search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Project works"

    • தொடக்க விழாவிற்கு நீர்வள ஆதாரத்துறை கோரம்பள்ளம் ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் வசந்தி தலைமை தாங்கினார்.
    • சிறப்பு அழைப்பாளராக மார்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மலட்டார் ஓடையின் குறுக்கே அணைக்கட்டு கட்டுவதற்கான பணியை தொடங்கி வைத்தார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே முள்ளூர் பஞ்சாயத்துக்குட்பட்ட முத்துக்குமாரபுரம் கிராமத்தில் உள்ள மலட்டார் ஓடையின் குறுக்கே ரூ.4 கோடி 25 லட்சம் மதிப்பீட்டில் அணைக்கட்டு கட்டுவதற்கான தொடக்க விழா நடந்தது.

    தொடக்க விழாவிற்கு நீர்வள ஆதாரத்துறை கோரம்பள்ளம் ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் வசந்தி தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் சுபாஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மார்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மலட்டார் ஓடையின் குறுக்கே ரூ.4 கோடி 25 லட்சம் மதிப்பீட்டில் அணைக்கட்டு கட்டுவதற்கான பணியை தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து முள்ளூர் பஞ்சாயத்துக்குட்பட்ட முத்துக்குமாரபுரம், முள்ளூர், அய்யர்பட்டி ஆகிய கிராமங்களுக்கு ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் 277 வீடுகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்ட இணைப்பு பணிகள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் முத்துக்குமாரபுரம், பட்டியூர் ஆகிய கிராமங்களில் தலா ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டிடப்பணிகள், கீழசெய்தலை கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் ரேசன்கடை கட்டிட பணிகளையும் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், துணைத் தலைவர் காசிவிஸ்வநாதன், யூனியன் ஆணையாளர் சிவபாலன், யூனியன் கூடுதல் ஆணையாளர் ராமராஜ், உதவி பொறியாளர் விக்னேஷ், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் முத்துராஜ், ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்புராஜன், பஞ்சாயத்து தலைவர்கள் ராமசாமி, கவுரி கருணாகரன், சண்முகையா, சந்தனராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜெயங்கொண்டம் அருகே ரூ.58.13 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டது
    • எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்தார்

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் தேவாமங்கலம் கிராமத்தில் ரூ.58 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்தார்.இதில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் 2022-23ன் கீழ் ரூ.44 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் தேவாமங்கலம் வ.உ.சி.நகர் தெற்கு வயல் மண் சாலையை மெட்டல் சாலையாக தரம் உயர்த்தும் பணியும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-22, 2022-23 திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தேவாமங்கலம் வடுகனேரி வாரியில் சிமெண்டு கான்கிரீட் தடுப்பணை அமைக்கும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது.

    இதற்கான பூமி பூஜையில் ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முருகன், ஒன்றிய பொறியாளர் நடராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுமதி மதியழகன், ஊராட்சி செயலாளர் ராவணன், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மணிமாறன், ஒன்றிய அவைத் தலைவர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திருவாடானை யூனியனில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • உரிய காலத்திற்குள் முடிக்கக்கோரி அலுவலர்களுக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் விஷ்ணுசந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருவாடனை யூனியன் பெரியகீரமங்கலம் ஊராட்சியில் கிராம சாலை சீரமைக்கும் திட்டத்தில் ரூ.7.98 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றதை பார்வையிட்டு சாலையின் இருபுறமும் மழைக் காலங்களில் மண்அரிப்பு ஏற்படாத வகையில் பக்கவாட்டு பகுதிகள் உறுதி தன்மையுடன் இருக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதே பகுதியில் பசுமை வீடு திட்டத்தில் பயனாளி ரூ.1.70லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வீட்டை பார்வையிட்டு உரிய காலத்திற்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தினார்.

    கல்லூர் ஊராட்சி பாரதிநகர் பகுதியில் ரூ.10லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்ட கலெக்டர், பொதுமக்களின் பயன்பாட்டிற்கேற்ப பணிகளை மேற்கொள்வதுடன் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் கால்வாய்களில் செல்லும் வகையில் பணியை உரிய முறையில் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதே பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் ரூ.14.23லட்சம் மதிப்பீட்டில் ஊரணி சீரமைத்து கரைகள் பலப்படுத்தும் பணியை பார்வையிட்டார். அரும்பூர் மற்றும் பாண்டுகுடி ஊராட்சிகளில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தலா ரூ.57.55 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு வரும் கல்வியாண்டில் மாணவர்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஏதுவாக பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதே பகுதியில் ரூ.9.85லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் கட்டிடத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தளிர்மருங்கூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.3.24 லட்சம் மதிப்பீட்டில் பசுமை குடில் அமைத்து மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதை பார்வையிட்டு அதிகளவு கிராம பகுதிகளில் மரங்கள் வளர்த்து பாதுகாத்திட வேண்டும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

    இந்த ஆய்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, வட்டாட்சியர் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, ராஜேந்திரன், பொறியாளர்கள் பாலகுமார், திலீப்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பொது அறிவுசார் மையம் மற்றும் நூலகக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
    • பெருந்துறை பேரூராட்சி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

    பெருந்துறை, 

    பெருந்துறை சிறப்புநிலை பேரூராட்சியில் ரூ.1 கோடியே 21.50 லட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மற்றும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் பொது அறிவுசார் மையம் மற்றும் நூலகக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சென்னை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண் குராலா பெருந்துறை பகுதிக்கு வந்தார். இதை தொடர்ந்து அவர் பெருந்துறை பேரூராட்சி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

    இதில் ஈரோடு மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கிருஷ்ணசாமி, கோவை மண்டல செயற் பொறியாளர்கள் பி.மோகன், ஜெகதீஸ்வரி, உதவி செயற் பொறியாளர்கள் மா.கணேசன், வரதராஜன், செயல் அலுவலர் சுந்தர்ராஜ், உதவி பொறியாளர் தியாகராஜன் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • கோவில்பட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளை 9 வார்டுகள் வீதம் 3 ஆக பிரித்து பூத் கமிட்டி கூட்டம் நடத்தப்பட்டது.
    • கூட்டத்தில தமிழக மக்களின் பார்வை அ.தி.மு.க. மீது தான் உள்ளது என்று கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. பேசினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சி நகர் 4-வது தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி யில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வாறுகால், பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கும், ரூ.22 லட்சத்தில் புதுக்கிராமம் வள்ளுவர் நகர் பகுதியில் சலவைக்கூடம் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகளை சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து கோவில்பட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளை 9 வார்டுகள் வீதம் 3 ஆக பிரித்து பூத் கமிட்டி கூட்டம் நடத்தப்பட்டது. இதில், கலந்து கொண்டு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் வி.ஏ.ஒ. அவரது அலுவல கத்துக்குள்ளேயே பட்டப்பகலில் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

    அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி கொடுப்பதாக அறிவித்துள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகம் அமைதியாக இருக்கும் என்ற எண்ணம் மக்கள் மனதில் வந்துவிட்டது. தமிழக மக்களின் பார்வை அ.தி.மு.க. மீது தான் உள்ளது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத்தொகை தருவதாக கூறினர். அப்படி என்றால் 5 ஆண்டுகள் அதாவது 60 மாதங்களுக்கு அவர்கள் தர வேண்டும். ஆனால், ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் தான் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். கோவில்பட்டி நகராட்சியில் உள்ள தினசரி சந்தை பிரச்சினையை இவர்களால் தீர்க்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியின் போது, நகர செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் பழனிச்சாமி, நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ராமர், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் சிவபெருமாள், மாவட்ட மாணவரணி துணைத்தலைவர் செல்வக் குமார், மார்க்சிஸ்ட் நகர் மன்ற உறுப்பினர் ஜோதி பாசு உள்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மதுரை 4-வது மண்டல பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் ஆய்வு செய்தார்.
    • அடிப்படை வசதி பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அலுவலருக்கு உத்தரவிட்டார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் ஆகியோர் ஆய்வு ெய்தனர்.

    41-வது வார்டு டீச்சர்ஸ் காலனியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரிசெய்யும் பணிகள், பாபுநகர் பகுதியில் வாய்க்காலை தூர்வாரி தூய்மை செய்வது குறித்தும், ஐராவதநல்லூரில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டி மராமத்து பணிகள், எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள மாநகராட்சி கழிவறைகளை மராமத்து பணிகள் மேற்கொள்ளுதல், அனுப்பானடி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டிட பணிகளையும் மேயர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அந்த வளாகம் அருகே அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் ஆய்வு செய்தார். அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் மேயர் ஆய்வு செய்து நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் மற்றும் அடிப்படை வசதி பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அலுவலருக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது நகரப்பொறியாளர் அரசு, மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, உதவி ஆணையாளர் திருமலை, நகர்நல அலுவலர் வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேசுவரன், கவுன்சிலர்கள் செந்தாமரைகண்ணன், காளிதாஸ், பிரேமா, உதவி செயற்பொறியாளர்கள் மயிலேறிநாதன், சுப்பிரமணியன், சுகாதார அலுவலர் கோபால் ஆகியோர் பங்கேற்றனர்.

    • கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார்.
    • அனைத்து கிராம ஓருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகள் செயலாக்கம் குறித்து கலந்துரையாடினார்.

    கடலூர்:

    வேளாண் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார். உச்சிமேடு கிராமத்தில் தோட்டக்கலை துறைச் சார்பாக அமைக்கப் பட்டுள்ள வெண்டை வய லினை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்து, உச்சிமேடு கிராம விவசாயிகளுடன் கலை ஞரின் அனைத்து கிராம ஓருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகள் செயலாக்கம் குறித்து கலந்துரையாடினார்.

    கலைஞரின் அனைத்து கிராம ஓருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பேட்டரி தெளிப்பான், விதைதளை, வரப்புபயிர், உள்ளிட்டவை மற்றும் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பண்ணை கருவிகள், உணவு மற்றும் ஊட்டசத்து இயக்கத்தின் கீழ் கோனோவீடர், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத் தின் கீழ் சூரியஒளி பொறி மற்றும் உளுந்து விதைகள், தார்பாலின் ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    மதலப்பட்டு ஊராட்சி வில்லுபாளையம் பகுதி யில் வேளாண்மை துறையின் மூலம் சுமார் 50 ஏக்கர் அளவில் அமைக்கப் பட்டுள்ள உளுந்து வம்பன்-8 விதைப் பண்ணை வயலினை ஆய்வு செய்தார். மேலும் வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயி ஒருவர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டையினை ஆய்வு செய்து, இத்திட்டத் தினை முறையாக பயன் படுத்தி மேன்மையடையும் வகையில் கலெக்டர் பால சுப்ரமணியம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி னார். இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் கண்ணையா, வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) கென்னடி ஜெபக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயகுமார், வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) பிரேம்சாந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • விருதுநகர் நகராட்சியில் செயல்படுத்தப்படும் திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
    • நகராட்சி பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் நகராட்சி பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சி துறை மூலம் செயல்பட்டு வரும் பல்வேறு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விருதுநகர் நகராட்சி, வி.எம்.சி. காலனியில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மைய கட்டிடத்தையும், புல்லலக்கோட்டை சாலையில் செயல்பட்டு வரும் நுண் உர செயலாக்க மையத்தில், நகராட்சியில் வார்டு வாரியாக சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் அனைத்தும் எந்திரத்தில் அரவை செய்யப்பட்டு, தொட்டியில் காய வைத்து உரமாக மாற்றப்படும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    திடக்கழிவு மேலாண்மை திட்டம் 2.0 மூலம் ரப்பர், நெகிலி, மரக்கட்டை உள்ளிட்ட திடக்கழிவுகளை மறுசுழற்சிக்காக பயன்படுத்தும் வகையில் ரூ.43 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பொருள் மீட்டு வசதி கட்டிடத்தையும், விருதுநகர் நகராட்சியில் செயல்பட்டு வரும் மின் மயானத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, விருதுநகர் நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு, நகராட்சி பொறியாளர் மணி, உதவி பொறியாளர் பாலாஜி மற்றும் நகராட்சி பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • திட்டப் பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • மாதவி ராஜசேகர், யூனியன் ஆணையாளர் ராஜகோபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தர்மேந்திரா பிரதாப் யாதவ் ஆய்வு செய்தார். கமுதி அருகே உள்ள டி.புனவாசல் கிராமத்தில் அங்கன்வாடி மையம், வல்லந்தை ஊராட்சியில் பஞ்சாப் மாநில விவசாயி மன்மோகன் சிங்கின் விவசாயத் தோட்டம், கண்மாயில் குடிநீர் சுத்திகரிப்பு பணி, அபிராமம் பேரூராட்சியில் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டிட பணிகள், பேரையூர் சுகாதார ஆரம்ப நிலைய கட்டிடப்பணிகள், புல்வாய்க்குளம் ஊராட்சியில் நடைபெறும் சமுதாயக் கூட கட்டிடப் பணி, பேரையூர் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். மருத்துவம், ஊரக வளர்ச்சி, கூட்டுறவுத்துறை, தோட்டக்கலை, வேளாண் துறை உள்பட பல்வேறு துறைகளின் கீழ் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    இதில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார்(வளர்ச்சி), உதவி ஆட்சியர் நாராயணன் சர்மா (பயிற்சி) மாவட்ட குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் விசுவாபதி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், ஊராட்சித் தலைவர்கள் அழகர்சாமி, தேவதி, மாதவி ராஜசேகர், யூனியன் ஆணையாளர் ராஜகோபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • கொண்டாநகரம் பகுதியில் நடைபெற்று வரும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டப்பணிகளை கலெக்டர் கார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தார்.
    • நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி யூனியன் கொண்டாநகரம் பகுதியில் நடைபெற்று வரும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அதே பகுதியில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டிட பணிகளையும், நடுக்கல்லூரில் இயங்கி வரும் வாழை நாரில் இருந்து கைவினைப்பொருட்கள் தயார் செய்யும் கூடத்தையும் கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

    நிகழ்ச்சியில் பாப்பாக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கொண்டா நகரம் ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணம், கோடகநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிர மணியம் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கொல்லங்கிணறு ஊராட்சியில்பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
    • அடிக்கல் நாட்டு விழாவிற்கு யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கொல்லங்கிணறு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை, உயர்நிலை பள்ளியில் பெண்கள் கழிவறை, மந்திகுளம் ஊரணியில் தடுப்புச்சுவர், வாறுகால் மற்றும் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சண்முகையா எம்.எல்.ஏ. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சம் செலவில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர் சிவபாலன், யூனியன் கூடுதல் ஆணையாளர் ராமராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுச்சாமி, பஞ்சாயத்து தலைவர்கள் அருண்குமார், லதா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி, வத்திராயிருப்பு யூனியன்களில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் வத்திரா யிருப்பு ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகாசி ஊராட்சி ஒன்றியம் எரிச்சநத்தம் ஊராட்சியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சேமிப்பு கிட்டங்கி யை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் அழகாபுரி கிராமத்தில் நியாயவிலை கடையை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றியம் அழகாபுரி கிராமத்தில் ரூ.31.80 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து, அதே கிராமத்தில் பிரதமரின் ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.8 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிக ளையும், கோவிந்தநல்லூர் ஊராட்சி ருத்திரப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு பணியையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    வெள்ளப்பொட்டல் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.24.900 லட்சம் மதிப்பீட்டில், வரத்து கால்வாயில் உறிஞ்சி குழி அமைக்கப்பட்ட பணியை யும், 100 நாள் வேலை திட்டம் குறித்தும் ஆய்வு செய்தார்.மூவரை வென்றான் ஊராட்சி இந்திரா காலனியில் ரூ.11.56 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டுமான பணிகளையும், வடுகப்பட்டி ஊராட்சி களத்தூர் கிராமத்தில் அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.995 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறை பணியையும், குன்னூர் ஊராட்சியில்

    15-வது மத்திய நிதிக்குழு மானியத்தின் கீழ், ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார மைய கட்டுமான பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.1.570 லட்சம் மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்ட பணியையும், ரூ.25 ஆயிரம் மதிப்பில் கால்நடை தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்ட பணியையும், ரூ.30 ஆயிரம் மதிப்பில் வட்டார நாற்றாங்கால் பண்ணை அமைக்கப்பட்ட பணியையும், ரூ.4.50 லட்சம் மதிப்பில் பெருமளவு மரக்கன்று நடப்பட்டு வரும் பணியையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்ட பாணி, வேளா ண்மைத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர் உமா மகே சுவரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    ×