search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RahulGandhi"

    பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பணக்காரர்கள் மட்டுமே அதிக பலனடைந்துள்ளதாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். #RahulGandhi #Demonetisation #BJP #PMModi
    புதுடெல்லி:

    2016-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

    ஆனால், இதன்மூலம் இந்தியாவில் கருப்பு பணம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்ற பிரதமரின் வாக்குறுதியை ஏற்று அனைவரும் இந்த பணமதிப்பிழப்பினை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து, மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கணக்கிடும் பணியை மத்திய ரிசர்வ் வங்கி செய்து வருகிறது. சமீபத்தில் சுமார் 93% மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணம் திரும்ப வந்துவிட்டதாக தகவல் வெளியானது.

    அனைத்து பணங்களும் வங்கி மூலம் மீண்டும் வந்துவிட்டதால், கருப்பு பணம் எங்கே? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார். அப்போது, பணமதிப்பு நீக்கம் என்பது பிழை அல்ல, அது இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் என்றும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியடைந்தது குறித்து மக்களுக்கு பிரதமர் மோடி விளக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    மேலும், மத்திய பா.ஜ.க அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பலனடைந்தது பணக்காரர்களே எனவும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை கருப்பு பணத்தை நல்ல பணமாக மாற்ற உதவியுள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #RahulGandhi #Demonetisation #BJP #PMModi
    கட்சியை பாதிக்கும் வகையில் கருத்து கூறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் எச்சரித்துள்ளார். #RahulGandhi #Congress

    புதுடெல்லி:

    காங்கிரசில் முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பான காரிய கமிட்டி மாற்றி அமைக்கப்பட்டதையடுத்து அதன் முதல் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது.

    கூட்டத்தில் கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசும் போது கூறியதாவது:-

    தற்போது நாடு அடக்கு முறையில் சிக்கி இருக்கிறது. இதை மீட்பதற்கு அனைத்து காங்கிரஸ் கட்சியினரும் போராட வேண்டும். நாம் அனைவரும் கூட்டாக சேர்ந்து ஒடுக்கு முறைகளை எதிர்கொள்ள வேண்டும்.

    காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு என்று தனி கவுரவம் இருக்கிறது. சுதந்திர போராட்ட காலத்திலேயே காங்கிரஸ் காரிய கமிட்டி சிறப்பான முடிவுகளை எடுத்து சுதந்திரம் கிடைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

    காங்கிரசின் கொள்கைகளை அனைத்து மக்களிடமும் கொண்ட செல்ல வேண்டும். புதிய வாக்காளர்களை நம்பக்கம் இழுக்க வேண்டும்.

    வாக்காளர்களின் எண்ணிக்கையை கட்சிக்கு அதிகரிப்பது தான் நமது முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு தொகுதியிலும் நமக்கு ஓட்டு போடாத மக்கள் யார்? என்பதை கண்டறிந்து அவர்களை அணுகி நமது நம்பிக்கையை பெற செய்ய வேண்டும்.

    இப்போது நாம் மிகப் பெரிய போராட்டத்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம். எல்லோருக்கும் கட்சி அமைப்புக்குள் பேசுவதற்கு உரிமை இருக்கிறது.

    அதே நேரத்தில் நமது போராட்டத்தை பாதிக்க செய்யும் வகையில் தலைவர்கள் யாராவது தவறான கருத்துக்களை கூறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நான் தயங்க மாட்டேன்.

    இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

    கூட்டத்தில் சோனியா காந்தி பேசும்போது, நாம் பெரிய கூட்டணியை உருவாக்க வேண்டும். நாம் அனைவரும் ராகுல் காந்தியுடன் சேர்ந்து தீவரமாக பணியாற்ற வேண்டும்.

    நமது மக்கள் ஆபத்தான ஆட்சியை சந்தித்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டியது நமது கடமை. இந்த நாட்டை நாம் மீட்டு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று கூறினார். #RahulGandhi #Congress

    நான் சுதந்திரமாக செயல்பட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அனுமதித்து இருப்பதாக கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். #RahulGandhi #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக மாநில வளர்ச்சிக்கு 3 திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். அதில், முதன்மையானது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது. இதற்காக வடக்கு கர்நாடகாவில் 7 மாவட்டங்களை அடையாளம் கண்டுள்ளேன். இது தவிர, மேலும் 3 மாவட்டங்களும் அதில் உள்ளது.

    இங்கு பல்வேறு உற்பத்தி தொழில்களை உருவாக்கலாம் என்று திட்டமிட்டு உள்ளோம். சீனாவை போல் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான தொழிலை தொடங்க இருக்கிறோம்.

    இதற்காக வரும் 5 ஆண்டுகளில் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்யப்படும். இதன் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    அடுத்ததாக நீர்ப்பாசன திட்டத்தில் முக்கிய கவனம் செலுத்த இருக்கிறேன். விவசாயிகள் கடன் தள்ளுபடி இடைக்கால நிவாரணமாக இருக்குமே தவிர, நிரந்தர தீர்வு ஆகாது.

    விவசாய உற்பத்தி முறைகளை மாற்றி அமைத்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.


    இந்த ஆண்டு கடவுள் கருணையால் நல்ல மழை பெய்துள்ளது. இது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதே போல் தமிழக சகோதர, சகோதரிகளும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

    இப்போது தமிழகத்துக்கு வழங்க வேண்டிய அடுத்த மாத தண்ணீரையும் கொடுக்க தயாராகி வருகிறோம். இதில், எந்த பிரச்சினையும் எழாது. 12, 13 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் அளவுக்கு வந்துள்ளது. மேட்டூர் அணையில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    நான் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டதற்கு பெரிய காரணங்கள் என்று எதுவும் இல்லை. நான் பொதுவாக எதிலும் உணர்ச்சிவசப்படுபவன். நானும் சாதா ண மனிதன்தான். அந்த வகையில் கண்ணீர் வந்துவிட்டது.

    நான் முதல்-மந்திரி ஆனதற்கு பிறகு டி.வி., ஊடகங்கள் நான் எதை செய்தாலும் அதை எதிர்த்து கருத்துக்கள் கூறுகின்றன. நான் எடுக்கும் கொள்கைகளை மக்களிடம் தவறாக சித்தரித்து காட்டுகின்றன.

    ஏன் அப்படி செய்கிறார்கள்? என்று தெரியவில்லை. மேலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் எனக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.

    அவர்கள் யார் என்று சொல்ல முடியாது. நான் எதிர்க்கட்சியினரை சொல்லவில்லை. பாரதிய ஜனதாவை பொருத்த வரை என்னை எதிர்ப்பதும், விமர்சிப்பதும் அவர்களுடைய கடமையாகும். இதனால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

    ஆனால், சில குறிப்பிட்ட பொதுவான மனிதர்கள் என் மீது தவறான எண்ணத்தை வைத்துள்ளனர். அதுதான் எனது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

    இது சம்பந்தமாக எனது குடும்பத்தினர், தொண்டர்கள் ஆகியோரிடம் பேசி இருக்கிறேன். நான் காங்கிரஸ்காரர்களையும் குறை சொல்லவில்லை. எனது பட்ஜெட்டை பற்றி சிலர் விமர்சிக்கிறார்கள். நான் வடக்கு, தெற்கு என்று எந்த பாகுபாடும் பார்க்கவில்லை.


    நாங்கள் காங்கிரசுடன் குறைந்தபட்ச திட்டங்கள் அடிப்படையில் கூட்டணி அமைத்து இருக்கிறோம். காங்கிரஸ் கொண்டு வந்துள்ள திட்டங்களை செயல்படுத்துவது முக்கிய பணி ஆகும்.

    என்னை ஏன் விமர்சிக்கிறார்கள்? என்று எனக்கு தெரியவில்லை. முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வெளியிடும் கருத்துக்கள் என்னை விமர்சிப்பவை அல்ல. அவை அவருடைய அனுபவத்தின் அடிப்படையில் எனக்கு வழங்கும் ஆலோசனையாக ஏற்றுக்கொள்கிறேன்.

    அவர் என்ன ஆலோசனை வழங்கினாலும் அதை நான் வரவேற்கிறேன். ராகுல்காந்தியை பொருத்த வரை என்னை சுதந்திரமாக செயல்பட அனுமதித்துள்ளார். இந்த வி‌ஷயத்தில் நான் அதிர்ஷ்டக்காரன். அவரது பெயரை நான் தவறாக பயன்படுத்தமாட்டேன்.

    மேலும் அவரிடம் மற்ற காங்கிரசாரைப்பற்றி விவாதிக்கவும் நான் விரும்பவில்லை. காங்கிரஸ் மேலிட தலைவர்கள் யாரும் எனது ஆட்சியில் தலையிடவில்லை. உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களும் எனக்கு மிகவும் ஆதரவாக உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலை பொருத்த வரையில் தொகுதி பங்கீட்டில் எந்த பிரச்சினையும் எழாது. எங்களுக்குள் ஒருமித்த கருத்து உள்ளது.

    தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு வி‌ஷயத்தை பொருத்த வரை நான் ஒரு சாதாரண நபர். அதே நேரத்தில் அனைத்து தலைவர்களும் சேர்ந்து சரியான மாற்று அரசை உருவாக்க வழிகாண வேண்டும் என நான் விரும்புகிறேன். இதில், சொந்த நலன்களை மறந்து விட்டு நாட்டின் நலனுக்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடியை நான் 2 முறை சந்தித்தேன். அவர் என்னை அன்பாக வரவேற்றார். எனக்கு பல ஆலோசனைகளையும் வழங்கினார். இதை நான் எனக்கு அளித்த ஊக்குவிப்பாக எடுத்து கொண்டேன்.

    அவர் உடற்பயிற்சி வீடியோ வெளியிட்டது தொடர்பான வி‌ஷயத்தில் அவர் என்னை சகோதரனாக அல்லது மகனாக கருதி இருப்பதாக நினைக்கிறேன்.

    மேலும் அவர் எனது உடல் ஆரோக்கியம் குறித்து ஆலோசனை வழங்கி இருக்கிறார். அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #RahulGandhi #Kumaraswamy
    சோனியா மற்றும் ராகுலுடனான கமல் சந்திப்பால் தி.மு.க. கூட்டணியை பாதிக்காது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். #KamalHaasan #RahulGandhi #DMK

    சென்னை:

    சோனியா-ராகுலை கமல் சந்தித்து பேசியது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து தமிழக அரசியல் குறித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பால் தி.மு.க. தோழமை கட்சிக்கு இடையில் உள்ள உறவு எந்த வகையிலும் பாதிக்கப்படாது.

    கமல்ஹாசன் ஏற்கனவே தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி இருக்கிறார். கேரளா முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து பேசியுள்ளார். கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமியை சந்தித்து இருக்கிறார்.

    கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி ஆகியோரையும் சந்தித்து பேசி இருக்கிறார். கர்நாடகாவில் குமாரசாமி பதவியேற்பு விழாவிற்கு சென்றபோது சோனியாகாந்தி, மாயாவதி உள்பட பல தலைவர்களையும் சந்தித்து பேசி இருக்கிறார்.

    அந்த வகையில் தற்போது ராகுல்காந்தியையும் சந்தித்து இருப்பதாக நான் பார்க்கிறேன். ஒரு தலைவரை இன்னொரு தலைவர் சந்திப்பதால் அந்த சந்திப்பு கூட்டணிக்காக மட்டுமே என்று நாம் யூகிக்க தேவையில்லை.


    கமல்ஹாசன், காங்கிரஸ் இடம்பெறும் அணியில் தாமும் இடம்பெற வேண்டும் என்று பேசியிருந்தாலும் அது தி.மு.க.விற்கோ அல்லது அதன் தோழமை கட்சிகளுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வாய்ப்பு இல்லை.

    கமலுடனான சந்திப்பு பற்றி ராகுல்காந்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அதன்மூலம் அந்த சந்திப்புக்கு மிக முக்கியத்துவம் ஏற்பட்டு இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

    சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அது மாபெரும் மக்கள் போராட்டமாக வெடிப்பதற்குள் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு மனித உரிமை ஆர்வலர்களை சுற்றுச்சூழல் பாதுகாவலர்களை தொடர்ச்சியாக கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது.

    நாட்டின் வளர்ச்சி என்ற பெயரால் இயற்கை வளங்களையும், மக்களுக்கான வாழ்வாதாரங்களையும், பெருமளவில் அழிக்கும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் மக்கள் மீது திணித்து வருகின்றன. இந்த போக்கை மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.

    மக்களின் கருத்தறியாமல் இசைவு இல்லாமல் இந்த திட்டத்தை திணிக்க கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறது. விரைவில் சேலத்தில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #RahulGandhi #DMK

    டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் இன்று சந்தித்தார். தமிழக அரசியல் சூழல் தொடர்பாக இருவரும் விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #RahulGandhi #Kamalhaasan
    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரைவில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அக்கட்சியின் மாநில கமிட்டி சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார்.

    தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல் குறித்து இருவரும் விவாதித்ததாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட அகில இந்திய தலைவர்களை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதல் மந்திரியாக நியமிக்கப்படுவதால், டி.கே சிவகுமாரை மாநில தலைவர் பதவியில் அமர்த்த ராகுல்காந்தி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Congress #DKShivaKumar
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் நாளை மறுநாள் குமாரசாமி முதல் மந்திரியாக பதவி ஏற்க உள்ளார். இந்த மந்திரி சபையில் காங்கிரசை சேர்ந்த சிலரும் இடம் பெற உள்ளனர். காங்கிரஸ் சார்பில் யார்-யாரை மந்திரியாக நியமிக்கலாம் என்பது குறித்து டெல்லியில் இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தலைவர் ராகுல்காந்தி, மேலிட தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, வேணுகோபால் எம்.பி. ஆகியோருடன் குமாரசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

    தற்போது கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள பரமேஸ்வர் துணை முதல் மந்திரியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் மந்திரி டி.கே சிவகுமாரை நியமிக்க ராகுல்காந்தி முடிவு செய்திருப்பதாக கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    பாரதிய ஜனதா ஆட்சி கவிழவும், ஜே.டி.எஸ்.- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாதுகாத்ததில் மிக முக்கிய பங்கு வகித்தவர் டி.கே.சிவகுமார் என்பது குறிப்பிடதக்கது.


    பாரதிய ஜனதாவால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த் சிங், பிரதாப் பாட்டீல் ஆகியோரை மீட்டு அழைத்து வருவதிலும் டி.கே.சிவகுமார் தீவிரமாக செயல்பட்டுள்ளார்.

    ரூ.100 கோடி வரை எம்.எல்.ஏ.க்களுக்கு விலை பேசியும், அவர்களை பாரதிய ஜனதா பக்கம் சாய்ந்து விடாமல் தடுத்ததிலும் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

    குஜராத்தில் அகமது பட்டேல் மேல்சபை தேர்தலில் வெற்றி பெற அந்த மாநில எம்.எல்.ஏ.க்களை கர்நாடகாவில் பாதுகாத்த வரும் இவர்தான்.

    கடந்த 2002-ம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் விலாஸ்ராவ் தேஷ்முக் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது எதிர் கட்சி மூலம் ஆட்சியை கவிழ்க்க சதி நடந்தது. அப்போதும் எம்.எல்.ஏக்களை கர்நாடகம் அழைத்து வந்து அவர்களை சிவகுமார் பாதுகாத்தார்.

    இப்படி காங்கிரசுக்கு நெருக்கடி வந்த போதெல்லாம் அந்த நெருக்கடியை தீர்ப்பதில் சிவகுமார் உறுதியாக நின்றார்.

    குஜராத் எம்.எல்.ஏ.க்களை பாதுகாத்ததால் இவரது வீடு, அலுவலகங்களில் வருமான வரிச் சோதனை நடந்த போதும் இவர் காங்கிரசை விட்டு விலகவில்லை.

    இதனால் இவருக்கு மாநில தலைவர் பதவி கொடுத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  #Congress #DKShivaKumar #RahulGandhi
    காங்கிரஸ் ஆதரவுடன் கர்நாடக முதல்வராக பதவி ஏற்க உள்ள குமாரசாமி, சோனியா மற்றும் ராகுல்காந்தியை சந்தித்து பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்க உள்ளார். #KarnatakaElection2018 #SoniaGandhi #RahulGandhi #Kumaraswamy

    பெங்களூர்:

    கர்நாடகத்தில் எடியூரப்பா ராஜினாமாவை தொடர்ந்து ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி வருகிற 23-ந்தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார்.

    38 இடங்களில் வெற்றி பெற்ற ஜே.டி.எஸ். கட்சிக்கு 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. மெஜாரிட்டிக்கு 112 எம்.எல்.ஏ.க்கள் தேவை. அதையும் தாண்டி 116 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மந்திரி சபைக்கு உள்ளது.

    தனக்கு ஆதரவு அளிக்கும் முடிவு எடுத்த சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு குமாரசாமி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் நேரில் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக நாளை குமாரசாமி டெல்லி செல்கிறார். அங்கு சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை தனித்தனியே சந்தித்து நன்றி தெரிவித்துக் கொள்கிறார். மேலும் கூட்டணி மந்திரி சபையில் காங்கிரசுக்கு எத்தனை மந்திரி பதவி அளிப்பது, யார்-யாரை நியமிப்பது பற்றியும், சோனியா, ராகுலுடன் குமாரசாமி ஆலோசனை நடத்துகிறார்.

    இந்த சந்திப்பின் போது பதவி ஏற்பு விழாவுக்கு வருகை தருமாறு சோனியா, ராகுலுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கிறார்.

    பின்னர் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைவதை முறியடித்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அசோக் கெலாட், சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய காங்கிரஸ் தலைவர்கள் கபில்சிபல், அபிஷேக் சிங்வி உள்ளிட்ட மூத்த தலைவர்களையும், சந்தித்து நன்றி தெரிவிக்கிறார். அவர்களையும் பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கிறார்.

    குமாரசாமி மந்திரிசபை பதவி ஏற்பு விழா பெங்களூர் கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. எடியூரப்பாவும் பதவி ஏற்க இந்த ஸ்டேடியத்தைத்தான் தேர்வு செய்து வைத்திருந்தார். பின்னர் கவர்னர் மாளிகையிலேயே தனி ஆளாக பதவி ஏற்றார்.

    அவர் தேர்வு செய்த ஸ்டேடியத்தில் குமாரசாமி பதவி ஏற்பது குறிப்பிடத்தக்கது. பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.  #KarnatakaElection2018 #SoniaGandhi #RahulGandhi #Kumaraswamy

    மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ, சுரங்க ஊழலில் சிக்கியவர்களை பாதுகாத்து வருகின்றது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். #KarnatakaElection2018 #CBI #RahulGandhi
    பெங்களூரு :

    கர்நாடகாவில் நாளை மறுநாள் சட்டமன்ற  நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரசாரத்தின் கடைசி நாளான இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய ராகுல் காந்தி, சுரங்க ஊழல் முறைகேடுகளில் சிக்கியுள்ள ரெட்டி சகோதர்களின் ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டியிட பல்லாரி மாவட்டத்தின் 8 தொகுதிகளை பா.ஜ.க ஒதுக்கியுள்ளது. சுமார் 35 ஆயிரம் கோடி ஊழல் செய்த ரெட்டி சகோதர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை பாதுகாக்க சிபிஐ முயற்சி செய்து வருகிறது.

    எனவே, சிபிஐ தற்போது மத்திய விசாரணை அமைப்பாக இல்லாமல் சுரங்க ஊழலில் சிக்கியவர்களை பாதுகாக்கும் அமைப்பாக உள்ளது என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். #KarnatakaElection2018 #RahulGandhi 
    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பிரதமராக பதவியேற்க தயார் என்று கூறிய ராகுல் காந்தியை கிண்டல் செய்யும் விதமாக 2024-ம் ஆண்டு வரை பிரதமர் வேலை காலி இல்லை என பா.ஜ.க. தெரிவித்துள்ளது. #PMvacancy #RahulGandhi #daydreaming
    ஐதராபாத்:

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் வெற்றி பெற்றால் பிரதமராக பதவியேற்க தயார் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்த கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்திருந்தார். கூட்டணி கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல் பதவி மோகத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு மாறாக மூத்த தலைவர்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு அவர் பிரதமராக ஆசைப்படுகிறார் என மோடி குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், ராகுல் காந்தியை கிண்டல் செய்யும் விதமாக, அவர் பகல்கனவு காண்பதாகவும், வரும் 2024-ம் ஆண்டு வரை பிரதமர் வேலை காலி இல்லை என பா.ஜ.க. இன்று தெரிவித்துள்ளது.


    இதுதொடர்பாக, ஐதராபாத் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க. மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான ஷாநவாஸ் ஹுசைன், பிரதமர் ஆகப்போவதாக ராகுல் காந்தி பகல்கனவு காண்கிறார். அவரது அழகான கனவுக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

    நாட்டின் பிரதமராக நரேந்திர மோடியை மக்கள் தேர்வு செய்துள்ளனர். வரும் 2019-ம் தேர்தலிலும் மேலும் அதிகமான பெரும்பான்மை பலத்துடன் மோடிதான் பிரதமராக பதவியேற்பார். இது காங்கிரஸ் தலைவர்களுக்கும் தெரியும் என அவர் தெரிவித்தார்.

    காங்கிரஸ் துணை தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பிறகு 13 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் அக்கட்சி தோல்வி அடைந்ததாகவும், அவர் தலைவராக பதவி உயர்வு பெற்ற பின்னர் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் தோல்வியை சந்தித்துள்ளதாகவும், வரும் 12-ம் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தல் முடிவுகள் ஆறாவது தோல்வியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  #PMvacancy #RahulGandhi #daydreaming 
    ×