என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
பல நாட்களாக செயல்படாத தொலைபேசி எண்
- தொடர்பு கொள்ள முடியாமல் பொதுமக்கள் அவதி
- போலீஸ் நிலையத்தை எப்படித் தான் தொடர்பு கொள்வது எனக்கூறி மக்கள் புலம்புகிறார்கள்.
புதுச்சேரி:
திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக தொலைபேசி வேலை செய்யாத அவல நிலை உள்ளது. பொதுமக்கள் திருக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு போன் செய்தால் முழுமையாக ரிங் போகிறது. ஆனால் போலீசார் போனை எடுப்பதில்லை.
அவசர செய்தி கூட போலீசாருக்கு தெரிவிக்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வருகிறார்கள்.
ஏதேனும் ஒரு பிரச்சனை என்றாலும் முக்கிய தகவல் என்றாலோ நேரடியாக போலீஸ் நிலையத்திற்கு தான் வந்து சொல்ல வேண்டிய நிலை உள்ளது.
சுமார் 11 கிலோமீட்டர் பயணம் செய்து திருக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து பொதுமக்கள் பிரச்சினைகளை கூறும் அவல நிலை உள்ளது.
ஏதேனும் ஒரு அவசரம் என்றால் திருக்கனூர் போலீஸ் நிலையத்தை எப்படித் தான் தொடர்பு கொள்வது எனக்கூறி மக்கள் புலம்புகிறார்கள்.
அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் தொலைபேசி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்