search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீரபாண்டி அஞ்சல் நிலையத்தில் ஆதார் பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் பொதுமக்கள்
    X

    கோப்புபடம். 

    வீரபாண்டி அஞ்சல் நிலையத்தில் ஆதார் பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் பொதுமக்கள்

    • சென்னிமலைபாளையம் உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட ஊர்கள் வருகின்றன.
    • திருப்பி அனுப்பபடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் வீரபாண்டி துணை அஞ்சல் நிலையத்திற்கு உட்பட்டு அவரப்பாளையம், நொச்சிப்பாளையம், குப்பாண்டம்பாளையம், வீரபாண்டி, பலவஞ்சிபாளையம், வித்யாலயம்,கரைப்புதூர், சென்னிமலைபாளையம் உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட ஊர்கள் வருகின்றன.

    இந்த அஞ்சல் நிலையத்தில் ஆதார் கார்டில் திருத்தம் செய்ய காலை 8மணிமுதல் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

    காலை 9மணிக்கு அஞ்சல் நிலையம் திறக்கப்படுகிறது. ஆனால் காலை 10.30 மணிக்கு பணிகள் தொடங்கும் நிலையில் நெட்வொர்க் வேலை செய்யவில்லை. நாளை வாருங்கள் என்று திருப்பி அனுப்பபடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இதனால் வேலைக்கு செல்லாமல் காலையிலிருந்து காத்து நிற்கும் பொதுமக்கள் கவலை அடைகின்றனர். எனவே இதற்கு தீர்வு காண அஞ்சல் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×