search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "post office"

    • இல்லம் தோறும் மூவண்ணக்கொடி ஏற்றும் பிரச்சாரத்தின் கீழ் நடவடிக்கை.
    • குறைந்தபட்சம் ஒரு கவுன்டர் மூலம், தேசியக் கொடி விநியோகிக்க ஏற்பாடு.

    இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசியக்கொடியேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேசியக்கொடி விற்பனை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் அஞ்சல் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை நடைபெற்று வருகிறது. தேசியக் கொடி விற்பனைக்காக சுதந்திர தினம் வரை விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் அஞ்சல் நிலையங்கள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இல்லம் தோறும் மூவண்ணக்கொடி ஏற்றும் பிரச்சாரத்தின் கீழ் தேசியக் கொடிகளின் விற்பனையை எளிதாக்க, அனைத்து அஞ்சல் நிலையங்களும் சுதந்திர தினத்திற்கு முன் விடுமுறை நாட்களில் செயல்படும். 

    இந்த பொது பிரச்சாரத்தை செயல்படுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்கள் மற்றும் பிற முக்கிய தபால் நிலையங்கள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொது விடுமுறை நாட்களில் தேசியக் கொடிகள் விற்பனைக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். 9 மற்றும் 14 தேதிகளில் அஞ்சல் நிலையங்களில் குறைந்தபட்சம் ஒரு கவுன்டர் மூலம், தேசியக் கொடிகளை விநியோகிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

    • 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் வீடுகளில் தேசியக் கொடி களை ஏற்ற பிரதமர் மோடி மக்களை கேட்டுக் கொண்டார்.
    • தபால் நிலையங்களில் தேசியக் கொடிகள் தேவைப் படுவோர் பணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    தென்காசி:

    75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் வீடுகளில் தேசியக் கொடி களை ஏற்ற பிரதமர் மோடி மக்களை கேட்டுக் கொண்டார். மேலும் தபால் நிலையங்களில் தேசியக் கொடிகள் தேவைப் படுவோர் பணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி இந்திய தேசிய கொடிகள் தற்பொழுது தபால் நிலையங்களில் விற்பனைக்கு வந்துள்ளன. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் தபால் நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் தேசியக்கொடியை ரூ.25 செலுத்தி ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    இந்த விற்பனையை பாவூர்சத்திரம் தபால் நிலைய அதிகாரி ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அதனை தென்காசி யூனியனுக்கு உட்பட்ட சில்லரைபுரவு ஊராட்சி மன்ற தலைவர் குமார் பெற்றுக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் தபால் நிலைய அலுவலர்கள் ஜோதி, சுகுணா மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் தேசிய க்கொடிகள் யாருக்கேனும் தேவைப்பட்டால் அந்தந்த பகுதி தபால்காரரை அணுகி பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • கொரோனா தடுப்பூசி இயக்கம் ஜூலை 15-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதிவரை 75 நாட்கள் நடத்தப்படுகிறது.
    • மக்கள் அனைவருக்கும் தேசியக்கொடி சென்று சேருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

    சென்னை :

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்தப்பட உள்ள 'ஹர் கார் திரங்கா' (வீடுதோறும் மூவர்ணம்) இயக்கம் மற்றும் கொரோனா தடுப்பூசி தொடர்பான 75 நாள் பிரசாரம் குறித்து மத்திய அரசின் கலாசாரத்துறை செயலாளர் கோவிந்த் மோகன், மத்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை செயலாளர் அபூர்வ சந்திரா ஆகியோர் அளித்த பேட்டி வருமாறு:-

    நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்கும் உலகத்திலேயே மிகப்பெரிய நிகழ்வாக 'ஹர் கார் திரங்கா' (வீடு தோறும் மூவர்ணம்) நடத்தப்பட உள்ளது. பல வகைகளில் மக்கள் அனைவருக்கும் தேசியக்கொடி சென்று சேருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

    அதிக அளவில் கொடி வினியோகம் செய்யும் நிறுவனங்களை மத்திய ஜவுளித் துறை கண்டறிந்துள்ளது. ஆகஸ்டு 1-ந் தேதியில் இருந்து இந்தியாவில் உள்ள 1 லட்சத்து 60 ஆயிரம் தபால் நிலையங்களிலும் தேசியக் கொடியை மக்கள் நேரில் சென்று வாங்கிக்கொள்ளலாம். இந்தியாவில் முன்னெச்சரிக்கை கொரோனா தடுப்பூசி இயக்கம் ஜூலை 15-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதிவரை 75 நாட்கள் நடத்தப்படுகிறது. கொரோனாவை எப்படி வெற்றிகொள்ள முடியும்? என்பதை பிரசாரமாக செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சென்னிமலைபாளையம் உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட ஊர்கள் வருகின்றன.
    • திருப்பி அனுப்பபடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் வீரபாண்டி துணை அஞ்சல் நிலையத்திற்கு உட்பட்டு அவரப்பாளையம், நொச்சிப்பாளையம், குப்பாண்டம்பாளையம், வீரபாண்டி, பலவஞ்சிபாளையம், வித்யாலயம்,கரைப்புதூர், சென்னிமலைபாளையம் உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட ஊர்கள் வருகின்றன.

    இந்த அஞ்சல் நிலையத்தில் ஆதார் கார்டில் திருத்தம் செய்ய காலை 8மணிமுதல் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

    காலை 9மணிக்கு அஞ்சல் நிலையம் திறக்கப்படுகிறது. ஆனால் காலை 10.30 மணிக்கு பணிகள் தொடங்கும் நிலையில் நெட்வொர்க் வேலை செய்யவில்லை. நாளை வாருங்கள் என்று திருப்பி அனுப்பபடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இதனால் வேலைக்கு செல்லாமல் காலையிலிருந்து காத்து நிற்கும் பொதுமக்கள் கவலை அடைகின்றனர். எனவே இதற்கு தீர்வு காண அஞ்சல் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • அஞ்சல் துறையின் சீரான செயல்பாட்டிற்கு தேவைக்கேற்ப அதிவேக நெட்வொர்க்கை தடையின்றி வழங்க கோரிக்கை
    • நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு 3 நாட்களுக்குள் அனைத்து அஞ்சல் களும் சென்றடைவதை உறுதி செய்ய வலியுறுத்தல்

    நெல்லை:

    பாரதிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் நெல்லை கோட்ட மாநாடு இன்று காலை தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு நெல்லை கோட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    நெல்லை கோட்ட செயலாளர் மைக்கேல்ராஜ் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் தபால்காரர் உள்ளிட்ட அனைத்து பணி காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    அஞ்சல் துறையின் சீரான செயல்பாட்டிற்கு தேவைக்கேற்ப அதிவேக நெட்வொர்க்கை தடையின்றி வழங்க வேண்டும்.

    வாடிக்கையாளர்களின் முகவரியில் அனைத்து விதமான தகவல்களையும் பதிவு செய்வதற்கு ஏற்ப தபால்காரர்கள் அனைவருக்கும் கையடக்கக் கருவிகள் வழங்க வேண்டும்.

    நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு 3 நாட்களுக்குள் அனைத்து அஞ்சல் களும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் பாரதிய மஸ்தூர் சங்க மாவட்ட செயலாளர் செந்தில் பாண்டியன், மாவட்ட தலைவர் சங்கரசுப்பு மற்றும் நிர்வாகிகள் திருமலைசாமி, அசோக் கிருஷ்ணா, ரவிச்சந்திரன் கண்ணன், ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ஈரோடு மாவட்ட தபால் நிலையங்களில் ஆதார் அட்டை திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என்று தபால் அதிகாரி கூறியுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 45 தபால் அலுவலகங்களில் ஆதார் அட்டைக்கு கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம் என ஈரோடு கோட்ட தபால் கண்காணிப்பாளர் சுரேக் ரகுநாதன் கூறினார்.

    ஆதார் அட்டை தொடர்பாக சேவை செய்வதில் ஈரோடு மற்றும் கோவை தலைமை தபால் நிலையம், நம்பியூர், ஒலகடம், சூரம்பட்டி, ஈரோடு கலெக்டர் அலுவலகம் ஊத்துக்குளி, ஊத்துக்குளி ஆர்.எஸ்., டி.என்.பாளையம், கருங்கல் பாளையம், பவானி கோபி தெற்கு, சித்தோடு, பி.பி. அக்ரஹாரம், கரட்டடி பாளையம், கள்ளிப்பட்டி, சிவகிரி, மொடக்குறிச்சி, துடுப்பதி தபால் நிலையங்களில் இலவசமாக ஆதார் பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் பெருந்துறை, அம்மாபேட்டை, காவிரி ரெயில் நிலையம் தபால் நிலையம், ஊஞ்சலூர், சக்தி நகர், காஞ்சிக் கோவில், அரச்சலூர் ஈரோடு ரெயில்வே காலனி, சென்னிமலை, காசி பாளையம், கொடுமுடி, வீரப்பன் சத்திரம, விஜயமங்கலம் உள்பட 45 தபால் நிலையங்களில் கட்டணமில்லாமல் ஆதார் பதிவு செய்யலாம்.

    அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி, கைப்பேசி எண் போன்ற திருத்தங்களை ரூ.50 செலுத்தி செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பணி மாறுதல் கிடைக்காத விரக்தியில் தலைமை தபால் நிலையத்தை ஊழியர் சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #postoffice

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தலைமை தபால் நிலையத்தில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த ஜோயல்ராஜ் (வயது 29) என்பவர் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். இவர், தற்போது அயல் பணியாக பொதக்குடி தபால் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

    நேற்று மதியம் பொதக்குடியில் இருந்து மன்னார்குடி தலைமை தபால் நிலையத்திற்கு ஜோயல்ராஜ் வந்தார்.

    அப்போது அவர் ஆவேசமாக தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர், கண்ணாடிகள், பீரோ, டேபிள், நாற்காலிகள் என அனைத்தையும் அடித்து உடைத்துசூறையாடினார். இதனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தபால் நிலையத்தில் வந்திருந்த பெண்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    ரகளை செய்த ஜோயல்ராஜை பிடிக்க அங்கிருந்த ஊழியர்கள் முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

     


    இதுகுறித்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜோயல்ராஜை மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக மன்னார்குடி தலைமை தபால் நிலைய அதிகாரி சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோயல்ராஜை கைது செய்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தியதில், ஜோயல்ராஜ் பணி மாறுதல் கேட்டு வந்துள்ளார். பணி மாறுதல் கிடைக்காத விரக்தியில் தான் அவர், தபால் நிலையத்தில் பொருட்களை சூறை யாடியதாக தெரிய வந்தது. இதற்கு முன்பும் ஏற்கனவே 2 முறை ஜோயல்ராஜ் இதுபோல் நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. #postoffice

    தமிழகத்தில் தலைமை தபால் நிலையங்களில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்த பாஸ்போர்ட்டு சேவை மையங்கள் செயல்பட தொடங்கி உள்ளன. #Passport #PostOffice
    சென்னை:

    தமிழகத்தில் தலைமை தபால் நிலையங்களில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்த பாஸ்போர்ட்டு சேவை மையங்கள் செயல்பட தொடங்கி உள்ளன. பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மையங்களில் பாஸ்போர்ட்டு விண்ணப்பித்து பயனடையலாம் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட்டு அதிகாரி பி.கே.அசோக்பாபு கூறினார்.

    தமிழகத்தில் உள்ள சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய 4 மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகங்களின் கீழ் 12 தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கும் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் தமிழகத்தில் சென்னை (வடக்கு) கடற்கரை ரெயில் நிலையம் அருகில் உள்ள தலைமை தபால் நிலையம், ராணிப்பேட்டை, ஆரணி, காஞ்சீபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, ராஜபாளையம், போடிநாயக்கனூர், ராமநாதபுரம், குன்னூர், ஈரோடு, தர்மபுரி ஆகிய 12 இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட்டு சேவை மையங்களை, மதுரையில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைத்தார்.

    இதில் சென்னை மண்டல அலுவலகத்தின் கீழ் 7 தலைமை தபால் நிலையங்களில் 7 புதிய சேவை மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இங்கு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அந்தந்த மண்டல அலுவலகங்களுக்கு விண்ணப்பங்கள் ஆன்லைனில் அனுப்பப்படுகிறது.

    இதுகுறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட்டு அதிகாரி பி.கே.அசோக்பாபு கூறியதாவது:-

    பாஸ்போர்ட்டு வழங்குவதற்கான வழிமுறைகளை எளிமையாக்குவதற்காக பல்வேறு ஒருங்கிணைந்த சேவையை மேம்படுத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த 2010-ம் ஆண்டு பாஸ்போர்ட்டு சேவா திட்டதை அறிமுகப்படுத்தியது. பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைமுறை சிக்கல் எதுவும் இல்லாமல் எளிமையான முறையில் பாஸ்போட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதில் தொடங்கி, நேர்காணலுக்கு நாள் குறித்தல் பயோமெட்ரிக் பதிவு செய்தல் மற்றும் பாஸ்போர்ட்டு வழங்குவது வரை அனைத்து செயல்முறைகளும் மின்னணு பரிவர்த்தனை மூலமாக செயல்படுத்தப்படுகின்றன. தற்போது விரைவாக பாஸ்போர்ட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மண்டலத்தின் கீழ் சென்னை, எண் 1/10, ராஜாஜி சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம், காஞ்சீபுரம், எண்.46, ரெயில்வே சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம், திருவள்ளூரில், எண். 37, ஜே.என்.சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம், ராணிப்பேட்டையில், ஆற்காடு சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம், ஆரணியில், என்-2ஏ, சூரியகுளம் வடக்கு தெருவில் உள்ள தலைமை தபால் நலையம், கள்ளக்குறிச்சியில், எண்-23, காந்தி சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம், தர்மபுரியில் எண்-16-ஏ, நாச்சியப்பா தெருவில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டு சேவை மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த மையங்கள் அனைத்தும் சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகத்தின் கீழ் செயல்படும்.

    இந்த மையங்களில் புதிய பாஸ்போர்ட்டு விண்ணப்பம், பழைய பாஸ்போர்ட்டு புதுப்பிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் அளிக்கலாம். அத்துடன் பாஸ்போர்ட்டு பெறுவதற்காக முன்அனுமதியும் பெறலாம். விண்ணப்பதாரர் புகைப்படம் எடுப்பது மற்றும் கைவிரல் ரேகை பதிவு உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. பாஸ்போர்ட்டு கட்டணங்களையும் ஸ்டேட் வங்கி மூலம் செலுத்தப்பட வேண்டும்.

    சென்னை மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகத்தின் கீழ் வேலூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 4 இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டு சேவை மையமும், புதுச்சேரி மற்றும் சென்னையில் சாலிக்கிராமம், அமைந்தகரை, தாம்பரம் ஆகிய 4 இடங்களில் பாஸ்போர்ட்டு சேவை மையமும் செயல்பட்டு வருகிறது.

    தற்போது திறக்கப்பட்ட மையங்களுடன் சேர்த்து சென்னை மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகத்தின் கீழ் 11 இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டு கேட்டு விண்ணப்பிக்கலாம். தட்கல் முறையிலான பாஸ்போர்ட்டு சென்னை, அண்ணாசாலையில் உள்ள மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது. காவல் துறை சான்றிதழ் போன்ற சேவைகளுக்கு விண்ணப்பதாரர்கள் புதுச்சேரி அல்லது சென்னையில் உள்ள பாஸ்போர்ட்டு சேவை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தபால்துறை மூலம் வங்கி சேவை திட்டம் இன்று முதல் தொடங்குகிறது என சிவகங்கை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    தபால்துறை மூலம் வங்கி சேவை திட்டம் இன்று முதல் தொடங்குகிறது என சிவகங்கை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்திய அஞ்சல் துறையில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை இன்று(சனிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த வங்கி சேவை முதல் கட்டமாக நாடு முழுவதும் 650 கிளைகளில் தொடங்கப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 4 தலைமை தபால் நிலையங்கள், 79 துணை தபால் நிலையங்கள், 232 கிளை தபால் நிலையங்கள் உள்ளன. இதில் சிவகங்கை அஞ்சலக கோட்டத்தில் உள்ள மானாமதுரை, ராஜகம்பீரம், மேலப்பிடாவூர், சவேரியார்பட்டிணம் மற்றும் செய்களத்தூர் ஆகிய 5 இடங்களில் புதிய வங்கி சேவை இன்று முதல் தொடங்கப்பட உள்ளது.

    இந்த வங்கி சேவையில் புதிய கணக்கு தொடங்குவதற்கு வைப்புத்தொகை, படிவங்கள் எதுவும் தேவையில்லை. ஆதார் எண் மற்றும் செல்போன் எண் இருந்தால் போதும். குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க தேவை இல்லை. அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம். கணக்கில் இருக்கும் இருப்பு தொகைக்கேற்ப 4 சதவீத வட்டி கணக்கிடப்பட்டு காலாண்டிற்கு ஒரு முறை வழங்கப்படும். மேலும் சிறு,குறு தொழில் உள்பட எந்த ஒரு தொழிலுக்கும் நடப்பு கணக்கை தொடங்கி கொள்ளலாம்.

    இந்த வங்கி சேவை அனைத்து மக்களுக்கும் ஏற்ற வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. கியூ.ஆர். கோடு கொண்ட அட்டை வாயிலாக கணக்கு செயல்படுத்தப்பட்டு அனைத்து பரிவர்த்தனைகளும் கைவிரல் ரேகை வாயிலாக செயல்படுத்தப்படும். மேலும் அந்தந்த பகுதி தபால்காரர்கள் உங்கள் வீட்டுக்கே வந்து வங்கி சேவை அளிப்பார்கள். மேலும் இந்தியாவின் எந்தவொரு வங்கி கணக்கிற்கு எந்த நேரத்திலும் பணம் செலுத்தவும், பெறவும் முடியும்.

    இதுதவிர மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், காப்பீடு பிரீமியம் தொகை போன்ற பல்வேறு சேவைகளுக்கு இந்த வங்கி கணக்கின் மூலம் பணம் செலுத்த முடியும்.

    அஞ்சல்துறையின் அனைத்து சேவைகள் மற்றும் திட்டங்களுக்கு தங்களுடைய கணக்கின் மூலம் எளியமுறையில் பணம் செலுத்தலாம். விரைவில் அனைத்து அஞ்சலகங்களிலும் இந்த வங்கி சேவையானது இந்த ஆண்டு இறுதிக்குள் விரிவுபடுத்தப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இதன் தொடக்க விழா மானாமதுரை தலைமை அஞ்சலகத்தில் இன்று நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது காரைக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் உடனிருந்தார்.

    இந்த விழாவில் அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், எம்.எல்.ஏ.க்கள் பெரியகருப்பன், கே.ஆர். ராமசாமி மற்றும் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். 
    பெண் குழந்தைகளுக்காக பணம் சேமிக்க வசதியாக அஞ்சல் அலுவலகம்,வங்கிகளில் தொடங்கப்பட்ட செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான குறைந்தபட்ச டெபாசிட் தொகை குறைக்கப்பட்டுள்ளது. #PostOffice #SSY
    புதுடெல்லி:

    பெண் குழந்தைகளின் வருங்காலத்திற்காக, பெற்றோர்கள் பணம் சேமிக்க வசதியாக அஞ்சல் அலுவலகம், வங்கிகளில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. தமிழ்நாட்டின் அஞ்சல் அலுவலகங்களில் செல்வ மகள் சேமிப்பு திட்டமாக செயல்பட்டு வருகிறது. 

    2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் கணக்கைத் தொடங்கலாம். அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை, இந்த திட்டம் மூலம் முதலீடு செய்யலாம். தொடக்கத்தில் சேமிக்கும் பணத்துக்கு 9.1 சதவிகித வட்டி என அறிவிக்கப்பட்டது. ஆனால், படிப்படியாக வட்டி குறைக்கப்பட்டு தற்போது 8.1 சதவிகித வட்டி அமலில் உள்ளது. 

    இந்தக் கணக்கில் ஒரு ஆண்டுக்கு குறைந்த பட்ச தவணைத்தொகையாக ரூ.1000 செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதிக பட்சமாக ஆண்டிற்கு ரூ.1.5 லட்சம் வரை செலுத்தலாம். 

    இந்நிலையில், செல்வமகள் திட்டத்தின் குறைந்தபட்ச ஆண்டு டெபாசிட் தொகை, ரூ.250 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வட்டி குறைக்கப்பட்டதால், பலர் அதிருப்தி அடைந்த நிலையில் அவர்களை சரிகட்ட மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    அனைத்து தபால் நிலையங்களிலும் விரைவில் வங்கி சேவை செயல்படுத்தப்படும் என்று குழித்துறையில் மத்திய மந்திரி மனோஜ் சின்கா கூறினார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள தபால் நிலையம் திருவிதாங்கூர் சமஸ்தான காலத்தில் கட்டப்பட்ட பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த தபால் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, ரூ.2 கோடியே 25 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    புதிய கட்டிடத்தை மத்திய தொலை தொடர்பு மந்திரி மனோஜ் சின்கா திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். புன்பு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மத்திய அரசு இந்தியா முழுவதும் தபால் நிலையங்கள் மூலம் 300 பாஸ்போர்ட் சேவை மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. தற்போது 214 பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    2019-ம் ஆண்டுக்குள் 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் அல்லது ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு பாஸ்போர்ட் மையம் என்கிற நிலையை நிறைவேற்ற உள்ளோம்.

    கிராமப்புற தபால் நிலையங்கள் உள்பட அனைத்து தபால் நிலையங்களிலும் அனைத்து விதமான வங்கி சேவைகளை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளோம். இதனால் கிராம பகுதி மக்கள் அனைவரும் பயன் அடைவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    வெளிநாடுகளுக்கு பதிவு தபால் அனுப்புபவர்களின் வசதிக்காக அண்ணாநகர் அஞ்சலகத்தில் சிறப்பு கவுண்ட்டர் திறக்கப்பட்டு உள்ளது.
    சென்னை:

    சென்னை வடகோட்டம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் க.குருநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அண்ணாநகர் அஞ்சலகத்தில் வெளிநாடுகளுக்கு பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல் மற்றும் பார்சல் அனுப்புபவர்களுக்காக ஒரு சிறப்பு கவுண்ட்டர் திறக்கப்பட்டுள்ளது. இந்த கவுண்ட்டர் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கி வருகிறது.

    எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு அண்ணாநகர் அஞ்சலகத்தின் துணை அஞ்சல் அதிகாரியை 044-26211012 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×