search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ragi Recipes"

    • சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு - 2 கப்

    சாதம் - அரை கப்

    சோடா மாவு - அரை டீஸ்பூன்

    துருவிய தேங்காய் - 1 1/2 கப்

    நாட்டுச்சர்க்கரை - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    கேழ்வரகு மாவை சலித்து அதை ஒரு கடாயில் கொட்டி மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்து ஆற வையுங்கள்.

    மிக்ஸியில் சாதம், தேங்காய், நாட்டுச்சர்க்கரை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    பின்னர் அதனுடன் வறுத்த கேழ்வரகு மாவை போட்டு கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    தற்போது அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதில் சோடா மாவு மற்றும் உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.

    மறு நாள் நன்கு புளித்து மாவு தயார் நிலையில் இருக்கும்.

    ஆட்ட கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி மாவை ஊற்றி சுட்டு எடுங்கள்.

    அவ்வளவுதான் கேழ்வரகு ஆப்பம் தயார்.

    இதற்கும் தேங்காய்பால், முட்டை குருமா சூப்பராக இருக்கும்.

    • கேழ்வரகில் பல்வேறு சத்தான ரெசிபிகளை செய்யலாம்.
    • கேழ்வரகில் ஆப்பம் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு - 1 கப்

    சாதம் - 1/4 கப்

    சோடா மாவு - 1/4 டீஸ்பூன்

    துருவிய தேங்காய் - 3/4 கப்

    நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டி - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    கேழ்வரகு மாவை சலித்து அதை ஒரு கடாயில் கொட்டி மிதமான தீயில் சூடேற பிரட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஆற வையுங்கள்.

    பின் மிக்ஸியில் சாதம், தேங்காய், நாட்டுச்சர்க்கரை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    தற்போது அதில் பிரட்டி வைத்துள்ள மாவையும் சேர்த்து கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    தற்போது அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி சோடா மாவு மற்றும் உப்பு சேர்த்து கரைத்து மூடி ஓரமாக வையுங்கள்.

    இது 8 மணி நேரம் ஊற வேண்டும்.

    மறுநாள் நன்கு புளித்து மாவு தயார் நிலையில் இருக்கும். நன்கு கிளறி ஆப்ப சட்டியில் ஊற்றி சுட்டு எடுங்கள்.

    அவ்வளவுதான் கேழ்வரகு ஆப்பம் தயார்.

    இதற்கும் தேங்காய்பால் சூப்பராக இருக்கும்.

    • குழந்தைகளுக்கு இந்த டிபன் மிகவும் பிடிக்கும்.
    • கேழ்வரகில்(ராகி) அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு சேமியா - 1 பாக்கெட்

    உப்பு - தேவையான அளவு

    தேங்காய் - தேவையான அளவு

    ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி

    வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு

    செய்முறை :

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    கால் கப் தண்ணீரில் உப்பு கலந்து அதை கேழ்வரகு சேமியாவில் தெளித்து 5 நிமிடம் ஊற விடவும்.

    பின்னர் ஊறிய கேழ்வரகு சேமியாவை இட்லி தட்டில் வேக வைத்து கொள்ளவும்.

    வெந்ததும் அதில் வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சத்தான கேழ்வரகு சேமியா புட்டு ரெடி.

    • கேழ்வரகில் சத்தான பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று கேழ்வரகு பக்கோடா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 100 கிராம்,

    அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,

    தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்,

    வெங்காயம் - 2

    பச்சை மிளகாய் - 1

    இஞ்சி - சிறிய துண்டு

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,

    உப்பு - தேவையான அளவு,

    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, தயிர், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி - கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை அதில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்துக் கொள்ளவும்.

    * சூப்பரான சத்தான கேழ்வரகு பக்கோடா ரெடி.

    • கேழ்வரகில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு - அரை கிலோ,

    வறுத்த உளுந்து - 50 கிராம்,

    கடலைப் பருப்பு - 50 கிராம்,

    உப்பு, மிளகாய்த் தூள், எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    * கேழ்வரகை அரைத்து மாவாக்கிக்கொள்ளவும்.

    * இந்த மாவுடன் வறுத்த உளுந்து சேர்த்து, நன்றாக அரைக்கவும்.

    * அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு, மிளகாய்த் தூள், கடலைப் பருப்பைச் சேர்த்து, நன்றாகக் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.

    * மாவை சிறிது எடுத்து சிறிய அளவில் உருண்டையாக உருட்டி, வாழை இலையில் போட்டு, மெல்லியதாகத் தட்டிக்கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து தட்டி வைத்துள்ள தட்டைகளை ஒவ்வொன்றாகப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

    * சூப்பரான ஸ்நாக்ஸ் கேழ்வரகுத் தட்டுவடை ரெடி.

    * இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

    • கேழ்வரகில் அதிகளவு கால்சியம் உள்ளது.
    • இந்த தீபாவளிக்கு வித்தியாசமான, சத்தான இந்த பலகாரத்தை செய்து பாருங்களேன்.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 500 கிராம்

    வெல்லம் - 250 கிராம்

    தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் பொடி - சிறிதளவு

    எண்ணெய் - பொரித்தெடுக்க

    செய்முறை :

    வெல்லத்தை பாகு காய்ச்சி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அந்த மாவில் பாகு காய்ச்சிய வெல்லத்தை ஊற்றி நன்கு கிளறி வைக்கவும்.

    அதை ஒரு நாள் ஊற விட்டு, மறுநாள் மாவை அதிசரமாக பிடித்து வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்த அதிசரங்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுககவும்.

    இப்போது மிருதுவான, சுவையான கேழ்வரகு அதிரசம் தயார்.

    • குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று கேழ்வரகில் பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருள்கள்:

    கேழ்வரகு மாவு - 1/2 கப்,

    கோதுமை மாவு - 1/2 கப்,

    ஓமம் - சிறிதளவு,

    எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி,

    லேசாக சூடு படுத்திய தண்ணீர் - 1/2 கப்,

    உப்பு - தேவையான அளவு,

    ண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கேழ்வரகு மாவு,கோதுமை மாவு, ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய், உப்பு, ஓமம் சேர்த்து நன்றாக கலந்து அதில் சிறிது சிறிதாக லேசாக சூடு படுத்திய தண்ணீரை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு தடவை பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரிக்கட்டையில் வைத்து வட்டமாக தேய்த்து வைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தேய்த்து வைத்த பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு இருபுறமும் பொன்னிறமானவுடன் எடுத்து விடவும்.

    இப்போது சுவையான கேழ்வரகு பூரி ரெடி.

    • இந்த ஸ்நாக்ஸ் ஒரு வாரம் வைத்திருந்து சாப்பிடலாம்.
    • கடையில் வாங்க வேண்டாம். வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    கேழ்வரகு மாவு - 1 கப்

    வெங்காயம் - 1

    பொட்டுக்கடலை மாவு - 2 தேக்கரண்டி

    ப. மிளகாய் - 3

    பெருங்காயம் தூள் - 1 சிட்டிகை

    கறிவேப்பிலை - ஒரு கொத்து

    உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * ப.மிளகாய், வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு அதனுடன் உப்பு, பெருங்காய தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    * பின்பு அதில் கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, மாவு கெட்டியாகும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

    * அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கலந்து வைத்துள்ள ராகி மாவை உதிரி உதிரியாக போட்டு பொரித்து எடுத்தால் சுவையான ராகி பக்கோடா தயார்.

    * இவற்றை அனைவருக்கும் சுடசுட பரிமாறவும்.

    • கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • இந்த கொழுக்கட்டையை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்

    மேல் மாவிற்கு...

    கேழ்வரகு மாவு - 250 கிராம்,

    தண்ணீர் - 1/2 லிட்டர்,

    எண்ணெய் - 50 மி.லி.,

    உப்பு - 20 கிராம்.

    பூரணத்திற்கு...

    எள் - 100 கிராம் (பொடிக்கவும்),

    கருப்பட்டி - 200 கிராம்,

    முழு தேங்காய் - 2 (துருவியது),

    நெய் - 10 கிராம், ஏலக்காய் - 25 கிராம் (பொடிக்கவும்).

    செய்முறை

    மாவிற்கு...

    மிதமான சூட்டில் கடாயில் கேழ்வரகு மாவை கொட்டி வாசனை வரும்வரை வறுக்கவும். வறுத்த மாவு ஆறியதும் உப்பு, வெந்நீர், எண்ணெய் சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்தில் நன்கு பிசைந்து கொள்ளவும்.

    பூரணத்திற்கு...

    அடுப்பில் கடாயை வைத்து பொடித்த எள், தேங்காய்த்துருவல், நெய், ஏலக்காய்த்தூள், கருப்பட்டியை சேர்த்து கிளறி இறக்கவும். மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து உள்ளே பூரணத்தை வைத்து வேண்டிய வடிவத்தில் செய்து வைக்கவும்.

    இவ்வாறு செய்த கொழுக்கட்டைகளை இட்லி பானையில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான கேழ்வரகு பூரண கொழுக்கட்டை ரெடி.

    • வாரம் இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வருவது பற்கள், எலும்புகளுக்கு நல்லது.
    • விரைவில் உடல் எடையை குறைக்க கேழ்வரகு உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்

    வெல்லம் அல்லது கருப்பட்டி - 1 கப் (துருவியது)

    நெய் - 2 மேசைக்கரண்டி

    முந்திரி - 1 தேக்கரண்டி

    கருப்பு எள் - தேக்கரண்டி

    திராட்சை - 1 தேக்கரண்டி

    ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை

    சுக்கு தூள் - 1 சிட்டிகை

    செய்முறை :

    * வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். (வெல்லம் கரையும் வரை வைத்தால் போதுமானது)

    * எள்ளை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    * நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து வைக்கவும்.

    * கேழ்வரகு மாவை இளஞ்சூடாக வாசனை வரும் வரை வறுத்தெடுத்து, சூடாக இருக்கும் போதே வெல்லம், நெயில் வறுத்த முந்திரி, திராட்சை, எள், ஏலக்காய் தூள், சுக்கு தூள் ஆகியவற்றை அதில் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.

    * சுண்ணாம்பு, இரும்பு, புரதம் நிறைந்த லட்டு தயார்.

    • கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் இந்த ரெசிபி.

    தேவையான பொருட்கள்:

    இட்லி அரிசி - 200 கிராம்,

    கேழ்வரகு - 200 கிராம்,

    உளுந்து - 50 கிராம்,

    வெந்தயம்-1 டீஸ்பூன்,

    கருப்பட்டி - 500 கிராம்,

    ஏலக்காய்த் தூள் - சிறிதளவு,

    உப்பு - சிறிதளவு,

    நல்லெண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    இட்லி அரிசி, கேழ்வரகு, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் நன்றாகக் கழுவி மூன்று மணி நேரம் ஊற வைத்து நன்கு ஊறியதும், கெட்டியாக மாவு போல் அரைத்து சிறிது உப்பு சேர்த்து புளிக்க வைக்க வேண்டும்.

    கருப்பட்டியை தூளாக்கி, தண்ணீர் சேர்த்து சில நிமிடங்களில் கரைந்ததும் வடிகட்டி மாவில் ஊற்ற வேண்டும்.

    அத்துடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து 5 மணிநேரம் புளிக்க விட வேண்டும்.

    பின்னர் அடுப்பில் பணியாரச் சட்டியை வைத்து ஒவ்வொரு குழியிலும் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடானதும் காய்ந்ததும் மாவை ஊற்றி வேகவைத்து எடுத்து பரிமாற வேண்டும்.

    இப்போது சத்தான சுவையான கருப்பட்டி பணியாரம் ரெடி.

    • நீரிழிவு நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிகுந்த உணவாக கோதுமை இருக்கிறது.
    • கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1/2 கப்

    கோதுமை மாவு - 1/4 கப்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 1

    கறிவேப்பிலை - சிறிது

    சீரகம் - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தண்ணீர் அல்லது மோர் - தேவையான அளவு

    செய்முறை :

    * ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் அல்லது மோர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான கேழ்வரகு கோதுமை தோசை ரெடி!!

    ×