search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police complaint"

    • கடந்த 14-ந் தேதி அன்று எனது மகன் மதிய உணவு இடைவேளையில் உணவு சாப்பிட்டுவிட்டு கழிப்பறைக்கு சென்று விட்டு வந்துள்ளான்.
    • சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க 20-ம் தேதி பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தேன்.

    இரணியல்:

    இரணியல் அருகே உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் வீட்டில் சோர்வாக காணப்பட்டுள்ளான்.

    இது பற்றி அவனது தந்தை விசாரித்தபோது, மாணவனுக்கு பள்ளி ஆசிரியர் ஓருவர் செக்ஸ் தொல்லை கொடுத்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதுகுறித்து மாணவனின் தந்தை, குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது 13 வயது மகன், அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். அந்த பள்ளியில் பாடம் எடுத்து வரும் 47 வயது ஆசிரியர் ஒருவர் எனது மகனுடன் நட்பாக பழகி வந்துள்ளார். கடந்த 14-ந் தேதி அன்று எனது மகன் மதிய உணவு இடைவேளையில் உணவு சாப்பிட்டுவிட்டு கழிப்பறைக்கு சென்று விட்டு வந்துள்ளான். அப்போது அவர், எனது மகனை ஆய்வுக் கூடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    அங்கு வைத்து அவனை தகாத உறவுக்கு ஈடுபடுத்தி உள்ளார். இதனால் அவனது பிறப்புறுப்பு வீங்கி வலியால் அவதிப்பட்டு வந்தான். இது குறித்து கேட்டபோதுதான் பள்ளி ஆசிரியர் தவறாக நடந்தது குறித்து கூறினான். சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க 20-ம் தேதி பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தேன். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நண்பரின் மகள் திருமண நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றிருந்தார்.
    • மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பதை கண்டு துரைசாமி அதிர்ச்சி அடைந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூர் கிராமம் பள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவர் நேற்று மாலையில் சேலம் மாவட்டம் தலைவாசலில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்ற தனது நண்பரின் மகள் திருமண நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றிருந்தார். 

    அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிறகு துரைசாமி உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த பீரோ மற்றும் கப்போர்டுகள் உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6பவுன் ஆரம், 4 பவுன் நெக்லஸ், அரை பவுன் டையுள்ள 5 மோதிரம், தோடுகள் 5 பவுன், , ஒரு பவுன் எடையுள்ள 5 காயின் உள்ளிட்ட மொத்தம் 25பவுன் தங்க நகை, பணம் 9 ஆயிரம் ரொக்கப்பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பதை கண்டு துரைசாமி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து துரைசாமி சின்னசேலம் போலீஸ் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசார் குற்றவாளிகளை தேடும்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஒரு ஆண்டுக்கு முன்பு பொது குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டது.
    • விசாரணை நடத்துமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

    அவினாசி :

    அவினாசி அருகேயுள்ள கருவலூர் ஊராட்சி அனந்தகிரி பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பொது குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறுஅந்த பகுதியை சேர்ந்த தங்கமணி என்பவர் ஊராட்சி தலைவர்முரு கனிடம் புகார்அளித்ததாக கூறப்படுகிறது. அதற்கு முருகன் முறையான பதில் சொல்லாத காரணத்தால் தங்கமணி மாவட்ட கலெக்டரிடம் இது குறித்து மனு கொடுத்துள்ளார்.

    இது குறித்து விசாரணை நடத்துமாறு கலெக்டர் உத்தரவிட்டார். சம்பவத்தன்று விசாரணை நடத்தவந்தபெண் அதிகாரி யைபணி செய்யவிடாமல் தடுத்தும் புகார்அளித்த தங்கமணியை தகாத வார்த்தைகளால் பேசி கொலைமிரட்டல் விடுத்ததாகவும் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மீது பெண் அதிகாரி அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ராமேசுவரம் அருகே இளம்பெண் ஒருவர் தோழியின் பேச்சை கேட்டு ரூ.2 லட்சத்தை இழந்தார்.
    • இதுகுறித்து அந்த பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகள் விஷ்ணு பிரியா (வயது 25). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி இன்ஸ்டாகிராம் பார்த்து கொண்டிருந்த போது தனது தோழியின் பெயரில் வந்த ஐ.டி.யில் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் லாபம் பெற்றதாக தகவல் வந்தது. இதுகுறித்து அவர், தனது தோழியிடம் கேட்டதற்கு அவரும் அந்த தகவல் உண்மைதான் என்று கூறி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து தனது தோழியைபோல் பணம் முதலீடு செய்து லாபம் ஈட்ட முடிவு செய்த விஷ்ணு பிரியா, தனது வங்கி கணக்கில் இருந்து சிறிது சிறிதாக மொத்தம் ரூ.2 லட்சம் வரை குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தார்.

    பின்னர் அந்த தொகைக்கு லாபம் வந்துள்ளதா? என அந்த நிறுவனத்திடம் கேட்ட போது, எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதையடுத்து தனது தோழியை அவர் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் தனது இன்ஸ்டாகிராமை பிளாக் செய்து விட்டது தெரியவந்தது.

    இதனால் தோழி கூறியதை நம்பி பணத்தை இழந்து விட்டதை அறிந்த விஷ்ணு பிரியா, இதுபற்றி ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த கோவில் செயல் அலுவலராக மஞ்சு உள்ளார்.
    • போலி ஆவணம் தயாரித்து வருவாய்துறைக்கு தடையில்லா சான்று கொடுத்து மின் இணைப்பு ஆணை பெற்றுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் பகுதியில் குட்டியாண்டவர்கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில் செயல் அலுவலராக மஞ்சு உள்ளார்.இவர் அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-தெற்கு பிச்சாவரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். விவசாயி. இவர் கடந்த 30-ந் தேதி கோவிலில் பயன்படுத்தப்படும் துறை ரீதியான முத்திரையை பயன்படுத்தி போலி ஆவணம் தயாரித்து வருவாய்துறைக்கு தடையில்லா சான்று கொடுத்து மின் இணைப்பு ஆணை பெற்றுள்ளார். எனவே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    அதன்பேரில் போலீசார் ஜெயராமன் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இவர் விழுப்புரம் எம்.ஜி.ஆர் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்,
    • எங்கு தேடியும் தனது மகள் கிடைக்காததால் திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் கொடுத்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே பேரங்கியூர் புதுகாலணியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் கபிலா (வயது 20), இவர் விழுப்புரம் எம்.ஜி.ஆர் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 6-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கபிலா இரவு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் தங்களது உறவினர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் தனது மகள் கிடைக்காததால் திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் கொடுத்தனர். ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகன்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். 

    இவர் சம்பவத்தன்று தனது மனைவி அங்கம்மாள் (28) மற்றும் மகள் (8) ஆகியோருடன் வீட்டில் படுத்து தூங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே மேல்வழி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 35). இவர் சம்பவத்தன்று தனது மனைவி அங்கம்மாள் (28) மற்றும் மகள் (8) ஆகியோருடன் வீட்டில் படுத்து தூங்கினார். மீண்டும் அதிகாலை எழுந்து பார்த்தபோது தனது மனைவியை காணவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இலக்கியா (வயது 21). இவர் வேளாண் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • பல்வேறு இடங்களில் மகளைத் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை

    கடலூர்:

    சேலம் அருகே உள்ள தலைவாசல் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் ராஜராஜன். அவரது மகள் இலக்கியா (வயது 21). இவர் சிதம்பரம் அருகே வடக்கிருப்பு கிராமத்தில் வீடு எடுத்து தங்கி அண்ணாமலை பல்கலைகழக வேளாண் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.              இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் ஊருக்கு செல்லவில்லை. இது பற்றி அறிந்த ராஜராஜன் தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.  அதிர்ச்சி அடைந்த ராஜராஜன் இதுபற்றி அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குபதிந்து இலக்கியாவை தேடி வருகிறார்கள்.   சிதம்பரம் அருகே உள்ள திருக்கழிபாளையத்தை சேர்ந்தவர் பாலதண்டாயுதம். தச்சு தொழிலாளி. இவர் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. பதறி போன அவரது மனைவி ராணி இதுபற்றி அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பாலதண்டாயுதத்தை தேடி வருகிறார்கள். 

    • வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றார்.
    • வீட்டின் அறை கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன் பர்னபாஸ் (வயது 66). ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரான இவா் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்துபர்னபாஸ் குடும்பத்தினருடன் ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் மாடியில் வசித்து வரும் அவரது மகன் விஜய் இருதயராஜ் வீட்டின் அறை கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

    . உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நெக்லஸ், வளையல், தோடு உள்ளிட்ட 13 பவுன் நகைகளை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் என கூறப்படுகிறது.      இது குறித்து பர்னபாஸ் கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீ்ட்டில் புகுந்து மர்ம நபர்கள் 13 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படு த்தியுள்ளது.

    • தனியார் பள்ளியில் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்ற இவர் வீடு திரும்பவில்லை.
    • டிரைவராக பணிபுரிந்து வரும் வழுதலம்பட்டு பாஸ்கர் (28) என்பவர் கடத்தியதாக தெரியவந்தது,

    கடலூா:

    பண்ருட்டி அருகே தோ ப்புக்கொல்லை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மகள் ஆஷா (எ) சுபா (வயது 23).   இவர்அ தேபகுதியிலுள்ள தனியார் பள்ளியில் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில்தேடினர்.எங்கும் கிடைக்கவில்லை

    . அதே பள்ளியில் டிரைவராக பணிபுரிந்து வரும் வழுதலம்பட்டு பாஸ்கர் (28) என்பவர் கடத்தியதாக தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரது தந்தை சின்னையன் முத்தாண்டி க்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் காடா ம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • பவானி தனது குழந்தைகளுடன் கடந்த 11-ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் திரும்ப வரவில்லை.
    • தற்போதும் தனது மனைவியை அழைத்து சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் அனந்தபுரம் போலீசில் ஏழுமலை புகார் கொடுத்துள்ளார்.

    கடலூர்:

    செஞ்சியை அடுத்த பனமலை என்ற ஊரை சேர்ந்தவர் சர்க்கரை மகன் ஏழுமலை (வயது 47). இவரது மனைவி பவானி (39). இவர்களது குழந்தைகள் எழிலரசி (16). 11-ம் வகுப்பு படிக்கிறார். வாணிஷா (13). ஏழாம் வகுப்பு படிக்கிறார். மகன் தஷ்வரன்குமார் (6) இரண்டாம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில் பவானி தனது குழந்தைகளுடன் கடந்த 11-ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் திரும்ப வரவில்லை. ஏற்கனவே பவானியை டிசம்பர் மாதத்தில் அதே ஊரைச் சேர்ந்த நபர் வெளியில் அழைத்து சென்றார். இதனை அறிந்த தான் பவானியை அங்கு சென்று அழைத்து வந்தேன். அதே நபர் தற்போதும் தனது மனைவியை அழைத்து சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் அனந்தபுரம் போலீசில் ஏழுமலை புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் நடராசன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • இவர் நடராஜர் கோயிலில் நடைபெற்ற தேர்த்திருவிழாவை பார்ப்பதற்காக சென்றவர் அதன் பின் வீடுதிரும்பவில்லை.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே உள்ள சி. தண்டேஸ் வரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகள்ஆர்த்தி (வயது17). இவர் நடராஜர் கோயிலில் நடைபெற்ற தேர்த்திருவிழாவை பார்ப்பதற்காக சென்றவர் அதன் பின் வீடுதிரும்பவில்லை. இவரை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்க வில்லை. இதுகுறித்து ஆர்த்தியின் தாய்ரேவதி சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×