search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்
    X

    அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

    • திருப்பத்தூரில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.
    • பிரபு அனைவரையும் வரவேற்றார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்டச் சேர்மன் பொன்மணி பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, ஒன்றிய செய லாளர்கள் ஜெயகுண சேகரன், சிவமணி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் முருகேசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் அழகர்சாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் ராஜாமுகமது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்திற்கு சிவகங்கை தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான செந்தில்நாதன், முன்னாள் அரசு தலைமை கொரடா மனோகரன், தலைமை கழக பேச்சாளர்கள் சுந்தர பாண்டியன், கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்.

    முன்னதாக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலா ளர் பிரபு அனைவரையும் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர்கள் சுந்தர பாண்டியன், கருப்பையா ஆகியோர் தி.மு.க. அரசை பற்றி விமர்சனம் செய்தனர்.

    இந்த மேடையில் சட்ட மன்ற உறுப்பினர் செந்தில் நாதன் முன்னிலையில் இளைஞர்கள் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு செந்தில்நாதன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். நகரச் செயலாளர் இப்ராம்ஷா நன்றி கூறினார்.

    Next Story
    ×