search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரள குண்டுவெடிப்பு: பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு
    X

    கேரள குண்டுவெடிப்பு: பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

    • படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.
    • 12 வயது சிறுமி உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் களமச்சேரியில் கடந்த அக்டோபர் மாதம் 29-ந்தேதி யொகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபை நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுகள் வெடித்தன.

    இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இது தொடர்பாக கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    யொகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ சபையின் முன்னாள் ஊழியரான அவர், அந்த சபையின் நடவடிக்கைகள் பிடிக்காமல் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது விசாரணையில் தெரிய வந்தது. இந்த குண்டுவெடிப்பு சதியில் வேறு யாருக்கு தொடர்பு இருக்கிறதா? என்று டொமினிக் மார்ட்டினிடம் போலீசார் மட்டுமின்றி என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள்.

    அதில் அவர் மட்டுமே திட்டமிட்டு குண்டு வெடிப்பை நிகழ்த்திய விவரம் தெரிய வந்தது. குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

    இருந்தபோதிலும் அவர்களில் 12 வயது சிறுமி உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது. இந்தநிலையில் களமச்ஆசேரி குண்டு வெடிப்பில் காயமடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இறந்துவிட்டார்.

    தொடுபுழா அருகே உள்ள கொடிக்குளம் வண்டமட்டம் பகுதியை சேர்ந்த லில்லி ஜான் (வயது71) என்ற அந்த பெண், கூட்டுறவு வங்கி ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். சாட்சிகள் அமைப்பின் பிரார்த்தனை கூட்டத்தில் தனது கணவர் ஜானுடன் பங்கேற்றார்.

    அப்போது நடந்த குண்டுவெடிப்பில் லில்லி, ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அதிகாரியான அவரது கணவர் ஜான் ஆகியோர் காயமடைந்தனர். இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் ஜான் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    லில்லி தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் அவரும் பரிதாபமாக இறந்துவிட்டார். கணவன்-மனைவி இருவரும் இறந்து விட்டதால் அவர்களது குடும்பத்தினர் கவலைய டைந்தனர். லில்லி இறந்ததை யடுத்து களமச்சேரி குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×