search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்நிலையம்"

    • காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு முழுவதும் அனைவரும் தூய்மைப்பணியில் ஈடுபட வேண்டும்
    • ெரயில் நிலையத்தை தங்களது வீட்டை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வோமோ அது போல் வைத்துக்கொள்ள வேண்டும்

    திருப்பூர்:

    காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு முழுவதும் அனைவரும் தூய்மைப்பணியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக ஒரு நாள் ஒரு மணி நேரம் தூய்மைக்காக நம்மை ஈடுப்படுத்திக்கொள்வோம் என்ற திட்டத்தை மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 மற்றும் தென்னக ெரயில்வே, திருப்பூர் ரெயில் நிலையம் சார்பில் திருப்பூர் ெரயில் நிலையத்தில் தூய்மைக்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும், தூய்மை பணியும் நடைபெற்றது.

    நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ெரயில்வே உதவி வணிக மேலாளர் ஷியாமல் குமார் கோஷ், சேலம் கோட்ட பயணிகளின் ஆலோசகர் குழு உறுப்பினர் சுரேஷ் குமார், துணை மேலாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர்.

    உதவி வணிக மேலாளர் பேசுகையில், ெரயில் நிலையத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது, ெரயில் நிலையத்தை தங்களது வீட்டை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வோமோ அது போல் வைத்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டார். மாணவ செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, விஜய், காமராஜ், செர்லின், தினேஷ்கண்ணன் ஆகியோர் தலைமையில் 60 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 மாணவ மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • மதுரை ெரயில் நிலையத்தில் தூய்மை விழிப்புணர்வு வார விழா நடந்தது.
    • மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கர் தொடங்கி வைத்தார்.

    மதுரை

    மதுரை கோட்டத்தில் உள்ள ெரயில் நிலையங்களில் தூய்மை விழிப்புணர்வு இரு வார விழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை ெரயில் நிலையத்தில் தூய்மை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை ெரயில்வே மருத்துவமனை கூடுதல் முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கர் தொடங்கி வைத்தார்.

    பேரணியில் மதுரை கல்லூரி, சரஸ்வதி நாராயணன் கல்லூரி, தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த 120 தேசிய மாணவர் படைப்பிரிவு வீரர்கள் கலந்து கொண்டு தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மதுரை கோட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேலாளர் மகேஷ் கட்கரி, உதவி சுகாதார அதிகாரி சுரேஷ், தேசிய மாணவர் படைப்பிரிவு அலுவலர்கள் மதுரை கல்லூரி கார்த்திகேயன், சரஸ்வதி நாராயணன் கல்லூரி கார்த்திகேயன், தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி ஞானப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • உமா எஸ்தர் குரும்பூர் ரெயில் நிலையம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
    • உமா கழுத்தில் கிடந்த 4 ½பவுன் தாலி செயினை மர்ம நபர் பறித்து கொண்டு தப்பி சென்றார்.

    குரும்பூர்:

    குரும்பூர் அருகே உள்ள யோகரத்தினம் நகரை சேர்ந்தவர் அருள்தாஸ் மனைவி உமா எஸ்தர் (வயது 41). இவர் நேற்று காலை குரும்பூர் ரெயில் நிலையம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் உமா கழுத்தில் கிடந்த 4 ½பவுன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    ×