search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pongal"

    • பொங்கலை இன்று வித்தியாசமான முறையில் செய்யலாம்.
    • பொங்கல் பிடிக்காதவர்களும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    அரிசி - 1 கப்

    பாசிப்பருப்பு - அரை கப்

    வெங்காயம் - 2

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 6

    பட்டை, லவங்கம், கிராம்பு - சிறிதளவு

    புதினா, கொத்தமல்லி - கைப்பிடி அளவு

    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

    மஞ்சள்பொடி - 1 டீஸ்பூன்

    நெய் - 2 கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    முந்திரிப்பருப்பு- சிறிதளவு

    செய்முறை:

    வெங்காயம், தக்காளியை லேசாக வதக்கி நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

    அரிசி, பாசிப்பருப்பை நன்றாக கழுவி 1 மணி நேரம் ஊற வைத்த பின்னர் தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு நெய் விட்டு இரண்டையும் சற்று பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

    அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம், கிராம்பு போட்டு தாளித்த பின்னர் அரைத்த வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்க்கவும்.

    இஞ்சி - பூண்டு பச்சை வாசனை போனவுடன் பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.

    அடுத்து ஒரு கப் அரிசிக்கு இரண்டு தண்ணீர் என்ற கணக்கில் தண்ணீர் விட்டு, அதில் வறுத்த அரிசி, பாசிப்பருப்பைபோட்டு தேவையான அளவு உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவைக்கவும்.

    நன்றாக வெந்ததும் கடுகு, சீரகம், முந்திரிப்பருப்பு தாளித்துக் கொட்டவும்.

    சுவையான மசாலாப் பொங்கல் தயார்.

    இதற்கு தொட்டுக்கொள்ள புதினா துவையல், தக்காளித்தொக்கு, ஊறுகாய் சூப்பராக இருக்கும்.

    • பொங்கல் விழாவில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு. பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள்.
    • மகளிருக்கு புத்தாடைகளை கனிமொழி வழங்குகிறார்.

    சென்னை:

    சென்னை மேற்கு மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதி 119 வட்டம் தி.மு.க. சார்பாக பொங்கல் விழா ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை சந்திப்பில் நாளை (26-ந் தேதி) மாலை 6 மணிக்கு நடக்கிறது.

    விழாவிற்கு மாவட்ட துணை செயலாளர் ஆர்.என்.துரை தலைமை தாங்குகிறார். மாவட்ட செயலாளர் சிற்றரசு, திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். விழாவில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு. பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள். மகளிருக்கு புத்தாடைகளை கனிமொழி வழங்குகிறார்.

    தயாநிதிமாறன் எம்.பி., செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மகளிர் தொண்டரணி தமிழரசி ரவிக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராமசாமி, மாவட்ட நிர்வாகிகள் விக்டர், வி.எஸ்.கலை, சங்கீதா, அகஸ்டின் பாபு, ஐ.கென்னடி, பகுதி செயலாளர்கள் ராமலிங்கம், எஸ்.மதன் மோகன். மா.பா.அன்பு துரை, பரமசிவம், வினோத் வேலாயுதம் பொன்னரசு, டாக்டர் சுபேர்கான், வி.என்.ராஜன், கமலா செழியன், கலைச்செல்வன், ரவிராஜ்குமார், வக்கீல் பா.பிரகாஷ் விஜயராஜ், இளம்பரிதி, ஆனந்த் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். முடிவில் வட்ட செயலாளர்கள் கே.பிரபு, மோகன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வசந்த குமார் ஆகியோர் நன்றி கூறுகின்றனர்.

    • சேத்தூர் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது
    • சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்,

    சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா பேரூராட்சி பகுதிகளில் புகையில்லா பொங்கல் விழா நடத்திட வழிமுறைகளை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன் அறிவுரைகளின்படி சேத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் புகையில்லா பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    இதில பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்றும், சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் உள்பட அனைத்து பணியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. நகர்ப்புற தூய்மைக்கான மக்கள் இயக்கம் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து பேரூராட்சி அலுவலகம் முதல் பஸ் நிலையம் மற்றும் முக்கிய தெருக்கள் வழியாக புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் பேரூராட்சி மன்றத்தலைவர் பாலசுப்பிரமணியன் செயல் அலுவலர் வெங்கடகோபு, துணைத்தலைவர் காளீஸ்வரி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் ராம்கோ நிறுவனங்களின் பொங்கல் விளையாட்டு விழா நடந்தது
    • அனைத்து அலுவலர்கள் செய்திருந்தனர்.

    ராஜபாளையம்,

    ராம்கோ குரூப் பஞ்சாலை பிரிவை சேர்ந்த ராஜபாளையம் மில்ஸ், ஸ்பின்டெக்ஸ்ட், ராஜபாளையம் டெக்ஸ்டைல்ஸ் (பெரு மாள்பட்டி), ராஜபாளையம் மில்ஸ் -பேப்ரிக் டிவிசன், ஸ்ரீவிஷ்ணு சங்கர் மில், ஸ்ரீராம்கோ ஸ்பின்னர்ஸ், சந்தியா ஸ்பின்னிங் மில், ராஜபாளையம் டெக்ஸ்டைல் (சுப்பிர மணியபுரம்) ஆகிய நிறுவனங்களுக்கான பொங்கல் விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் மனமகிழ் மன்றத்தின் விளையாட்டு மைதானத்தில் நடந்தன.

    ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குநர் பி.வி.நிர்மலா ராஜூ, இயக்குநர்கள் என்.கே.ஸ்ரீகண்டன்ராஜா, என்.ஆர்.கே.ராம்குமார் ராஜா, ராம்கோ குரூப் டெக்ஸ்டைல்ஸ் டிவிசன் நிறு வனங்களின் இயக்குநர்கள் மற்றும் ராம்கோ குரூப் நூற்பாலைகளின் தலைவர் என்.மோகனரங்கன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விழாவில் 15 வருடம் முதல் 40 வருடம் வரை சர்வீஸ் பூர்த்தி செய்த தொழிலாளர்கள் மற்றும் அதிக வருடம் ஊதிய இழப்பின்றி பணியாற்றிய 1226 தொழிலாளர்களுக்கு ரொக்கப் பரிசாக ரூ. 41.93 லட்சம் வழங்கப்பட்டது. அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக பணிபுரிந்த 2176 தொழிலாளர்களுக்கும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ராம்கோ குரூப் நூற்பாலைகளின் துணை தலைவர் (மனிதவளம்) என்.நாகராஜன் வரவேற்றார். தொழிற்சங்கத் தலைவர்கள் என்.கண்ணன் (எச்.எம்.எஸ்.), ஆர்.கண்ணன் (ஐ.என்.டியூ.சி.), பி.கே.விஜயன் (ஏ.ஐ.டி.யூ.சி.), எஸ்.கிருஷ்ணசாமி (எஸ்.வி.எஸ்.எம். மில் யூனியன்) ஆகியோர் பேசினர்.

    உற்பத்தித் திறன் அதிகரிப்பு, சுற்றுப்புறத் தூய்மை, செலவினங்களை கட்டப்படுத்துதல் ஆகி யவற்றின் அடிப்படையில் எக்செல் அவார்டு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

    இதில் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா பேசுகையில், நூற்பாலைகள் தற்போது மோசமான சூழ்நிலைகளை சந்தித்து வருகிறது. இருந்தாலும் ராம்கோ நிறுவனத்திற்கு என்று மதிப்பு உள்ளது. கடந்த முறை ஐரோப்பா நாடுகளான இத்தாலி, ஜெர்மன் நாட்டிற்கு சென்று வாடிக்கையாளர்களை சந்தித்தபோது, நல்ல தரம், குறித்த காலத்தில் டெலிவரி மற்றும் தொடர்ச்சியான சேவைகளை நாம் செய்து வருவதால்தான் நம்மிடம் வணிகம் செய்ய விருப்பம் உள்ளதாக தெரிவித்தார்கள் என்றார்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை ராஜபாளை யம் மில்ஸ் துணை தலைவர் (மனிதவளம்) நாகராஜன் மற்றும் அனைத்து அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் திரும்பி செல்லும்போது குப்பைகளை அங்கேயே விட்டுச்சென்று இருந்தனர்.
    • நீச்சல் குளம் அருகே குப்பைகள் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து லாரிகள் மூலம் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

    சென்னை:

    காணும் பொங்கல் விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் பொழுதுபோக்கு பூங்கா, கடற்கரை, சுற்றுலா தலங்களில் காலை முதலே குவிந்தனர்.

    மெரினா கடற்கரையில் காலை முதலே சாரை சாரையாக மக்கள் வரத் தொடங்கினர். மாலையில் மணல் பகுதியே தெரியாத அளவுக்கு குடும்பத்துடன் மக்கள் குவிந்தனர்.

    அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கரும்பு பல்வேறு திண்பண்டங்கள் மற்றும் சமைத்து கொண்டு வந்திருந்த உணவை மணலில் அமர்ந்து சாப்பிட்டும், விளையாடியும் பொழுதை உற்சாகமாக கழித்தனர்.

    சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெரினாவில் குவிந்து இருந்ததால் காணும் பொங்கல் விழா களை கட்டி இருந்தது. தீவுத்திடல் பொருட்காட்சியை பார்க்கவும் கூட்டம் அலைமோதியது.

    இந்த நிலையில் கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் திரும்பி செல்லும்போது குப்பைகளை அங்கேயே விட்டுச்சென்று இருந்தனர். இதனால் கடற்கரை முழுவதும் குப்பைகளாக காணப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று இரவு முதலே மெரினா கடற்கரையில் குவிந்து இருந்த குப்பைகளை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விடிய விடிய குப்பைகளை அகற்றினர்.

    வழக்கமாக சாதாரண நாட்களில் மெரினா கடற்கரையில் 10 டன் குப்பைகள் சேரும். ஆனால் காணும் பொங்கலை யொட்டி இது 5 மடங்காக அதிகரித்து ஒரே நாளில் 50 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு உள்ளது.

    நீச்சல் குளம் அருகே குப்பைகள் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து லாரிகள் மூலம் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. குப்பைகள் உடனடியாக அகற்றப்பட்டதால் மெரினா கடற்கரை பளிச்சென்று காணப்பட்டது.

    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, 'மெரினா கடற்கரையில் குப்பைகள் அகற்றும் பணி நேற்று இரவே தொடங்கப்பட்டது. வழக்கமான நாளை விட 5 மடங்கு குப்பை அதிகமாக சேகரிக்கப்பட்டு உள்ளது. சுமார் 50 டன் குப்பைகளை வீசி சென்று உள்ளனர்' என்றார்.

    இதேபோல் பெசன்ட்நகர், கிழக்கு கடற்கரை சாலை கடற்கரையோரங்களிலும் நேற்று காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து இருந்தனர். அந்த பகுதியிலும் வழக்கத்தை விட கூடுதலாக குப்பைகள் அகற்றப்பட்டன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொங்கல் தொகுப்பு 5 நாட்கள் தொடர்ந்து வழங்கப்பட்ட நிலையில் ரேசன் கடைகள் நேற்று வரை மூடப்பட்டன. இன்று மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன.
    • பொங்கலுக்கு வெளியூர் சென்றவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியதால் இன்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் ரூ.1000 ரொக்கத்துடன் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன. 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த 9-ந் தேதி முதல் 13-ந் தேதி முதல் வரை வழங்கப்பட்டன. 92 சதவீதம் பேருக்கு பொங்கல் தொகுப்பு வினியோகிக்கப்பட்டது.

    பொங்கல் தொகுப்பு 5 நாட்கள் தொடர்ந்து வழங்கப்பட்ட நிலையில் ரேசன் கடைகள் நேற்று வரை மூடப்பட்டன. இன்று மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன. பொங்கலுக்கு வெளியூர் சென்றவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியதால் இன்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறுகையில், பொங்கல் தொகுப்பு பெரும்பாலானவர்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டன. இதுவரையில் வாங்காமல் இருந்தால் வாங்கிக் கொள்ளலாம். ரூ.1000 ரொக்கம் கொடுப்பது நிறுத்துவது குறித்து அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. அதனால் தொடர்ந்து வினியோகித்து கொண்டு இருக்கிறோம் என்றார்.

    • தினமும் உணவில் கீரையை சேர்த்து கொள்வது நல்லது.
    • விருப்பமான எந்த கீரையையும் பயன்படுத்தலாம்.

    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 1 கப்

    பாசிப் பருப்பு - அரை கப்

    பெரிய வெங்காயம் - 1

    தக்காளி - 1

    வெந்தயக்கீரை - 1 கட்டு

    இஞ்சி - 1 துண்டு

    கறிவேப்பிலை - சிறிது

    நெய் - 1 தேக்கரண்டி

    பெருங்காயம் - அரை தேக்கரண்டி

    உப்பு-தேவைக்கு ஏற்ப

    தாளிக்க:

    மிளகு - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    பட்டை - துண்டு

    லவங்கம் - 2

    ஏலக்காய் - 1

    நெய் - 2 டேபிள் ஸ்பூன்

    எண்ணெய் - 3 டீஸ்பூன்.

    செய்முறை :

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசி, பருப்பை ஒன்றாக போட்டு கழுவி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

    ஆறரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து ஊற வைத்த அரிசியில் சேர்த்து சிறு தீயில் நன்கு வேகவிடுங்கள். பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேகவிடுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் வெந்தயக்கீரையை சேர்த்து வதக்கவும். (கீரை 5 நிமிடங்கள் வெந்தால் போதுமானது)

    அடுத்து அதில் சிறிது உப்பு, தக்காளி சேர்த்து வதக்கவும்.

    கீரை வெந்ததும் பொங்கலில் சேர்த்து நன்கு கிளறுங்கள்.

    கடைசியாக அதில் சிறிதளவு நெய் சேருங்கள்.

    இப்போது கமகம வெந்தயக்கீரை பொங்கல் தயார்.

    • மாமல்லபுரம் கடற்கரையில் உயர் கோபுரம் அமைத்து ஒலிபெருக்கி மூலமாகவும், ரோந்து சென்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பழவேற்காட்டில் காணும் பொங்கலை முன்னிட்டு இன்று காலை முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் குவிந்தனர்.

    மாமல்லபுரம்:

    காணும் பொங்கல் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் பூங்காக்கள், சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். குடும்பத்துடன் அவர்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.

    சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் மாமல்லபுரத்தில் காணும் பொங்கலை கொண்டாட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இன்று காலையில் இருந்தே குடும்பத்துடன் வரத்தொடங்கினர்.

    இதையடுத்து மாமல்லபுரம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வாகனங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. கிழக்கு கடற்கரை சாலை, பூஞ்சேரி, ஐந்துரதம் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் என 3 இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    பூஞ்சேரி டோல்கேட், புறவழிச்சாலை பகுதியில் இருந்து கடற்கரை கோயில், புலிக்குகை, ஐந்துரதம், அர்சுணன்தபசு போன்ற புராதன சின்னம் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் மாமல்லபுரம் பஸ் நிலையம் வரை செல்ல தாம்பரம், ஆலந்தூர், குரோம்பேட்டை, அடையாறு டெப்போக்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மாநகர மினிபஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் பயணம் செய்ய ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் உள்ள பகுதியில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து உற்சாகம் அடைந்தனர். மாமல்லபுரம் பகுதி முழுவதும் சுற்றுலா பயணிகளின் கூட்டமாக காணப்பட்டது. இதனால் அங்குள்ள கடைகளில் வியாபாரம் களை கட்டியது. வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடலில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். திருட்டு, பெண்களை கேலி செய்தல், போதை ஆசாமிகளை பிடிக்க சாதாரண உடையில் போலீசார் கண்காணித்தனர்.

    மேலும் மாமல்லபுரம் கடற்கரையில் உயர் கோபுரம் அமைத்து ஒலிபெருக்கி மூலமாகவும், ரோந்து சென்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேரூராட்சி சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

    பழவேற்காட்டில் காணும் பொங்கலை முன்னிட்டு இன்று காலை முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் குடும்பத்துடன் டச்சுகல்லறை, நிழல் கடிகாரம், பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளிட்ட பகுதியை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் அங்குள்ள மர நிழலில் அமர்ந்து உற்சாகமாக பொழுதை கழித்தனர். ஏற்கனவே சமைத்து கொண்டு வந்து இருந்த உணவை குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பழவேற்காடு பகுதி மக்கள் கூட்டத்தால் திக்கு முக்காடியது.

    சுற்றுலா பயணிகளின் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த தனித்தனி இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க டி.எஸ்.பி. கிரியா சக்தி திருப்பாலைவனம் ஆய்வாளர் நடராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதேபோல் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க பொன்னேரி தீயணைப்பு அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    வடசென்னை அனல்மின் நிலையம், பழவேற்காடு செல்லும் சாலை, காட்டு பள்ளி, பொன்னேரி -பழவேற்காடு சாலை ஆண்டார் மடம், போளாச்சி அம்மன் குளம், ஆகிய இடங்களில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் பழவேற்காடு கடலில் குளிக்கவும், படகு சவாரி செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.

    • கடந்த இரண்டு வருடமாக கொரோனா தாக்கம் காரணமாக வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது.
    • ஏராளமான கல்லூரி மாணவிகள் தங்களது தோழிகளுடனும், பெண்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் வந்திருந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு சுற்றுலா தளங்களில் இன்று காணும் பொங்கலையொட்டி மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஈரோடு வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கலை ஒட்டி ஒவ்வொரு வருடமும் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    காணும் பொங்கலை ஒட்டி ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் பெண்கள் ஒரு நாள் முழுவதும் ஒன்று கூடி ஆடி, பாடி பொழுதை கழிப்பார்கள். பெண்கள் மட்டுமே வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கலையொட்டி அனுமதிக்கப்படுவார்கள். ஆண்களுக்கு அனுமதி இல்லை.

    இந்நிலையில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா தாக்கம் காரணமாக வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இந்த வருடம் வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக நேற்று மாநகராட்சி பணியாளர்கள் வ.உ.சி. பூங்காவை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இன்று மதியம் 12 மணி அளவில் வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கலை கொண்டாட ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பெண்கள் வரத் தொடங்கினர்.

    ஏராளமான கல்லூரி மாணவிகள் தங்களது தோழிகளுடனும், பெண்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் வந்திருந்தனர். மயிலாட்டம், ஒயிலாட்டம் என பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர். மேலும் பாண்டி பல்லாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டையும் விளையாடி மகிழ்ந்தனர். மியூசிக்கல் சேர் விளையாட்டையும் விளையாடி மகிழ்ந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் வ.உ.சி. பூங்காவில் கூடியதால் வ.உ.சி. பூங்கா விழாக்கோலம் பூண்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வ.உ.சி. பூங்கா 2 கேட்கள் அடைக்கப்பட்டிருந்தன. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

    • மாமன் உறவு முறை கொண்டவர்கள் வழுக்கு மரத்தை ஊன்றி அதன் உச்சியில் பூச்சரத்தை கட்டி வைத்தனர்.
    • மாமன், மைத்துனர் உறவு என்பது எவ்வளவு முக்கியத்துவம் என்பதை உணர்த்தும் விதமாக இது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள விராலிபட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

    இதில் குறிப்பாக உறவு மேம்பட நடந்த வழுக்கு மரப்போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    மாமன் உறவு முறை கொண்டவர்கள் வழுக்கு மரத்தை ஊன்றி அதன் உச்சியில் பூச்சரத்தை கட்டி வைத்தனர். இதனை மைத்துனர் உறவு கொண்ட வாலிபர்கள் ஏறி தொட்டால் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசாக அறிவித்தனர்.

    இதற்காக 65 பேர் தேர்வு செய்யப்பட்டு விழாக்குழுவில் தங்கள் பெயரை பதிவு செய்திருந்தனர். மைத்துனர்கள் வழுக்கு மரத்தில் ஏற முயன்றபோது அதனை மாமன்கள் தண்ணீர் ஊற்றி தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் பலமுறை வழுக்கி விழுந்தபோதும் பலர் உச்சிக்கு சென்று பூச்சரத்தை எடுத்து பரிசுத்தொகையை பெற்றனர்.

    மரத்தில் ஏறும் வாலிபர்களுக்கு உதவியாக கிராமப்புற இளைஞர்களும் உதவ, கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். வெற்றி பெற்ற மைத்துனர்களுக்கு பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிவிக்கப்பட்டு பரிசு தொகையும் வழங்கப்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடக்கும் வழுக்கு மர போட்டியில் மாமன், மைத்துனர்கள் கலந்து கொள்ளும் பந்தயம் மிகவும் சுவாரசியமானது. இதற்காக வெளியூர்களில் இருந்தாலும் இந்த போட்டியில் பங்கேற்க வந்துவிடுவார்கள்.

    இதற்காக குடும்பத்தினர் மட்டுமின்றி கிராம மக்கள் ஒன்றுமையுடன் இந்த போட்டியை காணும்போது தங்கள் குடும்பத்தில் உள்ளவரையும் பங்கேற்க செய்ய வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அதன்படி அடுத்த ஆண்டு அவர்களும் இந்த போட்டியில் கலந்து கொள்வார்கள். மாமன், மைத்துனர் உறவு என்பது எவ்வளவு முக்கியத்துவம் என்பதை உணர்த்தும் விதமாக இது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

    • பொங்கலை முன்னிட்டு சிறை தோட்டத்தில் மஞ்சள் கிழங்கு பயிரிடப்பட்டிருந்தது.
    • சூரியகாந்தி, சாமந்தி, கோஸ், ஆந்திர கத்திரிக்காய் போன்றவையும் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருக்கின்றன.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டில் மத்திய ஜெயில் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் உள்ளனர். இங்குள்ள சிறைவாசிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சியை 2 ஆண்டுகளாக சிறைத்துறை நிர்வாகம் அளித்து வருகிறது.

    இதற்காக சிறை வளாகத்துக்குள்ளேயே 2½ ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாக பயன்பாடின்றி புதர் மண்டி கிடந்த அந்த இடத்தை 2 வாரத்தில் விவசாய நிலமாக சிறைவாசிகள் உருவாக்கினர்.

    அதே வேகத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 60 வகையான பழச்செடிகள், 50 வகையான மூலிகை செடிகளையும் நட்டு இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு பராமரித்து வருகின்றனர்.

    சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர் தலைமையில் அரவிந்தர் சொசைட்டியுடன் இணைந்து காய்கறிகள் மரம் மற்றும் பழ வகைகள் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் பொங்கலை முன்னிட்டு சிறை தோட்டத்தில் மஞ்சள் கிழங்கு பயிரிடப்பட்டிருந்தது. அவை அறுவடை செய்யப்பட்டு சொசைட்டி மூலம் பொதுமக்களுக்கு விற்கப்பட்டது. வெளிச்சந்தையில் ரூ.20-க்கு விற்கப்பட்ட ஒரு மஞ்சள் கிழங்கு சிறைவாசிகள் உருவாக்கிய ஒரு கிழக்கு ரூ.10-க்கு விற்கப்பட்டது.

    பொங்கல் பண்டிகைக்கு பிறகு உற்பத்தியாகும் மஞ்சள் அனைத்தையும் பவுடராக்கி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சிறைத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கர் தெரிவித்தார்.

    இங்கு சூரியகாந்தி, சாமந்தி, கோஸ், ஆந்திர கத்திரிக்காய் போன்றவையும் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருக்கின்றன.

    மேலும் தை பொங்கலையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் சிறைவாசிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

    • காய்கறிகளை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
    • இந்த பொங்கல் சாப்பிட சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 1 கப்

    பாசிப் பருப்பு - அரை கப்

    பெரிய வெங்காயம் - 1

    தக்காளி - 1

    கேரட்- 1

    பீன்ஸ் - 10

    கோஸ் - சிறிதளவு

    உருளைக்கிழங்கு - 1 சிறியது

    வேக வைத்தப் பச்சைப்பட்டாணி- 1 கப்

    இஞ்சி - 1 துண்டு

    கறிவேப்பிலை - சிறிது

    நெய் - 1 தேக்கரண்டி

    பெருங்காயம் - அரை தேக்கரண்டி

    உப்பு-தேவைக்கு ஏற்ப

    தாளிக்க:

    மிளகு - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    பட்டை - துண்டு

    லவங்கம் - 2

    ஏலக்காய் - 1

    நெய் - 2 டேபிள் ஸ்பூன்

    எண்ணெய் - 3 டீஸ்பூன்.

    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, இஞ்சி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். (காய்கறிகள் அனைத்து 1 கப் அளவிற்கு இருக்க வேண்டும்)

    அரிசி, பருப்பை ஒன்றாக போட்டு கழுவி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

    ஆறரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து ஊற வைத்த அரிசியில் சேர்த்து சிறு தீயில் நன்கு வேகவிடுங்கள். பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேகவிடுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் காய்கறிக்கலவையைச் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    காய்கறிகள் நன்கு வெந்ததும் பொங்கலில் சேர்த்து நன்கு கிளறுங்கள்.

    அதில் சிறிதளவு நெய் சேருங்கள்.

    இப்போது கமகம காய்கறிப் பொங்கல் தயார்.

    ×