என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேலம் கருவாட்டு பாலம் அருகே குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி
- சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கிச்சிபாளையத்திற்கு செல்ல இந்த சாலை தான் பிரதான சாலையாக உள்ளது.
- 5 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அந்த சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.
சேலம்:
சேலம் மாநகராட்சி 45-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான கருவாட்டு பாலம் அருகில் சுமார் 10 மீட்டர் தூரத்திறகு தார் சாலை போடப்படாமல் கடந்த 5 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அந்த சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கிச்சிபாளையத்திற்கு செல்ல இந்த சாலை தான் பிரதான சாலையாக உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் மழைநீர் தேங்கி நிற்கும் குழியில் நிலைத்தடுமாறி பலர் கீழே விழுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், கருவாட்டு பாலம் அருகில் 10 மீட்டர் மட்டும் சாலை போடாமல் விட்டுள்ளனர்.
குண்டும் குழியுமாக காணப்படும் இந்த சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி கிடங்கிறது. இங்கு மட்டும் ஏன் சாலை போடவில்லை என்று தெரியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்