search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police gathering"

    • திட்ட அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
    • அசம்பாவிதம் நடைபெறா மல் இருக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்‌.

    கடலூர்:

    கடலூர் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிறுவனத் தலைவர் வேல்முருகன் தலைமையில் முற்றுகை போராட்டம் கடலூர் பச்சையாங்குப்பம் இரட்டை ரோட்டில் இருந்து ஊர்வலமாக சென்று சிப்காட் திட்ட அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இந்த நிலையில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கவுன்சிலர் கண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டன. ஆனால் த.வா.க வினர், எங்கள் போராட்டம் தொடரும் என திட்டவட்ட மாக தெரிவித்ததை தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

    இந்த நிலையில் போலீசார் சார்பில் முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு, அதற்கு பதில் கடலூர் உழவர் சந்தை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு அனுமதி அளித்தனர். இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆயிரக்க ணக்கானோர் காலை முதல் போராட்ட த்தில் கலந்து கொள்வதற்கு திரண்டு வந்தனர். இதனைத் தொட ர்ந்து கடலூர்,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பே ட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் ஆயிரம் போலீசார் கடலூர் பகுதியில் குவிக்கப்பட்டனர் . மேலும் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அசம்பாவிதம் நடைபெறா மல் இருக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சிப்காட்டில் இயங்கி வரும் தொழி ற்சாலைகளை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்மு ருகன் எம். எல்.ஏ தலைமை தாங்கி கண்டன உரை ஆற்றினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் கவுன்சிலர் கண்ணன் வரவேற்றார். இதில் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் திருமால் வளவன், மாநில அமைப்பு செயலாளர் கண்ணன், மாநில அமைப்பு குழு உறுப்பினர் ஆனந்த் , மாநகர மாவட்ட செயலாளர் லெனின், மாநகராட்சி கவுன்சிலர் அருள் பாபு உட்பட ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர் முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். இந்த போராட்டத்தால் கடலூரில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. த.வா.க.வினரின் போராட்டம் காரணமாக கடலூரில் கடும் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார் அதனை சரி செய்தனர். போராட்டத்தால் கடலூர் ஸ்தம்பித்தது.

    • ரெயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • ரெயில்வே போலீசார் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர்.

    விழுப்புரம்:

    நெல்லை ரெயில் நிலையத்திலிருந்து நேற்று வந்தே பாரத் ரெயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலில் அரியலூரில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் ஆகியோரும் தனித்தனியே அமர்ந்து வந்தனர். இந்த ரெயிலை வரவேற்க விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ெரயில் நிலை யத்தில் பா.ஜ.க.வினர் மற்றும் விடுதலை சிறுத்தை கள் கட்சியினர் ஒரே நேரத்தில் குவிந்ததால், திண்டிவனம் போலீசார் மற்றும் ரெயில்வே போலீ சார் சுமார் 100-க்கும் மேற் பட்டோர் குவிக்கப்பட்டனர்.

    இதில் விழுப்புரம் எம்.பி. துரை. ரவிக்குமார், பா.ஜ.க.மாவட்ட தலைவர் ராஜேந்திரன்,பா.ஜ.க. மாநில வர்த்தக அணி நிர்வாகி தரம் குழுமம் சின்ராஜ், பா.ஜ.க. நகரத் தலைவர் வெங்கடேச பெருமாள்,மாவட்ட பொது செயலாளர் எத்திராஜ், மாநில நிர்வாகி வக்கீல் பாலசுப்ரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக பா.ஜ.க.வினர் பொது மக்களுக்கு இனிப்பு கள் வழங்கி கொண்டாடினர். மேலும் ராகபைரவி கலைக் கூடத்தின் கலை நிகழ்ச்சியும் திண்டிவனம் ரயில்வே நிலையத்தில் நடைபெற்றது. வந்தே பாரத் ரெயில் முன் நின்று பொது மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    • மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி பாதுகாப்பு பணிக்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • டிரோன்-சி.சி.டி.வி காமிரா மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரையில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நகர் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்தாவது:-

    மதுரை சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 10 நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    வருகிற 5-ந்தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் முக்கிய நிகழ்ச்சியில் பொதுமக்கள் கள்ளழ கரை வைகை ஆற்றுக்குள் இறங்கி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக இந்த வருடம் புதியதாக தேனி ஆனந்தம் சில்க்ஸ் பின் வாயில் எதிரில் தனிவழியும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்திற்கு கிழக்கே 50 மீட்டர் தொலைவில் தற்காலிக படிக்கட்டுகளும், ஓபுளா படித்துறை பாலத்தின் வடக்கு பகுதியின் அருகில் சாய்வுதளமும் அமைக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட வழிகளின் மூலமும் ஏற்கனவே வைகை ஆற்றின் தென்பகுதியில் ஓபுளாபடித்துறை அருகில் உள்ள படிக்கட்டுகள் மூலமும் பொதுமக்கள் மேற்படி வழிகளை பயன்படுத்தி ஆற்றுக்குள் இறங்கி தரிசனம் செய்யு மாறு முன்னேற் பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சாமி தரிசனம் செய்ய வரும் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கி சாமி தரிசனம் செய்ய வேண்டி மாநகராட்சி அலுவலகம், தமுக்கம் மைதானம். எக்கோ பார்க். காந்தி மியூஷியம், ராஜாஜி பூங்கா, பொது பணித்துறை அலு வலகம் மற்றும் மீனாட்சி கல்லூரி ஆகியவைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    ஆகவே, பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சாலை யோரங்களில் அமர்வதையும், உறங்குவதையும் தவிர்த்து மேற்கண்ட இடங்களில் தங்கி சாமி தரிசனம் செய்ய வேண்டு மாறு கேட்டுக் கொள்ளப்படு கிறது.

    மேலும் ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்ப தற்காக அனைத்து நிகழ்வுகளையும் பொதுமக்கள் காணும் வகையில் தமுக்கம் நேரு சிலை, ஜி - டெக்ஸ் டெய்லர் கடை அருகிலுள்ள பெங்குவின் ஜெராக்ஸ் கடை, தமுக்கம் கருப்பசாமி கோவில், தமுக்கம் ரேமண்ட் ஷோரூம், அமெரிக்கன் கல்லூரி, ஆழ்வார்புரம் மூங்கில் கடை இறக்கத்திலுள்ள தேனி ஆனந்தம் சில்க்ஸ் நுழைவு வாயில், வைகை ஆற்றின் வட கரையில் உள்ள ஓபுளா படித்துறை பாலம், குமரன் சாலை, பந்தல்குடி அம்பேத்கர் சிலை ஆகிய 9 இடங்களிலும் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு உள்ளது. கள்ளழகரை மேற்படி எல்.இ.டி. திரைகள் மூலம் பார்த்து தரிசனம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    சித்திரை திருவிழா மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வின்போது பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளை கண்டறிய தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநகரங்களில் இருந்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் வரவழைக்கப்பட்டு மொத்தம் சுமார் 5 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

    மதுரை மாநகரில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகும் நபர்களின் முகங்களை ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள குற்றவாளிகளின், சந்தேக நபர்களின் புகைப்படத்து டன் ஒப்பீடு செய்து குற்ற வாளிகளை கண்டறியக் கூடிய தொழில்நுட்பத்தின் படி, குற்ற வாளிகள் மதுரை மாநகருக்குள் உள்ளே நுழைந்தாலே கண்டறிய முடியும்.

    மேலும் பீப்பிள் கவுண்ட் என்ற ஆப் மூலம் திருவிழா விற்கு வந்துள்ள பொது மக்களின் எண்ணிக்கை யை கணக்கிட்டு உடனுக்குடன் அந்த இடங்களில் பாது காப்பு பலப்படுத்துவதுடன் மாற்று ஏற்பாடுகள் செய்ய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை மாநகரில் கள்ளழகர் வரும் வழித்தடங்களில் மட்டும் 350 சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு. சி.சி.டி.வி. காமிரா பதிவுகள் 2 கட்டுப்பாட்டு அறைகளின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும் டிரோன் காமிராவில் படம்பிடிப்பது மட்டுமின்றி, ஒலிப்பெருக்கி வசதி செய்யப்பட்டு பொது மக்களுக்கு அறிவிப்புகள் வழங்கவும் முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர பல்வேறு மாவட்டங்களில் இருந்து 12 வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்கப்பிரிவு காவல் ஆளினர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு உடனடியாக பணம் மற்றும் டி.ஏ வழங்கிட வேண்டும்.
    • அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    கடலூர்:

    சி.ஐ.டி.யு மற்றும் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு உடனடியாக பணம் மற்றும் டி.ஏ வழங்கிட வேண்டும். அதிகாரிகள் தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை சிறப்பு தலைவர் பாஸ்கரன் தலைமையில் தலைவர் மணிகண்டன் முன்னிலையில் நிர்வாகிகள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கடலூர் மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் பொதுச் செயலாளர் முருகன் கண்டன உரை ஆற்றினார்.

    இதனை தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் கடலூர் போக்குவரத்து மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நபர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    ×