search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala blast"

    • படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.
    • 12 வயது சிறுமி உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் களமச்சேரியில் கடந்த அக்டோபர் மாதம் 29-ந்தேதி யொகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபை நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுகள் வெடித்தன.

    இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இது தொடர்பாக கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    யொகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ சபையின் முன்னாள் ஊழியரான அவர், அந்த சபையின் நடவடிக்கைகள் பிடிக்காமல் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது விசாரணையில் தெரிய வந்தது. இந்த குண்டுவெடிப்பு சதியில் வேறு யாருக்கு தொடர்பு இருக்கிறதா? என்று டொமினிக் மார்ட்டினிடம் போலீசார் மட்டுமின்றி என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள்.

    அதில் அவர் மட்டுமே திட்டமிட்டு குண்டு வெடிப்பை நிகழ்த்திய விவரம் தெரிய வந்தது. குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

    இருந்தபோதிலும் அவர்களில் 12 வயது சிறுமி உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது. இந்தநிலையில் களமச்ஆசேரி குண்டு வெடிப்பில் காயமடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இறந்துவிட்டார்.

    தொடுபுழா அருகே உள்ள கொடிக்குளம் வண்டமட்டம் பகுதியை சேர்ந்த லில்லி ஜான் (வயது71) என்ற அந்த பெண், கூட்டுறவு வங்கி ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். சாட்சிகள் அமைப்பின் பிரார்த்தனை கூட்டத்தில் தனது கணவர் ஜானுடன் பங்கேற்றார்.

    அப்போது நடந்த குண்டுவெடிப்பில் லில்லி, ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அதிகாரியான அவரது கணவர் ஜான் ஆகியோர் காயமடைந்தனர். இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் ஜான் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    லில்லி தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் அவரும் பரிதாபமாக இறந்துவிட்டார். கணவன்-மனைவி இருவரும் இறந்து விட்டதால் அவர்களது குடும்பத்தினர் கவலைய டைந்தனர். லில்லி இறந்ததை யடுத்து களமச்சேரி குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாலி பிரதீப் தனது மகள் லிபினா, மகன்கள் பிரவின், ராகுல் ஆகியோருடன் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
    • தாய்-மகள் குண்டு வெடிப்பில் சிக்கி பலியான சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி அருகே களமசேரியில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் கடந்த 27-ந்தேதி கிறிஸ்தவ அமைப்பின் கூட்டம் நடந்தபோது குண்டு வெடித்தது.

    இந்த சம்பவத்தில் பெரும்பாவூர் இரிங்கோல் பகுதியை சேர்ந்த லியோனா பவுலோஸ் (வயது 55) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தார். மேலும் பலர் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் மோலி ஜாய், குமாரி புஷ்பன் (53) மற்றும் லிபினா (12) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    இந்நிலையில் கொச்சி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த லிபினாவின் தாயார் சாலி பிரதீப் (45) சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதன்மூலம் குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. சாலி பிரதீப் தனது மகள் லிபினா, மகன்கள் பிரவின், ராகுல் ஆகியோருடன் கூட்டத்தில் கலந்து கொண்டார். தற்போது அவரும் மகளும் பலியாகிவிட்ட நிலையில், மகன் ராகுல் தீவிர சிகிச்சையில் உள்ளார். கிறிஸ்தவ கூட்டத்திற்கு சென்ற தாய்-மகள் குண்டு வெடிப்பில் சிக்கி பலியான சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • டொமினிக் மார்ட்டினிடம் 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.
    • வழக்கு தொடர்பான பல்வேறு இடங்களுக்கு அவரை அழைத்துச்சென்று ஆதாரங்களை திரட்டினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த குண்டுவெடிப்பில் 3 பெண்கள், 12 வயது சிறுமி என 4 பேர் பலியாகினர். இது தொடர்பாக கொச்சி பகுதியை சேர்ந்த டொமி னிக் மார்ட்டின் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    அவரிடம் போலீசார் மட்டுமின்றி, என்.ஐ.ஏ., மத்திய பாதுகாப்பு படை, பயங்கரவாத எதிர்ப்பு படை உள்ளிட்டவைகளை சேர்ந்த அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். தீவிர விசாரணைக்கு பிறகு டொமினிக் மார்ட்டின், கடந்த 31-ந்தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.

    குண்டு வெடிப்பு சதியில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? டொமினிக் மார்ட்டினின் வெளிநாட்டு தொடர்பு பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் டொமினிக் மார்ட்டினிடம் 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இதையடுத்து அவரிடம் கடந்த 6-ந்தேதி முதல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் குண்டு வெடிப்பை தான் மட்டுமே நிகழ்த்தியதாகவும், வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்ற கருத்தையே தொடர்ந்து கூறி வருகிறார்.

    இருந்தபோதிலும் போலீசார் திரட்டிய ஆதாரங்கள் மற்றும் தடயங்களின் அடிப்படையில் பல அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு டொமினிக் மார்ட்டினிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் போலீஸ் காவலில் உள்ள டொமினிக் மார்ட்டினிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு தொடர்பான பல்வேறு இடங்களுக்கு அவரை அழைத்துச்சென்று ஆதாரங்களை திரட்டினர்.

    டொமினிக் மார்ட்டினின் வருமான ஆதாரங்கள், சர்வதேச தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்துகிறார்கள்.

    டொமினிக் மார்ட்டினை அவரது வாடகை வீடு, திருச்சூரில் அவர் தங்கியிருந்த லாட்ஜ் உள்ளிட்ட இடங்களுக்கும் சிறப்பு புலனாய்வு குழுவினர் அழைத்துச் சென்று விசாரிக்க உள்ளனர். டொமினிக் மார்ட்டினின் போலீஸ் காவல் வருகிற 15-ந்தேதி முடிகிறது.

    • டொமினிக் மார்ட்டினின் வெளிநாட்டு தொடர்பு பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • குண்டுவெடிப்பில் படுகாயமடைந்தவர்களில் மேலும் 19 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் உள்ள ஜம்ரா என்கிற சர்வதேச மாநாட்டு மையத்தில் யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையினரின் பிரார்த்தனை கூட்டத்தில் கடந்த 29-ந்ேததி குண்டுகள் வெடித்தன.

    இந்த குண்டு வெடிப்பில் இரிங்கோல் பகுதியை சேர்ந்த லியோனா பவுலோஸ்(வயது45), இடுக்கி மாவட்டம் தொடு புழா பகுதியை சேர்ந்த குமாரி(53), லிபினா என்ற 12 வயது சிறுமி ஆகிய 3 பேர் பலியாகினர்.

    இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது உபா சட்டம், கொலை, கொலை முயற்சி, வெடிமருந்து தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

    கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினிடம் போலீசார் மட்டுமின்றி, என்.ஐ.ஏ., மத்திய பாதுகாப்பு படை, பயங்கரவாத எதிர்ப்பு படை உள்ளிட்டவைகளை சேர்ந்த அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். அதில் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்த சதித் திட்டத்தை நிறைவேற்றியது தொடர்பான பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

    தீவிர விசாரணைக்கு பிறகு டொமினிக் மார்ட்டின், கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குண்டுவெடிப்பு சதியில், தான் ஒருவர் மட்டும் தான் ஈடுபட்டதாக டொமினிக் மார்ட்டின் கூறியிருந்தாலும், வேறு சிலருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    ஆகவே டொமினிக் மார்ட்டினின் வெளிநாட்டு தொடர்பு பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி குண்டு சதியில் அவருடன் வேறு சிலருக்கு தொடர்பு உள்ளதா? என்பதை கண்டறிய, அவரிடம் காவலில் விசாரிக்க அனுமதிக்குமாறு எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.

    இந்நிலையில் களமச்சேரி குண்டுவெடிப்பில் மேலும் ஒரு பெண் இறந்துவிட்டார். அவர் களமச்சேரியை சேர்ந்த மோலி ஜாய்(61) ஆவார். எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் ஒரு பெண் இறந்ததையடுத்து, களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

    குண்டுவெடிப்பில் படுகாயமடைந்தவர்களில் மேலும் 19 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 9பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும், அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ரெயில் மற்றும் நடைமேடைகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • ரெயில்வே பாதுகாப்பு போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பூர்:

    கேரள மாநிலம் கொச்சி களமச்சேரியில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடந்த அரங்கத்தில் நேற்று குண்டு வெடித்தது. இதில் பலி மற்றும் காயம் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான ரெயில்வே நிலையம் மற்றும் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    இதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை ரெயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் மாதேஸ்வரன் மற்றும் துணை உதவி ஆய்வாளர் லிஜோ மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். மேலும் ரெயில் மற்றும் நடைமேடைகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இன்று 2-வது நாளாக திருப்பூர் ரெயில் நிலையம் முழுவதும் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கொன்று அழிக்கும் மனநிலைக்கு இரையாகும் என் மாநிலத்தை பார்ப்பது சோகமானது.
    • காட்டுமிராண்டித்தனத்தை கண்டிப்பதில் அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றுபட வேண்டும்

    கேரளாவில் கிறிஸ்தவ கூட்டரங்கில் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் கூறியதாவது:-

    கேரளாவில் மதக் கூட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியால் அதிர்ச்சி அடைந்தேன். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். விரைவாக போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கொன்று அழிக்கும் மனநிலைக்கு இரையாகும் என் மாநிலத்தை பார்ப்பது சோகமானது. இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தை கண்டிப்பதில் அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றுபட வேண்டும் என்றும் வன்முறையால் வன்முறையை தவிர வேறு எதையும் சாதிக்க முடியாது என்று அவர்களை பின்பற்றுபவர்களுக்கு போதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×