search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "promotion"

    • பூங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியா பாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 தினசரி பூக்கள் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வரு கின்றனர்.
    • பூக்களை ஏலம் எடுப்பதற்கு கரூர் மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா தண்ணீர் பந்தல், கபி லர்மலை, நகப்பா ளையம், செல்லப்பம்பா ளையம், அண்ணா நகர், ஆனங்கூர், பாகம்பாளை யம், கழுவன் காடு உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் குண்டு மல்லிகை, முல்லை பூ, காக்கட்டான், சம்பங்கி, சாமந்திப்பூ, செவ்வந்தி, ரோஜா, அரளி உள்ளிட்ட பல்வேறு பூக்களை விவசா யிகள் பயிர் செய்துள்ளனர்.

    இங்கு விளைவிக்கப்ப டும் பூங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியா பாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 தினசரி பூக்கள் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வரு கின்றனர்.

    பூக்களை ஏலம் எடுப்பதற்கு கரூர் மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

    கடந்த சில வாரங்களாக பூக்கள் விலை ஏற்ற, இறக்க மாக இருந்து வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி, வெயில் அதி கரித்துள்ளதால் பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் கடந்த வாரம் குண்டு மல்லிகை ஒரு கிலோ ரூ.300-க்கும், முல்லைப் பூ ரூ.250-க்கும், ரோஜா ரூ.150-க்கும், அரளி ரூ.100-க்கும் சம்பங்கி ரூ.50-க்கும் விற்பனையானது.

    நேற்று குண்டு மல்லிகை ஒரு கிலோ ரூ.400-க்கும், முல்லைப் பூ ரூ.400-க்கும், ரோஜா ரூ.220-க்கும், அரளி ரூ.150-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும் விற்பனையானது.

    இன்று அமாவாசை என்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர். பூக்கள் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பதவி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும் என்று அரசு டாக்டர்கள் கூறினர்.
    • கோரிக்கையை நிறைவேற்ற வில்லை யென்றால் அடுத்து நடத்தும் போராட்டம் நோயாளிகளை பாதிக்கும்.

    மதுரை

    மதுரையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தை சேர்ந்த மருத்துவர்கள் செந்தில், இளமாறன், குமரதேவன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டிய ளித்தனர். அவர்கள் கூறிய தாவது:-

    தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந்தேதி அரசு மருத்துவர்க ளுக்கான பதவி உயர்வு தொடர்பான அர சாணை 293-ஐ அமல் படுத்துவோம் என்று தெரிவித்தது. ஆனால் இன்று வரை இந்த கோரிக் கைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் எதிர்ப்பு தெரி விப்பவர்கள் நீதிமன்றம் வரை சென்று இந்த அரசா ணைக்கு தடை விதிக்க உத்தரவு பெற இருப்பதா கவும் கூறினர்.

    இந்த அரசாணையை பலமுறை நிறைவேற்ற எங்களது சங்க நிர்வாகி களிடம் அமைச்சர் பேசியும் இன்னும் நிறைவேற்றாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. எனவே முதல்- அமைச்சர் இதில் தலையிட்டு 16 ஆயிரம் மருத்துவர்கள் பயன்பெறக்கூடிய இந்த ஆணையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    தமிழக முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக ளில் காலியாக உள்ள 450 பேராசிரியர் பணியிடங்க ளையும், 550 இணை பேரா சிரியர்கள் பணியிடங்க ளையும் உடனடியாக நிரப்ப வேண்டும். இல்லையென் றால் வரும் காலங்களில் அரசு கல்லூரிகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.

    மேலும் வருகிற 14-ந் தேதி நடைபெறும் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் மே 29-ந்தேதி முதல் நடத்தவுள்ள போராட்டங்கள் குறித்து முடிவு செய்யப்படும். இதுவரை நாங்கள் நடத்திய போராட்டங்கள் அமைச்சரின் வாக்குறுதியை கேட்டு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த நிலையில் கால தாமதப்படுத்தாமல் உடனடி யாக எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வில்லை யென்றால் அடுத்து நடத்தும் போராட்டம் நோயாளிகளை பாதிக்கும் அளவில் இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
    • இதற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நன்றி தெரிவிக்கிறது.

    மதுரை

    தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர்  நா.சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி மூப்பின்படி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

    இந்த நிலையில் தொடக்க கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் தற்போது ஆசிரியர் பொது மாறுதல்-பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நன்றி தெரிவிக்கிறது.

    தமிழக அரசு இனிவரும் காலங்களில் பணிமூப்புடைய தொடக்க-நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வு உரிமையை பாதுகாக்கும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

    எங்களது பிரச்சினைகளுக்கு முழுமையாக தீர்வு கிடைக்கும் வகையில் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடவடிக்கைகளை தொடங்குவதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அள வில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது.
    • பூக்களின் தேவை அதிகரித்து இருப்பதால் அவற்றின் விலை கிடுகிடு என உயர்ந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அள வில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பூக்கள் நாமக்கல் பஸ்நிலையத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் சுமார் 2 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வரும். இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று நகர் முழுவதும் விற்பனை செய்கின்றனர்.

    இங்கு கடந்த வாரம் கிலோ ரூ. 240-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ நேற்று கிலோ ரூ. 480-க்கும், கடந்த வாரம் கிலோ ரூ. 140-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை பூக்கள், நேற்று கிலோ ரூ. 280-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

    இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ. 20-க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி பூக்கள் நேற்று கிலோ ரூ. 120-க்கும், கடந்த வாரம் கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ நேற்று கிலோ ரூ. 200-க்கும் விற்பனையானது. சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்க ளில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு பூஜை நடைபெறும். எனவே பூக்களின் தேவை அதிகரித்து இருப்பதால் அவற்றின் விலை கிடுகிடு என உயர்ந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். 

    • நகராட்சி அலுவலர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
    • நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா பிறப்பித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சி மேலாளர் மல்லிகா முதல்நிலை மேலாளராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதேபோல் ராஜபாளையம் நகராட்சியில் 2-ம் நிலை கணக்கராக இருந்த காளியம்மாள் முதல் நிலை கணக்கராக தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.

    ராஜபாளையம் நகராட்சி 1 ஏ மேலாளராக இருந்த மகேஸ்வரன் முதல் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார். மேற்கண்ட உத்தரவை நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா பிறப்பித்துள்ளார்.

    • அதிகாரிகளுக்கு பி.சி.எஸ். என்ட்ரி கிரேடு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
    • நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பி.சி.எஸ். புதுவை அதிகாரிகளுக்கு கரன்ட் டியூட்டி சார்ஜ் (சி.டி.சி) அடிப்படையில் பி.சி.எஸ். என்ட்ரி கிரேடு பதவி உயர்வு அளிக் கப்பட்டுள்ளது.

    அதன் படி, திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறையில் கண்காணிப்பாளராக பணிபுரியும் அருள்பிர காசம், தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு அதிகாரி மேரி ஜோசப் பின் சித்ரா, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கண்காணிப்பாளர் வெங்கடகிருஷ்ணன், வில்லியனூர் தெற்கு (வருவாய்) துணை கலெக்டர் அலுவலகம் தாசில்தார் ஷீலா, சுகாதாரத்துறை கண்காணிப்பாளர் முகம்மது இஸ்மாயில், சமூக நலத்துறை உதவி இயக்குநர்கள் (நலம்) கலாவதி, ரத்னா. உள்ளாட்சித்துறை கண் காணிப்பாளர் சவுந்திர ராஜன், தலைமை செயலக கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய அதிகாரிகளுக்கு பிசிஎஸ் என்ட்ரி கிரேடு பதவி உயர்வு அளிக்க ப்பட்டுள்ளது.

    இதற்கான உத்தரவை அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.

    • தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    • பூக்கள் விலை‌ உயர்வ டைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம் பளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பா ளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.400- க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், அரளி ரூ.200-க்கும், ரோஜா ரூ.200-க்கும், முல்லைப் பூ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், காக்கட்டான் ரூ.400-க்கும் ஏலம் போனது.

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.660-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், அரளி ரூ.320-க்கும், ரோஜா ரூ.260-க்கும், முல்லைப் பூ ரூ.700-க்கும், செவ்வந்திப்பூ ரூ.260-க்கும், கனகாம்பரம் ரூ.900-க்கும், காக்கட்டான் ரூ.600-க்கும் ஏலம் போனது.தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழ் புத்தாண்டையொட்டி பரமத்தியில் பூக்கள் விலை உயர்வு

    • ஓய்வூதியர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரத்து 750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும்.
    • 20 ஆண்டுகள் பணி செய்த ஊழியர்களுக்கு அரசு காலிப்பணியிடத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் சந்திரா தலைமை தாங்கினார்.

    மாவட்ட அமைப்பாளர் கமலநாதன், மாநில துணைத் தலைவர் கணேசன், அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட துணை தலைவர் அஞ்சுகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்டத் துணைத் தலைவர் மதிவாணன் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் பணி செய்த ஓய்வூதியர்களுக்கு மாதம் ரூ.6750 அகவிலை படியுடன் வழங்க வேண்டும்.

    சத்துணவு மற்றும் அங்கன்வாடி திட்டத்தில் 20 ஆண்டுகள் பணி செய்த ஊழியர்களுக்கு அரசு காலி பணியிடத்தில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் மாவட்ட இணைச் செயலாளர்கள் ஜோதி, சுசீலா, ஒன்றிய தலைவர்கள் சாந்தி, துரை நடராஜன், செயலாளர் ராதாகிருஷ்ணன் கணபதி, வாசுகி, சி.ஐ. டி.யு மாவட்ட துணை தலைவர் ராமானுஜம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிதி காப்பாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

    • மதுரை, விருதுநகர், சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
    • 81 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் 81 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

    இதில் விருதுநகர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் சிவக்குமார் மதுரை டி.கல்லுப்பட்டி மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம் உதவி இயக்குநர் மற்றும் விரிவுரை யாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதேபோல் விருதுநகரில் வட்டார வளர்ச்சி அலுவல ராக பணியாற்றி வரும் சாந்தி மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட இயக்குநராகவும், வட்டார வளர்ச்சி அலுவலராக பணி யாற்றி வரும் ராஜ்மோகன் மதுரை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நியமிக்கப் பட்டுள்ளார்.

    மதுரை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவல ராக பணியாற்றி வரும் கார்த்திகேயன் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலு வலராகவும், வட்டார வளர்ச்சி அலுவலராக பணி யாற்றி வரும் இளங்கோவன் சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (வீடு மற்றும் சுகாதாரம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

    • 30.12.2022 மூலம் ரூ.1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக ஆக உயர்த்தி வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
    • சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாரை நேரில் அணுகி பயன்பெறலாம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ர மணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

    தமிழ்நாடு அரசால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனு டையோர் ஓய்வூதியம் மற்றும் இலங்கை அகதிகளுக்கான மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் 30.12.2022 மூலம் ரூ.1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக ஆக உயர்த்தி வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதன்படி கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் பெற்று வரும் 18,047 மாற்றுத்திறனுடைய பயனாளிகளுக்கு 2023 ஜனவரி மாதம் முதல் ஓய்வூதியம் ரூ.1,000 ல் இருந்து ரூ. 1,500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. எனவே, 2023 ஜனவரி மாதம் முதல் ரூ.1,500 கிடைக்கப் பெறாத சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியம் ரூ.1,000 பெற்று வரும் பயனாளிகளில் 40 சதவீதம் மாற்றுத்திறன் உடையோர் எவரும் இருந்தால், தங்களது மாற்றுத்திறன் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் தங்களது வட்டத்தின் சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாரை நேரில் அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மயிலாடுதுறையில் அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் நடை பெற்றது.
    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் பாலு முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர்கள் தஞ்சை ரவிச்சந்திரன், திருவாரூர் வன்னியநாதன், நாகை அருண்சடேசன், கடலூர் அமானுல்லா ஆகியோர் கலந்துகொண்டு சங்க செயல்பாடுகள் குறித்து பேசினர்.

    சங்க மாவட்ட அமைப்பு செயலாளராக விஜயபாலன் செயற்குழு உறுப்பினர்களாக சந்துரு, ரம்யா, ரவி, மாவட்ட கொள்கை பரப்பு செயலாளராக பிரபாகரன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் என்.எம்.ஆர். முறையில் ஊதியம் பெறும் ஓட்டுனர்களுக்கு காலமுறை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் தரஊதியம் என்ற அடிப்படையில் தரஊதிய பிரச்னைகளுக்கு தீர்வுகார வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓட்டுனர்களாக பணியாற்றும் படித்த இளைஞர்களுக்கு கல்விக்தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்க அரசை கேட்டுக்கொள்வது, அரசுத்துறைகளில் காலியாக உள்ள ஓட்டுனர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட தமிழக அரசை கேட்டுக்கொள்வது, அரசுத்துறை ஓட்டுனர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், சென்னையில் நடத்தப்பட உள்ள பேரணியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து திரளானோர் கலந்துகொள்வது என்பன போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • வயர்மேனாக நியமிக்கப்படுபவர்கள் குறிப்பிட்ட ஆண்டை கடந்ததும் வயர்மேனாகவே இருந்து வருகின்றனர்.
    • களப்பணி தொழிலாளர்களுக்கு முறையாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    திருப்பூர் :

    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வயர்மேன் பதவி உயர்வை உடனே வழங்க வேண்டும் என்று முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மின்சாரத்துறை அமைச்சருக்கு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. சார்பில் இணைப்பொதுச்செயலாளர் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் காலியாக உள்ள மின்பாதை ஆய்வாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வயர்மேன் பதவியிலிருந்து மின்பாதை ஆய்வாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். மேலும் திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் பதவி கடந்த 2 மாதங்களாக காலியாக உள்ளதை காரணம் காட்டி வயர்மேன் பதவி உயர்வு உள்ளிட்ட பணிகளை நிறுத்தி வைத்துள்ளதை ஏற்க முடியாது. காலதாமதம் இன்றி வயர்மேன் பதவியிலிருந்து மின்பாதை ஆய்வாளர் பதவி உயர்வு ஆகிய பணிகளை விரைந்து செய்ய வேண்டும்.

    திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் வயர்மேன் பற்றாக்குறையால் மின் சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டு திருப்பூர் மாவட்டத்தில் புதிய மின்சார இணைப்புகள், மின்மாற்றிகள், மின் கம்பங்கள் அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. மின் வாரியத்தில் பல ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் களப்பணி தொழிலாளர்களுக்கு முறையாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் அவினாசி, திருப்பூர், ஊத்துக்குளி உள்ளிட்ட கோட்டங்களில் 75-க்கும் அதிகமான இடங்களில் பிரிவு அலுவலகங்கள், துணை மின் நிலையங்கள் உள்ளன. இங்குள்ள 15 ஆயிரத்திற்கும் அதிகமான மின்மாற்றிகளை (டிரான்ஸ்பார்மர்களை) மின்பாதை ஆய்வாளர் பராமரித்து வந்தனர். மின்பாதை ஆய்வாளருக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு உதவியாளர் (ஹெல்பர்) இருந்தனர். இதனால் மின்தடை ஏற்பட்டாலும், உடனடியாக சரி செய்து தடையில்லா மின்சாரம் கிடைத்தது.

    இந்தநிலையில் பதவி உயர்வு பெற்–றும் விருப்ப மாறுதலிலும், பணி ஓய்வு பெற்றும் ஏராளமான மின்பாதை ஆய்வாளர்கள் சென்றுவிட்டதால் சில ஆண்டுகளாக இப்பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மின்பாதை ஆய்வாளர் பணியாற்றக்கூடிய வட்டத்தில் தற்போது போதுமான மின்பாதை ஆய்வாளர் இ்ல்லை. உதவியாளருக்கு அடுத்த நிலையில உள்ளவர்கள் பணியாளர்கள் தற்போது அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களிலும் போதுமானவர்கள் இல்லாததால் சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    திருப்–பூர் மாவட்டத்தில் புதிய மின்சார இணைப்புகள், மின்மாற்றிகள், மின் கம்பங்கள் பராமரிப்பின்றி உள்ளன. புதிய மின்கம்பங்களுக்காக, மின்சார வாரியத்தில் பணம் செலுத்தி பல ஆண்டுகளாகியும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மின்கம்பங்கள் அமைக்கப்படவில்லை. இரவு நேரத்தில் ஏற்படும் மின்தடை  உடனுக்குடன் சரி செய்யப்படுவதில்லை. மின்விபத்துகள் ஏற்படும் போது குறித்த நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதில்லை.

    இந்த நிலையில் மின்சார வாரியத்தில் கடந்த 1987-ம் ஆண்டு ஒரு லட்சத்து 62 ஆயிரம் மின் பணியாளர்கள் பணிபுரிந்தனர். அந்த எண்ணிக்கை தற்போது 70 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது. வயர்மேனாக நியமிக்கப்படுபவர்கள் குறிப்பிட்ட ஆண்டை கடந்ததும் வயர்மேனாகவே இருந்து வருகின்றனர்.

    எனவே உடனடியாக திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் காலியாக உள்ள மின்பாதை ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு திருப்பூர் மின்பகிர்மான வட்டத்திலுள்ள வயர்மேன்களுக்கு விரைவாக பதவி உயர்வு வழங்கவும், காலதாமதம் இன்றி திருப்பூர் மின்பகிர்மான வட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளரை நியமிக்கவும் உரிய தீர்வு காண ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×