search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public suffering"

    • சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கிச்சிபாளையத்திற்கு செல்ல இந்த சாலை தான் பிரதான சாலையாக உள்ளது.
    • 5 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அந்த சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி 45-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான கருவாட்டு பாலம் அருகில் சுமார் 10 மீட்டர் தூரத்திறகு தார் சாலை போடப்படாமல் கடந்த 5 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அந்த சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கிச்சிபாளையத்திற்கு செல்ல இந்த சாலை தான் பிரதான சாலையாக உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் மழைநீர் தேங்கி நிற்கும் குழியில் நிலைத்தடுமாறி பலர் கீழே விழுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், கருவாட்டு பாலம் அருகில் 10 மீட்டர் மட்டும் சாலை போடாமல் விட்டுள்ளனர்.

    குண்டும் குழியுமாக காணப்படும் இந்த சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி கிடங்கிறது. இங்கு மட்டும் ஏன் சாலை போடவில்லை என்று தெரியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • 5 கிலோமீட்டர் தாண்டி இருசக்கர வாகனத்தில் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
    • தரைமட்ட நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு ஆறு மாதம் ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பழவேற்காடு கோட்டைக்குப்பம் ஊராட்சியில் தோனிரவு, ஜமீலாபாத், செஞ்சியம்மன் நகர், உட்பட்ட கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் தண்ணீர் உப்பாக காணப்படுவதால் வீடுகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பொன்னேரி அடுத்த அரசூர் ஏரியில் இருந்து 15 கிலோமீட்டர் குழாய் மூலம் பழவேற்காடு கீழ்நிலைத் தொட்டியில் சேமிக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து தெரு குழாய் வழியாக வீடுகளுக்கு குடிநீர் அனுப்பப்படுகின்றன.

    அவ்வாறு செல்லும் குடிநீர் சரியாக வராததால் குடிநீரின்றி மக்கள், அதிக விலை கொடுத்து கேன் தண்ணீர் வாங்கியும் மற்றும் 15 கிலோமீட்டர் தாண்டி இருசக்கர வாகனத்தில் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

    அப்பகுதி மக்கள் குடி தண்ணிக்காக பெரிதும் அவதிப்பட்டு வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் தரைமட்ட நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு ஆறு மாதம் ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் 22 வார்டுகளில் மட்டும் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணி 41 கிலோமீட்டர் தூரம் மட்டும் நடைபெற்று வருகிறது.
    • தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை சேறும் சகதியுமாகவும் மாறி பொதுமக்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரி நக ராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். மொத்தம் 69 கிலோமீட்டரில் 237 தெருக்கள் உள்ளன.

    இந்நிலையில் பொன்னேரி நகராட் சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2011-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.பின்னர் இடம் தேர்வு செய்வதில் குளறுபடி, நிதி ஒதுக்குவதில் காலதாமதம் காரணமாக பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து கடந்த 2018 -ம் ஆண்டு பாதாள சாக்கடைதிட்டப்பணி தொடங்கப்பட்டது. இதனை இரண்டு வருடத்திற்குள் முடிக்க திட்டமிட்டு ரூ.54.78 கோடி ஒதுக்கப்பட்டது.

    ஆனால் பணி தொடங்கி 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பாதாளசாக்கடை கால்வாய் அமைக்கும் பணி இன்னும் முடியவில்லை. நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் 22 வார்டுகளில் மட்டும் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணி 41 கிலோமீட்டர் தூரம் மட்டும் நடைபெற்று வருகிறது.

    வேண்பாக்கம், பழைய பஸ் நிலையம், கள்ளுக்கடை மேடு ஆகிய 3 இடங்களில் கழிவு நீர் சேகரிப்பு தொட்டி, மற்றும் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பொன்னேரி அடுத்த பெரிய காவனம் ஆரணி ஆற்றின் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படுகிறது. என்.ஜி.ஓ. நகரில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளது. இங்குள்ள தெருக்களில் குழாய் பதிக்க ஆரம்பிக் கப்பட்ட பணிகள் ஒரு வருடமாக நடைபெற்று வருகின்றன. இதனால் தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை சேறும் சகதியுமாகவும் மாறி பொதுமக்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

    ஏற்கனவே பொன்னேரி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைத்திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி உள்ளனர். ஆனாலும் கடந்த 6 ஆண்டுகளாக இந்த பணி ஆமைவேகத்தில் நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இதுகுறித்து பொன்னேரி நகராட்சி ஆணையர் கோபிநாத் கூறும்போது, பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 85 சதவீதம் முடிவடைந்துள்ளது. பருவ மழைக்கு முன்பு டிசம்பர் மாதம் இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமி டப்பட்டு உள்ளது. நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பைப்லைன் புதைத்த பகுதிகளில் பணிகள் முடிக்கப்பட்டு சாலைகள் போடப் பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியம் மீதமுள்ள பணிகளை முடித்து தரும்போது வீடுகளுக்கு கழிவு நீர் குழாய் இணைப்பு பணி தொடங்கப்படும் என்றார்.

    • பள்ளிகளுக்கு நடந்தும், சைக்கிள்களிலும் செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
    • ஒரு வாரத்துக்கு முன்பே மெட்ரோ வாட்டர் பணிகள் முடிந்தும் பள்ளங்களை மூடி தார் சாலைகள் அமைக்கவில்லை.

    சென்னையில் முக்கிய பகுதிகளில் பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்தையே தடுமாற வைத்துள்ளது.

    தொழில் நகரமான அம்பத்தூரில் ஆயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள், அலுவலகங்கள், குடியிருப்புகள் நிறைந்துள்ள போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி.

    இந்த பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க சாலைகளின் ஒரு பக்கம் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கத்தில் தனியார் கியாஸ் நிறுவனத்துக்கான குழாய்கள் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

    ஒரே நேரத்தில் நடைபெறும் இந்த பணிகளால் சாலைகள் குறுகி குண்டும் குழியுமாகிவிட்டன. சாலைகள் இருந்த இடமே தெரியாமல் செம்மண் பகுதியாக காட்சி அளிக்கிறது.

    கள்ளிக்குப்பம், கடப்பா சாலை, மதனங்குப்பம் சாலை, கருக்கு சாலை, பட்டரைவாக்கம் சாலை, கொரட்டூர் சாலை, தொழிற்பேட்டை - திருவேற்காடு சாலை ஆகிய சாலைகள் படுமோசமாக காட்சி அளிக்கின்றன.

    லேசான தூறல் விழுந்தாலே இந்த பகுதி சேறும் சகதியுமாகி விடுகிறது. இந்த வழியாக பள்ளிகளுக்கு நடந்தும், சைக்கிள்களிலும் செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இரு சக்கர வாகனங்கள், சைக்கிள்களில் செல்பவர்கள் மழை நேரங்களில் பள்ளம் தெரியாமல் விழுந்து எழுந்து செல்வது வாடிக்கையாகிவிட்டது.

    கலெக்டர் நகர் சந்திப்பு, இளங்கோ நகர் சந்திப்பு, மங்கல் ஏரி பார்க் சந்திப்பு ஆகிய பகுதிகள் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு படுமோசமாக கிடக்கின்றன. இந்த பகுதியில் ஒரு வாரத்துக்கு முன்பே மெட்ரோ வாட்டர் பணிகள் முடிந்தும் பள்ளங்களை மூடி தார் சாலைகள் அமைக்கவில்லை. சில இடங்களில் நிரப்புவதற்கு மண்கூட இல்லை.

    இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, "ஓடை தோண்டும்போது ஒரு லாரி மண்ணை ரூ.2 ஆயிரம் விலைக்கு விற்று விடுகிறார்கள். இதில் அரசியல்வாதிகள் உடந்தையாக இருக்கிறார்கள். குழாய்கள் பதிக்கப்பட்ட பிறகும், கால்வாய் கரைகள் கட்டப்பட்ட பிறகும் மூடுவதற்கு போதுமான மண் கிடைப்பதில்லை. இதனால் அரை குறையாக மூடி போடுகிறார்கள். மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது" என்றார்கள். சில இடங்களில் பணிகள் முடிந்தும் சாலையை சீர மைக்கவில்லை. இவ்வளவு முக்கியமான பகுதியில் சாலைகளை மாதக்கணக்கில் இப்படி போட்டிருப்பது சரி தானா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

    குறிப்பிட்ட அளவு தூரத்துக்கு பணிகள் முடிந்ததும் அந்த பகுதியில் சாலைகளை சீரமைத்து விட்டு அடுத்தக்கட்டமாக தொடரலாமே என்கிறார்கள் பொது மக்கள்.

    திரு.வி.க.நகரில் இருந்து மூலக்கடை வரை மழைநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. கூவத்தில் கொண்டு இணைக்க பிருந்தா தியேட்டர் அருகே பணிகள் நடக்கிறது. மாதக்கணக்கில் நடக்கும் இந்த பணியால் அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கி உள்ளது.

    5 நிமிடங்களில் திரு.வி.க. நகருக்கு செல்லக்கூடியவர்கள் சந்து பொந்துகளில் நுழைந்து நெரிசலில் சிக்கி படாதபாடு பட்டு சுமார் ஒரு மணி நேரமாகிறது. நெரிசல் மிகுந்த சாலையால், மாலை நேரங்களில் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    கோடம்பாக்கம் ஆற்காடு சாலை மெட்ரோ ரெயில் பணிகளால் ஏற்கனவே மேடு பள்ளங்களாக கிடக்கிறது. இதற்கிடையில் உட்புற பகுதிகளில் மழைநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்டதால் பாத சாரிகளும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகிறார்கள். சுமார் 3 வருடங்களாக சிரமப்பட்டு வருவதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

    மெயின் ரோடு மட்டுமில்லாமல் உட்புற சாலைகளையும் குண்டும் குழியுமாக்கி பணிகளை முடிக்காமல் போட்டு இருப்பதால் குடியிருப்பு வாசிகள் தெருச்சாலைகள் வழியாக மெயின் ரோட்டுக்கு வர சிரமப்படுகிறார்கள். மெயின் ரோட்டிலும் மெட்ரோ பணிகள் நடப்பதால் போக்குவரத்து சுற்றி சுற்றி விடப்பட்டுள்ளது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த சிறு மழையில் கூட காந்தி ரோடு, முரளி கிருஷ்ணாநகர் மெயின் ரோடு முழுவதும் சகதி மற்றும் குளம்போல் ஆகிவிட்டதாக தெரிவித்தனர்.

    சில சாலைகளின் நடு பகுதியிலேயே தோண்டி கழிவுநீர் குழாய்கள் பதிக்கும் வேலைகள் நடப்பதால் அந்த பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் கூட செல்வது சிரமமாக இருப்பதாக கூறினார்கள்.

    வளசரவாக்கம் பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதும் பெரும்பாலும் அனைத்து ரோடுகளிலும் மெட்ரோ வாட்டர், பாதாள சாக்கடை இணைப்புகளுக்காக ஓடைகள் தோண்டப்பட்டன. சில பகுதிகளில் பணிகள் முடிந்தும் முறையாக மூடப்படாததால் போக்குவரத்துக்கு சிரமமாக இருப்பதாக கூறுகிறார்கள்.

    பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் இடையே மெட்ரோ ரெயில் பணிகளுக்காக சாலைகளின் நடுவே ராட்சத தூண்கள் அமைக்கப்படுவதால் போரூரில் இருந்து கோடம்பாக்கம், வடபழனி செல்லும் கனரக வாகனங்கள் அம்பேத்கர் சிலை, கே.கே.நநகர், வளசர வாக்கம் பகுதிகளில் மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.

    அதேநேரம் வளசர வாக்கம், மேட்டுக்குப்பம், ஆழ்வார் திருநகர் பகுதிகளில் உட்புற சாலைகள் வழியாக திருப்பி விடப்பட்டு உள்ள இரு சக்கர வாகனங்கள், கார்கள் அந்த பகுதிகளில் நடந்து வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளால் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    பரங்கிமலை - மேடவாக்கம் மெயின் ரோட்டில் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக சாலையின் நடுவே தூண்கள் அமைக்கப்படுவதால் இரு பக்கமும் இலகு ரக வாகனங்கள் செல்வதற்காக குறுகிய பாதைகள் உள்ளன.

    இந்த பாதைகளை தார் போட்டு சீரமைத்து கொடுக்காததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேடவாக்கம் கூட்டு ரோடு அருகில் சாலை இருந்த அடையாளமே இல்லாமல் செம்மண் பாதையாக குண்டும் குழியுமாக கிடக்கின்றன. இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்துக்களில் சிக்குகிறார்கள்.

    சோழிங்கநல்லூர், சிறுசேரி, துரைப்பாக்கம் பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பலர் இந்த வழிகளில் இரவு நேரத்தில் வருவது வழக்கம். ஒரு பக்கம் பணிகள் நடந்தாலும் இன்னொரு பக்கம் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும் சாலைகளை அமைத்து கொடுப்பது நல்லது.

    • தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட சீனாவின் வடக்கு பகுதிகள் தான் வெப்ப அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
    • காலை 11 மணியில் இருந்து மாலை 6 மணிவரை பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    பெய்ஜிங்:

    இத்தாலி, ஸ்பெயின், சீனா உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பஅலை தாக்கி வருகிறது.

    இதன் காரணமாக இத்தாலியில் 114.8 டிகிரி வெயிலும், ஸ்பெயினின் தெற்கு பகுதியில் 111.2 டிகிரி வெயிலும் பொது மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

    இதில் உச்சகட்டமாக சீனாவில் வரலாறு காரணாத வகையில் 125.6 டிகிரி வெயில் போட்டு தாக்குகிறது. 100 டிகிரி அடித்தாலே பொதுமக்கள் வாடி வதங்கி விடுவார்கள். ஆனால் இதை விஞ்சும் வகையில் வெப்ப அலை அதிகமாக வீசுவதால் சீன மக்கள் தவித்து வருகின்றனர்.

    தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட சீனாவின் வடக்கு பகுதிகள் தான் வெப்ப அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 10 நாட்களுக்கு மேலாக இந்த பகுதிகளில் வெயிலின் கொடுமை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி விட்டனர். இன்னும் 5 நாட்களுக்கு கடுமையான வெப்பஅலை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளதால் காலை 11 மணியில் இருந்து மாலை 6 மணிவரை பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    சீனாவில் கடந்த 1961-ம் ஆண்டு கடும் வெப்ப அலை ஏற்பட்டது. அதன்பிறகு இப்போது அங்கு வெப்ப அலை பொதுமக்களை பாடாய் படுத்துகிறது. வெப்பத்தால் இரவு நேரம் கடும் புழுக்கமாக இருக்கிறது.இதனால் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த வெப்ப அலைக்கு ஏராளமானோர் அம்மை, சிறுநீர் கடுப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.நோயாளிகள், முதியவர்கள் வெப்ப அலையால் தாக்குபிடிக்க முடியாமல் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்,

    இத்தாலியில் ரோம், சிசிலி உள்ளிட்ட 16 முக்கிய நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இத்தாலியில் 46 நகரங்களில் 120 டிகிரி வெயில் அடிக்கிறது.

    வெப்பஅலையால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது. பகல் நேரங்களில் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஸ்பெயினில் 112 டிகிரி வெயில் வாட்டி வதைக்கிறது. கடும் அனலால் காடுகளில்வேகமாக தீ பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    • மேச்சேரி 11-வது வார்டு அண்ணா நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
    • கழிவு நீர் கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் சாக்கடை கழிவு நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது.

    மேட்டூர்:

    மேச்சேரி 11-வது வார்டு அண்ணா நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள கழிவு நீர் கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் சாக்கடை கழிவு நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவு நீரால் கடும் துர்நாற்றம் வீசு வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மேலும், தேங்கிய கழிவு நீரில் கொசு உற்பத்தியாகி பொதுமக்கள் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

    • தொடர்பு கொள்ள முடியாமல் பொதுமக்கள் அவதி
    • போலீஸ் நிலையத்தை எப்படித் தான் தொடர்பு கொள்வது எனக்கூறி மக்கள் புலம்புகிறார்கள்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக தொலைபேசி வேலை செய்யாத அவல நிலை உள்ளது. பொதுமக்கள் திருக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு போன் செய்தால் முழுமையாக ரிங் போகிறது. ஆனால் போலீசார் போனை எடுப்பதில்லை.

    அவசர செய்தி கூட போலீசாருக்கு தெரிவிக்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வருகிறார்கள்.

    ஏதேனும் ஒரு பிரச்சனை என்றாலும் முக்கிய தகவல் என்றாலோ நேரடியாக போலீஸ் நிலையத்திற்கு தான் வந்து சொல்ல வேண்டிய நிலை உள்ளது.

    சுமார் 11 கிலோமீட்டர் பயணம் செய்து திருக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து பொதுமக்கள் பிரச்சினைகளை கூறும் அவல நிலை உள்ளது.

    ஏதேனும் ஒரு அவசரம் என்றால் திருக்கனூர் போலீஸ் நிலையத்தை எப்படித் தான் தொடர்பு கொள்வது எனக்கூறி மக்கள் புலம்புகிறார்கள்.

    அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் தொலைபேசி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • மின் கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு
    • தொடர்ந்து மழை பெய்து வருகிறது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு திடிரென மின் கம்பி அறுந்து விழுந்தது.

    இதனால் அப்பகுதி முழுவதும் மின்தடை செய்யப்பட்டது.

    இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் இன்று காலை வரை மின் விநியோகம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டனர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் முதியவர்கள் மற்றும் பொது மக்களும் மிகவும் அவதிப்பட்டனர். 

    • அனல் காற்று வீசி வருவதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கி வருகின்றது.
    • மழை தொடர்ந்து நீடித்து வந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கி அக்னி நட்சத்திரம் முடிந்து தற்போது வரை 104 டிகிரி வெயில் பதிவாகி வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கடலூர் மாவட்டத்தில் அனல் காற்று வீசி வருவதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கி வருகின்றது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெப்ப சலனம் காரணமாக பலத்த இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. பகலில் 104 டிகிரி வெயிலும், மாலை நேரங்களில் குளிர்ந்த காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், திருவந்திபுரம், கோண்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழையுடன் தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை தொடர்ந்து நீடித்து வந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள மழையில் நனைந்து படியும், நடந்து சென்ற பொது மக்கள் குடை பிடித்த படியும் சென்றதை காண முடிந்தது. அதே சமயத்தில் இந்த திடீர் மழையால் குளிர்ந்த காற்று வீசிவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • அபிராமம் பகுதியில் ரேசன் பொருட்கள் சரிவர கிடைக்காததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
    • கோதுமை, மண்எண்ணெய் சீனி, துவரம்பருப்பு உள்பட அனைத்து பொருட்களும் கிடைப்பதில்லை.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், அபிராமம் பகுதியில் உள்ள ரேசன்கடைகளில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அரிசி, தவிர கோதுமை, சீனி, துவரம்பருப்பு, மண்எண்ணெய் உள்பட அனைத்து பொருட்களும் சரிவர கிடைக்காததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ரேசன்கடையில் அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் சாதாரண மக்கள் முதல் நடுத்தர மக்களும் ரேசன்கடையில் உணவு பொருட்களை வாங்கி பயனடைகின்றனர். அபிராமம் பகுதியில் உள்ள 3 ரேசன் கடைகளில் 1200 ரேசன்கார்டுதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.

    கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக அக்னி வெயில் நட்சத்திரம் முடிந்த நிலையிலும் தொடர் வெப்பத்தால் பகல்நேரங்களில் ரேசன்கடைகளுக்கு பொதுமக்கள் வருகை குறைவாக காணப்படுகிறது. வெயிலின் தாக்கம் குறைந்து காலை, மாலை ரேசன்கடைகளுக்கு சென்றால் கடை பூட்டியே கிடைக்கிறது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது.

    ரேசன்கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் அரிசியை தவிர கோதுமை, சீனி, துவரம்பருப்பு, மண்எண்ணெய் உள்பட பல பொருட்கள் அபிராமம் பகுதி பொதுமக்களுக்கு பெயரளவிற்கு மட்டுமே கிடைக்கிறது. முன் கூட்டியே ரேசன் பொருட்கள் வாங்க வராமல் மாத கடைசியில் ரேசன்கடைக்கு ரேசன் பொருட்கள் வாங்க வருவோர் ஏமாற்றம் அடைகின்றனர்.

    இதுபற்றி அபிராமம் அப்பகுதி மக்கள் கூறுகையில், தகுதியான அனைத்து ரேசன்கார்டு தாரர்களுக்கும் கோதுமை, மண்எண்ணெய் சீனி, துவரம்பருப்பு உள்பட அனைத்து பொருட்களும் கிடைப்பதில்லை. ஏழை மக்களின் நன்மை கருதி அனைத்து பொருட்களும் அனைத்து மக்களுக்கும் மாதந்தோறும் ரேஷனில் ரேசன் பொருட்கள் கிடைக்க சமந்தப்பட்ட உணவுப்பொருள் வழங்கள் மற்றும் கூட்டுறவு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ஜூன் மாதத்திலும் வாட்டி வதைக்கும் வெயில்
    • இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    மதுரை

    ஜூன் மாதத்தில் 2 வாரங்கள் கடந்த பின்னரும் மதுரையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பநிலை 38-40 டிகிரி செல்சியஸ் அளவில் உள்ளது. சில நேரங்களில் வெப்பம் குறை வாக இருந்தாலும் புழுக்கம் அதிகமாக இருக்கிறது.

    பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்ப தால் அவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    ரோட்டில் கடை வைத்து வியாபாரம் செய்துவரும் வியாபாரிகளும் வெயிலின் தாக்கத்தால் அவதிக்குள்ளா கின்றனர். இரவு நேரங்களில் புழுக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.பலர் காற்றுக்காக வீட்டிற்கு வெளியில் வந்து அமர்ந்திருக்கின்றனர். மேலும் பகல் நேரங்களில் வெளியே செல்வதை பலர் தவிர்த்து வருகின்றனர்.

    காற்று வீசுவது குறைவாக இருப்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பகல் நேரங்களில் சாலைகள் மற்றும் பாலங்களில் செல்லும்போது அனல் அடிக்கிறது. இந்த நிலையில் குளிர்பானங்கள், பழங்களின் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.வழக்கமாக அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்னர் படிப்படியாக வெப்பத்தின் தாக்கம் குறையும். இந்தமுறை அக்னி நட்சத்திர காலத்தில் மழை பெய்தும்கூட வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.

    இந்த நிலையில் ஜூன் மாதத்தில் ஒரு வாரத்திற்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால் 2 வாரங்களை கடந்த பின்னரும் வெயில் அதிகமாகவே உள்ளது. கடந்த சில தினங்களில் ஒருமுறை மழை பெய்தும் கூட அது வெப்பத்தை தணிக்க போதுமானதாக இல்லை. வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் குறையுமா? என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    • தி.மு.க. கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு
    • சாலை, கால்வாய், குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை புகார்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் சாதாரண கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் இன்று நடந்தது. கமிஷனர் ரத்தினசாமி, துணை மேயர் சுனில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தி.மு.க., அதிமுக, பாமக விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான திமுக கவுன்சிலர் தங்களது வார்டுகளில் சாலை, கால்வாய், குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை.

    பாதாள சாக்கடை பணிகள் நிறைவடையாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    குடிநீர் தொட்டி பம்பு ஆப்ரேட்டர்களுக்கு 3 மாதங்களாக சம்பளம் தராததால் தண்ணீர் விட மறுக்கின்றனர். இதனால் பொது மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருவதாகவும் சரமாரி குற்றச்சாட்டுகள் எழுப்பினர்.

    கவுன்சிலர்கள் வைத்த குற்ற சாட்டுகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றி தரப்படும் என மேயர் சுஜாதா, கமிஷனர் ரத்தினசாமி ஆகியோர் உறுதி அளித்தனர்.

    ×