என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "public meeting"
- அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் நடை பெற்றது.
- பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
செங்கோட்டை:
தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமையில், மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி பேசுகையில், அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சங்கரன்கோவிலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து பொதுக்கூட்டத்தை மாநாடு போல் நடத்த உதவிய சங்கரன்கோவில், வாசுதேவ நல்லூர், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அடுத்ததாக பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க ஆலோ சனைகள் வழங்கினார்.மேலும் பாராளுமன்ற தேர்தலுக்காக தெருமுனை பிரசாரங்களை மேற்கொள்ள தயாராகுமாறு நிர்வாகிகளுக்கு ஆலோ சனைகள் வழங்கினார்.
- சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது.
- நிர்வாகிகளின் வரவேற்பை பெற்ற பின்னர் எடப்பாடி பழனிசாமி சங்கரன்கோவில் சென்றார்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது.
இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.இதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் நெல்லை வழியாக சங்கரன்கோ விலுக்கு செல்கிறார்.
நெல்லையில் பாளை கே.டி.சி. நகர் மேம்பாலம் பகுதியில் வைத்து நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா மற்றும் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
இதற்காக அப்பகுதியில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதில் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து, சால்வைகள் கொடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து நிர்வாகிகளின் வரவேற்பை பெற்ற பின்னர் எடப்பாடி பழனிசாமி சங்கரன்கோவில் சென்றார். அங்கு நிர்வாகிகளின் வரவேற்புக்கு பின்னர் தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன்பின் மாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். கூட்டம் முடிந்த பின்னர் இரவில் காரில் புறப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரிக்கு செல்கி றார். பின்னர் காரில் சேலம் செல்கிறார்.முன்னதாக நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் கள் கருப்பசாமி பாண்டியன், ஏ.கே.சீனிவாசன், முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம்,
மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மைக்கேல் ராயப்பன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி ஆவரைகுளம் பால்துரை, மாவட்ட மகளிரணி செயலாளரும், திசையன்விளை பேரூராட்சி தலைவருமான ஜான்சிராணி, திசையன்விளை நகர செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட துணை செயலாளர் பள்ளமடை பாலமுருகன், மூலக்கரைப்பட்டி நகர துணை செயலாளர் எடுப்பல் காளி முத்து, டவுன் நகர கூட்டுறவு வங்கி தலைவர் பால்கண்ணன், ஒன்றிய செயலாளர் முத்துக்கு ட்டி பாண்டியன், பாளை பகுதி மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், கவுன்சிலர்கள் சந்திரசேகர், முத்துலெட்சுமி, நெல்லை ஜெயலலிதா பேரவை செயலாளர் சீனிமுகமது சேட், வக்கீல் ஜெயபாலன், தச்சை பழனிசங்கர், வட்ட செயலாளர் பாறையடி மணி, மேற்கு பகுதி பொருளாளர் காளிமுருகன், இளைஞரணி விஷ்வகணேஷ் மற்றும் திரளான அ.தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- உசிலம்பட்டியில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
- உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு விஸ்வ இந்து பரிஷத்-பஜ்ரங்தள் அமைப்பின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்காக மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த கூட்டத்துக்கு போலீசார் திடீரென அனுமதி மறுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ேமடைகளை அப்புறப்படுத்துமாறு கூறினார். இதனால் போலீசாருக்கும், விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரி மாநில அமைப்பாளர் சேதுராமன், பொறுப்பாளர் பீமாராவ்ராம் தலைமையில் விஸ்வ இந்துபரிஷத் நிர்வாகிகள் 30 பேர் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- இந்து மக்கள் கட்சி சார்பில் 26 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
- மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் பல பேருக்கு தொகை சென்றடையவில்லை.
பல்லடம், செப்.24-
பல்லடத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் 26 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிலையில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வதற்காக விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக கடைவீதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு பேசுகையில்:-
விநாயகா் சிலைகளை வைத்து வழிபடுவது என்பது வழிபாட்டு உரிமையுடன் தொடா்புடையதாகும். விநாயகா் சதுா்த்தி தினத்தை புராண நம்பிக்கைகளின்படி ஏற்றுக் கொள்ளத்தக்கத்தல்ல என்பதால் வாழ்த்து தெரிவிக்க மாட்டோம் என்று தற்போதைய அரசு தெரிவித்துள்ளது. பல இடங்களில் புதிதாக விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கவில்லை. மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் பல பேருக்கு தொகை சென்றடையவில்லை. இந்தத் திட்டத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் காலனி பிரபு, மாநில இளைஞர் அணி தலைவர் ஹோம் கார்டு பாலாஜி, கோவை மாவட்ட தலைவர் திருமுருகனார், மாநில இளைஞரணி துணைத் தலைவர் பிர்லா போஸ், பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணன், நகரத் தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் விநாயகர் சிலைகள் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவிநாசி பாளையம் அருகே உள்ள குளத்தில் கரைக்கப்பட்டது.
விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- சோழவந்தானில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
- ஒன்றிய இளைஞரணி தண்டபாணி நன்றி கூறினார்.
சோழவந்தான்
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சோழவந்தான் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மற்றும் தலைமை கழக பேச்சாளர் இயக்குநர் சக்தி சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்திற்கு வாடிப் பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கி னார். இதில் சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம், மதுரை தெற்கு எஸ்.எஸ். சரவணன், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ், அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச் சந்திரன், மதுரை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, சோழ வந்தான் பேரூர் செயலாளர் முருகேசன், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் டாக்டர் அசோக் குமார் மற்றும் சோழவந்தான், வாடிப்பட்டி தெற்குஒன்றிய நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞரணி தண்டபாணி நன்றி கூறினார்.
- இந்து முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருப்பூர் மாநகரில் 20 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது.
- அந்தந்த பகுதியில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்தும் அன்னதானத்தையம் அவர் தொடங்கி வைத்தார்.
திருப்பூர்:
விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருப்பூர் மாநகரில் 20 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் வக்கீல் கோபிநாத், கருமாரம்பாளையம், காலேஜ் ரோடு, மங்கலம் ரோடு, சுகுமார் நகர் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தார். பின்னர் அந்தந்த பகுதியில் அன்னதானத்தை அவர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார், மாவட்ட தலைவர் ஸ்ரீகாந்த், மாநில இளைஞரணி செயலாளர் ராதாசுதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணிக்கு திருப்பூர் கொங்கணகிரி கோவில் முன் இருந்து விசர்ஜன ஊர்வலம் தொடங்குகிறது. பின்னர் இரவு ஆலங்காட்டில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் வக்கீல் கோபிநாத் சிறப்புரையாற்றுகிறார்.
பொதுக்கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து வாகனங்களில் விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு சாமளாபுரம் குளத்தில் விசர்ஜனம் செய்யப்படுகிறது.
- காளையார் கோவிலில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
- சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைய ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று எம்.எல்.ஏ. பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காளையார்கோவில் தேரடி திடலில் அண்ணா அவர்களின் 115-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அ.தி.மு.க. சார்பில் நடந்தது. ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில், வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றனர்.
கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், ஒன்றிய செயலா ளர்கள் அருள் ஸ்டீபன், செந்தில்குமார், கருணாகரன், கோபி, சிவசிவஸ்ரீதர், சோனைரவி, செல்வமணி, மகளிரணி செயலாளர் ஜாக்குலின், கலைபிரிவு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், கூட்டுறவு சங்க தலைவர் தேவதாஸ், மகளிரணி நிர்வாகி வெண்ணிலா சசிகுமார், மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், துணை செயலாளர் சதீஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்கள் சங்கர்ராமநாதன், குழந்தை மற்றும் மாவட்ட நகர் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் நடந்தபோது மழை பெய்தது. இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் கட்சியினர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
- திருப்பத்தூரில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.
- பிரபு அனைவரையும் வரவேற்றார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்டச் சேர்மன் பொன்மணி பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, ஒன்றிய செய லாளர்கள் ஜெயகுண சேகரன், சிவமணி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் முருகேசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் அழகர்சாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் ராஜாமுகமது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்திற்கு சிவகங்கை தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான செந்தில்நாதன், முன்னாள் அரசு தலைமை கொரடா மனோகரன், தலைமை கழக பேச்சாளர்கள் சுந்தர பாண்டியன், கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலா ளர் பிரபு அனைவரையும் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர்கள் சுந்தர பாண்டியன், கருப்பையா ஆகியோர் தி.மு.க. அரசை பற்றி விமர்சனம் செய்தனர்.
இந்த மேடையில் சட்ட மன்ற உறுப்பினர் செந்தில் நாதன் முன்னிலையில் இளைஞர்கள் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு செந்தில்நாதன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். நகரச் செயலாளர் இப்ராம்ஷா நன்றி கூறினார்.
- மணிப்பூர் கலவரத்தை கண்டித்து த.மு.மு.க. கண்டன பொதுக்கூட்டம் நடத்தியது.
- கூட்டத்தில் த.மு.மு.க. 50 மாணவர்கள் த.மு.மு.க.வில் சேர்ந்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மத்திய மாவட்டம் சார்பில் தங்கச்சிமடத்தில் கண்டன பொதுக்கூட்டம் த.மு.மு.க. மாநில துணை பொது செயலாளர் சலிமுல்லா கான் தலைமையில் நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹி ருல்லா எம்.எல்.ஏ., பத்திரிகையாளர் செந்தில் வேல், திராவிடர் கழகம் துணை பொதுச்செயலாளர் மதிவதனி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
மணிப்பூர் இனப்படு கொலை, இலங்கை அரசால் தமிழக மீனவர்க ளின் தொடர் கைது, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை ஏற்றத்தை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் த.மு.மு.க. 50 மாணவர்கள் த.மு.மு.க.வில் சேர்ந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை மண்டபம் ஒன்றியம், தங்கச்சிமடம் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- ராஜபாளையத்தில் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் நடந்தது.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் சமந்தபுரம் காஜியார் மினி ஹாலில் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் விருதுநகர் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் லீவா உதீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சையது இப்ராஹீம், மாவட்ட பொருளாளர் முகமது பிலால் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செய்யது அலி பாதுஷா வரவேற்று பேசினார். நகரத் தலைவர் முகமது ரபிக் மிஸ்பாகி, மாநில தொழில் நுட்ப இணைச் செயலாளர் அப்துல் ஜப்பார், மண்டல ஒருங்கிணைப்பாளர் அவ்தா காதர் வாழ்த்தி பேசினார்கள். மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முகமது அபூபக்கர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் லீவாவுதீன் மாவட்ட தலைவராகவும், சையது இப்ராஹிம் மாவட்ட செயலாளராகவும், முகமது பிலால் மாவட்ட பொருளாளராகவும், மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக ராஜபாளையம் காதர் மைதீன், முகமது அபூபக்கர், பார்கவி தேர்ந்தெடுக்கப் பட்டனர். பொது சிவில் சட்டத்தை முழுமையாக எதிர்ப்பது எனவும், மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.க. அரசை கலைத்து ஆளுநர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் காதர்மைதீன் நன்றி கூறினார்.
- தி.மு.க. மகளிரணி உள்ளிட்ட அணி நிர்வாகிகளுடன் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆலோசனை நடத்தினார்.
- புதிய நிர்வாகிகளை நியமனம் செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரச்சாரம் நடத்துவது சம்பந்தமாக சார்பு அணி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் பாளை மகாராஜநகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
நேற்று மகளிரணி, மகளிர் தொண்டரணி, கலை-இலக்கிய பேரவை, இளைஞரணி நிர்வாகிகளுடன் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட மகளிரணி தலைவா கமலா நேரு, அமைப்பாளர் மல்லிகா அருள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபிந்தர், துணை அமைப்பாளர்கள் வேல்முருகன், அருள்ராஜ் டார்வின், ஆகாஷ், தில்லைராஜா, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஜெயமாலதி, துணை அமைப்பாளர் அனுராதா ரவி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது புதிய நிர்வாகிகளை நியமனம் செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கும், பரிந்துரைத்த மாவட்ட செயலாளர் ஆவுடையப்பனுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், யூனியன் சேர்மனுமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.
- மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளரும், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளருமான டாக்டர் செண்பக விநாயகம் வரவேற்று பேசினார்.
சிவகிரி:
சிவகிரி பேரூர் தி.மு.க. சார்பாக முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சிவகிரி காந்திஜி கலையரங்கத்தில் நடைபெற்றது. வாசுதேவ நல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலா ளரும், யூனியன் சேர்மனுமான பொன் முத்தையா பாண்டி யன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செய லாளர் மனோகரன், ராயகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் குருசாமி, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் மருத ப்பன், சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளரும், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளருமான டாக்டர் செண்பக விநாயகம் வர வேற்று பேசினார். மாவட்ட மாணவரணி துணை அமை ப்பாளர் சுந்தரவடிவேலு, கூட்டுறவு கடன் சங்க தலைவர் மருது பாண்டியன், வக்கீல் அணி மாவட்ட துணைச்செ யலாளர், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் புல்லட் கணேசன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
கூட்டத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் சூர்யா வெற்றி கொண்டான், தனுஷ்குமார் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, சீனிவாசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இதில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வாசு. ஒன்றிய நிர்வாகிகள், சிவகிரி பேரூராட்சி கவுன்சிலர்கள், சிவகிரி வார்டு செயலா ளர்கள், முன்னாள் தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் கார்த்திக் நன்றி கூறினார். நிகழ்ச்சி க்கான ஏற்பாடு களை மாநில மருத்துவர் அணி துணைச் செயலா ளரும், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளருமான டாக்டர் செண்பக விநாயகம் செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்