search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராயப்பேட்டையில் நாளை கனிமொழி பங்கேற்கும் பொங்கல் விழா
    X

    ராயப்பேட்டையில் நாளை கனிமொழி பங்கேற்கும் பொங்கல் விழா

    • பொங்கல் விழாவில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு. பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள்.
    • மகளிருக்கு புத்தாடைகளை கனிமொழி வழங்குகிறார்.

    சென்னை:

    சென்னை மேற்கு மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதி 119 வட்டம் தி.மு.க. சார்பாக பொங்கல் விழா ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை சந்திப்பில் நாளை (26-ந் தேதி) மாலை 6 மணிக்கு நடக்கிறது.

    விழாவிற்கு மாவட்ட துணை செயலாளர் ஆர்.என்.துரை தலைமை தாங்குகிறார். மாவட்ட செயலாளர் சிற்றரசு, திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். விழாவில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு. பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள். மகளிருக்கு புத்தாடைகளை கனிமொழி வழங்குகிறார்.

    தயாநிதிமாறன் எம்.பி., செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மகளிர் தொண்டரணி தமிழரசி ரவிக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராமசாமி, மாவட்ட நிர்வாகிகள் விக்டர், வி.எஸ்.கலை, சங்கீதா, அகஸ்டின் பாபு, ஐ.கென்னடி, பகுதி செயலாளர்கள் ராமலிங்கம், எஸ்.மதன் மோகன். மா.பா.அன்பு துரை, பரமசிவம், வினோத் வேலாயுதம் பொன்னரசு, டாக்டர் சுபேர்கான், வி.என்.ராஜன், கமலா செழியன், கலைச்செல்வன், ரவிராஜ்குமார், வக்கீல் பா.பிரகாஷ் விஜயராஜ், இளம்பரிதி, ஆனந்த் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். முடிவில் வட்ட செயலாளர்கள் கே.பிரபு, மோகன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வசந்த குமார் ஆகியோர் நன்றி கூறுகின்றனர்.

    Next Story
    ×