search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramadan"

    • பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.
    • இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், சிறுவர்- சிறுமிகள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் விளங்குகிறது.

    இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். ரமலான் மாதம் முழுவதும் 30 நாட்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்படும். இதையடுத்து பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

    அதன்படி நேற்று பிறை தெரிந்ததை முன்னிட்டு இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.இதனை முன்னிட்டு தஞ்சை மாநகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தஞ்சை கீழவாசல் அறிஞர் அண்ணா திருமண மண்டபம் முன்பு (உருது ஸ்கூல் திடல்) இன்று காலை ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாநகர கிளை தலைவர் அப்துல்லா, செயலாளர் ஜியாவூதீன், பொருளாளர் சலீம், நிர்வாகிகள் முகமது முஸ்தபா, காலித், செய்யது முஸ்தபா, மாவட்ட மாணவரணி செயலாளர் யாசர் அராபத் ஆகியோர் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு தொழுகையில் கிளை இமாம் மாவட்ட பேச்சாளர் சேக் அப்துல் காதர், ரமலான் மாதம் நோன்பு குறித்தும், பண்டிகையின் நோக்கம் குறித்தும் பேசினார்.

    இந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமிய ஆண்கள், பெ ண்கள், சிறுவர்-சிறுமிகள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

    முடிவில் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

    இதேப்போல் தஞ்சை மாவட்டம் முழுவதும் பள்ளி வாசல்கள், திறந்தவெளி இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    • நாட்டு நலனுக்காகவும், உலக அமைதி வேண்டியும், சமத்துவம் வேண்டியும் தொழுகையில் ஈடுபட்டனர்.
    • ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    மதுக்கூர்:

    இன்று ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் கீற்று சந்தை அருகில் உள்ள திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இதில் ஏராளமான முஸ்லீம்கள் நாட்டு நலனுக்காகவும், உலக அமைதி வேண்டியும், சமத்துவம் வேண்டியும் தொழுகையில் ஈடுபட்டனர்.

    இதனை அடுத்து தொழுகையில் ஈடுபட்டவர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    இதில் பெண்கள் உட்பட சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஹாஜா ஜியாவுதின் மார்க்க பயான் தொழுகையுடன் நிறைவு பெற்றது.

    • ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரெட்டேரி சந்தையில் கடந்த 2 நாட்களில் ரூ.10 கோடி மதிப்பிலான ரூ.8 ஆயிரம் ஆடுகள் விற்பனை.
    • ஏராளமான வியாபாரிகள் போட்டிபோட்டு ஆடுகளை விற்பனை செய்தனர்.

    கொளத்தூர்:

    ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு இடங்களில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை களை கட்டியது. மாதவரம் அடுத்த ரெட்டேரி கரையோரம் ஆடு மொத்த விற்பனை சந்தை உள்ளது. சென்னையில், புளியந்தோப்பில் உள்ள பெரிய ஆட்டு தொட்டிக்கு அடுத்தபடியாக ரெட்டேரி சந்தையில் வெளி மாநில ஆடுகள் கொண்டுவரப்பட்டு விற்கப்படுகின்றன.

    ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆடுகள் லாரி மூலம் இங்கு கொண்டுவரப்பட்டு மொத்த வியாபாரிகளுக்கும் சில்லரை வியாபாரிகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 3 மணிக்கே சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. ஏராளமான வியாபாரிகள் போட்டிபோட்டு ஆடுகளை விற்பனை செய்தனர். இதனால் ரெட்டேரி ஆட்டுச்சந்தை களைகட்டி காணப்பட்டது.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரெட்டேரி சந்தையில் கடந்த 2 நாட்களில் ரூ.10 கோடி மதிப்பிலான ரூ.8 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக தமிழ்நாடு அனைத்து ஆட்டு இறைச்சி சங்கத் தலைவர் யாகூப் சுல்தான் தெரிவித்தார்.

    இதுகுறித்து ஆட்டு வியாபாரிகள் கூறும்போது, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை ஆடுகளின் விலை மிகவும் அதிகமாக இருந்தது. தமிழ்நாடு எல்லையான ஆரம்பாக்கத்தில் இருந்து ரெட்டேரி வரும் வரை 20-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசாரின் கெடுபிடி சோதனையால் ஆடுகளை ஏற்றிவரும் வெளிமாநில லாரி டிரைவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றனர்.

    • பெரும்பாலான பள்ளிவாசல்களில் காலை 8 மணி வரையிலும் சிறப்பு தொழுகை நடந்தது.
    • மேலப்பாளையத்தில் பஜார் திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையிலும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    நெல்லை:

    ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகைக்காக இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து இன்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    20 இடங்களில் தொழுகை

    நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலையில் இருந்தே பள்ளிவாசல்களில் திரளான இஸ்லாமியர்கள் திரண்டனர். பெரும்பாலான பள்ளிவாசல்களில் காலை 8 மணி வரையிலும் சிறப்பு தொழுகை நடந்தது. நெல்லை மாநகரப் பகுதியில் மட்டும் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழுகை நடைபெற்றது. மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடந்த தொழுகையில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    தொடர்ந்து அவர் ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கினார். அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.மேலப்பாளையம் விரிவாக்க பகுதி கரீம் நகர் மஸ்ஜித் ஹுதா பள்ளி வாசல் சார்பாக நோன்பு பெருநாள் தொழுகை மதீனா சி.பி.எஸ்.இ. பள்ளி திடலில் நடைபெற்றது.

    பள்ளி வாசல் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி பெருநாள் உரை ஆற்றினார்.இதில் எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு, பசித்தோருக்கு உணவ ளியுங்கள், நோயுற்றவரை நலம் விசாரியுங்கள், நலிவடைந்தவர்களுக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள் என்று இஸ்லாம் எடுத்துரைத்துள்ள சகோ தரத்துவத்தை நம் வாழ்வில் உறுதியாக பற்றி பிடித்திடுவோம்.

    புத்தாடை அணிந்து, அறுசுவை உணவுகளை உட்கொண்டு, உற்றார் உறவுகளுடன் இன்பமுடன் இந்நாளில் மகிழ்வது போல், வாழ்நாள் முழுவதும் மகிழ்வுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம் என்று தெரிவித்தார்.

    இந்த தொழுகையில் பள்ளிவாசல் நிர்வாகிகள் முஸ்தபா ஜாபர் அலி , ஜவஹர், தாவுத் ஹாஜியார்,முஸ்தபா, ஜெய்னுல் ஆபிதீன்,கட்சி நிர்வாகிகள் கனி, லெப்பை, கல்வத், சலீம் தீன், சிந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான பெண்கள், ஆண்கள், குழந்தைகள் பங்கேற்றனர்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்நெல்லை மேலப்பாளையம் ஈத்கா திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை நடத்தினர். மேலப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    தமிழ்நாடு முஸ்ஸிம் முன்னேற்றம் கழகம் சார்பில் மேலப்பாளையத்தில் பஜார் திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையிலும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    மாவட்டத்தில் திசையன்விளை, ராதாபுரம், ஏர்வாடி, பத்தமடை உள்பட ஏராளமான இடங்களில் திறந்த வெளிகளிலும், பள்ளி வாசல்களிலும் காலையில் தொழுகை நடத்தப்பட்டது. பின்னர் ஒருவரை யொருவர் கட்டித்தழுவி தங்களது அன்பை பரிமா றிக்கொண்டனர். மேலும் அன்பு, கருணை, சகோதரத்துவம் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று அவர்கள் தங்களது வாழ்த்து க்களை தெரிவித்துக் கொண்டனர்.

    • மதுரையில் பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி திடல்களில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடந்தது.
    • ஒருவரை ஒருவர் ஆரத்தழு வியும், கை கொடுத்தும் ரம்ஜான் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    மதுரை

    இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று- ரமலான் மாத நோன்பு. நோன்பின்போது அவர்கள் அதிகாலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பார்கள்.

    ரமலான் மாதம் முதல் நாள் தொடங்கி 30 நாட்க ளும் கடுமையாக நோன்பு கடைபிடிக்கும் முஸ்லிம்கள், மற்றொரு கடமையான ஏழை-எளியோருக்கு ஜகாத் உதவிகளை வழங்கி வரு வார்கள்.

    ரமலான் 30 நாள் நோன்பு முடிவடைந்த பிறகு, ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் ரமலான் பண்டிகை கோலாகலமாக கொண்டா டப்படும். அதன்படி மதுரை மாவட்டத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் அதிகாலை முதலே மசூதிகளுக்கு சென்று தொழுகை நடத்தி னர். இதனைத்தொடர்ந்து இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து 'ஈதுல் பித்ர்' என்னும் பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    மதுரையில் பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி திடல்களில் நூற்றுக்கணக்கா னோர் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடந்தது. அதன்படி மாப்பாளையம், நெல்பேட்டை, ஹாஜிமார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடந்த தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதனைத்தொடர்ந்து இஸ்லாமிய பெருமக்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழு வியும், கை கொடுத்தும் ரம்ஜான் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னார்கள். ரம்ஜான் சிறப்பு தொழுகை முடிவில் உலக அமைதி வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், கொரோனா தொற்று போன்ற பேரிடர்கள் நீங்க வேண்டியும் இஸ்லாமியர்கள் சிறப்பு துஆ செய்தனர்.

    • அமைதி, ஆரோக்கியம், சமாதானம் போன்றவற்றை வலியுறுத்தி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
    • ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

    சென்னை:

    இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான பண்டிகை ரம்ஜான் ஆகும். ஈகைத் திருநாளாக கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை இஸ்லாமிய நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதமாக வரும் ரமலான் மாதத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் நோன்பு கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் ஐந்து கோட்பாடுகளில் ஒன்றாகும்.

    ரம்ஜான் என்று அழைக்கப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை ரமலான் மாதம் 29 அல்லது 30 நாட்கள் நோன்பு நோற்ற பிறகு உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது.

    அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கோவை, ஈரோடு, திருச்சி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் அமைதி, ஆரோக்கியம், சமாதானம் போன்றவற்றை வலியுறுத்தி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    "ஈத் புனித ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கிறது. இந்த பண்டிகை அன்பு, இரக்கம் மற்றும் பாசம் போன்ற உணர்வுகளை பரப்புகிறது. ஈத் ஒற்றுமை மற்றும் பரஸ்பர நல்லிணக்கத்தின் செய்தியை வழங்குகிறது. சமுதாயத்தில் சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்க உணர்வுகளை மேம்படுத்த இந்த நாளில் உறுதிமொழி எடுப்போம். ஈத்-உல்-பித்ரின் புனிதமான சந்தர்ப்பத்தில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

    • ஐ.ஐ.எம். அமைப்பின் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
    • பள்ளியின் இமாம் நெய்னா முகமது தொழுகையை நடத்தினார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரையில் அல்ஜாமிஉல் அஸ்கர் பெரிய பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் என்கிற ஐ.ஐ.எம். அமைப்பின் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பள்ளியின் இமாம் நெய்னா முகமது தொழுகையை நடத்தினார்.

    கதீபு அப்துல் மஜீத் மஹ்லரி குத்பா பிரசங்கம் செய்தார். பள்ளிவாசல் தலைவர் அபுல் ஹசன் கலாமி, துணைத் தலைவர்கள் நவாஸ் அகமது, லெப்பை தம்பி, செயலாளர் துணி உமர், துணைச் செயலாளர் கரூர் செய்யது முகமது மற்றும் பெண்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியின் போது தொழுகையில் பங்கேற்றவர்கள் பொது நலனுக்காக நிதி வழங்கினர். இதன் மூலம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்து 157 மற்றும் 1 கிராம் தங்க நாணயம் ஆகியவை கிடைத்துள்ளதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

    • மதினா பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நோன்பு திறப்பு மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    கடலூர்:

    கடலூர் துறைமுகம் மாலுமியார்பேட்டை மதினா பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நோன்பு திறப்பு மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாநகர அவைத்தலைவர் பழனிவேல், பொருளாளர் ராஜேந்திரன், மாநகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, மண்டல குழு தலைவர்கள் இளையராஜா, பிரசன்னா, மாநகராட்சி கவுன்சிலர்கள் பாலசுந்தர் மற்றும், விஜயலட்சுமி செந்தில், வட்ட செயலாளர்கள் நவ்ஷத் அலி, வெங்கடேஷ், ராஜேஷ், பகுதி அவைத் தலைவர் சண்முகம், மனோகர், தகவல் தொழில்நுட்ப அணி பிரவின், கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சமூகத்தினர் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த ரமலான் வாழ்த்து.
    • இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வில் என்றென்றும் இன்பமும், நலமும் நிறைந்து இனிமை பெருகட்டும்!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ரமலான் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    மனிதநேயம் போற்றும் ரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கின்றேன்.

    அன்பை, அடக்க உணர்வை, எளிமையை போதித்த அண்ணல் நபிகள் பெருமான், "அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்கும்போது நீ மட்டும் சாப்பிடாதே; உன் உழைப்பில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழைகளுக்குக் கொடு" என போதித்து, மானுடம் அனைத்தும் பேரன்பால் பிணைக்கப்பட வேண்டியது என்பதை எடுத்துக் காட்டியவர். சமத்துவம், சகோதரத்துவம் என்ற உன்னத லட்சியங்களை உலகத்திற்கு தனது ஈகையாக வழங்கிச் சென்றவர்.

    திராவிட முன்னேற்றக் கழகமும், நமது திராவிட மாடல் அரசும் நபிகள் பெருமானார் காட்டிய சமத்துவ சமுதாயம் அமைக்கும் பணியில் சமரசமின்றித் தனது பயணத்தை தொடருகிறது; என்றென்றும் தொடரும்!

    நபிகள் பெருமகனார் போதித்த நெறி வழி நின்று, நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, ரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சமூகத்தினர் அனைவருக்கும் எனது உள்ளம் நிறைந்த ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வில் என்றென்றும் இன்பமும், நலமும் நிறைந்து இனிமை பெருகட்டும்!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • வெள்ளாடு, குரும்பாடு, செம்மறி ஆடு, ராம்நாடு, மலை ஆடு உள்ளிட்ட 7 வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
    • செஞ்சி வாரசந்தை வெள்ளாடுகளுக்கு பெயர் பெற்றதால் வியாபாரிகள் அதிகம் ஆடுகளை வாங்குவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் காய்கறி, ஆடு, மாடு சந்தை கூடுவது வழக்கம்.

    இதில் ஆட்டுச் சந்தை பிரபலமானது. இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று வார சந்தையில் ஆட்டு சந்தை கூடியது. அதிகாலை 2 மணிக்கே விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்து விட்டனர். அதேபோல் செங்கம், திருவண்ணாமலை, வேலூர், சேத்துப்பட்டு, ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் ஆடுகளை கொண்டு வந்தனர்.

    மேலும் சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், சேலம், வேலூர், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மினி லாரிகளில் நேற்று முன்தினமே வந்து விட்டனர். ஆட்டு சந்தை தொடங்கியதும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கினர்.

    வெள்ளாடு, குரும்பாடு, செம்மறி ஆடு, ராம்நாடு, மலை ஆடு உள்ளிட்ட 7 வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. செஞ்சி வாரசந்தை வெள்ளாடுகளுக்கு பெயர் பெற்றதால் இங்கு வியாபாரிகள் அதிகம் ஆடுகளை வாங்குவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    ஒரு செம்மறி ஆடு (15 கிலோ எடை) கடந்த வாரம் ரூ.6 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ. 9 ஆயிரம் முதல் 11 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. மற்ற வகை ஆடுகள் ஒன்று ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்பட்டன. வாரச்சந்தையில் சுமார் ரூ.5 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் ஆடுகளை வாங்கிச்சென்றனர். விலை சற்று கூடுதலாக கிடைத்ததால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

    மேலும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் வியாபாரிகள் அதிகமாக வருவார்கள் என சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர். அளவுக்கு அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் விலையும் சிறிது அதிகமாக இருந்ததாகவும் வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

    • மேலப்பாளையத்தில் திங்கட்கிழமை தோறும் மாட்டு சந்தை நடந்து வருகிறது.
    • ஒவ்வொரு வாரமும் மேலப்பாளையம் சந்தையில் சுமார் ரூ. 2 கோடி வரை விற்பனை நடைபெறும்.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை சந்தைகளில் நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தையும் ஒன்றாகும். இங்கு ஆடுகளுடன், மாடு மற்றும் கருவாடு விற்பனை நடந்து வருகிறது. அந்த வகையில் வாரந்தோறும் தோறும் திங்கட்கிழமை மாட்டு சந்தையும், செவ்வாய் கிழமை தோறும் ஆட்டுச்சந்தையும் நடந்து வருகிறது.

    மாடுகளுடன் குவிந்த வியாபாரிகள்

    வழக்கமாக ஒவ்வொரு வாரமும் சுமார் ரூ. 2 கோடி வரை விற்பனையாகும். ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும், திருவிழா நாட்களிலும் விற்பனை மேலும் அதிகரித்து காணப்படும்.

    இந்நிலையில் இன்னும் 4 நாட்களில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இன்று மேலப்பாளையம் மாட்டு சந்தைக்கு ஏராளமான வாகனங்களில் ஆயிரக்க ணக்கான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதற்காக நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் கொண்டு வரப்பட்டது. அவைகள் தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்பட்டது. இதற்காக இன்று 100-க்கணக்கான சில்லறை வியாபாரிகள் சந்தையில் திரண்டனர். மேலும் பொதுமக்களும் அதிகளவில் வந்திருந்தனர். இதனால் மேலப்பாளையம் சந்தை இன்று களைகட்டி காணப்பட்டது.

    • ஈஸ்டர் தினத்தையொட்டி கிறிஸ்தவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
    • கொச்சியில் நடந்த பாரதிய ஜனதா கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கிறிஸ்தவ மக்களிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி அவர்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தையொட்டி கேரள மாநில பாரதிய ஜனதா தலைவர்கள், நிர்வாகிகள், பிஷப்புகள் மற்றும் கிறிஸ்தவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். சினேக யாத்திரை என்ற பெயரில் நடந்த இந்த முயற்சிக்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாக பாரதிய ஜனதாவினர் தெரிவித்தனர்.

    இதன் தொடர்ச்சியாக அடுத்தவாரம் 22-ந்தேதி கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகையையொட்டி பாரதிய ஜனதாவினர் முஸ்லீம்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவிக்க முடிவு செய்து உள்ளனர்.

    கொச்சியில் நடந்த பாரதிய ஜனதா கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

    ×