search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் பொதுக்கூட்டம் - அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் பாராட்டு
    X

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்த படம். 

    சங்கரன்கோவில் பொதுக்கூட்டம் - அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் பாராட்டு

    • அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் நடை பெற்றது.
    • பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    செங்கோட்டை:

    தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமையில், மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் நடை பெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி பேசுகையில், அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சங்கரன்கோவிலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்தார்.

    அதனைத்தொடர்ந்து பொதுக்கூட்டத்தை மாநாடு போல் நடத்த உதவிய சங்கரன்கோவில், வாசுதேவ நல்லூர், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    அடுத்ததாக பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க ஆலோ சனைகள் வழங்கினார்.மேலும் பாராளுமன்ற தேர்தலுக்காக தெருமுனை பிரசாரங்களை மேற்கொள்ள தயாராகுமாறு நிர்வாகிகளுக்கு ஆலோ சனைகள் வழங்கினார்.

    Next Story
    ×