search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ex-railway employee"

    • உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் ஷிவ் நகரை சேர்ந்தவர் சுரேஷ் பிரசாத் மிஸ்ரா(வயது 70). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர்.
    • நேற்று ராமேஸ்வரத்திற்கு வந்த சுரேஷ் பிரசாத் மிஸ்ரா உள்ளிட்டவர்கள் இரவில் கன்னியாகுமரிக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.

    நெல்லை:

    உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் ஷிவ் நகரை சேர்ந்தவர் சுரேஷ் பிரசாத் மிஸ்ரா(வயது 70). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவர் தனது மனைவி மற்றும் உறவினர்கள் 21 பேருடன் சுற்றுலா புறப்பட்டுள்ளார். நேற்று ராமேஸ்வரத்திற்கு வந்த அவர்கள் இரவில் கன்னியாகுமரிக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் ராமேஸ்வரம்-குமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று இரவு அவர்கள் ராமநாதபுரத்தில் இருந்து ஏறியுள்ளனர். அப்போது பிரசாத் மிஸ்ரா மட்டும் தனது மனைவியுடன் தனி பெட்டியில் பயணம் செய்துள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்தடைந்தது.

    அப்போது, நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்துவிட்டதாக நினைத்து தம்பதி கீழே இறங்கி விட்டனர். உடனே அங்கிருந்த ரெயில்வே போலீசார் விபரத்தை கூறவே, மீண்டும் தம்பதி தாங்கள் வந்த ரெயிலில் ஏற முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் ரெயில் புறப்பட்டு விட்டதால் எதிர்பாராதவிதமாக பிரசாத் மிஸ்ரா நடைமேடைக்கும், ரெயிலுக்கும் இடையே விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்த போலீசார் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×