search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway Station"

    • கொள்முதல் நிலையம் ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    • நெல் மூட்டைகள் தேக்கமடைவது முழுவதுமாக தவிர்க்கப்படும்

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கியது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப க்கழகம் மூலமாக 21 வேகன்களில் 1000 டன் நெல் மூட்டைகள் ஈரோடு க்கு அனுப்பி வைக்க ப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று செய்தியாளரிடம் ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் பொது ச்செயலாளர் இளவரி தெரிவித்ததாவது:-

    சரக்கு கொட்டகை பயன்பாட்டிற்கு வருவதற்கு பெரிதும் துணை நின்ற ரெயில்வே அதிகாரி ஹரிக்குமார், அவர்களுக்கும் திருச்சி கோட்ட மேலாளருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    மேலும் திருத்துறைப்பூண்டியில் ரயில் தலைப்பு (வேகன்) கொண்டு வர பெரு முயற்சி எடுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    வேகன் இயக்கம் மூலம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைவது முழுவதுமாக தவிர்க்கப்படும், கொள்முதல் நிலையம் ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    மேலும் லாரி உரிமை யாளர்கள் சங்கத்தின் சார்பில் சில நியாயமான கோரிக்கைகள் வைக்கப்படுகிறது. அவர்களின் நியாயமான கோரிக்கை அரசின் கவனத்திற்கு சார்பில் கொண்டு செல்லப்படும் என்றார்.

    • ரெயில் மற்றும் நடைமேடைகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • ரெயில்வே பாதுகாப்பு போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பூர்:

    கேரள மாநிலம் கொச்சி களமச்சேரியில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடந்த அரங்கத்தில் நேற்று குண்டு வெடித்தது. இதில் பலி மற்றும் காயம் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான ரெயில்வே நிலையம் மற்றும் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    இதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை ரெயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் மாதேஸ்வரன் மற்றும் துணை உதவி ஆய்வாளர் லிஜோ மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். மேலும் ரெயில் மற்றும் நடைமேடைகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இன்று 2-வது நாளாக திருப்பூர் ரெயில் நிலையம் முழுவதும் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 24-ந் தேதி காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சென்றடையும்.
    • முன்பதிவு இல்லாத 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல்- காரைக்குடி இடையே தஞ்சாவூர், திருச்சி வழியாக சிறப்பு ரெயில் இன்று, நாளை என 2 நாட்கள் இயக்கப்படுகிறது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (ஞாயிற்றுகிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண்.06039) எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், திருச்சி, புதுக்கோட்டை வழியாக நாளை (திங்கள்கிழமை) காலை 9.30 மணிக்கு காரைக்குடி சென்று அடையும்.

    இந்த ரெயில் மறுமார்க்கமாக (வண்டி எண்.06040) நாளை (திங்கள்கிழமை) இரவு 9.30 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டு இதே வழித்தடத்தில் சென்று 24-ந் தேதி காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சென்றடையும்.

    இந்த ரெயிலில் முன்பதிவு செய்யும் வசதியுடன் 2 அடுக்கு ஏசி 2 பெட்டிகள், 3 அடுக்கு ஏசி 10 பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 6 பெட்டி, முன்பதிவு இல்லாத 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லை ரெயில் நிலையத்தில் தற்போது 5 நடை மேடைகள் பயன்பாட்டில் உள்ளது.
    • ரெயில்களை கையாள முடியாமல் நெல்லை ரெயில் நிலையம் திணறி வருகிறது.

    நெல்லை:

    தென்மாவட்ட ரெயில் நிலையங்களில் முக்கியமானது நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம். நெல்லை ரெயில் நிலையத்தில் தற்போது 5 நடை மேடைகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் காலை மற்றும் மாலை நேரங்களில் ரெயில்களை கையாளுவதில் கடும் நெருக்கடி ஏற்படுகிறது.

    நெல்லை ரெயில் நிலையத்தின் தெற்கு பகுதியில் திருச்செந்தூர், செங்கோட்டை, நாகர்கோவிலில் இருந்து வரும் ரெயில்கள் மற்றும் வடபகுதியில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து தெற்கு நோக்கி வரும் ரெயில்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் அணிவகுத்து வருவதால் 5 நடைமேடைகள் போதுமானதாக இல்லை.

    தற்போது சென்னை நோக்கி செல்லும் ரெயில்களான நெல்லை எக்ஸ்பிரஸ் முதலாவது நடை மேடையிலும், அனந்தபுரி- கன்னியாகுமரி ரெயில்கள் 2-வது நடைமேடையிலும், நாகர்கோவில் - நெல்லை ரெயில் 3-வது நடைமேடையிலும், நெல்லையில் இருந்து பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் 4-வது நடைமேடையிலும், திருச்செந்தூர் - நெல்லை ரயில் 5-வது நடைமேடையையும் வந்து செல்கின்றன.

    பின்னர் செங்கோட்டையில் இருந்து நெல்லை வரும் ரெயில் திருச்செந்தூர் ரெயிலுக்கு பின்பாக 5-வது நடைமேடையில் மெதுவாக கொண்டு வந்து நிறுத்தப்படுகிறது. இதே நேரத்தில் தான் தூத்துக்குடி - நெல்லை ரெயில், சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ், ஈரோடு - நெல்லை ரெயில் ஆகியவை வரிசை கட்டி நிற்கின்றன.

    தற்போது நெல்லை - சென்னை வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதால் காலை நேரத்தில் ரெயில்களை கையாள முடியாமல் நெல்லை ரெயில் நிலையம் திணறி வருகிறது.

    எனவே நெல்லை ரெயில் நிலையத்தில் உள்ள இட நெருக்கடியை குறைப்பதற்கு கூடுதல் நடைமேடைகளை அமைத்து நெல்லையோடு நிற்கும் பாலருவி ரெயிலை தூத்துக்குடிக்கும், ஈரோடு நெல்லை ரெயிலை செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

    இது குறித்து செங்கோட்டை பண்பொழியை சேர்ந்த ரெயில் பயணி சுரேஷ் கூறுகையில், பாலக்காடு - நெல்லை பாலருவி விரைவு ரெயிலை தூத்துக்குடிக்கு நீட்டிக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் உடனடியாக இந்த நீட்டிப்பை செய்ய வேண்டும்.

    மதுரைக்கு ரெயில்களே இல்லாத ஒரே வழித்தடமான அம்பை வழியாக ஈரோடு - நெல்லை ரெயிலை செங்கோட்டைக்கு நீடிக்க வேண்டும். அப்போதுதான் செங்கோட்டை நாகர்கோவில், திருச்செந்தூரில் இருந்து நெல்லை வரும் ரெயில்களையும் வடக்கில் இருந்து நெல்லை நோக்கி வரும் ரெயில்களையும் தாமதம் இல்லாமல் ரெயில் நிலையத்தின் உள்ளே வர முடியும். இவ்வாறு செய்வதால் திருச்செந்தூர், நெல்லை மற்றும் செங்கோட்டை நெல்லை ரெயில் வழித்தடத்தில் உள்ள பயணிகள் நெல்லை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரெயில்களை பிடிப்பதற்கு வசதியாக அமையும். மேலும் கூடுதல் நடைமேடைகள் அமைத்தால் தான் வருங்காலங்களில் நெல்லையில் இருந்து கூடுதல் ரெயில்கள் இயக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • ரெயில்வே போலீசார் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர்.

    விழுப்புரம்:

    நெல்லை ரெயில் நிலையத்திலிருந்து நேற்று வந்தே பாரத் ரெயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலில் அரியலூரில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் ஆகியோரும் தனித்தனியே அமர்ந்து வந்தனர். இந்த ரெயிலை வரவேற்க விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ெரயில் நிலை யத்தில் பா.ஜ.க.வினர் மற்றும் விடுதலை சிறுத்தை கள் கட்சியினர் ஒரே நேரத்தில் குவிந்ததால், திண்டிவனம் போலீசார் மற்றும் ரெயில்வே போலீ சார் சுமார் 100-க்கும் மேற் பட்டோர் குவிக்கப்பட்டனர்.

    இதில் விழுப்புரம் எம்.பி. துரை. ரவிக்குமார், பா.ஜ.க.மாவட்ட தலைவர் ராஜேந்திரன்,பா.ஜ.க. மாநில வர்த்தக அணி நிர்வாகி தரம் குழுமம் சின்ராஜ், பா.ஜ.க. நகரத் தலைவர் வெங்கடேச பெருமாள்,மாவட்ட பொது செயலாளர் எத்திராஜ், மாநில நிர்வாகி வக்கீல் பாலசுப்ரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக பா.ஜ.க.வினர் பொது மக்களுக்கு இனிப்பு கள் வழங்கி கொண்டாடினர். மேலும் ராகபைரவி கலைக் கூடத்தின் கலை நிகழ்ச்சியும் திண்டிவனம் ரயில்வே நிலையத்தில் நடைபெற்றது. வந்தே பாரத் ரெயில் முன் நின்று பொது மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    • ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
    • அதிவிரைவு வண்டிகள் நின்று செல்லும் நிலையமாக விருத்தாச்சலம் சந்திப்பு உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் ெரயில்வே நிலையம் மாவட்டத்தில் மிக முக்கிய மான ெரயில்வே சந்திப்பு நிலையம் ஆகும். அருகில் இருக்கும் நெய்வேலி, பெண்ணாடம், வேப்பூர், திட்டக்குடி, தொழுதூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், தென்காசி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல விருத்தாசலம் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் விழுப்புரம் -திருச்சி இடையே கார்டு லைனில் ஓடும் அனைத்து ெரயில்களும் நின்று செல்லும் முக்கியமான நிலையமாக விருத்தாசலம் உள்ளது.சென்னை -மதுரை இடையே ஓடும் தேஜஸ் விரைவு ெரயிலை தவிர அனைத்து விரைவு மற்றும் அதிவிரைவு வண்டிகள் நின்று செல்லும் நிலையமாக விருத்தாச்சலம் சந்திப்பு உள்ளது. இந்நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி திருநெல்வேலி- சென்னை இடையே புதிய வந்தே பாரத் ெரயிலை தொடங்கி வைத்தார். இந்த ெரயிலின் கால அட்டவணையில் விருத்தாசலம் ெரயில் நிலையத்தில் வண்டி நிற்காது என்ற அறிவிப்பு விருத்தாசலம் பயணிகளி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கடலூர் மற்றும் அருகில் இருக்கும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள எந்த நிலையத்திலும் நிற்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    விழுப்புரம் -திருச்சி இடையே உள்ள சுமார் 180 கிலோமீட்டர் தொலைவிற்கு எந்த நிலையத்திலும் நிற்காது என்ற அறிவிப்பும் பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே விருத்தாசலம் ெரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல வேண்டும் என ரயில்வே அமைச்சர், இந்திய ெரயி ல்வே, தென்னக ெரயில்வே மற்றும் ெரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு விருத்தாச்ச லம் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதுரை ெரயில் நிலையத்தில் தூய்மை விழிப்புணர்வு வார விழா நடந்தது.
    • மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கர் தொடங்கி வைத்தார்.

    மதுரை

    மதுரை கோட்டத்தில் உள்ள ெரயில் நிலையங்களில் தூய்மை விழிப்புணர்வு இரு வார விழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை ெரயில் நிலையத்தில் தூய்மை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை ெரயில்வே மருத்துவமனை கூடுதல் முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கர் தொடங்கி வைத்தார்.

    பேரணியில் மதுரை கல்லூரி, சரஸ்வதி நாராயணன் கல்லூரி, தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த 120 தேசிய மாணவர் படைப்பிரிவு வீரர்கள் கலந்து கொண்டு தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மதுரை கோட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேலாளர் மகேஷ் கட்கரி, உதவி சுகாதார அதிகாரி சுரேஷ், தேசிய மாணவர் படைப்பிரிவு அலுவலர்கள் மதுரை கல்லூரி கார்த்திகேயன், சரஸ்வதி நாராயணன் கல்லூரி கார்த்திகேயன், தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி ஞானப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கட்ட பொம்மன் சிலை அருகில் இருந்து பேரணியாக சென்று ெரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

    மதுரை

    மதுரை மாநகர் கம்யூனிஸ்டு சார்பில் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ரெயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடந்தது.

    மதுரை மாவட்ட செய லாளர் கணேசன் தலைமை தாங்கினார். வெங்கடேசன் எம்.பி. போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில குழு உறுப்பினர் விஜய ராஜன் கலந்து கொண்டார். பெரியார் நிலையம் கட்ட பொம்மன் சிலை அருகில் இருந்து பேரணியாக சென்று ெரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

    பெட்ரோல், டீசல். சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசிய சமையல் பொருட்களின் விலை உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம், பெரு முதலாளிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் தள்ளுபடி ஆகியவற்றை கண்டித்து போராட்டம் நடந்தது. மேலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், கவுன்சிலர்கள் குமரவேல், ஜென்னியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.

    பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    • துப்புரவு பணிக்கான பொருட்கள் வைத்திருந்த அறையில் இருந்து புகை வந்துள்ளது.
    • ஊழியர்கள் பணிக்கு வந்து அறையை திறப்பதற்கு முன்பே, தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் காலை நேரத்தில் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து வரும் ரெயில்கள், கேரளாவில் இருந்து வரும் ரெயில்கள், இங்கிருந்து புறப்படும் ரெயில்கள் போன்றவற்றால், பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

    அந்த நேரத்தில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நடைமேடைகளை சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுவார்கள். காலையிலேயே பணிகளை தொடங்கும் அவர்கள், தங்களது பணிக்கான உபகரணங்கள் மற்றும் பிளிச்சிங் பவுடர், ஆசிட் போன்றவற்றை ரெயில் நிலையத்தில் படிக்கட்டின் கீழ் உள்ள அறையில் வைத்துள்ளனர்.

    காலையில் பணிக்கு வந்ததும், அந்த அறை கதவை திறந்து பொருட்களை எடுத்து செல்வது வழக்கம். பின்னர் மாலையில் அதனை அறையில் வைத்துச் செல்வார்கள்.

    இந்நிலையில் இன்று காலை 6.50 மணியளவில் ரெயில் நிலையம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த நேரத்தில் துப்புரவு பணிக்கான பொருட்கள் வைத்திருந்த அறையில் இருந்து புகை வந்துள்ளது. இதனை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    புகை மூட்டம் வந்ததை பார்த்த பயணிகள் பலரும் அலறியடித்து அங்கிருந்து ஓடினர். இதனால் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிகளும் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் அங்கு விரைந்து வந்தனர். இதற்கிடையில் துப்புரவு பணியாளர்களும் அங்கு வந்து சேர்ந்தனர்.

    தொடர்ந்து அந்த அறையின் பூட்டை திறந்தனர். அப்போது உள்ளே பொருட்கள் தீப்பிடித்து எரிவது தெரியவந்தது. இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

    இந்நிலையில் அங்கு வந்த தீயணைப்பு படையினர் மேலும் தீ பரவாமல் நடவடிக்கை எடுத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட அறையில் ஒரு சுவிட்ச் மட்டுமே உள்ளது. அந்த அறை எப்போதும் பூட்டப்பட்டே இருக்கும். காலையில் துப்புரவு பணிக்கான பொருட்கள் எடுக்கப்பட்ட பிறகு அறையை பூட்டி விடுவார்கள்.

    இன்று காலை ஊழியர்கள் பணிக்கு வந்து அறையை திறப்பதற்கு முன்பே, தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் ஷிவ் நகரை சேர்ந்தவர் சுரேஷ் பிரசாத் மிஸ்ரா(வயது 70). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர்.
    • நேற்று ராமேஸ்வரத்திற்கு வந்த சுரேஷ் பிரசாத் மிஸ்ரா உள்ளிட்டவர்கள் இரவில் கன்னியாகுமரிக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.

    நெல்லை:

    உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் ஷிவ் நகரை சேர்ந்தவர் சுரேஷ் பிரசாத் மிஸ்ரா(வயது 70). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவர் தனது மனைவி மற்றும் உறவினர்கள் 21 பேருடன் சுற்றுலா புறப்பட்டுள்ளார். நேற்று ராமேஸ்வரத்திற்கு வந்த அவர்கள் இரவில் கன்னியாகுமரிக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் ராமேஸ்வரம்-குமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று இரவு அவர்கள் ராமநாதபுரத்தில் இருந்து ஏறியுள்ளனர். அப்போது பிரசாத் மிஸ்ரா மட்டும் தனது மனைவியுடன் தனி பெட்டியில் பயணம் செய்துள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்தடைந்தது.

    அப்போது, நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்துவிட்டதாக நினைத்து தம்பதி கீழே இறங்கி விட்டனர். உடனே அங்கிருந்த ரெயில்வே போலீசார் விபரத்தை கூறவே, மீண்டும் தம்பதி தாங்கள் வந்த ரெயிலில் ஏற முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் ரெயில் புறப்பட்டு விட்டதால் எதிர்பாராதவிதமாக பிரசாத் மிஸ்ரா நடைமேடைக்கும், ரெயிலுக்கும் இடையே விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்த போலீசார் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாபநாசம் அரசு பள்ளி தேசிய மாணவர் படை உள்ளிட்டோர் இணைந்து தூய்மை பணிகள் மேற்கொண்டனர்.
    • பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலிகபிலன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ெரயில் நிலைய வளாகத்தில் பாபநாசம் ரயில் பயணிகள் சங்கம் மற்றும் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை உள்ளிட்டோர் இணைந்து தூய்மை பணிகள் மேற்கொண்டனர்.

    தூய்மை பணியை ஒட்டி தேசிய மாணவர் படையினர் ரெயில் நிலைய நடைமேடை பகுதியில் தேங்கியிருந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி, தூய்மை செய்தனர்.

    மேலும் ெரயில் தண்டவாள பகுதிகளில் தேங்கியிருந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அள்ளியும், வளர்ந்திருந்த செடி, கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தியும் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

    பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலிகபிலன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

    தஞ்சை சரக ெரயில்வே வணிக ஆய்வாளர் ராம்குமார், ெரயில்வே முதுநிலை பொறியாளர் (பணிகள்) பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த பணிகளை உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார், பட்டதாரி ஆசிரியர் சரவணன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளர் சரவணன் செய்திருந்தார்.

    • பயணிகள் கடும் அவதி!
    • ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்-

    அரக்கோணம்:

    அரக்கோணம் ெரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அவர்கள் பயணிக்க வேண்டிய ரெயிலுக்கு செல்ல ரெயில்கள் எந்தெந்த பிளாட்பாரத்தில் வருகிறது என்பது குறித்து சரியான அறிவிப்பு இல்லை.

    சமீப காலமாக அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகள் ரெயிலுக்கு பிளாட்பாரங்களை மாற்றி அனுமதிப்பது பயணிகளை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்குகிறது.

    நேற்று காலை சென்னை-திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் அரக்கோணம் ரெயில் நிலையத்திலிருந்து காலை 9.15 க்கு புறப்படுவது வழக்கம். இதனால் அந்த ரெயிலில் செல்லும் பயணிகள் வழக்கமாக வரும் 3-ம் பிளாட்பாரத்தில் காத்திருந்தனர்.

    திடீரென இந்த ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தை நெருங்கும் போது முதலாம் பிளாட்பாரத்திற்கு வந்து சேரும் என அறிவித்ததால் பயணிகள் கடும் அதிர்ச்சி க்குள்ளாகினர்.

    உடனடியாக 3-வது பிளா ட்பாரத்தில் காத்திருந்த பயணிகள் குறுகிய நேரத்தில் மேம்பாலத்தை பயன்படுத்தி விரைவாக செல்ல வாய்ப்பு இல்லாததால் வயதான வர்கள், பெண்கள் படிக்கட்டில் ஏறி வருவதற்குள் ரெயில் வந்து விடுமே என அச்சத்தில் தண்டவாளத்தில் இறங்கி முதலாம் பிளாட்பாரத்தில் ஏற தொடங்கினர்.

    இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில் முதலாம் பிளாட்பா ரத்தை நெருங்கும் நிலையில் பெண்கள், வயதானவர்கள் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ரெயிலானது அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வருவதற்கு முன் எந்த பிளாட்பாரத்திற்கு வருகின்றது என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ×