என் மலர்

    நீங்கள் தேடியது "Kallaghar"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவிலுக்கு திரும்பிய கள்ளழகர் மூலஸ்தானத்தில் எழுந்தருளினார்.
    • தைலக்காப்பு சாத்தப்படாததால் நேரடியாக கள்ளழகரை கோவில் மூலஸ்தானத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    மதுரை

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து 3-ந்தேதி பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். மறுநாள் புதூரில் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கள்ளழகரை வரவேற்றனர். தொடர்ந்து தல்லாகுளம் பெருமாள் கோவிலில் எழுந்தருளிய கள்ளழ கருக்கு திருமஞ்சனம் நடந்தது.

    கடந்த 5-ந்தேதி உலக பிரசித்தி பெற்ற வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை 6 மணியளவில் தங்க குதிரை வாகனத்தில் வைகை யாற்றில் இறங்கிய கள்ளழகரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. 7-ந் தேதி இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார கோலத்தில் பெருமாள் காட்சியளித்தார். மறுநாள் (8-ந்தேதி) அதிகாலை தமுக்கம் கருப்பண்ணசாமி கோவில் முன்பு வையாழியாக உருமாறி கள்ளழகர் தங்க பல்லக்கில் அழகர் மலைக்கு புறப்பட்டார். நேற்று மதியம் 11 மணியளவில் கள்ளழகர் இருப்பிடம் சென்றார்.

    3-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை கள்ளழகரை பல லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று மதியம் கோவிலுக்கு திரும்பிய கள்ளழகர் அங்குள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி னார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் கோவிலின் மூலஸ்தானத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து பக்தர்கள் மூலவர் சுந்தரராஜ பெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவி, கள்ளழ கரையும் ஒருசேர தரிசனம் செய்தனர்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு சித்திரை திருவிழாவின்போது கள்ளழகர் கோவிலை விட்டு புறப்பாடான நேரத்தில் மூலவரான சுந்தரராஜ பெருமாளுக்கு தைலக் காப்பு சாத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக பக்தர்கள் அவரை தரிசிக்க முடியவில்லை. அப்போது திருவிழாவில் பங்கேற்று இருப்பிடம் வந்த கள்ளழகர் மூலஸ்தானத்திற்கு கொண்டு செல்லப்படாமல் சன்னதி முன்புள்ள மண்டபத்தில் எழுந்தருளி னார். மூலவரை வணங்க முடியாத காரணத்தால் பக்தர்கள் கள்ளழகரை சேவித்து சென்றனர். ஆனால் இந்த ஆண்டு மூலவருக்கு தைலக்காப்பு சாத்தப்படாததால் நேரடியாக கள்ளழகரை கோவில் மூலஸ்தானத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நள்ளிரவு முதல் விடிய விடிய நடந்த தசாவதார நிகழ்ச்சியில் கள்ளழகர் மோகினி அவதாரத்தில் காட்சி அளித்தார்.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்தனர்.

    மதுரை

    மதுரை அழகர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக அழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கடந்த 3-ந்தேதி கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்பட்டார். அப்போது அவர் வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்த ருளினார்.

    மதுரை மூன்றுமாவடியில் 4-ந்தேதி எதிர்சேவை நடந்தது. இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலுக்கு வந்தார். அங்கு அவருக்கு 5-ம் தேதி அதிகாலை ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டது.

    அதன் பிறகு தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் உத்தரவு பெற்று, ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி அதிகாலை 5.52 மணிக்கு ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் இறங்கினார்.

    அப்போது லட்சக்க ணக்கான பக்தர்கள் வைகை ஆற்றுப்பகுதியில் திரண்டு வந்து அழகரை தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து வைகை ஆற்றில் இருந்து கள்ளழகர் புறப்பட்டு ராமராயர் மண்டபம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு அழகர் வேடமிட்ட பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீர்த்தவாரி அபிஷேகம் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர், வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்கினார். அதன் பிறகு நேற்று காலை சேஷ வாகனத்தில் வைகை ஆற்றின் நடுவில் உள்ள தேனூர் மண்ட பத்திற்கு புறப்பட்டார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பின்தொடர்ந்து வந்து தரிசனம் செய்தனர்.

    தேனூர் மண்டபத்தில் மதியம் 12.30 மணிக்கு எழுந்தருளிய கள்ளழகர், மாலை 3 மணிக்கு மேல் திருமஞ்சனம் முடிந்து கருட வாகனத்தில் எழுந்த ருளினார். இதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் தேனூர் மண்டபம் முன்பு, மண்டூக முனிவருக்கு சாப விமோ சனம் அளிக்கும் நிகழ்வு நடந்தது.

    அப்போது தவளை வடிவில் இருந்த சுதபஸ் முனிவரை, நாரை கொத்தி தின்று விடாமல் கள்ளழகர் காப்பாற்றி சாபவிமோசனம் அளித்தார். இதற்காக அங்கு உண்மையான நாரை பறக்க விடப்பட்டது. அப்போது தேனூர், வண்டியூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கள்ளழகரை தரிசனம் செய்தனர்.

    அதன் பிறகு கள்ளழகர் தேனூர் மண்டபத்தில் இருந்து வண்டியூர் ஆஞ்ச நேயர் கோயிலுக்கு சென்றார். அப்போது நல்ல மழை பெய்தது. இருந்த போதிலும் கள்ளழகர் அடுத்தடுத்த மண்டகப்படிகளுக்கு சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களும் மழையில் நனைந்துகொண்டே தரிசனம் செய்தனர்.

    ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து கள்ளழகர் இரவு 9 மணியளவில் ராமராயர் மண்டபம் சென்றடைந்தார். அங்கு நேற்று இரவு 10.30 மணி முதல் இன்று காலை வரை விடிய விடிய தசாவதாரம் நிகழ்ச்சி நடந்தது. கூர்ம, கிருஷ்ண, மச்ச, மோகினி, முத்தங்கி, ராமர், வாமண அவதா ரங்களில் கள்ளழகர் எழுந்த ருளினார்.

    இதனை ஆயிரக்க ணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் மோகினி அவதாரத்தில் கள்ளழகர் உலா வந்தார். கள்ளழகர் இன்று மதியம் 2 மணி அளவில் புறப்பாடாகி, ஆழ்வார்புரம் செல்கிறார். அங்கு உள்ள சடாரி மண்டபத்தில் எழுந்து அருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். அதன் பிறகு தல்லாகுளம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் தங்குகிறார்.

    நாளை அதிகாலை 2 மணியளவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி, கருப்பணசாமி கோயில் முன்பு வையாழியாக உருமாறி அழகர் மலைக்கு புறப்படும் நிகழ்வு நடக்கிறது. இதனைத் தொடர்ந்து 9-ந்தேதி அழகர் கோயிலை சென்றடைகிறார். அங்கு மறுநாள் (10-ந்தேதி) உற்சவ சாத்துப்படிகளுடன் சித்திரை திருவிழா முடிவடைகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார்.
    • திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள்கோவில் பழமை வாய்ந்த கோவிலாகும்.இங்கு சித்ரா பவுர்ணமி அன்று வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கி வருகிறார்.அதன்படி இன்று அதிகாலை அதிர்வேட்டு முழங்க கோவிலில் இருந்து வெள்ளை குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார்.

    வைகை பாலம் அருகில் உள்ள எம்.வி.எம். மருது மகால் முன்பு, பா.ஜ.க. விவசாயி மாநில துணைத் தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் ஆகியோர் கள்ளழகரை வரவேற்றனர்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தண்ணீரை பீய்ச்சியடித்து கள்ளழகரை வரவேற்றனர்.

    பேரூராட்சி மன்றதலைவர் ஜெயராமன், கவுன்சிலர் சத்யபிரகாஷ், நகரத் துணைச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி. பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் சிவபாலன் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சோழவந்தான் பேரூராட்சி சார்பில் சுகாதாரப் பணி, குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இன்று இரவு வைகை ஆற்றில் இருந்து கருட வாகனத்தில் சுவாமி புறப்பட்டு பேட்டை, முதலி யார்கோட்டை, சங்கங்கோட்டை ஆகிய பகுதி சென்று இரட்டை அக்ரஹாரத்தில் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் முன்புள்ள மண்டகப்படிக்கு வந்து சேரும்.

    யாதவர்கள் சங்கத்தின் சார்பில் விடிய, விடிய தசாவதாரம் நடைபெறும்.நாளை இரவு சனீஸ்வர்ன கோவில் முன்பு முதலியார் கோட்டை கிராமமக்கள் சார்பில் பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நடைபெற்று கோவிலை வந்தடையும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி பாதுகாப்பு பணிக்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • டிரோன்-சி.சி.டி.வி காமிரா மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரையில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நகர் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்தாவது:-

    மதுரை சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 10 நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    வருகிற 5-ந்தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் முக்கிய நிகழ்ச்சியில் பொதுமக்கள் கள்ளழ கரை வைகை ஆற்றுக்குள் இறங்கி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக இந்த வருடம் புதியதாக தேனி ஆனந்தம் சில்க்ஸ் பின் வாயில் எதிரில் தனிவழியும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்திற்கு கிழக்கே 50 மீட்டர் தொலைவில் தற்காலிக படிக்கட்டுகளும், ஓபுளா படித்துறை பாலத்தின் வடக்கு பகுதியின் அருகில் சாய்வுதளமும் அமைக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட வழிகளின் மூலமும் ஏற்கனவே வைகை ஆற்றின் தென்பகுதியில் ஓபுளாபடித்துறை அருகில் உள்ள படிக்கட்டுகள் மூலமும் பொதுமக்கள் மேற்படி வழிகளை பயன்படுத்தி ஆற்றுக்குள் இறங்கி தரிசனம் செய்யு மாறு முன்னேற் பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சாமி தரிசனம் செய்ய வரும் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கி சாமி தரிசனம் செய்ய வேண்டி மாநகராட்சி அலுவலகம், தமுக்கம் மைதானம். எக்கோ பார்க். காந்தி மியூஷியம், ராஜாஜி பூங்கா, பொது பணித்துறை அலு வலகம் மற்றும் மீனாட்சி கல்லூரி ஆகியவைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    ஆகவே, பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சாலை யோரங்களில் அமர்வதையும், உறங்குவதையும் தவிர்த்து மேற்கண்ட இடங்களில் தங்கி சாமி தரிசனம் செய்ய வேண்டு மாறு கேட்டுக் கொள்ளப்படு கிறது.

    மேலும் ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்ப தற்காக அனைத்து நிகழ்வுகளையும் பொதுமக்கள் காணும் வகையில் தமுக்கம் நேரு சிலை, ஜி - டெக்ஸ் டெய்லர் கடை அருகிலுள்ள பெங்குவின் ஜெராக்ஸ் கடை, தமுக்கம் கருப்பசாமி கோவில், தமுக்கம் ரேமண்ட் ஷோரூம், அமெரிக்கன் கல்லூரி, ஆழ்வார்புரம் மூங்கில் கடை இறக்கத்திலுள்ள தேனி ஆனந்தம் சில்க்ஸ் நுழைவு வாயில், வைகை ஆற்றின் வட கரையில் உள்ள ஓபுளா படித்துறை பாலம், குமரன் சாலை, பந்தல்குடி அம்பேத்கர் சிலை ஆகிய 9 இடங்களிலும் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு உள்ளது. கள்ளழகரை மேற்படி எல்.இ.டி. திரைகள் மூலம் பார்த்து தரிசனம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    சித்திரை திருவிழா மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வின்போது பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளை கண்டறிய தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநகரங்களில் இருந்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் வரவழைக்கப்பட்டு மொத்தம் சுமார் 5 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

    மதுரை மாநகரில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகும் நபர்களின் முகங்களை ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள குற்றவாளிகளின், சந்தேக நபர்களின் புகைப்படத்து டன் ஒப்பீடு செய்து குற்ற வாளிகளை கண்டறியக் கூடிய தொழில்நுட்பத்தின் படி, குற்ற வாளிகள் மதுரை மாநகருக்குள் உள்ளே நுழைந்தாலே கண்டறிய முடியும்.

    மேலும் பீப்பிள் கவுண்ட் என்ற ஆப் மூலம் திருவிழா விற்கு வந்துள்ள பொது மக்களின் எண்ணிக்கை யை கணக்கிட்டு உடனுக்குடன் அந்த இடங்களில் பாது காப்பு பலப்படுத்துவதுடன் மாற்று ஏற்பாடுகள் செய்ய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை மாநகரில் கள்ளழகர் வரும் வழித்தடங்களில் மட்டும் 350 சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு. சி.சி.டி.வி. காமிரா பதிவுகள் 2 கட்டுப்பாட்டு அறைகளின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும் டிரோன் காமிராவில் படம்பிடிப்பது மட்டுமின்றி, ஒலிப்பெருக்கி வசதி செய்யப்பட்டு பொது மக்களுக்கு அறிவிப்புகள் வழங்கவும் முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர பல்வேறு மாவட்டங்களில் இருந்து 12 வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்கப்பிரிவு காவல் ஆளினர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கொட்டகை முகூர்த்த விழா நடந்தது.
    • 9-ந்தேதி காலை 10.32 மணிக்கு கள்ளழகர் அழகர்கோவிலை சென்றடைகிறார்.



     தேனூர் மண்டபத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

    மதுரை

    மதுரை அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழா மே மாதம் 1-ந்தேதி தொடங்குகிறது. இதில் முதல் நிகழ்ச்சியாக கொட்டகை முகூர்த்த நிகழ்ச்சி, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் இன்று காலை நடந்தது.

    அப்போது ஆயிரம் பொன் சப்பரத்தில் வைக்கப்படும் யாழி முகத்துக்கு நாணல் புல், மாவிலை, பூ மாலைகள், சந்தனம், தாம்பூலம், தேங்காய், பழங்கள் வைத்து, நூபுர கங்கை தீர்த்தத்தால், அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதன் பிறகு வேத மந்திரங்கள்-மேள தாளம் முழங்க வர்ணம் பூசப்பட்ட முகூர்த்த கால்கள், மாவிலை- மாலைகளுடன் இணைக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள ராஜ கோபுரம் முன்பு முகூர்த்தக் கால் நடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கின. இதையொட்டி ஆயிரம் பொன் சப்பரத் துக்கான தலையாலங்கார பூஜை நடத்தப்பட்டது. பின்னர் வண்டியூர் தேனூர் மண்டபத்தில் முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் தல்லாகுளம் மண்டகப்படி சங்க தலைவர் முத்துவிநாயகம், கோவில் துணை கண்காணிப்பாளர் ராமசாமி, மீனாட்சி அம்மன் கோவில் தலைமை பட்டர் ஹாலாஸ்யநாதன், வண்டியூர் தலைமை பட்டர் சங்கரநாராயணன், தேனூர் கிராம கமிட்டி நிர்வாகிகள் சோனைமுத்து, சாமிக்காளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை மாவட்டம் அழகர்கோவில் சித்திரை பெருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் சன்னதி முன்பு கொட்டகை முகூர்த்தம் நடந்தது.

    இதையொட்டி சுந்தர ராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் மே 3-ந் தேதி இரவு 7 மணிக்கு தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கி புறப்படுகிறார். மே 4-ந்தேதி காலை 6 மணிக்கு, மூன்றுமாவடியில் எதிர் சேவை நிகழ்ச்சி நடக்கிறது.

    கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி 5-ந்தேதி காலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் நடக்கிறது.

    அப்போது கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்த ருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதனைத் தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நிகழ்ச்சி நடக்கும்.

    வருகிற 6-ந்தேதி காலை 9 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவி லில் இருந்து கள்ளழகர் சேஷ வாகனத்தில் புறப்படுகிறார். மாலை 3 மணிக்கு தேனூர் மண்டபத்தில் கருட வாக னத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது கள்ளழகர் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அதன் பிறகு ராமராயர் மண்டபத்தில் நள்ளிரவு 12 மணி முதல் விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    வருகிற 7-ந்தேதி காலை 6 மணிக்கு கள்ளழகர், மோகினி அவதாரத்தில் காட்சி அளிக்கிறார். மாலை 2 மணிக்கு கள்ளழகர் ராஜாங்க அலங்காரத்துடன் அனந்தராயர் பல்லகில் புறப்படுகிறார்.

    வருகிற 8-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து கள்ளழகர் பூப்பல் லக்கில் அழகர்கோவில் புறப்படுகிறார். 9-ந்தேதி காலை 10.32 மணிக்கு கள்ளழகர் அழகர்கோவிலை சென்றடைகிறார்.

    ×