search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரியில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
    X

    கூட்டத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசிய காட்சி.

    சிவகிரியில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

    • வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், யூனியன் சேர்மனுமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.
    • மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளரும், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளருமான டாக்டர் செண்பக விநாயகம் வரவேற்று பேசினார்.

    சிவகிரி:

    சிவகிரி பேரூர் தி.மு.க. சார்பாக முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சிவகிரி காந்திஜி கலையரங்கத்தில் நடைபெற்றது. வாசுதேவ நல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலா ளரும், யூனியன் சேர்மனுமான பொன் முத்தையா பாண்டி யன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செய லாளர் மனோகரன், ராயகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் குருசாமி, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் மருத ப்பன், சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளரும், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளருமான டாக்டர் செண்பக விநாயகம் வர வேற்று பேசினார். மாவட்ட மாணவரணி துணை அமை ப்பாளர் சுந்தரவடிவேலு, கூட்டுறவு கடன் சங்க தலைவர் மருது பாண்டியன், வக்கீல் அணி மாவட்ட துணைச்செ யலாளர், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் புல்லட் கணேசன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

    கூட்டத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் சூர்யா வெற்றி கொண்டான், தனுஷ்குமார் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, சீனிவாசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    இதில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வாசு. ஒன்றிய நிர்வாகிகள், சிவகிரி பேரூராட்சி கவுன்சிலர்கள், சிவகிரி வார்டு செயலா ளர்கள், முன்னாள் தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் கார்த்திக் நன்றி கூறினார். நிகழ்ச்சி க்கான ஏற்பாடு களை மாநில மருத்துவர் அணி துணைச் செயலா ளரும், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளருமான டாக்டர் செண்பக விநாயகம் செய்திருந்தார்.

    Next Story
    ×