search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Job Vacant"

    • அஞ்சல் துறையின் சீரான செயல்பாட்டிற்கு தேவைக்கேற்ப அதிவேக நெட்வொர்க்கை தடையின்றி வழங்க கோரிக்கை
    • நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு 3 நாட்களுக்குள் அனைத்து அஞ்சல் களும் சென்றடைவதை உறுதி செய்ய வலியுறுத்தல்

    நெல்லை:

    பாரதிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் நெல்லை கோட்ட மாநாடு இன்று காலை தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு நெல்லை கோட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    நெல்லை கோட்ட செயலாளர் மைக்கேல்ராஜ் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் தபால்காரர் உள்ளிட்ட அனைத்து பணி காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    அஞ்சல் துறையின் சீரான செயல்பாட்டிற்கு தேவைக்கேற்ப அதிவேக நெட்வொர்க்கை தடையின்றி வழங்க வேண்டும்.

    வாடிக்கையாளர்களின் முகவரியில் அனைத்து விதமான தகவல்களையும் பதிவு செய்வதற்கு ஏற்ப தபால்காரர்கள் அனைவருக்கும் கையடக்கக் கருவிகள் வழங்க வேண்டும்.

    நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு 3 நாட்களுக்குள் அனைத்து அஞ்சல் களும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் பாரதிய மஸ்தூர் சங்க மாவட்ட செயலாளர் செந்தில் பாண்டியன், மாவட்ட தலைவர் சங்கரசுப்பு மற்றும் நிர்வாகிகள் திருமலைசாமி, அசோக் கிருஷ்ணா, ரவிச்சந்திரன் கண்ணன், ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×