search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸில் புகார்"

    • கட்டையால் தாக்கி கொலை மிரட்டல்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த கேத்தாண்டப்பட்டி கூத் தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி பேபி (வயது 65), இவர்களுடைய 2-வது மகன் செல்வராஜ் (39). இவர் தனது தாயிடம் சொத்தை பிரித்துக் கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

    சொத்தை பிரித்து கொடுக்காததால் தனது தாய் பேபியை தகாத வார்த்தைகளால் திட்டி, கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து பேபி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார் பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உதிரிபாகம் வழங்கிய கணக்கு குறித்து கேட்டுள்ளார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் தனியார் பைக் ஷோரூம் இயங்கி வருகிறது.

    இதில் ஜோலார்பேட்டை வக்கணம்பட்டி பகுதி சேர்ந்த விக்னேஷ் (வயது23) என்பவர் மெக்கானிக் பிரிவில் வேலை செய்து வருகிறார்.

    மேலும் சர்வீஸுக்கு வரும் பைக்குகளுக்கு உதிரி பாகங்கள் வழங்கி கணக்கு எழுதி வைப்பதும் செய்து வந்துள்ளார்.

    இதனால் அதே நிறுவனத்தில் மேற்பார்வை யாளராக பணிபுரிந்து வருபவர் நேற்று முன்தினம் உதிரிபாகம் வழங்கிய கணக்கு குறித்து கேட்டுள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த விக்னேஷ் தனது நண்பர்களை வரவழைத்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    பின்னர் இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கை யர்கரசி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் நிறுவனத்தில் பணி புரியும் மேற்பார்வையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விக்னேஷ் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் விருத்தாசலம் ெரயில் நிலையம் வந்தார்.
    • தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அன்பரசன் அதிர்ச்சி அடைந்தார்.

    கடலூர்

    விருத்தாசலத்தை அடுத்த எம்.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன். இவர் தனது நண்பரை ெரயிலில் வழி அனுப்பவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் விருத்தாசலம் ெரயில் நிலையம் வந்தார்ெயில் நிலையம் எதிரே இருந்த கடையின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, ெரயில் நிலையம் உள்ளே சென்றார். திரும்பி வந்து பார்க்கும் போது தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அன்பரசன் அதிர்ச்சி அடைந்தார்இது குறித்து விருத்தாசலம் போலீசில் அன்பரசன் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்று கொண்ட போலீசார் சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் காணாமல் போன இருசக்கர வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றார்.
    • வீட்டின் அறை கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன் பர்னபாஸ் (வயது 66). ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரான இவா் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்துபர்னபாஸ் குடும்பத்தினருடன் ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் மாடியில் வசித்து வரும் அவரது மகன் விஜய் இருதயராஜ் வீட்டின் அறை கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

    . உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நெக்லஸ், வளையல், தோடு உள்ளிட்ட 13 பவுன் நகைகளை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் என கூறப்படுகிறது.      இது குறித்து பர்னபாஸ் கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீ்ட்டில் புகுந்து மர்ம நபர்கள் 13 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படு த்தியுள்ளது.

    • சந்தியா நர்சிங் படிப்பை முடித்து விட்டு வேலைத் தேடிக் கொண்டிருக்கிறார்.
    • சந்தியாவின் தாயார் உமாதேவி அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கடலூர்:

    சிதம்பரத்தை அடுத்த வரகூர்பேட்டை ரோட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகவடிவேல். இவரது மகள் சந்தியா (வயது 19). நர்சிங் படிப்பை முடித்து விட்டு வேலைத் தேடிக் கொண்டிருக்கிறார். வழக்கம் போல நேற்றிரவு வீட்டில் தூங்கியவர், காலையில் காணவில்லை. இது குறித்து சந்தியாவின் தாயார் உமாதேவி அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து காணமல் போன சந்தியாவை தேடி வருகின்றனர்.

    • ஜெயச்சந்திரன் அந்த பெண்ணிடம் சென்று உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
    • உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பின்னல்வாடி பகுதியை சேர்ந்தவர் ெஜயச்சந்திரன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது மைனர் பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டது.இந்நிலையில் ஜெயச்சந்திரன் அந்த பெண்ணிடம் சென்று உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி வீட்டிலிருந்து அந்த பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து அந்த பெண்ணின் தாய் உளுந்தூ ர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகார் என்பதில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி வழக்கு பதிவு செய்து ஜெயச்சந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர். 

    ×