search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் குவிப்பு"

    • ராஜ்குமாருக்கும் 5 பேர் கொண்ட கும்பலுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • ராஜ்குமாரை தாக்கிய கும்பல் அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி சென்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி அடுத்த ஆட்டுக்காரன்பட்டி பகுதியில் 100க்கும் மேற்பட்ட அருந்ததியர் இன மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணிக்கு மேல் அருந்ததியர் காலனியில் 5 பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்து அங்கு வசித்து வந்த சுப்பிரமணி மகன் ராஜ்குமார் என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். பின்னர் ராஜ்குமாருக்கும் 5 பேர் கொண்ட கும்பலுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் 5 நபர்களும் சேர்ந்து ராஜ்குமாரை சரமாரியாக தாக்கினர்.

    அதில் ஒரு நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜகுமாரி வெட்ட சென்றபோது அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் கூச்சலிடவே ஆட்டுக்காரன்பட்டி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தடுத்து 5 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்தனர். அதற்குள் ராஜ்குமாரை தாக்கிய கும்பல் அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி சென்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட ராஜ்குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை செய்ததில் தொவரந்தொட்டி, பகுதியைச் சார்ந்த தெரிந்த நபர்கள் 5 பேர் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இந்த சம்பவத்தில் இரு தரப்பினரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே ஆட்டுக்கார பட்டியில் ஆதி திராவிட நலத்துறை மூலம் இலவச வீட்டு மனை பட்டாவிற்காக ஒதுக்கிய நிலம் சம்பந்தமாக இரு சமூகத்தினர் இடையே பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில் தற்போது அந்த பகுதிக்குள் புகுந்து 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வாலிபரை தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திட்ட அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
    • அசம்பாவிதம் நடைபெறா மல் இருக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்‌.

    கடலூர்:

    கடலூர் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிறுவனத் தலைவர் வேல்முருகன் தலைமையில் முற்றுகை போராட்டம் கடலூர் பச்சையாங்குப்பம் இரட்டை ரோட்டில் இருந்து ஊர்வலமாக சென்று சிப்காட் திட்ட அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இந்த நிலையில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கவுன்சிலர் கண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டன. ஆனால் த.வா.க வினர், எங்கள் போராட்டம் தொடரும் என திட்டவட்ட மாக தெரிவித்ததை தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

    இந்த நிலையில் போலீசார் சார்பில் முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு, அதற்கு பதில் கடலூர் உழவர் சந்தை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு அனுமதி அளித்தனர். இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆயிரக்க ணக்கானோர் காலை முதல் போராட்ட த்தில் கலந்து கொள்வதற்கு திரண்டு வந்தனர். இதனைத் தொட ர்ந்து கடலூர்,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பே ட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் ஆயிரம் போலீசார் கடலூர் பகுதியில் குவிக்கப்பட்டனர் . மேலும் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அசம்பாவிதம் நடைபெறா மல் இருக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சிப்காட்டில் இயங்கி வரும் தொழி ற்சாலைகளை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்மு ருகன் எம். எல்.ஏ தலைமை தாங்கி கண்டன உரை ஆற்றினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் கவுன்சிலர் கண்ணன் வரவேற்றார். இதில் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் திருமால் வளவன், மாநில அமைப்பு செயலாளர் கண்ணன், மாநில அமைப்பு குழு உறுப்பினர் ஆனந்த் , மாநகர மாவட்ட செயலாளர் லெனின், மாநகராட்சி கவுன்சிலர் அருள் பாபு உட்பட ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர் முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். இந்த போராட்டத்தால் கடலூரில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. த.வா.க.வினரின் போராட்டம் காரணமாக கடலூரில் கடும் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார் அதனை சரி செய்தனர். போராட்டத்தால் கடலூர் ஸ்தம்பித்தது.

    • ரெயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • ரெயில்வே போலீசார் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர்.

    விழுப்புரம்:

    நெல்லை ரெயில் நிலையத்திலிருந்து நேற்று வந்தே பாரத் ரெயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலில் அரியலூரில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் ஆகியோரும் தனித்தனியே அமர்ந்து வந்தனர். இந்த ரெயிலை வரவேற்க விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ெரயில் நிலை யத்தில் பா.ஜ.க.வினர் மற்றும் விடுதலை சிறுத்தை கள் கட்சியினர் ஒரே நேரத்தில் குவிந்ததால், திண்டிவனம் போலீசார் மற்றும் ரெயில்வே போலீ சார் சுமார் 100-க்கும் மேற் பட்டோர் குவிக்கப்பட்டனர்.

    இதில் விழுப்புரம் எம்.பி. துரை. ரவிக்குமார், பா.ஜ.க.மாவட்ட தலைவர் ராஜேந்திரன்,பா.ஜ.க. மாநில வர்த்தக அணி நிர்வாகி தரம் குழுமம் சின்ராஜ், பா.ஜ.க. நகரத் தலைவர் வெங்கடேச பெருமாள்,மாவட்ட பொது செயலாளர் எத்திராஜ், மாநில நிர்வாகி வக்கீல் பாலசுப்ரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக பா.ஜ.க.வினர் பொது மக்களுக்கு இனிப்பு கள் வழங்கி கொண்டாடினர். மேலும் ராகபைரவி கலைக் கூடத்தின் கலை நிகழ்ச்சியும் திண்டிவனம் ரயில்வே நிலையத்தில் நடைபெற்றது. வந்தே பாரத் ரெயில் முன் நின்று பொது மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • இவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டால் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக் கப்படுவார்கள்.

    ராமநாதபுரம்

    பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி தியாகி இமானு வேல் சேகரன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்ப டுவதையொட்டி பாது காப்பு பணியில் 8 ஆயி ரம் போலீசார் ஈடுபடுத் தப்பட உள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்தார்.

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானு வேல் சேகரன் நினைவு தினம் நாளை மறுநாள் (11- ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியையொட்டி மாவட்டம் முழுவதும் விரி வான பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 3 போலீஸ் டி.ஐ.ஜி.க்கள், 25 போலீஸ் சூப்பிரண்டுகள், 30 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 70 துணை சூப்பிரண்டுகள் மற்றும் உ களை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக் கூடும் என்று கண்டறியப் பட்ட 166 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் தடையை மீறி யாரும் வாகனங்களில் செல்லவோ, வரவோ கூடாது. இதனை மீறி சென்றால் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    விழா நடைபெறும் பகுதி உள்ளிட்ட பரமக்குடி முழுவதும் 200 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மாவட்டம் முழுவதும் 67 இடங்களில் வீடியோ காமிரா மூலம் வாகனங்க ளில் வருபவர்கள், வாக னங்களில் இருப்பவர்கள் பதிவு செய்து கண்கா ணிக்கப்பட உள்ளனர். நினைவிடத்திற்கு எக் காரணம் கொண்டு யாரும் இருசக்கர வாகனங்களில் வரக்கூடாது. இதனை மீறி யாராவது வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கடந்த காலங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட வர்கள் என கண்டறியப்பட்ட 350 பேர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ஓராண்டுக்கு குற்ற செயலில் ஈடுபடமாட் டோம் என்ற உறுதிமொழி பிணைய பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டால் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக் கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விவசாயிகள் அந்த பகுதியில் ஒன்று திரண்டு போரா ட்டம் நடத்தினர்.
    • இதையடுத்து சிவகிரி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே மாரப்பன் பாளையம் கன்னிமார் தோட்டம் என்ற இடத்தில் எல். பீ .பி. வாய்க்கால் செல்கிறது

    இந்த வாய்க்காலின் இடது கரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 200 மீட்டருக்கு பக்க வாட்டு தடுப்பு சுவர் அமைக்க முடிவு செய்யபட்டு பணிகள் தொடங்கியது.

    இதற்கு அந்த பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வாய்க்காலில் கான்கிரீட் சுவர் அமைக்க கூடாது என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பணிகள் நிறுத்த ப்பட்டது.

    இந்நிலையில் நேற்று அப்பகுதியில் மீண்டும் வாய்க்கால் பக்கவாட்டு தடுப்பு சுவர் வேலை தொடங்கப்ப்பட்டதாக கூறப்படுகிறது. இதை பற்றி தகவல் கிடைத்ததும் விவசாயிகள் அந்த பகுதியில் ஒன்று திரண்டு போரா ட்டம் நடத்தினர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், ஈரோடு நீர்வள துறை செயற் பொறியாளர் திருமூர்த்தி, நீர்வள துறை உதவி செயற் பொறியாளர் ஜெய பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்து க்கு விரைந்து வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் விவ சாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் இங்கு கான்கிரீட் சுவர் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் போராட்டம் நடத்திய 20 விவசாயிகளை கைது செய்து சிவகிரி உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    அதை தொடர்ந்து போலீசாரின் பாதுகாப்பு டன் நீர்வளது றை உதவி பொறி யாளர் முருகேசன் முன்னி லை யில் தடுப்புச்சுவர் அமை க்கு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. பின்னர் மாலையில் அனை வரும் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் வாய்க்கா லின் இடது கரையில் பக்க வாட்டு தடுப்பு சுவர் அமைக்க கான்கிரீட் சுவர் அமைப்பதற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரி வித்தனர்.

    இதையடுத்து சிவகிரி பகுதியில் விவசாயி கள் ஒன்று திரண்டு இன்று மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து சிவகிரி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்ப ட்டது.

    • மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி பாதுகாப்பு பணிக்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • டிரோன்-சி.சி.டி.வி காமிரா மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரையில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நகர் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்தாவது:-

    மதுரை சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 10 நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    வருகிற 5-ந்தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் முக்கிய நிகழ்ச்சியில் பொதுமக்கள் கள்ளழ கரை வைகை ஆற்றுக்குள் இறங்கி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக இந்த வருடம் புதியதாக தேனி ஆனந்தம் சில்க்ஸ் பின் வாயில் எதிரில் தனிவழியும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்திற்கு கிழக்கே 50 மீட்டர் தொலைவில் தற்காலிக படிக்கட்டுகளும், ஓபுளா படித்துறை பாலத்தின் வடக்கு பகுதியின் அருகில் சாய்வுதளமும் அமைக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட வழிகளின் மூலமும் ஏற்கனவே வைகை ஆற்றின் தென்பகுதியில் ஓபுளாபடித்துறை அருகில் உள்ள படிக்கட்டுகள் மூலமும் பொதுமக்கள் மேற்படி வழிகளை பயன்படுத்தி ஆற்றுக்குள் இறங்கி தரிசனம் செய்யு மாறு முன்னேற் பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சாமி தரிசனம் செய்ய வரும் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கி சாமி தரிசனம் செய்ய வேண்டி மாநகராட்சி அலுவலகம், தமுக்கம் மைதானம். எக்கோ பார்க். காந்தி மியூஷியம், ராஜாஜி பூங்கா, பொது பணித்துறை அலு வலகம் மற்றும் மீனாட்சி கல்லூரி ஆகியவைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    ஆகவே, பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சாலை யோரங்களில் அமர்வதையும், உறங்குவதையும் தவிர்த்து மேற்கண்ட இடங்களில் தங்கி சாமி தரிசனம் செய்ய வேண்டு மாறு கேட்டுக் கொள்ளப்படு கிறது.

    மேலும் ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்ப தற்காக அனைத்து நிகழ்வுகளையும் பொதுமக்கள் காணும் வகையில் தமுக்கம் நேரு சிலை, ஜி - டெக்ஸ் டெய்லர் கடை அருகிலுள்ள பெங்குவின் ஜெராக்ஸ் கடை, தமுக்கம் கருப்பசாமி கோவில், தமுக்கம் ரேமண்ட் ஷோரூம், அமெரிக்கன் கல்லூரி, ஆழ்வார்புரம் மூங்கில் கடை இறக்கத்திலுள்ள தேனி ஆனந்தம் சில்க்ஸ் நுழைவு வாயில், வைகை ஆற்றின் வட கரையில் உள்ள ஓபுளா படித்துறை பாலம், குமரன் சாலை, பந்தல்குடி அம்பேத்கர் சிலை ஆகிய 9 இடங்களிலும் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு உள்ளது. கள்ளழகரை மேற்படி எல்.இ.டி. திரைகள் மூலம் பார்த்து தரிசனம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    சித்திரை திருவிழா மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வின்போது பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளை கண்டறிய தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநகரங்களில் இருந்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் வரவழைக்கப்பட்டு மொத்தம் சுமார் 5 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

    மதுரை மாநகரில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகும் நபர்களின் முகங்களை ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள குற்றவாளிகளின், சந்தேக நபர்களின் புகைப்படத்து டன் ஒப்பீடு செய்து குற்ற வாளிகளை கண்டறியக் கூடிய தொழில்நுட்பத்தின் படி, குற்ற வாளிகள் மதுரை மாநகருக்குள் உள்ளே நுழைந்தாலே கண்டறிய முடியும்.

    மேலும் பீப்பிள் கவுண்ட் என்ற ஆப் மூலம் திருவிழா விற்கு வந்துள்ள பொது மக்களின் எண்ணிக்கை யை கணக்கிட்டு உடனுக்குடன் அந்த இடங்களில் பாது காப்பு பலப்படுத்துவதுடன் மாற்று ஏற்பாடுகள் செய்ய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை மாநகரில் கள்ளழகர் வரும் வழித்தடங்களில் மட்டும் 350 சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு. சி.சி.டி.வி. காமிரா பதிவுகள் 2 கட்டுப்பாட்டு அறைகளின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும் டிரோன் காமிராவில் படம்பிடிப்பது மட்டுமின்றி, ஒலிப்பெருக்கி வசதி செய்யப்பட்டு பொது மக்களுக்கு அறிவிப்புகள் வழங்கவும் முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர பல்வேறு மாவட்டங்களில் இருந்து 12 வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்கப்பிரிவு காவல் ஆளினர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோபிநாத்தை தாக்கிய மாணவனை பிடித்து விசாரித்தனர்.
    • சேலத்தில் உள்ள சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சக்கில் நத்தம் அருகே உள்ளது கப்பல் வாடி . இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் சக்கில் நத்தம் கிராமத்தை சேர்ந்த 12 -ம் வகுப்பு அறிவியல் பிரிவு படிக்கும் 2 மாணவர்கள் தைலம் தேய்த்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

    இந்த விளை யாட்டின்போது ஒரு மாணவர் மற்றொரு மாணவனின் நெற்றியில் தைலம் தடவி உள்ளான். இதனால் மாணவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.இதில் ஆத்திரம் அடைந்த ஒரு மாணவன் பள்ளியின் சமையல் அறை அருகே அடுப்பு எரிக்க வைக்கப்பட்டு இருந்த தென்னம் பாளையை எடுத்து கோபிநாத் என்ற மாணவனை தாக்கினார். இதில் படுகாயமடைந்த கோபிநாத் தாக்கப்பட்ட அதே வேகத்தில் அங்கேயே சுருண்டு கீழே விழுந்தார். அவருக்கு வலிப்பு நோய் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாக்கப்பட்ட அதிர்ச்சியில் வலிப்பு நோய் ஏற்பட்டு மாணவன் கோபிநாத் துடித்துள்ளார். இதையடுத்து சக மாண வர்கள் நடந்த சம்பவம் குறித்து ஆசிரியர்களிடம் கூறி உள்ளனர். உடனே அவர்கள் மாணவனை அங்கி ருந்து மீட்டு பர்கூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு மாணவன் கோபிநாத்தின் உடல் நிலையை பரிசோதித்த டாக்டர்கள் மாணவன் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த மாணவனின் கிராம மக்கள் மருத்துவமனையில் கூடியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை தாக்கிய மாணவனை பிடித்து விசாரித்தனர். பின்னர் சேலத்தில் உள்ள சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த மாணவன் கோபிநாத்தின் வீடும், அவனை தாக்கிய மாணவனின் வீடும் அருகருகே உள்ளது.இதனால் அந்த கிராமத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளதால் பர்கூர் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.
    • கண்காணிப்பு பணியில் 13 டிரோன் காமிராக்கள், 92 நிரந்தர காமிராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற 30-ந் தேதி சுதந்திரப் போராட்ட தியாகி முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்

    ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பல்வேறு சமுதாய அமைப்பினரும், பொது மக்கள் என 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனர்.

    இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கமுதி ஆயுதப்படை கூட்ட அரங்கில் தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் தலைமையில் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை முன்னிலை வகித்தார்.

    இதில் கோவை, ராமநாதபுரம் உட்பட 5 சரக டி.ஐ.ஜி.கள், 28 மாவட்டங்களை சேர்ந்த எஸ்.பி.க்கள் பங்கேற்றனர். பின்னர் நிருபர்களிடம் தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் கூறுகையில், தேவர் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆயிரம் போலீசார் இன்று (27-ந் தேதி) முதல் 30-ந் தேதி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    தடை செய்யப்பட்டுள்ள பகுதிகள், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் உத்தரவுகளை மீறி செயல்படும் வாகனங்கள் மீது கண்காணிப்பு காமிரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கண்காணிப்பு பணியில் 13 டிரோன் காமிராக்கள், 92 நிரந்தர காமிராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவில் திருப்பணிகள் முடிந்து, கடந்தாண்டு டிசம்பரில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • சிதம்பரம் சப் -கலெக்டர் அலுவலகத்தில் அமைதிக்கூட்டம் நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.

    கடலூர்

    விருத்தாசலம் அருகே மருங்கூர் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும்ஆடி மாதம் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம். கடந்த 5 ஆண்டு களுக்கு முன் கும்பாபிஷேகம் காரணமாக திருப்பணி தொடங்கியதால், தற்காலிகமாக திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டது. கோவில் திருப்பணிகள் முடிந்து, கடந்தாண்டு டிசம்பரில் கும்பாபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு தீமிதி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தர்மகர்த்தா சேதுபதி தரப்பினர் பாரம்பரிய முறைப்படி, 7 உபயதாரர்கள் தலைமையில் திருவிழா நடக்கும் என கூறினர். ஆனால் அதற்கு அந்த பகுதியைச் சேர்ந்த வசந்தன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, புதிதாக 18 உபயதாரர்களை நியமித்து அவர்கள் தலைமையில் திருவிழா நடத்த வேண்டும் என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளனர்.

    இந்நிலையில், தீமிதி திருவிழா நடத்துவதற்காக காப்பு கட்டும் நிகழ்ச்சி நடத்த மின்விளக்குகள், ஒலிப்பெருக்கிகள் ஆகி யவற்றை பொருத்திவிட்டு தர்மகர்த்தா சேதுபதி தரப்பினர் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். ஆனால் 7 உபயதாரர்கள் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்த வசந்தன் தரப்பினர் பூட்டின் மேல் மேலும் பூட்டை போட்டு கோவிலை பூட்டினர். இதனால் இருதப்புக்குமிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த விருத்தாசலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் தலைமையிலான போலீசார் இருதரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் சிதம்பரம் சப் -கலெக்டர் அலுவலகத்தில் அமைதிக்கூட்டம் நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். அதுவரை இரு தரப்பினரும் கோவிலை திறக்க கூடாது என போலீசார் கூறினர். இதனை ஏற்ற அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்பகுதியில் பதட்டம் நிலவுவதால், இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், விஜயகுமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்

    ×