் என கூறாமல் வாட்ஸ் ஆப் மூலம் தனது காதலை வளர்த்து வந்துள்ளார்.
இதை தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கலைச்செல்வி தனது காதலை வெளிப்படையாக கூற தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலுக்கு வருமாறு பிரபுவை அழைத்தார். அவரும் அங்கு சென்று தனது காதலியை முதன் முதலாக பார்த்து, இருவரும் காதலை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். நான் உங்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும். நான் அதே பகுதியை சேர்ந்தவர் எனவும் கூறினார்.
இதை தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசி வந்தனர். இவர்களின் காதல் கலைச் செல்வியின் வீட்டிற்கு தெரியவந்தது. இதையடுத்து கலைச் செல்விக்கு திருமணம் செய்து வைக்க அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். இது குறித்து கலைச்செல்வி காதலன் பிரபுவுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரபுவிடம் கூறினார். பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர்.
இதை அறிந்த கலைச்செல்வியின் பெற்றோர் தாரமங்கலம் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் செய்தனர். போலீசார் பிரபுவின் செல்போன் எண்ணுக்கு அழைத்து காவல் நிலையம் வருமாறு கூறியுள்ளனர்.
இதையடுத்து திருமணம் செய்து கொண்ட காதலர்கள் கார் மூலம் தாரமங்கலம் காவல் நிலையம் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓமலூர் அருகே சிக்கம்பட்டி என்ற இடத்தில் கார் சென்ற போது மற்றொரு காரில் எதிர்திசையில் இருந்து வந்த கலைச்செல்வியின் உறவினர்கள் காரை வழி மறித்து காதலன் பிரபுவை தாக்கி விட்டு, காதலி கலைச்செல்வியை கடத்தி சென்றனர். இதில் காயமடைந்த பிரபு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணம் செய்து கொண்டு வரும் போது காரை வழி மறித்து காதலனை தாக்கி காதலியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியைச் சேர்ந்தவர் ராமர் (வயது 22), செல்போன் கடை ஊழியர்.
இவருக்கும் தேனி மாவட்டம், கடமலைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த மாதம் 18-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
இதுகுறித்து மதுரை விடியல் ஹோம் குழந்தைகள் காப்பக அலுவலர் மாரீசுவரிக்கு தகவல் கிடைத்தது. அவர் சிந்துப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ராமர், சிறுமியின் உறவினர்கள் ரெங்கசாமி, எல்லம்மாள், சரவணன், வித்யா மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர்.
பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அவர்களில் சண்முகம், செல்வசேகர், கார்த்திக், கந்தையா, காளியப்பன், மாணவி ஸ்னோலின், தமிழரசன் ஆகிய 7 பேரின் உடல்கள் முதலில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.
இந்நிலையில் அவர்களது உடலை மறுபிரேத பரிசோதனை செய்யவும், மற்ற 6 பேரின் உடல்களை மறு உத்தரவை வரும்வரை பிரேத பரிசோதனை செய்யாமல் பாதுகாக்கவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி பிரேத பரிசோதனை முடிந்த மாணவி ஸ்னோலின் உள்ளிட்ட 7 பேரின் உடல்களையும் புதுவை ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் மற்றும் தூத்துக்குடி டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.
நீதிபதிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த பிரேத பரிசோதனை முழுவதுமாக வீடியோ எடுக்கப்பட்டது. பின்பு 7 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மணிராஜ், கிளாட்சன், அந்தோணி செல்வராஜ், ரஞ்சித்குமார், ஜான்சி, ஜெயராமன் ஆகிய 6 பேரின் உடல்களும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் பாதுகாக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அந்த 6 பேரின் உடல்களையும் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யுமாறு சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதையடுத்து 6 பேரின் உடல்களும் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் அண்ணாமலை, கோவில்பட்டி முதலாவது நீதித்துறை நடுவர் சங்கர், 2-வது நீதித்துறை நடுவர் தாவூத்தம்மாள், திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் வினோத் சவுத்ரி தலைமையில், தூத்துக்குடி அரசு மருத்துவர்கள் மனோகரன், சுடலைமுத்து, சோமசுந்தரம், மும்மூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்ததும் ஒவ்வொரு உடலாக அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த அந்தோணி செல்வராஜ் உடலை தவிர மற்ற 5 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அவரது உறவினர்கள் வெளியூரில் இருந்ததால் அவர்கள் நேற்று வரவில்லை. இன்று (வியாழக்கிழமை) காலை அவர்கள் தூத்துக்குடி வந்தனர். இதையடுத்து அவர்களிடம் அந்தோணிசெல்வராஜின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கிருஷ்ணராஜபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டு விட்டதால் தூத்துக்குடியில் கடந்த 15 நாட்களாக நிலவிய பதட்டம் தணிந்துள்ளது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் போலீஸ் எண்ணிகையும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22ந் தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பேரணியாக சென்றனர். அப்போது போலீசார் தடுத்ததால் மோதல் உண்டானது.
அப்போது ஏற்பட்ட கலவரம் காரணமாக போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன.
இதில் சண்முகம் (38), செல்வசேகர் (42), கார்த்திக் (20), கந்தையா (58), காளியப்பன் (22), ஸ்னோலின் (17), தமிழரசன் (42) ஆகிய 7 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.
இந்த நிலையில் 7 பேரின் உடல்களையும் டெல்லி எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர் அல்லது திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தலைமையில் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் அம்பிகா பிரசாத் பத்ரா தலைமையில், தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவர்கள் மனோகரன், சுடலைமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர், நீதித்துறை நடுவர்கள் முன்னிலையில் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்தனர்.
உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி இந்த பிரேத பரிசோதனை நடைபெற்றது. நேற்று முன்தினம் மதியம் 12.45 மணிக்கு தொடங்கி நேற்று அதிகாலை 2 மணி வரை 7 பேரின் உடல்களும் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மீதமுள்ள 6 பேரின் உடல்களும் கோர்ட்டு உத்தரவுப்படி பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
பிரேத பரிசோதனை முடிந்த சண்முகம், கார்த்திக், செல்வசேகர் ஆகிய 3 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. நேற்று காலை காளியப்பன், கந்தையா ஆகியோரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் ஸ்னோலின், தமிழரசன் ஆகியோரது உடல்களை பெற அவர்களது உறவினர்கள் மறுத்து விட்டார்.
ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியிலிருந்து நிரந்தரமாக அகற்ற வேண்டும், இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஸ்னோலின், தமிழரசன் உடலை அவர்களது உறவினர்கள் இன்று காலை வரை வாங்கவில்லை. இதையடுத்து அவர்களிடம் கலெக்டர் சந்தீப்நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா மற்றும் அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் தமிழரசன் உடலை பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் சம்மதித்தனர்.
இதைத்தொடர்ந்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தார். இதையடுத்து தமிழரசனின் உறவினர்களும் அங்கு வந்தார்கள். தொடர்ந்து தமிழரசனின் தாய் ராமலெட்சுமி அம்மாளிடம் அரசு அறிவித்த ரூ.20 லட்சம் உதவித்தொகைக்கான காசோலையை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
இதைத்தொடர்ந்து தமிழரசனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மறுபிரேத பரிசோதனை முடிந்த ஸ்னோலின் உடல் மட்டும் தொடர்ந்து பிணவறையில் பாதுகாக்கப்படுகிறது.
மேலும் பிரேத பரிசோதனை செய்யப்படாத அந்தோணி செல்வராஜ், கிளாஸ்டன், ஜான்சி, மணிராஜ், ரஞ்சித் குமார், ஜெயராமன் ஆகிய 6 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஒரு வாரத்துக்கு பிறகு பிரேத பரிசோதனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ThoothukudiShooting
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22ந் தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பேரணியாக சென்றனர். அப்போது போலீசார் தடுத்ததால் மோதல் உண்டானது.
அப்போது ஏற்பட்ட கலவரம் காரணமாக போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100- க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன.
இதில் சண்முகம் (38), செல்வசேகர் (42), கார்த்திக் (20), கந்தையா (58), காளியப்பன் (22), ஸ்னோலின் (17), தமிழரசன் (42) ஆகிய 7 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.
இந்த நிலையில் 7 பேரின் உடல்களையும் டெல்லி எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர் அல்லது திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தலைமையில் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் அம்பிகா பிரசாத் பத்ரா தலைமையில், தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவர்கள் மனோகரன், சுடலைமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர், நீதித்துறை நடுவர்கள் முன்னிலையில் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்தனர்.
உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி இந்த பிரேத பரிசோதனை நடைபெற்றது. நேற்று முன்தினம் மதியம் 12.45 மணிக்கு தொடங்கி நேற்று அதிகாலை 2 மணி வரை 7 பேரின் உடல்களும் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மீதமுள்ள 6 பேரின் உடல்களும் கோர்ட்டு உத்தரவுப்படி பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
பிரேத பரிசோதனை முடிந்த சண்முகம், கார்த்திக், செல்வசேகர் ஆகிய 3 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. நேற்று காலை காளியப்பன், கந்தையா ஆகியோரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் ஸ்னோலின், தமிழரசன் ஆகியோரது உடல்களை பெற அவர்களது உறவினர்கள் மறுத்து விட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியிலிருந்து நிரந்தரமாக அகற்ற வேண்டும், இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஸ்னோலின், தமிழரசன் உடலை அவர்களது உறவினர்கள் இன்றும் வாங்கவில்லை. அவர்களின் உறவினர்கள் யாரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வரவில்லை. இதையடுத்து அவர்களிடம் கலெக்டர் சந்தீப்நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா மற்றும் அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை 2 பேரின் உடல்களையும் வாங்கப்போவதில்லை என 2 பேரின் உறவினர்கள் உறுதியாக தெரிவித்து விட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் மறுபிரேத பரிசோதனை முடிந்த நிலையில் ஸ்னோலின், தமிழரசன் ஆகிய 2 பேரின் உடல்களும் பிணவறையில் பாதுகாக்கப்படுகிறது.
மேலும் பிரேத பரிசோதனை செய்யப்படாத அந்தோணி செல்வராஜ், கிளாஸ்டன், ஜான்சி, மணிராஜ், ரஞ்சித்குமார், ஜெயராமன் ஆகிய 6 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஒரு வாரத்துக்கு பிறகு பிரேத பரிசோதனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடலூர்:
கடலூர் வில்வநகரைச்சேர்ந்தவர் ஜெயகுமார். இவர் தனியார் ஆம்புலன்சில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி விமலா(வயது28). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளான்.
இந்த நிலையில் விமலா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று மாலை பிரசவவலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள் விமலாவை பிரசவத்துக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு இரவு 7 மணி அளவில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் விமலா பரிதாபமாக இறந்தார்.இதை அறிந்த அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
டாக்டரின் கவனக்குறைவால் தான்விமலா இறந்து விட்டதாக கூறி, பிரசவ வார்டு கட்டிடத்தை அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டது.
மேலும் விமலாவின் சாவுக்கு காரணமான டாக்டர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இல்லை என்றால் விமலாவின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இன்று காலை விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் அரசு ஆஸ்பத்திரி அருகே திரண்டனர்.
பின்னர் அவர்கள் நகர செயலாளர் செந்தில் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விமலாவின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள், இறந்து போன விமலாவின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும், விமலா சாவுக்கு காரணமான டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விமலாவின் உடலை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது. புதுவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்றனர். உடனே போலீசார் இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறினர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போராட் டத்தை கைவிட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்