search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சள் அறுவடை"

    • நத்தக்காடையூர் பகுதிகளில் 1000 ஏக்கர் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • தினந்தோறும் 1400 மூட்டைகள் வரை கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வெள்ளகோவில் :

    நத்தக்காடையூர் நகரம், பழையகோட்டை, மருதுறை, குட்டப்பாளையம், முள்ளிப்புரம், பரஞ்சேர்வழி பகுதிகளில் விவசாயம் நடைபெறுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து கீழ்பவானி பாசன கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி நஞ்சை சம்பா நெல், எள், நிலக்கடலை, சூரியகாந்தி, மக்காச்சோளம் சாகுபடி நடைபெற்று வருகிறது.

    மேலும் கிணற்று நீர், ஆழ்குழாய் கிணற்று நீர், குளம், ஓடை பாசன நீர் மூலம் மஞ்சள், கரும்பு, வாழை மற்றும் காய்கறிகள், கீரை வகைகள், மா, கொய்யா, சப்போட்டா, நெல்லி சாகுபடியும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு நத்தக்காடையூர் பகுதிகளில் 1000 ஏக்கர் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தற்போது மஞ்சள் அறுவடை 2 வார காலமாக நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து மஞ்சள் கிழங்குகள் டிராக்டர் மூலம் ஏற்றி விவசாயிகள் தோட்ட களங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கலன்கள் மூலம் அடுப்பில் வேக வைத்து வெயிலில் நன்கு காய வைத்து தனி விரலி மஞ்சள், கிழங்கு மஞ்சள் என தரம் பிரிக்கிறார்கள்.

    பின்னர் ஈரோடு மஞ்சள் மார்க்கெட், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்பனைக்கு கொண்டு செல்வார்கள். மேலும் ஈரோடு மஞ்சள் மார்க்கெட், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தினந்தோறும் 1400 மூட்டைகள் வரை கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டில் தற்போது ஒரு குவிண்டால் தனி விரலி மஞ்சள் அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 500-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 50-க்கும், தனி கிழங்கு மஞ்சள் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரத்து 740-க்கும், குறைந்தபட்சமாக ரூ.4 ஆயிரத்து 750-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • பொங்கலை முன்னிட்டு சிறை தோட்டத்தில் மஞ்சள் கிழங்கு பயிரிடப்பட்டிருந்தது.
    • சூரியகாந்தி, சாமந்தி, கோஸ், ஆந்திர கத்திரிக்காய் போன்றவையும் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருக்கின்றன.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டில் மத்திய ஜெயில் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் உள்ளனர். இங்குள்ள சிறைவாசிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சியை 2 ஆண்டுகளாக சிறைத்துறை நிர்வாகம் அளித்து வருகிறது.

    இதற்காக சிறை வளாகத்துக்குள்ளேயே 2½ ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாக பயன்பாடின்றி புதர் மண்டி கிடந்த அந்த இடத்தை 2 வாரத்தில் விவசாய நிலமாக சிறைவாசிகள் உருவாக்கினர்.

    அதே வேகத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 60 வகையான பழச்செடிகள், 50 வகையான மூலிகை செடிகளையும் நட்டு இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு பராமரித்து வருகின்றனர்.

    சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர் தலைமையில் அரவிந்தர் சொசைட்டியுடன் இணைந்து காய்கறிகள் மரம் மற்றும் பழ வகைகள் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் பொங்கலை முன்னிட்டு சிறை தோட்டத்தில் மஞ்சள் கிழங்கு பயிரிடப்பட்டிருந்தது. அவை அறுவடை செய்யப்பட்டு சொசைட்டி மூலம் பொதுமக்களுக்கு விற்கப்பட்டது. வெளிச்சந்தையில் ரூ.20-க்கு விற்கப்பட்ட ஒரு மஞ்சள் கிழங்கு சிறைவாசிகள் உருவாக்கிய ஒரு கிழக்கு ரூ.10-க்கு விற்கப்பட்டது.

    பொங்கல் பண்டிகைக்கு பிறகு உற்பத்தியாகும் மஞ்சள் அனைத்தையும் பவுடராக்கி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சிறைத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கர் தெரிவித்தார்.

    இங்கு சூரியகாந்தி, சாமந்தி, கோஸ், ஆந்திர கத்திரிக்காய் போன்றவையும் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருக்கின்றன.

    மேலும் தை பொங்கலையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் சிறைவாசிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

    ×