search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "‌ உயர்வு"

    • தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    • பூக்கள் விலை‌ உயர்வ டைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம் பளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பா ளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.400- க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், அரளி ரூ.200-க்கும், ரோஜா ரூ.200-க்கும், முல்லைப் பூ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், காக்கட்டான் ரூ.400-க்கும் ஏலம் போனது.

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.660-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், அரளி ரூ.320-க்கும், ரோஜா ரூ.260-க்கும், முல்லைப் பூ ரூ.700-க்கும், செவ்வந்திப்பூ ரூ.260-க்கும், கனகாம்பரம் ரூ.900-க்கும், காக்கட்டான் ரூ.600-க்கும் ஏலம் போனது.தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழ் புத்தாண்டையொட்டி பரமத்தியில் பூக்கள் விலை உயர்வு

    ×