search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் குண்டுவெடித்து 4 பேர் பலி: டொமினிக் மார்ட்டினிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
    X

    கேரளாவில் குண்டுவெடித்து 4 பேர் பலி: டொமினிக் மார்ட்டினிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

    • டொமினிக் மார்ட்டினிடம் 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.
    • வழக்கு தொடர்பான பல்வேறு இடங்களுக்கு அவரை அழைத்துச்சென்று ஆதாரங்களை திரட்டினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த குண்டுவெடிப்பில் 3 பெண்கள், 12 வயது சிறுமி என 4 பேர் பலியாகினர். இது தொடர்பாக கொச்சி பகுதியை சேர்ந்த டொமி னிக் மார்ட்டின் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    அவரிடம் போலீசார் மட்டுமின்றி, என்.ஐ.ஏ., மத்திய பாதுகாப்பு படை, பயங்கரவாத எதிர்ப்பு படை உள்ளிட்டவைகளை சேர்ந்த அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். தீவிர விசாரணைக்கு பிறகு டொமினிக் மார்ட்டின், கடந்த 31-ந்தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.

    குண்டு வெடிப்பு சதியில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? டொமினிக் மார்ட்டினின் வெளிநாட்டு தொடர்பு பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் டொமினிக் மார்ட்டினிடம் 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இதையடுத்து அவரிடம் கடந்த 6-ந்தேதி முதல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் குண்டு வெடிப்பை தான் மட்டுமே நிகழ்த்தியதாகவும், வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்ற கருத்தையே தொடர்ந்து கூறி வருகிறார்.

    இருந்தபோதிலும் போலீசார் திரட்டிய ஆதாரங்கள் மற்றும் தடயங்களின் அடிப்படையில் பல அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு டொமினிக் மார்ட்டினிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் போலீஸ் காவலில் உள்ள டொமினிக் மார்ட்டினிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு தொடர்பான பல்வேறு இடங்களுக்கு அவரை அழைத்துச்சென்று ஆதாரங்களை திரட்டினர்.

    டொமினிக் மார்ட்டினின் வருமான ஆதாரங்கள், சர்வதேச தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்துகிறார்கள்.

    டொமினிக் மார்ட்டினை அவரது வாடகை வீடு, திருச்சூரில் அவர் தங்கியிருந்த லாட்ஜ் உள்ளிட்ட இடங்களுக்கும் சிறப்பு புலனாய்வு குழுவினர் அழைத்துச் சென்று விசாரிக்க உள்ளனர். டொமினிக் மார்ட்டினின் போலீஸ் காவல் வருகிற 15-ந்தேதி முடிகிறது.

    Next Story
    ×