search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பல நாட்களாக செயல்படாத தொலைபேசி எண்
    X

    கோப்பு படம்.

    பல நாட்களாக செயல்படாத தொலைபேசி எண்

    • தொடர்பு கொள்ள முடியாமல் பொதுமக்கள் அவதி
    • போலீஸ் நிலையத்தை எப்படித் தான் தொடர்பு கொள்வது எனக்கூறி மக்கள் புலம்புகிறார்கள்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக தொலைபேசி வேலை செய்யாத அவல நிலை உள்ளது. பொதுமக்கள் திருக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு போன் செய்தால் முழுமையாக ரிங் போகிறது. ஆனால் போலீசார் போனை எடுப்பதில்லை.

    அவசர செய்தி கூட போலீசாருக்கு தெரிவிக்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வருகிறார்கள்.

    ஏதேனும் ஒரு பிரச்சனை என்றாலும் முக்கிய தகவல் என்றாலோ நேரடியாக போலீஸ் நிலையத்திற்கு தான் வந்து சொல்ல வேண்டிய நிலை உள்ளது.

    சுமார் 11 கிலோமீட்டர் பயணம் செய்து திருக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து பொதுமக்கள் பிரச்சினைகளை கூறும் அவல நிலை உள்ளது.

    ஏதேனும் ஒரு அவசரம் என்றால் திருக்கனூர் போலீஸ் நிலையத்தை எப்படித் தான் தொடர்பு கொள்வது எனக்கூறி மக்கள் புலம்புகிறார்கள்.

    அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் தொலைபேசி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×